Jump to content

தமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 ஜனவரி 15

யாழ். மாநகர சபை அமர்வுகளில், சில ‘கௌரவ’ உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம், அருவருப்பை ஊட்டுகின்றன.   

எந்தவித பொறுப்புணர்வும் இன்றி, சாதி, மத ரீதியாவும் பிறப்பைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கியும் ‘கௌரவ’ உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அதையே, ஓர் அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு நடக்கவும் தலைப்படுகிறார்கள்.   

அரசியல் அறிவும் அரசியல் ஒழுக்கமும் அற்ற நபர்களை, அரசியல் கட்சிகள் மக்களிடம் ஆளுமைகளாக முன்னிறுத்தும் போது, ஏற்படுகின்ற அபத்தம் இது.  

இன்னொரு கட்டத்தில், இன்னமும் தமிழர் அரசியலில் நீடித்திருக்கும் சாதி, மதம், வர்க்க பேதம் ஆகிய சிந்தனைகளின் வெளிப்படுத்துகையாக, இதைக் கொள்ள முடியும். 

தமிழ்த் தேசியம் என்பது, சாதி, மதம், வர்க்க பேதங்களுக்கு அப்பாலான பொது அரசியல் நெறி ஆகும். ஆனால், அந்த நெறியைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் தரப்புகள், தேர்தல்களை முன்வைத்து ஆடும் ஆட்டம், பல நேரங்களில் சாதிய, மதவாத சிந்தனைகளோடு வெளிப்படையாக இயங்கும் நபர்களைக் காட்டிலும் ஆபத்தானதாக இருக்கின்றது.  

ஒரு சமூகத்தின் உரையாடல் மொழியில், ஒரு வார்த்தை, வாக்கியம் என்ன அர்த்தத்தில் கையாளப்படுகின்றது என்பது தொடர்பில், கவனம் செலுத்துவது அவசியமானது. (உதாரணத்துக்கு, ‘முடி’யைக் குறிக்கும் ‘மயிர்’ என்கிற சொல், சில இடங்களில் இழி வசையாகப் பாவிக்கப்படுகின்றது.) 

அவ்வாறான நிலையில், எந்தவித அக்கறையும் இன்றி, பொதுவெளியில் இழிவசையாக உரையாடுவதற்கு, ‘கௌரவ’ உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் குறித்து மட்டுமல்ல, அவர்களின் கட்சியையும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களையும்கூட, கேள்விக்குள்ளாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர், சக மாநகர சபை உறுப்பினர் ஒருவரைக் குறித்து, ‘பேஸ்புக்’கில் எழுதிய குலபேத மூதுரையொன்று, பிரச்சினைகளின் ஆரம்பமாக அமைந்தது. 

அந்தப் பிரச்சினை, தொலைக்காட்சி நேரலையில் அடுத்த கட்டத்தை அடைந்து, விடயம் பெரிதானதும் மூதுரைக்கு விளக்கவுரை கொடுத்து, குறித்த உறுப்பினர் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். 

ஆனால், அந்த மன்னிப்பு என்பது, தார்மீக உணர்வோடு கேட்கப்பட்டதா என்கிற கேள்வி எழுகின்றது. ஏனெனில், அந்த மூதுரையைக் கௌரவ உறுப்பினர், ‘பேஸ்புக்’கில் எழுதியதும், அதன் நோக்கம் குறித்துச் சுட்டிக்காட்டிய பலரும் அதனை விமர்சித்திருந்தனர். 

ஆயினும், ‘கௌரவ’ உறுப்பினர், தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் இருந்தார். தமிழ்ச் சூழலில், குறிப்பாக, யாழ். மய்யவாத சூழலில், ‘குலம்’ என்கிற வார்த்தை, என்ன வகையில் கையாளப்படுகின்றது என்பது, அவரிடம் எடுத்துக் கூறப்பட்டது. அப்போதும், அவர் அதனைப் புறந்தள்ளினார்.  

