Jump to content

நான் அடிச்சால் தாங்க மாட்டாய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

73-DF10-BD-AE7-D-4-BE6-BB06-FEEA8-E2263-

சொத்துப் பிரிக்கும் போது குடும்பங்களுக்குள் அடிதடி, வெட்டுக்குத்து என்று  சண்டைகள் நடப்பதுண்டு. அதற்காக நீதிமன்றம் போய் அங்கே ஒரு தீர்ப்புக் கிடைத்தாலும் அதன் பிறகும் அவர்களது சண்டைகள் சில இடங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

வாதியும் பிரதிவாதியும் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தால் கூட அது நீதிமன்ற வளாகமானாலும் வாய்த் தர்க்கமோ அல்லது கைகலப்போ அல்லது ஒருவருக்கு ஒருவர் முறைத்துக் கொள்ளும்  நிலையோ கண்டிப்பாக இருக்கும். இதையெல்லாம் தமிழக சினிமாக்களில் காட்சிகளாகவும் அடிக்கடி நாங்கள் பார்ப்பதால் எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் பார்க்கும் யேர்மனியருக்கு இது புதிதாக இருக்கும். பொதுவாக அவர்கள் வெளிப்படையாக சட்டத்தை மதிப்பவர்கள் மட்டுமல்ல சட்டத்துக்கு மதிப்பளித்து நடப்பவர்களும் கூட.

யேர்மனியில்  உள்ள நீதிமன்றத்தில் 17.01.2020 அன்று நடந்த ஒரு சம்பவம் பலருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் நிருபர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.  “பல வருடங்களாக நான் ஒரு நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்படியான ஒரு சம்பவத்தை நான் எனது பணி அனுபவத்தில் இதுவரை சந்தித்தது இல்லைநீதிமன்றத்திலேயே இப்படியென்றால் அவர்களுக்கு நீதியின் நிழலே தெரிந்திருக்க வாய்ப்பில்லை

வெவ்வேறு குடும்பங்களில் இருந்து வந்த லெபனான் நாட்டைச் சேர்ந்த 16 இல் இருந்து 21 வயதிலான பாடசாலை மாணவர்களுக்குள் அவர்கள் நாட்டைச் சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  குறிப்பிட்ட  ஒரு பெண்ணுடன் தொடர்பை வைத்திருக்க வேண்டாம் என்ற அவர்களது எச்சரிப்பை அந்த இளைஞன் அசட்டை செய்தமையால் 2019 யூலையில் ஒருநாள் அவனை மற்றைய இளைஞர்கள் அடித்து, துவைத்து விட்டார்கள்.

அத்தோடு விட்டிருந்தால் பிரச்சனை எதுவும் வந்திருக்காது. அந்த இளைஞனைக் கேவலப்படுத்திக் காட்டுவதற்காக  அடித்து, உதைத்ததை எல்லாம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டு தங்களது வீரத்தைக் காட்டப் போனதால் சிக்கலாகிப் போனது.

பாடசாலை மாணவர்களின் இந்த நடவடிக்கை ஒரு பெரிய அலையைக் கிளப்பிவிட  பொலீஸ், வழக்கு, விசாரணை  என்றாகிப் போனதுவழக்குக்கு முக்கிய சாட்சியாக இருந்ததே அவர்கள் சமூகத் தளத்தில் தரவேற்றிய அந்த வீடியோதான். இந்த வழக்குதான் அன்று நடந்தது.

வழக்கு விசாரணையின் பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மூன்று வருடங்களும் மூன்று மாதங்களும் தண்டனை கொடுத்து நீதிபதி  தீர்ப்பளித்திருந்தார். அதன் பிறகே நீதிமன்றம் அல்லோலகல்லோலப் பட்டது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இளைஞர்களும் பார்வையாளர்களான லெபனானியர் சிலரும் ஒருவரோடொருவர் வெறித்தனமாக மோதிக் கொண்டார்கள். ஆனாலும் நிலைமை மோசமாவதற்குள்  20 பொலிஸார் மற்றும் நீதிமன்றப் பாதுகாவலர்கள் இணைந்து  சிறிது நேரத்துக்குள்  எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இப்பொழுது இன்னும் ஒரு வழக்கு அந்த இளைஞர்களுக்குச் சேர்ந்திருக்கிறது.

இளைஞர்கள் படிப்பதற்கு இன்னமும்  நிறைய இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

 

73-DF10-BD-AE7-D-4-BE6-BB06-FEEA8-E2263-

வழக்கு விசாரணையின் பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மூன்று வருடங்களும் மூன்று மாதங்களும் தண்டனை கொடுத்து நீதிபதி  தீர்ப்பளித்திருந்தார். அதன் பிறகே நீதிமன்றம் அல்லோலகல்லோலப் பட்டது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இளைஞர்களும் பார்வையாளர்களான லெபனானியர் சிலரும் ஒருவரோடொருவர் வெறித்தனமாக மோதிக் கொண்டார்கள். ஆனாலும் நிலைமை மோசமாவதற்குள்  20 பொலிஸார் மற்றும் நீதிமன்றப் பாதுகாவலர்கள் இணைந்து  சிறிது நேரத்துக்குள்  எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இப்பொழுது இன்னும் ஒரு வழக்கு அந்த இளைஞர்களுக்குச் சேர்ந்திருக்கிறது.

