Jump to content

இலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி வழங்கும் மத்திய பிரதேச அரசு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..! ஜனாதிபதி இணக்கம்.

200-SETHTHAKOVIL.jpg

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சீதை கோவிலின் புனரமைப்புக்காக இந்தியாவின் மத்திய பிரதேச அரசு 5 கோடி ரூபாய் நிதியை வழங்குவதற்குள்ளது. இந்திய மத்திய பிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் கோவில் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதையம்மன் கோவிலை புனரமைப்பதற்கு மத்திய பிரதேச அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 5 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டதாக சர்மா இதன்போது தெரிவித்துள்ளார்.

ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு அவர் இதன்போது கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/15435

டிஸ்கி:

memees.php?w=260&img=dmFkaXZlbHUvdmFkaXZ

அண்ணையிடம் ரவுண்டா 50 கோடி கேட்பதை விடுத்து..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக அவர்களின் கதையைக் கட்டமைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்காத அவர்கள், குஜராத்தில் அகழ்வாய்வுக்கு சில ஆயிரம் கோடிகள் ஒதுக்குகிறார்கள். இல்லாததை வைத்து எடுக்க வேண்டுமல்லவா ? கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர், அவர்களின் கதையைக் கந்தலாக்கி விடும் எனத் தெரிந்து கொண்டார்கள். சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ ? சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம். அடுத்த தலைமுறைக்கான திட்டமிடுதலுடன் செயல்படுபவர்கள் RSS காரர்கள். இலங்கைத் தமிழர்கள் ஏமாறுவார்களா என்று தெரியவில்லை. யார் கண்டார்கள்? மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை ! அதீத கற்பனையாகத் தோன்றுகிறதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போர்.... முடிந்த பின்பு,  50 ஆயிரம் வீடுகளை, கட்டித் தருவதாக கூறிய இந்திய அரசு,
இதுவரை... எத்தனை வீடுகளை, கட்டியது?

இன்று வரை கூட.... இந்திய அரசின் ஒத்துழைப்புடன்,
ஸ்ரீலங்கா அரசு நடத்திய... இராணுவ, விமான, கடல்படை  அட்டூழியத்தால்,
நன்றாக வாழ்ந்த, குடும்பங்கள்... சீரழிந்து  போய் இருக்கிறார்கள். 
அதற்கு.... இன்றும், விடிவு இல்லை.

ஒரு வார்த்தையை.... ஒருவன் கூறினால்...
அதன் படி, நடப்பதே... தர்மம் என்று, நீதியும்  கூறுகின்றது.

அதை விடுத்து, கூட்டு சேர்ந்து...  தமிழினத்தை, ஒட்டாங்கி  ஆக்கி விட்டு...
வாயால்... வடை சுடுவது,   இந்திய அரசாங்கத்துக்கு அழகு அல்ல.

அந்த நேரம், இந்தியா....  பொத்திக் கொண்டு, இருந்திருந்தால்...
இன்று... தமிழீழம்  என்ற நாடு, பிறந்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்போர்.... முடிந்த பின்பு,  50 ஆயிரம் வீடுகளை, கட்டித் தருவதாக கூறிய இந்திய அரசு,
இதுவரை... எத்தனை வீடுகளை, கட்டியது?

இன்று வரை கூட.... இந்திய அரசின் ஒத்துழைப்புடன்,
ஸ்ரீலங்கா அரசு நடத்திய... இராணுவ, விமான, கடல்படை  அட்டூழியத்தால்,
நன்றாக வாழ்ந்த, குடும்பங்கள்... சீரழிந்து  போய் இருக்கிறார்கள். 
அதற்கு.... இன்றும், விடிவு இல்லை.

ஒரு வார்த்தையை.... ஒருவன் கூறினால்...
அதன் படி, நடப்பதே... தர்மம் என்று, நீதியும்  கூறுகின்றது.

அதை விடுத்து, கூட்டு சேர்ந்து...  தமிழினத்தை, ஒட்டாங்கி  ஆக்கி விட்டு...
வாயால்... வடை சுடுவது,   இந்திய அரசாங்கத்துக்கு அழகு அல்ல.

அந்த நேரம், இந்தியா....  பொத்திக் கொண்டு, இருந்திருந்தால்...
இன்று... தமிழீழம்  என்ற நாடு, பிறந்திருக்கும். 

