Jump to content

ரோஹண விஜயவீரவின் மனைவி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு


Recommended Posts

ரோஹண விஜயவீரவின் மனைவி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

ரோஹண விஜயவீரவின் மனைவி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

 
 

காணாமல் போனதாக கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவு ஒன்றை அரசாங்கம் விடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதி மன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ரோஹண விஜயவீரவின் மனைவி சித்ராங்கனீ விஜயவீரவினால் இந்த மேல் முறையீட்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்றைய தினம் (16) நீதியரசர் குழாமினால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதி அரசர்களான சிசிர டி.ஆக்குருப், எஸ்.துரைராயா, காமினி அமரசேகர ஆகியோர் நீதிபதி குழாமில் இடம் பெற்றிருந்தனர்.

மனுதாரரான சித்ராங்கனீ விஜயவீரவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காணாமல் போயுள்ள தனது கணவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஆரம்பத்தில் மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்ததாக குறிப்பிட்டார்.

29 வருடங்களுக்கு பின்னர் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி நீதி மன்றத்தில் குறிப்பிட்டார்.

மேல் முறையீட்டு நீதி மன்ற உத்தரவை வலுவிழக்க செய்யுமாறும் கோரியும் இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி சித்ராங்கனீ விஜயவீர உயர் நீதி மன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக சட்டத்தரணி குறிப்பிட்டார். இவ்வாறான ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு குறிப்பிட்ட கால எல்லை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் 29 வருடங்கள் சென்ற பின்னர் இவ்வாறான மனு ஒன்றை சமர்ப்பிக்க முடியாது என்று தெரிவித்து நிராகரிப்பதற்கு மேல் முறையீட்டு நீதி மன்றம் வழங்கிய உத்தரவு சட்டத்துக்கு முரண்பட்டதாகும் என்றும் சட்டத்தரணி தெரிவித்தார். தமது மனுதாரருக்கு இருந்த அச்சம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறான மனு ஒன்றை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதற்கு முடியாமல் போனதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை விரிவாக ஆராய்ந்த பின்னர் 3 நீதியரசர்களை கொண்ட நீதிபதிக் குழாம் இந்த மனுவை விசாரிப்பதற்கு போதுமான சட்ட அடிப்படை இல்லை என்பதினால் அதனை நிராகரிப்பதாகவும் தெரிவித்தனர். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜெனரல் சிறில் ரணதுங்க, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன, ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க, ஜெனரல் சிசில் வைத்தியரட்ண ஆகியோரும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.