Jump to content

ரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின்

ரஸ்யாவின் புதிய பிரதமராக அரசியல் பின்னணியற்ற  மிகைல் மிசுஸ்டின் என்பவரை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவு செய்துள்ள அதேவேளை ரஸ்யாவின் ஆளும் கட்சி புட்டினின் தெரிவிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளது.

ரஸ்யாவின் வரிச்சேவை பிரிவின் தலைவராக பணியாற்றி வரிச்சேகரிப்பில்  பாரிய முன்னேற்றத்தினை வெளிப்படுத்தியவர் மிகைல் மிசுஸ்டின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புட்டினின் நியமனம் குறித்து ஆராயவுள்ளதாக ரஸ்ய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

கிரெம்ளினிற்கு ஆதரவான நாடாளுமன்றத்தின் கீழ் சபை இந்த நியமனத்திற்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

ரஸ்யா அரசாங்கம் நேற்று தீடீர் என இராஜினாமா செய்ததன் பின்னரே புட்டின் புதிய பிரதமரைஅறிவித்துள்ளார்.

mikail_mishustin.jpg

ரஸ்ய அரசாங்கம் முழுமையாக பதவி விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் டிமிட்ரி மெட்வெடெவ் நேற்று அறிவித்திருந்தார்.

ரஸ்யாவின் அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் அதிகாரங்களை வழங்கும் யோசனையை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முன்வைத்துள்ள நிலையிலேயே அரசாங்கம் பதவி விலகுகின்றமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஸ்ய ஜனாதிபதியின் இந்த யோசனைகள் அவர் அதிகாரத்தில் தொடர்ந்தும் நீடிப்பதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 முதல் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்துவரும் புட்டினின் பதவிக்காலம் 2024 இல் முடிவிற்கு வருகின்றது.

தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையை முன்னெடுக்கப்போகின்றார் என்பதை புட்டின் இன்னமும் அறிவிக்கவில்லை.

russia_pm.jpg

ரஸ்யாவின் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவை பதவி வகிக்க முடியாது என்பதால் புட்டின்  தொடர்ந்தும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே ரஸ்யாவின் அரசமைப்பை மாற்றி நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கும் யோசனையை புட்டின் வெளியிட்டுள்ளார்.

ரஸ்யாவின் அரசியல் உயர்குழாத்தினருக்கான வருடாந்த உரையிலேயே புட்டின் தனது இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இவை மிகவும் தீவிரமான மாற்றங்கள் என தெரிவித்துள்ள புட்டின்  நாடாளுமன்றமும் சிவில் சமூகமும் இந்த மாற்றங்களிற்கு தயார் என நான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஏதாவது ஒரு அதிகாரம் மிக்க பதவியில் இருந்தபடி ஆட்சி செய்வதற்கு புட்டின் திட்டமிட்டு வருகின்றார் என விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்களை அதிகரித்த பின்னர் 2024ற்கு பின்னர் பிரதமராகி அதிகாரத்தை தொடர்வதற்கு புட்டின் முயல்கின்றார்எனவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன

 

https://www.virakesari.lk/article/73319

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.