Jump to content

கோவை பெட்ரூம் சைக்கோ: அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
பெட்ரூம் சைக்கோபடத்தின் காப்புரிமை kovai police

கோயம்புத்தூரில் ஒரு வாலிபர் பல்வேறு  வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வந்து, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது. 

இதனால் அதிர்ச்சியான அந்நபர் அக்கம்பக்கத்து வீடுகளிடமும் விசாரித்தார். அதில் மூன்று வீடுகளில் படுக்கை அறையை வாலிபர் ஒருவர் எட்டிப்பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது. 

வாலிபரின் இரு சக்கர வாகன பதிவு எண்ணை வைத்து காவல்துறை இவரை தேடி வருகிறது. அந்த வாலிபர் படுக்கை அறைகளை எட்டிப்பார்க்கும் சைக்கோ மனநிலை கொண்டவராக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது.

''எதற்காக அந்த நபர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறார், பொருட்களை திருடுவதற்கா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்துடன் வந்தாரா என்பது மர்மமாகவே உள்ளது. மேலும், அவர் பார்ப்பதற்கு வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர் போல் தெரிகிறது. சமீப காலங்களாக இதுபோன்ற மர்ம நபர்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, காவல்துறை அந்த நபரை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளோம்,'' என அப்பகுதியில் வசிக்கும் பழனி தெரிவிக்கிறார்.https://www.bbc.com/tamil/india-51159418

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.