Jump to content

அரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

M.I.A.-720x450.jpg

அரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார்

சொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A.) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார்.

மாதங்கியின் இசைப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட Member Of The Most Excellent Order Of The British Empire ((MBE)) பதக்கத்தினை இளவரசர் வில்லியமிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

பதக்கத்தினைப் பெற்றுக்கொண்ட மாதங்கி அதனைத் தனது தாயாருக்கு அணிவித்துச் சிறப்பித்தார்.

பக்கிங்கம் அரண்மனையில் நடைபெற்ற இந்த பதக்கம் சூட்டும் விழாவில் தனது தாயார் கலா அருள்பிரகாசத்தினையும் அழைத்துவந்திருந்தார்.

கடந்த ஆண்டு ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு மாதங்கிக்கு MBE  பதக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தத்தக்கது.

எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வழங்க குறைந்த ஊதியத்தில் பணியாற்றிய என் அம்மாவின் நினைவாக இந்தப் பதக்கத்தினை ஏற்றுக்கொள்கிறேன் என்று மாதங்கி தனது இன்ஸ்ரகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

M.I.A.-1.jpg

மாதங்கி தனது தாய், தந்தையுடன் 1980 களில் இலங்கையில் இருந்து வந்து இங்கிலாந்தில் புகலிடம் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் தலைமுறையில் குடியேறியவர் என்ற முறையில் எனது பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைப்பது மிகவும் நல்லது.

உண்மையை இசை மூலம் பேசுவதற்கு எனக்குச் சுதந்திரம் உள்ளது. அந்த உரிமைகள் இல்லாதவர்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன் என்று மாதங்கி கூறியுள்ளார்.

இவரது தந்தையார் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான (ஈரோஸ் அருளர்) அருள்பிரகாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

M.I.A.-2.jpg

http://athavannews.com/அரச-குடும்பத்தின்-எம்பிஈ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மாதங்கி அருள்பிரகாசத்துக்கு வாழ்த்துக்கள்......!  💐

Link to comment
Share on other sites

மாதங்கி அருள்பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். இவர் ஒரு முறை நடு விரலை தூக்கிகாட்டி பிரச்சினனைப்ப்ட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

ஓ.... கடவுளே....
ஒரு, தமிழ் மகள்... தன் தாய்க்கு கொடுத்த, உயர்ந்த... தைப் பொங்கல் பரிசு.  ❤️

உங்கள், அம்மாவின் கண்களில் இருந்து வரும், ஆனந்தக் கண்ணீரில்...
 🌈 உலகத்  தமிழர்கள் அனைவரும்,  ஆனந்தப்  படுகின்றோம். :)

வாழ்த்துக்கள்...  மாதங்கி அருள்பிரகாசம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதங்கிக்கு நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.