இளைஞர்கள் படிப்பதற்கு இன்னமும்  நிறைய இருக்கிறது.

இப்போ....  மூன்று வருட தீர்ப்புடன், இந்த அடிபிடி தீர்ப்பும் சேர்ந்து... சிறையில் இருந்து வெளியே வர,
தலைமுடி நரைத்து... படிக்கின்ற கலாமும் கடந்திருக்கும்.
ம்ம்ம்.... வாழ்க்கையை,  வீணாக்கி விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

இளைஞர்கள் படிப்பதற்கு இன்னமும்  நிறைய இருக்கிறது.

இடங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறையால் வெளியே வந்தாப்பிறகு பாகம் இரன்டு தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2020 at 2:23 PM, தமிழ் சிறி said:

இப்போ....  மூன்று வருட தீர்ப்புடன், இந்த அடிபிடி தீர்ப்பும் சேர்ந்து... சிறையில் இருந்து வெளியே வர,
தலைமுடி நரைத்து... படிக்கின்ற கலாமும் கடந்திருக்கும்.
ம்ம்ம்.... வாழ்க்கையை,  வீணாக்கி விட்டார்கள். 

ஐரோப்பிய நீதி மன்றங்களில் தண்டனையுடன்  சேர்த்து  ஒரு  எச்சரிக்கையும் தருவார்கள்

அது  அடுத்தமுறை தவற  செய்யாமல் இருப்பதற்காக  எச்சரிப்பது

மீறினால் தண்டனை  பல  மடங்காகும்

இவர்களுக்கு  கையோட  கம்மாசு....

5 minutes ago, சுவைப்பிரியன் said:

சிறையால் வெளியே வந்தாப்பிறகு பாகம் இரன்டு தொடரும்.

சிறையில்  இருக்கும்போதே உறவுகளுக்குள் தொடரலாம்.....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த லெபனான் சனம் மோட்டு/முரட்டுக்கூட்டங்கள். இடம் நேரகாலம் இங்கிதம் தெரியாததுகள்

# சொந்த அனுபவம்.

Link to comment
Share on other sites

2 hours ago, சுவைப்பிரியன் said:

சிறையால் வெளியே வந்தாப்பிறகு பாகம் இரன்டு தொடரும்.

அனேகமாக அவர்கள் சிறையால் வெளியே வந்தபின் அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்பார்க்கலாம். சுவைப்பிரியன் அவர்கள் இரண்டாம்பாகம் எழுத லெபனான் நாட்டுக்குச் செல்லவேண்டி வரலாம். ஆகவே அரபுமொழி தெரியவேண்டும் தெரியாவிட்டால் இப்போதிருந்தே அந்த மொழி பயிலத்தொடங்குவது நல்லது.

arabic%2B%2Bsun-and-moon-letters.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உந்த லெபனான் சனம் மோட்டு/முரட்டுக்கூட்டங்கள். இடம் நேரகாலம் இங்கிதம் தெரியாததுகள்

# சொந்த அனுபவம்.

சட்டியைப் பாத்து பானை கரியெண்டு சொல்லி இளிச்சமாதிரிக் கிடக்கு😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

சட்டியைப் பாத்து பானை கரியெண்டு சொல்லி இளிச்சமாதிரிக் கிடக்கு😜

எங்கடையாக்கள் வலு டீசண்ட் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

சிறையால் வெளியே வந்தாப்பிறகு பாகம் இரன்டு தொடரும்.

அவர்கள்  சிறையால்... வெளியே வர, 
சம்பந்தப் பட்ட பெண் வேறொருவரை கலியாணம் கட்டி,
அவரது பிள்ளை,  அதே பாடசாலையில்... படித்துக் கொண்டிருக்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

சட்டியைப் பாத்து பானை கரியெண்டு சொல்லி இளிச்சமாதிரிக் கிடக்கு😜

18 hours ago, ரதி said:

எங்கடையாக்கள் வலு டீசண்ட் 🤔

இவர்கள் இருவர் மீதும் லெபனான் காற்றுக்கூட படவில்லை என்பது நன்கு புலனாகின்றது.😎

உங்கை ஒரே பாக்கியும் சிங்கும் தானே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

அனேகமாக அவர்கள் சிறையால் வெளியே வந்தபின் அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்பார்க்கலாம்.

இவங்களை ஏத்திக்கொண்டு போன பிளைட் திரும்பி வரக்கிடையிலை அவங்கள் இஞ்சை திரும்பி வந்துடுவாங்கள் கண்டியளோ..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

சட்டியைப் பாத்து பானை கரியெண்டு சொல்லி இளிச்சமாதிரிக் கிடக்கு😜

 

21 hours ago, ரதி said:

எங்கடையாக்கள் வலு டீசண்ட் 🤔

லெபனான்காரருடன்.. எங்கடை ஆட்களை ஒப்பிடும் போது,   
எங்கடையாக்கள்....  சரியான டீசண்ட். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

லெபனான்காரருடன்.. எங்கடை ஆட்களை ஒப்பிடும் போது,   
எங்கடையாக்கள்....  சரியான டீசண்ட். :) 

அதைத் தான் நானும் சொன்னேன் 😙

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.