ஒரு வரி பிறழாமல் முற்றிலும் உண்மை. ஒவ்வொரு இந்தியனும், குறிப்பாக ஒவ்வொரு இந்தியத் தமிழனும் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனுக்கு காரணம் இல்லாமல் தமிழகத்தின்மேல்  பயம். தமிழ் ஈழம் வந்தால் தமிழகமும் இந்தியாவில் இருந்து பிரிந்து விடும், அவர்கள் முதுகில் சவாரி விடமுடியாது என நினைக்கிறான். ஈழத் தமிழரை அடக்க உதவுவது, தமிழகத்து தமிழரை மிதிப்பதுபோல் உணருகிறான். ஒருநாள் அது உடைபட அவனே வலிந்து இழுக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுப.சோமசுந்தரம் said:

சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ ? சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம்.

அப்படி ஏதாவது தூவல் நடக்குமானால் இப்படியாவது தமிழர் அடையாளங்கள் இலங்கையில் காப்பாற்றப்படுகிறதே என்று சிறு நிம்மதியடையலாம்.

நீங்கள் இன்றைய இந்திய அரசியலுடன் ஒப்பிட்டு  ஈழதமிழர் நிலையை பார்க்கிறீர்கள், இலங்கை நிலமை அப்படியல்ல.

எத்தனை தலைமுறை கடந்த பின்னும் இந்தியாவில் தமிழனுக்கென்றொரு மாநிலமும் கலாச்சாரமும் அடையாளமும்,மத்திய அரசையே தீர்மானிக்கும் சக்தியும் இருக்கும்.

இலங்கையில் இன்னும் சில தசாப்தங்களில் ஈழ தமிழருக்கென்று தனி ஒரு மாகாணமோ அவர்களுக்கென்றொரு தனித்துவமோ இருக்கபோவதில்லை.

2009ன் பின்னர்,

இலங்கையின் மத்திய அரசுடன் ஒரு பேரம்பேச இலங்கை   தமிழருக்கென்று இருந்த ஒரே துருப்புசீட்டு,  சிங்கள ஆட்சியாளரை தீர்மானிக்கும் எமது வாக்கு பலம், அதுகூட கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் செல்லாகாசு ஆகிவிட்டது.

தனி சிங்கள வாக்கு பெரும்பான்மையினால் இலங்கையின் ஆட்சி தலைவரை தேர்ந்தெடுத்த சிங்கள தேசத்துக்கு இனி எந்த வகையிலும் நாம் அவர்களுக்கு தேவை படபோவதில்லை.

தாங்கள் கூறியதுபோல் இலங்கையில் பெளத்ததிற்கும், இஸ்லாத்திற்கும் எதிராக இந்துதுவம் என்பது எப்போதுமே எழுந்து நிற்காது, ஏனெனில் அவர்கள் இருவரும் சேர்ந்து   எங்கள் இனத்தையே  கறையான் அரித்ததுபோல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறக்குறைய தின்று முடிக்கும் நிலைக்கு மிக அருகில் நிற்கிறார்கள்.

இன அடையாளமே இல்லாமல் போகுதே, மத அடையளத்தை எங்கிருந்து கொண்டு வருவது?

16 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை ! அதீத கற்பனையாகத் தோன்றுகிறதோ?

என்னமோ இலங்கை தமிழர்களுக்கு எல்லாமே கிடைத்துவிட்டமாதிரியும் , மதம் மட்டுமே இனிமேல் அவர்கள் வாழ்வை கெடுக்கபோகிறது என்பதுபோலும் சிந்திக்கிறீர்கள்,

உலகின் சக உயிரினங்கள்போலவே தமிழனையும் ஒரு மனிதனாக கருதாத சிங்கள தேசத்தில் வாழும் தமிழர்களுக்கு ஆர்.எஸ்/எஸ் சும்,பார்ப்பனியமும்பற்றி அக்கறை செலுத்த ஏதுமில்லை.

அப்படி ஏதாவது நடந்தால்,சரியோ தவறோ  இப்படியாவது சிங்களவனுக்கெதிராக  இலங்கையில் ஒரு அடையாளம் வருதே என்றுதான் சிறு நிம்மதி அடைவார்கள்.

நான் மேலே சொன்னதுதான்,

மொழியாலும்,கலாச்சாரத்தாலும்,,ஒருவருக்கு ஒன்றென்றால் கவலையும் கோபமும் கொள்ளும் ரத்த உணர்வாலும் நாம் எப்போதுமே பின்னி பிணைந்திருந்தாலும் 

இலங்கை தமிழர் அரசியலும்,இந்திய தமிழர்கள் அரசியலும் முழுக்க முழுக்க வேறானாது,

இரண்டும் ஒரேமாதிரியானது என்று நீங்கள் கருத நினைத்தால் அது மட்டுமே அதீத கற்பனையானது.