அதன் அடுத்த கட்டமாகவே, ‘குலம்’ பற்றி எழுதியவரும், அதைத் தன்னை நோக்கி எழுதியதாகக் கருதிய ‘கௌரவ’ உறுப்பினரும், மற்றவர்களின் பிறப்பு வரையில், சபை அமர்வில் கேலி செய்து, சண்டையிட்டுக் கொண்டார்கள். 

குலம் பற்றி எழுதியவரை, பிறப்பை வைத்துக் கேலி செய்த ஈ.பி.டி.பி உறுப்பினர், தன்னுடைய சில்லறைத்தனத்தை நியாயப்படுத்துவதற்காக, மாநகர மேயர் தொடங்கி, விடுதலைப் புலிகளின் தலைவரின் சாதி வரை, எடுத்துப் பேசியிருக்கிறார்.  

இத்தனைக்கும், இந்த அருவருக்கத்தக்க சண்டையைப் பிடித்து, சட்டையைக் கிழித்துக் கொண்டவர்களில் ஒருவர், அரசியலறிவுத்துறை பட்டதாரி; இன்னொருவர் சிரேஷ்ட சட்டத்தரணி. 

படித்தவர்கள், அரசியலுக்கு வரவேண்டும் என்கிற பல்லவி எழுப்பப்படும் தருணங்களில் எல்லாம், இவர்கள் இருவரும் ஞாபகத்துக்கு வந்தால், அது பெரும் சாபக்கேடு ஆகும்.  

தமிழர் அரசியலில் சாதி, மதவாத அடிப்படை என்பது, இன்று நேற்று உருவான ஒன்றல்ல; ஆனால், விடுதலைப் புலிகள் காலத்தில், ஓரளவுக்கு வேரறுக்கப்பட்ட சாதிய, மதவாத சிந்தனைகள், அவர்களின் காலத்துக்குப் பின்னர், மீண்டும் பழைய வேகத்துடன் வளர்த்தெடுக்கப்படுவதைக் காணும் போதுதான், அச்சமாக இருக்கின்றது. 

குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்ளும் தரப்புகளிடம் அவை, பெருமளவில் எழும் போதுதான், பெருங்சிக்கல் ஏற்படுகின்றது. ஏனெனில், தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை அவை, காணாமலாக்கக் கூடிய வீரியத்துடன் இருக்கின்றன.  

தமிழ் மக்களின் ஏக அங்கிகாரத்தைப் பெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்டமைப்பொன்று, சாதிய, மதவாத அடிப்படைகளைக் கொண்டவர்களைக் கொண்டு, தேர்தல் அரசியலைச் செய்ய நினைக்கும் சூழல் என்பது, இன்னும் இன்னும் மோசமானது. 

தமிழ்த் தேசியப் போராட்டத்தோடும், அதுசார் வாழ்வோடும் கிளிநொச்சியின் ஆன்மாகவாக மாறிவிட்ட மலையக மக்களைக் குறித்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பேசிய பழிச்சொல்லொன்று, பொதுவெளியில் உலா வந்தது. அந்தச் சொல்லை அவர், எந்தவித குற்றவுணர்வுமின்றிப் பேசியமை, ஒலிப்பதிவில் தெளிவாக இருந்தது. 

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட மக்களை அவர் சந்தித்து, விடயத்தைச் சமாளிக்க முனைந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியோ, கூட்டமைப்போ குறித்த விடயம் தொடர்பில், எந்தக் கேள்வியையும் அவரிடம் எழுப்பியிருக்கவில்லை. குறைந்த பட்சம் விளக்கத்தைக் கூடக் கேட்கவில்லை.  

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பல சபைகளில் சாதி அடிப்படையிலான அணுகுமுறை மேலோங்கியது. குறிப்பாக, யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளரை அறிவிப்பது சார்ந்து, கூட்டமைப்புக்கு உள்ளேயே சாதிய பேச்சுகள் எழுந்தன. அது, ஊடக சூழல் வரையில் வியாபித்திருந்தது. 

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவரும், அவரது ஆதரவாளர்களும் தற்போதைய மேயருக்கு (அப்போதைய மேயர் வேட்பாளர்) எதிராக, சாதிய விடயத்தை முன்னிறுத்தி, பிரசாரத்தை முன்னெடுத்தனர். 

