Jump to content

தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு

தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க ஆதரவு கோரும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை ஹரோ, லண்டனில் 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற இடத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறுகின்றது.

தமிழ் மக்களின் காலை, கலாசாரம், வரலாறு, விழுமியங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இன்றைய நிகழ்வில் நடைபெறவிருக்கிறது என்றும் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அன்பான பிரித்தானிய வாழ் தமிழ் மக்களே!

எமது தாய் மொழியான தமிழின் தொன்மையையும், ஆழமான பரந்த கலை, இலக்கிய பண்பாட்டையும் அறிந்துதான் அதற்க்கு “செம்மொழி” என்ற உயரிய மதிப்பை ஐக்கிய நாடுகள் அளித்தது.

தமிழ் என்பது எமக்கு மொழி மட்டுமல்ல. அது எமது வாழ்க்கை முறை. அது எமது அடையாளம். அதனைப் பேணிப் பாதுகாத்து அதன் பெருமையை உலகறியச் செய்ய வேண்டியதும், எமது இளைய தலைமுறையும் எதிர்கால சந்ததியும் “நாம் தமிழர்” என்று பெருமையுடன் கூற வைப்பதுவும் எங்கள் எல்லோருடையதும் வரலாற்றுக் கடமை

அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தை மாதத்தை மரபுரிமை மாதமாக எம்மக்கள் ஏற்றுக் கொண்டு, பிரித்தானிய மக்களாலும் பாராளுமன்றத்தினாலும் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப் படுவதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒரு பிரமாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வை நாம் இன்று சனிக்கிழமை RAYNERS LANE ல் நடாத்துகின்றோம்.

எமது இந்த மரபுரிமைத் திங்கள் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர்கள் கனடா வாழ் தமிழ்மக்கள் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.

கனடா ஒரு குடியேற்ற நாடாக இருந்தபோதிலும், விகிதாசார அடிப்படையில் அங்கு தமிழ் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தபோதிலும், கனேடியத் தமிழ் உணர்வாளர்கள், செயற்ப்பாட்டாளர்களின் நீண்டகால கடின உழைப்பாலும், ஒன்றிணைந்த செயற்ப்பாட்டாலும்தான் 2016_ம் ஆண்டில் தை மாதத்தை தமிழ்
மரபுரிமை மாதமாக கனேடிய பாராளுமன்றம் அங்கீகரித்து பிரகடனம் செய்தது.

பிரித்தானியாவிலும் அந்த திட்டத்தை செயற்படுத்தும் முகமாக நாம் அவர்களை அணுகியபோது அவர்கள் தம் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், எமது முயற்சிக்கு முழு ஆதரவு தந்து ஊக்குவித்தார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தை மாதம் என்பது ஒரு முக்கியமான மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும்! என்பது தமிழர் நம்பிக்கை.

இந்த மாதத்தில்தான் இயற்கைக்கு நன்றி கூறி பொங்கல் விழா எடுப்பது எமது மரபு. அந்த வகையில் பிரித்தானியாவிலும் பல சமூக அமைப்புக்கள், ஆலயங்கள், வர்த்தக நிறுவனங்கள், பாடசாலைகள் என தைப் பொங்கலை விமரிசையாக கொண்டாடி வருவது நாம் அறிந்தது.

ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதத்தில் வெறுமனே பொங்கல் விழாவோடு நிறுத்தாமல் தமிழ் மரபு சார்ந்த நிகழ்ச்சிகளை தை மாதம் முழுவதும் நடாத்தும்போது எமது கலை, கலாச்சார பண்பாடு மேலும் மெருகூட்டப்படவும், எமது இளைய தலைமுறையினரின் ஈடுபாடும் பங்களிப்பும் அதிகரிக்கவும், ஏனைய இனமக்கள் தமிழ் மக்களின் சிறப்பை அறிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும் என்பது எமது நம்பிக்கை.

மரபுரிமை மாதம் என்பது தனியே எந்த ஒரு அமைப்பிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ உரித்தானதல்ல. இது ஒவ்வொரு தமிழனுக்கும், தமிழர் சார்ந்த அமைப்புகளுக்கும் பொதுவானது.

அரசியல், சமய, வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால்பட்டு ‘தமிழால்’ அனைவரையும் ஒன்றிணைய வைப்பது. அந்தப் புரிந்துணர்வோடு கடந்த பல மாதங்களாக இதற்கான ஆயத்த வேலைகளில் நாம் ஈடுபட்டிருந்தோம்.

பிரித்தானியாவில் மரபுத் திங்கள் அங்கீகாரத்திற்கான இந்த ஆரம்ப நிகழ்வை நாம் முன்னின்று ஒழுங்கு படுத்தினாலும் இது எமது தனிப்பட்ட முயற்சி மட்டுமல்ல. பிரித்தானியாவிலுள்ள பல சமய, சமூக, கல்வி, கலை சார்ந்த பல பொது அமைப்புக்களோடு நாம் தொடர்பு கொண்டு அவர்களின் அனுசரணையோடும், ஆதரவோடும்தான் இந்த மாபெரும் அங்குரார்ப்பணப் பெருவிழா நிகழ்த்தப்படுகின்றது.

இந்த வருடம் முதல் தை மாதத்தை “தமிழ் மரபுரிமை மாதத்தின்” தொடர்ச்சியான கொண்டாட்டங்களாக தொடர வேண்டும் என்ற எமது வேண்டுதலுக்கமைய, சில அமைப்புக்களும் நிறுவனங்களும் தமது வழமையான பொங்கல் விழாவைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் இம்முறை ‘தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவித்தது எமக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

 

http://www.samakalam.com/செய்திகள்/தை-மாதத்தை-பிரித்தானியாவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83606466_996638944043503_873344097705158

82616253_2533056653646723_16695642072694

83162426_2533056810313374_10508577486206

83885348_2533057240313331_59264790937542

82749453_2533057346979987_71501176729763

83057905_2533057740313281_33673579246104

82514695_2533058013646587_74256015740360

82372416_2533058106979911_33150936143416

82376162_2533058206979901_35647915582533

83170462_2533058473646541_45349463173313

83734847_2533058596979862_24868998896072

82519019_2533058810313174_82754270218158

82785716_2533059033646485_61717959090309

82428350_2533059213646467_34340877233867

82338556_2533059543646434_47424504724623

83118589_2533059716979750_11802230397494

82844628_2533059820313073_49928952682370

83121446_2533059936979728_21940052133318

 

83539923_2533060106979711_72264781971796

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

82551688_2533058303646558_36445200454862

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.