வேண்டுமென்றால் இரண்டு தேச தமிழ் அரசியல்வாதிகளின் குணங்களும் ஒன்றென்று சொல்லி கொள்ளலாம், அது மட்டுமே 100% உண்மையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, valavan said:

இலங்கை தமிழர் அரசியலும்,இந்திய தமிழர்கள் அரசியலும் முழுக்க முழுக்க வேறானாது,

உண்மை. இங்கே எங்கள் அடையாளங்களை அழிக்க முனைவது வெறும் மிருகமே ! அங்கே அடையாள அழிப்பையும் தாண்டி இருப்பையே கேள்விக்குறியாக்கும் சாத்தான்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை. இவ்வேறுபாட்டை வெகு நிதானமாக எடுத்துரைத்தமைக்கு நன்றியும் பாராட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சுப.சோமசுந்தரம் said:

புதிதாக அவர்களின் கதையைக் கட்டமைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்காத அவர்கள், குஜராத்தில் அகழ்வாய்வுக்கு சில ஆயிரம் கோடிகள் ஒதுக்குகிறார்கள். இல்லாததை வைத்து எடுக்க வேண்டுமல்லவா ? கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர், அவர்களின் கதையைக் கந்தலாக்கி விடும் எனத் தெரிந்து கொண்டார்கள். சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ ? சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம். அடுத்த தலைமுறைக்கான திட்டமிடுதலுடன் செயல்படுபவர்கள் RSS காரர்கள். இலங்கைத் தமிழர்கள் ஏமாறுவார்களா என்று தெரியவில்லை. யார் கண்டார்கள்? மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை ! அதீத கற்பனையாகத் தோன்றுகிறதோ?

உங்கள் கணிப்பு மிகவும் சரியானது. பார்ப்பனீயம் இங்கு ஏற்கனவே தனது முகவர்களை அனுப்பி வேலைத்திட்டங்களை ஆரம்பித்திவிட்டதாகவே தோன்றுகிறது. மதத்தின் அடிப்படையில் தமிழர்களை ஒன்றிணைக்கும் வேலையை தொடங்கிவிட்டது.

Link to comment
Share on other sites

15 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஈழப்போர்.... முடிந்த பின்பு,  50 ஆயிரம் வீடுகளை, கட்டித் தருவதாக கூறிய இந்திய அரசு,
இதுவரை... எத்தனை வீடுகளை, கட்டியது?

30,000 த்த தாண்டியிருக்காது.

ஹிந்தியன் தங்கடை எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுது என்று பெருமைப்படுறவன் ஆச்சே!

Link to comment
Share on other sites

23 hours ago, satan said:

இந்தியனுக்கு காரணம் இல்லாமல் தமிழகத்தின்மேல்  பயம். தமிழ் ஈழம் வந்தால் தமிழகமும் இந்தியாவில் இருந்து பிரிந்து விடும், அவர்கள் முதுகில் சவாரி விடமுடியாது என நினைக்கிறான். ஈழத் தமிழரை அடக்க உதவுவது, தமிழகத்து தமிழரை மிதிப்பதுபோல் உணருகிறான். ஒருநாள் அது உடைபட அவனே வலிந்து இழுக்கிறான்.

மேற்குநாடுகளின் ஆக்கிரமிப்பு ஏற்படுவதற்கு முன்னர், சில நூறுவருடங்களுக்கு முன்னர், தனித்தனி நாடுகளாக இருந்த அதே நிலைமைக்கு இந்தியா சிதறும் வரை தெற்காசிய பிரதேசத்தில் அமைதி நிலவாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

மேற்குநாடுகளின் ஆக்கிரமிப்பு ஏற்படுவதற்கு முன்னர், சில நூறுவருடங்களுக்கு முன்னர், தனித்தனி நாடுகளாக இருந்த அதே நிலைமைக்கு இந்தியா சிதறும் வரை தெற்காசிய பிரதேசத்தில் அமைதி நிலவாது. 

அந்த வேலையை சீனா பார்த்துக் கொள்ளுவான். என்ன... அது நடக்கும்போது இலங்கையில்  தமிழ் இனம் இருக்காது. அதுதான் கவலை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.