எப்படியாவது, மேயர் வேட்பாளர் தோற்கடிக்கப்படும் பட்சத்தில், தங்களை முன்னிறுத்த முடியும் என்று கருதினார்கள். அதை ஒரு வகையிலான ‘கௌரவ’ நிலைப்பாடாக, அவர்கள் செய்தார்கள். இன்றைக்கு, அதே மாநகர சபைக்குள், ‘கௌரவ’  உறுப்பினர்கள், வெட்கம், மானம் இன்றிச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.  

தமிழ்த் தேசியத்தை முன்வைக்கும், கட்சியொன்று சாதிய, மதவாத, வர்க்க பேத அடிப்படைகளில் இருந்து, தோற்றம்பெற முடியாது. அப்படியாகத் தோற்றம் பெறுமானால், அவை சாதிக் கட்சியாக, மதவாதத்தைப் போதிக்கும் கட்சியாகவே இருக்கும். அப்படியான நிலையில், ஒரு அரசியல் நெறியை அதன் தர்க்க நியாயங்களோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும். 

வெளியில் அனைத்து மக்களும் ஒன்றுதான் என்று முழங்கிக்கொண்டு, கட்சிக்குள்ளும் அதன் கட்டமைப்புக்குள்ளும் சாதிய, மதவாத, வர்க்க பேதங்களை கடைப்பிடிப்பது என்பது, அயோக்கியத்தனமானது. 

ஏற்றுக்கொள்ள முடியாத தவறொன்றை இழைத்தால், அவரை உடனடியாகத் தண்டிக்கும் சூழல் அல்லது, கட்சியிலிருந்து நீக்கும் சூழல் இல்லாத வரையில், இவ்வாறான குறுபுத்திக்காரர்களும் சாதியவாதிகளும் மேலெழுவதைத் தடுக்க முடியாது. இந்த நிலைப்பாட்டை நோக்கி, தமிழர் அரசியலில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் நகர வேண்டும்.  

தமிழ்த் தேசியக் கட்சிகளினதும், அதன் இணக்க அமைப்புகளினதும் கட்டமைப்புகளில் காணப்படுகின்ற சாதிய சிந்தனைகள், தொடர்பில் அவ்வப்போது, அதன் உறுப்பினர்களே, பொதுவெளியில் பொருமும் காட்சிகளை நாம் கடந்து வருகிறோம். 

அவை, அவ்வப்போது பேசப்பட்டு, மறக்கப்பட்டும் விடுகின்றன. ஆனால், அதை நிறுத்த முடியவில்லை. ஏனெனில், அடிப்படைகளைச் சரி செய்யாத எதுவும் மீட்சிபெற முடியாது.  

சாதிய, மத ரீதியாக பிரித்தாளுவதன் மூலம், தமிழ்த் தேசியத்தையும் அதன் அரசியலையும் உடைத்தெறிய முடியும் என்று பௌத்த சிங்கள பேரினவாதமும் அதன் இணக்க சக்திகளும் பிராந்திய வல்லரசுகளும் முனைப்போடு இருக்கின்றன. 

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தங்களுக்குள் இருக்கின்ற சாதிய, மதவாத சிந்தனைகளுக்கு கரும்புள்ளியிட்டு, தூக்கித் தூர எறிய வேண்டும். அப்போதுதான், தமிழ்த் தேசியமும்   அதன் ஆதரமான தமிழ் மக்களும் காக்கப்படுவார்கள்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியலைச்-சீரழிக்கும்-சாதிய-மதவாத-அழுக்கு/91-244099

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குச் சிறந்த தீர்வாக இளைய தலைமுறை  ஒன்றை புதிதாக விதை போட்டு, நீர் பாய்ச்சி, களை பிடுங்கி, உரம் போட்டு, கிளை வெட்டி வளர்க்க வேண்டும். 

இதற்கு ஆரம்பமாக வெளி நாடுகளில் இருந்து TNA க்கு போகும் நிதியை நிறுத்துவதனூடாக ஆரம்பிக்கலாம்.

அடுத்து ......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.