Jump to content

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது


Recommended Posts

வடக்குக் -கிழக்கு ஈழத் தமிழர்களின்

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது

சீனாவைக் கட்டிப்போட அமெரிக்காவும் இந்தியாவும் கையாளும் உத்தி கோட்டாபய ராஜபக்சவுக்கு வசதியாகவுள்ளது
 
 
main photomain photo
  •  
ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், இலங்கையின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாகவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மாற்றியமைத்து வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அதாவது ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இவ்வாறான செயற்பாடுகளில் இந்த நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இரண்டு வாரங்களில் இந்தியா சென்றிருந்தபோது புதுடில்லியில் வைத்து ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பேச்சுக்களைப் பேச வேண்டிய அவசியமேயில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
 
பூகோள அரசியல் நலன்சார்ந்து அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுக்களைத் தவிர்த்து அதாவது வடக்குக் கிழக்குக் இணைப்பு- சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சுக்களைக் கைவிட்டு இலங்கையின் பொறுப்புக் கூறல் என்ற சொல்லாடல் மூலமாக மனித உரிமைகள் பாதுகாப்பு, ஜனநாயகத்துக்கான முன்னுரிமை என்று பேச ஆரம்பித்துள்ளன

 

தனது ஐந்து வருடகால ஆட்சியில் வடக்குக்- கிழக்குப் பகுதியை அபிவிருத்தி செய்து அதன் மூலம் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு முடிவு காணுவேன் என்று கோட்டாபய ராஜபக்ச புதுடில்லியில் வைத்து நம்பிக்கை வெளியிட்டிருந்தார். உறுதியளித்துமிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அமெரிக்கா, ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள, தற்போது கோட்டாபய ராஜபக்சவைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக பல உத்திகளைக் கையாண்டு வருகின்றன. அதாவது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்களைத் தவிர்ப்பது.

கோட்டாபய ராஜபக்சவும் இந்த இரு நாடுகளும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை அதாவது இனப்பிர்ச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதோடு, ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான 30/1 தீர்மானம் கைவிடப்பட வேண்டும் அல்லது அது பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோணத்தில் சில நிபந்தனைகளை முன்வைப்பதாகவே கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் தமது பூகோள அரசியல் நலன்சார்ந்து அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுக்களைத் தவிர்த்து அதாவது வடக்குக் கிழக்கு இணைப்பு உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சுக்களைக் கைவிட்டு இலங்கையின் பொறுப்புக் கூறல் என்ற சொல்லாடல் மூலமாக மனித உரிமைகள் பாதுகாப்பு, ஜனநாயகத்துக்கான முன்னுரிமை என்று பேச ஆரம்பித்துள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியில் இருந்து அதாவது மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் வருகையின் பின்னரான சூழலில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகளில் கூட வடக்குக்- கிழக்குத் தமிழ் மக்கள் என்ற சொற்கள் தவிர்க்கப்பட்டு இலங்கை மக்கள், இலங்கை மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற வாசகங்களையே காண முடிந்தது.

 

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முற்றுமுழுதாக ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படுவது போலக் காண்பித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கை அரசுடன் கடந்த எழுபது ஆண்டுகள் பயனித்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் அமைக்கப்படும் வரை, ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஒப்பாசாரத்துக்காக ஈழத் தமிழர்களின் விவகாரத்தை இந்த இரு நாடுகளும் கையெலடுத்திருந்தன

 

ஆனால் அந்த வாசகங்கள், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர் மேலும் மெருகூட்டப்பட்டு மேலதிகமாக இலங்கையின் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புதல் அல்லது ஜனநாயகத்துக்கான முன்னுரிமை என்ற வாசகங்களே அதிகமாகப் பேசப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்து சென்றிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் ஜீ வெல்ஸ், (Alice Wells) ஜப்பான் இராஜாங்க அமைச்சர் கோசோ ஜமோற்றோ (Kozo Yamamoto) ஆகியோர் அவ்வாறுதான் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தனர்.

கொழும்புக்கு வருகை தந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வோங் ஜெய், (Wang Yi) ரஷிய வெளியுறவு அமைச்சர் செறிஹி லவ்றோ (Sergei Lavrov) ஆகியோர் ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற வாசகங்களைக் கூறாமல் இலங்கையின் இறைமை, ஒற்றுமை ஆள்புலம் என்ற வாசகங்களையே முதன்மைப்படுத்திக் கூறியிருந்தனர்.

