Jump to content

தமிழனை கேட்டுபார் என்ன வேண்டும் என அவன் சொல்வான்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரன் சோறும், தண்ணீரும்தான் கேட்பான்..! தமிழனை கேட்டுபாா் என்ன வேண்டும் என அவன் சொல்வான். அமைச்சருக்கு சீ.வி.கே செருப்படி..

CVK-Sivagnanam.jpg

யாழ்ப்பாணத்தில் அமைச்சா் சந்தித்த பிச்சைக்காரர்களில் ஒருவன் சோறும், தண்ணீரும் கேட்டால் தமிழா்கள் எல்லோரும் சோறும் தண்ணீரும் கேட்கிறாா்கள் என அா்த்தமா ? அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே மானமுள்ள தமிழனை சந்திக்கவில்லையா ? அவனிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லையா? என முன்னாள் அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

கடந்த 14ம் திகதி அலாி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீரும்தான் முக்கியம் என கூறியிருக்கின்றாா். இது குறித்து இன்று காலை அவை தலைவா் ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், யாழ்ப்பாணம் வந்த அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே இங்குள்ள சில பிச்சைகாரா்களை சந்தித்து என்ன வேண்டும் ? என கேட்டால் அவா்கள் சோறும், தண்ணீரும்தான் கேட்டிருப்பாா்கள். அதற்காக தமிழ் மக்கள் சோறும், தண்ணீரும் கேட்கிறாா்கள். என கூற முடியுமா ? அமைச்சா் மானமுள்ள தமிழனை சந்தித்திருந்தால் அவன் என்ன வேண்டும் என கூறி இருப்பான் என்றார்.

https://jaffnazone.com/news/15448

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்ப்பாணம் வந்த அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே இங்குள்ள சில பிச்சைகாரா்களை சந்தித்து என்ன வேண்டும் ? என கேட்டால் அவா்கள் சோறும், தண்ணீரும்தான் கேட்டிருப்பாா்கள். அதற்காக தமிழ் மக்கள் சோறும், தண்ணீரும் கேட்கிறாா்கள். என கூற முடியுமா ? அமைச்சா் மானமுள்ள தமிழனை சந்தித்திருந்தால் அவன் என்ன வேண்டும் என கூறி இருப்பான் என்றார்.

அது தானே சோறும் தண்ணீர் எல்லாம் யாழ்பாணத்தில் ஒரு பிரச்சனையா? நீங்கள் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அமைச்சா் மானமுள்ள தமிழனை சந்தித்திருந்தால் அவன் என்ன வேண்டும் என கூறி இருப்பான் என்றார்.

அந்த மானமுள்ள தமிழர்களில் ஒராளா சீ.வி.கே.சிவஞானம் நிச்சயமா இருக்கவே முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த பிச்சைக்காரன் மானமுள்ள தமிழனில்லையா?

இபரபடியான கேவலமான தமிழ் அரசியல்வாதிஎளால்தான் இப்படிக்கதைக்கமுடியும். 

ஒரு மனிதனுக்கு முதல் தேவைகளாவன: உணவு உடை உறையுள். பல பிச்சைக்கார்ர்களுக்கு இது மூன்றும் கிடைப்பதில்லை ( பிச்சைகார்ர் என்று சொல்லும்போது; கை கால் வழங்கக்கூடிய 50 வயதிற்கு உட்பட்ட மனநலம் சரியானவர்களை சேர்பதிர்லை ஏன்எனில் அவர்கள் எத்தனையோ வேலைகளைச்செய்யலாம் )

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.