Jump to content

சிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம்

சிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம்

பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரோ மற்றும் சிக்கலே அமைப்பைச் சேர்ந்த மடில்லே பஞ்ஞாலோக தேரோ ஆகியோர் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தனர்.

கொழும்பில் இருக்கும் பௌத்த மதகுருமார்களைவிடவும் வடக்கு, கிழக்கில் வசிக்கும் மதகுரமார்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் தமிழ் இனவாதிகளால் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அந்த நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கோடு அவர்களுக்குரிய பாதுகாப்பை ஏற்படுத்தி பௌத்த மதத்தை வளர்க்கும் நோக்கோடு தாம் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாக ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரர் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த குழுவினர் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அங்கு சென்று ஆலயம் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டதோடு, பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்படுள்ள பௌத்த விகாரையைச் சேர்ந்த அமைப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/சிங்கள-பௌத்த-அமைப்புகளைச/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.