இனப்பிரச்சினை பற்றிய எந்தவொரு பேச்சுக்களையும் சீன, ரஷிய நாடுகளின் பிரதிநிதிகள் உச்சரிக்கவில்லை. சீன, ரஷிய நாடுகள் ஈழத் தமிழர்களின் போராட்ட விடயங்களில் அன்றில் இருந்து இன்று வரை கருத்துக் கூறியதுமில்லை. மாறாக இலங்கையின் அணுகுமுறையோடு சேர்ந்து அல்லது தமது நலன் சார்ந்து நேரடியாகவே இலங்கையோடு பயணித்திருந்தன. ஆகவே கொழும்புக்கு வந்த இடத்தில் அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

ஆனால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முற்றுமுழுதாக ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படுவது போலக் காண்பித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கை அரசுடன் கடந்த எழுபது ஆண்டுகள் பயனித்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஒப்பாசாரத்துக்காக ஈழத் தமிழர்களின் விவகாரத்தை இந்த இரு நாடுகளும் கையெடுத்திருந்தன.

அதன் மூலம் இலங்கையில் சீனாவுக்குக் அதிகம் கால் பதிக்க இடமளித்திருந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்தன. அதன் பின்னர் அவருடைய சகோதரர் கோட்டாபய ராஜபக்சவை இந்த இரு நாடுகளும் வேறொரு கோணத்தில் அணுகி மீண்டும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்குக் கொண்டு வந்தன.

 

கோட்டாபய ராஜபக்ச தாம் நினைத்ததைச் செய்யத் தயங்கினால் அல்லது தவறினால் அமெரிக்காவும் இந்தியாவும் ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளையும் சிங்களச் சிவில் சமூக அமைப்புகளையும் தூண்டிவிட்டு இலங்கையில் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் என்று கூறி அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன

 

இந்த நிலையில் தற்போது சீனா என்றொரு நாட்டை இலங்கையில் இருந்து அகற்றும் நோக்கில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான குறிப்பாகக் கோட்டாபய ராஜபக்சவுக்கான ஆதரவுத் தளத்தைக் கொடுத்துக் கொண்டு இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு விவகாரத்தை இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையாகவும் இலங்கையில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புதல் என்ற கோசத்துடனும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றன.

சில சமயங்களில் கோட்டாபய ராஜபக்ச தாம் நினைத்ததைச் செய்யத் தயங்கினால் அல்லது தவறினால் அமெரிக்காவும் இந்தியாவும் ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளையும் சிங்கள சிவில் சமூக அமைப்புகளையும் தூண்டிவிட்டு இலங்கையில் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் என்று கூறி அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன

வேண்டுமானால் அந்த ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தின் மூலமாக 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை உருவாக்கியது போன்று தமக்கு வசதியான ஆட்சி மாற்றம் ஒன்றையும் இந்த நாடுகள் செய்யத் தயங்காது என்ற கருத்துக்களும் எழாமில்லை.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1411&fbclid=IwAR2KI7Q9LGZZBQZRuAh31yoOdvWUj8V1ANZw_9mX46qK2GqA5WFzF9uapRY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், இராணுவ ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் மூன்றாம் நாடு ஒன்று தலையீடு செய்வதற்குரிய சூழலை   ஏற்படுத்துவதற்கு,  மேற்குலகால்  வெளிஉலகுக்கு  காட்டுவதற்கு ஏற்படுத்தப்படும்  (கருத்துருவாக்கம்) முன்னேற்பாடாக  / செயலாக இந்த மற்றத்தை   கருத முடியாதா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

இலங்கையில், இராணுவ ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் மூன்றாம் நாடு ஒன்று தலையீடு செய்வதற்குரிய சூழலை   ஏற்படுத்துவதற்கு,  மேற்குலகால்  வெளிஉலகுக்கு  காட்டுவதற்கு ஏற்படுத்தப்படும்  (கருத்துருவாக்கம்) முன்னேற்பாடாக  / செயலாக இந்த மற்றத்தை   கருத முடியாதா ? 

எனக்கும், அப்படித்தான்... தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.