Jump to content

இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.!

Sivaji-2-720x450.jpg

2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம்.

இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது.

அதாவது  விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்பனவே தற்போது புதிய கூட்டணி பற்றி பேசி வருகின்றன.

எனினும் குறித்த கட்சிகளில்  ஈழமக்கள் புரட்சிகள விடுதலை முன்னணிக்கு மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்த்து உள்ளது.  அந்த கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அதன் மத்திய குழுவில் ஆராய்ந்து அனுமதிகளை பெற்றுகொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான அனுமதியை  வழங்கியப் பின்னரே  புதிய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும். குறித்த  கூட்டணிக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணமாகும். மேலும்  2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

http://www.vanakkamlondon.com/sivaji-18-01-2020/

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.!

இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல.

Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.!

 

2 hours ago, Rajesh said:

இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல.

கீழே உள்ள அட்டவணையை பாருங்கள். 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியமில்லை.

large.102966E3-F55A-4908-8C20-1D170090E1

https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka

இந்த அட்டவணை இலங்கை சனத்தொகை வளர்ச்சியை காட்டுகிறது. இலங்கை சனத்தொகை இறுதியாக இரண்டு மடங்காக அதிகரிக்க எடுத்துக் கொண்ட காலம் 49 வருடங்கள் ( 1963 - 2012) . ஆகவே, 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியம் இல்லை. ஆனால், சிவாஜிலிங்கம் சொல்லுவது இதனிலும் அதிகமான தமிழர் தொகை குறையும் வீதம் பற்றிது. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழர் பெருமளவில் சிங்களவராகவும், கனேடியர், பிரெஞ்சுக்காரர் ஜேர்மானியர் போன்ற வேறு இனங்களுக்கும் மாற உள்ளதால், மேலும் தமிழர் சனத்தொகை குறைவடைய போகிறது. 

இலங்கைத் தமிழரின் அழிவுக்கு பெரும் காரணம் ஆதாரமோ, ஆய்வுகளோ இல்லாமல் எழுந்தமானமான கருத்துக்களை ஒருவர் முன்வைக்க, மற்றவர்கள் அந்த கருத்துக்களை நம்பி முடிவெடுத்து செயற்படுவதாகும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கற்பகதரு said:

 

கீழே உள்ள அட்டவணையை பாருங்கள். 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியமில்லை.

large.102966E3-F55A-4908-8C20-1D170090E1

https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka

இந்த அட்டவணை இலங்கை சனத்தொகை வளர்ச்சியை காட்டுகிறது. இலங்கை சனத்தொகை இறுதியாக இரண்டு மடங்காக அதிகரிக்க எடுத்துக் கொண்ட காலம் 49 வருடங்கள் ( 1963 - 2012) . ஆகவே, 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியம் இல்லை. ஆனால், சிவாஜிலிங்கம் சொல்லுவது இதனிலும் அதிகமான தமிழர் தொகை குறையும் வீதம் பற்றிது. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழர் பெருமளவில் சிங்களவராகவும், கனேடியர், பிரெஞ்சுக்காரர் ஜேர்மானியர் போன்ற வேறு இனங்களுக்கும் மாற உள்ளதால், மேலும் தமிழர் சனத்தொகை குறைவடைய போகிறது. 

இலங்கைத் தமிழரின் அழிவுக்கு பெரும் காரணம் ஆதாரமோ, ஆய்வுகளோ இல்லாமல் எழுந்தமானமான கருத்துக்களை ஒருவர் முன்வைக்க, மற்றவர்கள் அந்த கருத்துக்களை நம்பி முடிவெடுத்து செயற்படுவதாகும்.

தெளிவாக கூற  முடியுமா ?

Link to comment
Share on other sites

3 hours ago, Rajesh said:

இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல.

 

1 hour ago, கற்பகதரு said:

இலங்கைத் தமிழரின் அழிவுக்கு பெரும் காரணம் ஆதாரமோ, ஆய்வுகளோ இல்லாமல் எழுந்தமானமான கருத்துக்களை ஒருவர் முன்வைக்க, மற்றவர்கள் அந்த கருத்துக்களை நம்பி முடிவெடுத்து செயற்படுவதாகும்.

 

37 minutes ago, Kapithan said:

தெளிவாக கூற  முடியுமா ?

செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் அன்றைய அரசியல்வாதிகளும் தமிழீழம் சாத்தியம் என்றும் இந்தியா தமிழீழத்துக்கு ஆதரவு தரும் என்றும்  போதிய ஆதாரமோ ஆய்வுகளோ இன்றி தமிழீழ கோட்பாட்டை முன்வைக்க, இவர்களின் தமிழீழ கோட்பாட்டை நம்பி பதின்ம வயதில் ஆயுதம் ஏந்தி முடிவெடுத்து தமிழீழம் அடைய முயற்சித்ததன் விளைவை நாமறிவோம் இல்லையா? ராஜேஷின் "இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல." என்ற கருத்தும் இவ்வாறானதே. அதை நம்பாதீர்கள். நான் மேலே ஆதாரம் தந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

 

 

செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் அன்றைய அரசியல்வாதிகளும் தமிழீழம் சாத்தியம் என்றும் இந்தியா தமிழீழத்துக்கு ஆதரவு தரும் என்றும்  போதிய ஆதாரமோ ஆய்வுகளோ இன்றி தமிழீழ கோட்பாட்டை முன்வைக்க, இவர்களின் தமிழீழ கோட்பாட்டை நம்பி பதின்ம வயதில் ஆயுதம் ஏந்தி முடிவெடுத்து தமிழீழம் அடைய முயற்சித்ததன் விளைவை நாமறிவோம் இல்லையா? ராஜேஷின் "இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல." என்ற கருத்தும் இவ்வாறானதே. அதை நம்பாதீர்கள். நான் மேலே ஆதாரம் தந்துள்ளேன்.

ராஜேஸின் சனத்தொகைப் பெருக்க சாத்தியக்கூறை அவர் பொதுவாக சனத்தொகையை பெருக்க முடியும் என்று கூறியதாகவே நான் கொள்கிறேன். நான் உங்களிடம் கேட்பது விஞ்ஞான ரீதியிலான விரிவான விளக்கம்.

(அண்மையில் ரஸ்ய அதிபர் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு அளித்த பதில்  பின்வரும் சாரப்பட அமைந்தது. 

ரஸ்ய சனத்தொகை 140 மில்லியன்(?), நேட்டோ NATO நாடுகளின் சனத்தொகையோ 560 மில்லியன்(?) அப்படியிருக்க ரஸ்யா NATO நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலா ? என கூறினார்.)

இலங்கையில் தமிழரின் இருப்பு இந்தியாவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. இதன் அடிப்படையில் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி என்பது இந்தியாவின் பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டையாகத்தான் பார்க்கப்படும். இதனை சமன் செய்வது எவ்வாறு ?

1) இலங்கைத் தமிழரின் சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தல். அது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.

2) இந்தியத் தமிழர்களை / இந்தியர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுதல்.ஆனால் எவ்வாறு ? (இவ்வாறான ஒரு சூழல் ஏற்படுவதற்கு வடக்கு கிழக்கை இந்தியாவின் ஒரு பிரத்தியேக அதிகாரங்கள் கொண்ட மானிலமாக இணைக்க வேண்டும்.)

????

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

ராஜேஸின் சனத்தொகைப் பெருக்க சாத்தியக்கூறை அவர் பொதுவாக சனத்தொகையை பெருக்க முடியும் என்று கூறியதாகவே நான் கொள்கிறேன். நான் உங்களிடம் கேட்பது விஞ்ஞான ரீதியிலான விரிவான விளக்கம்.

எதற்கான விஞ்ஞான விளக்கத்தை கேட்கிறீர்கள்? எப்படி சனத்தொகையை பெருக்குவது என்பது பற்றிய விஞ்ஞான விளக்கமா?
 

1 hour ago, Kapithan said:

இலங்கையில் தமிழரின் இருப்பு இந்தியாவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. இதன் அடிப்படையில் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி என்பது இந்தியாவின் பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டையாகத்தான் பார்க்கப்படும். இதனை சமன் செய்வது எவ்வாறு ?

“இலங்கையில் தமிழரின் இருப்பு” என்பதும் “தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி”  என்பதும் இலங்கை தமிழரின் சனத்தொகை பற்றிய, ஆனால் வேறு வேறான குணாம்சங்கள். இலங்கையில் தமிழரின் இருப்பு இந்தியாவுக்கு தேவையாக இருக்கிறது, ஆனால் இலங்கைத் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி இந்தியாவுக்கு சாதகமா, அல்லது பாதகமா என்பது விவாதத்துக்கு உரியது. இன்றைய நிலையில் இலங்கைத் தமிழர் இலங்கைக்கு தலையிடி கொடுக்கும் அளவுக்கு மட்டுமே பலமாக இருக்க வேண்டும், பிரச்சினையை தீர்த்து, தலையிடியை நிவாரணம் செய்யும் அளவுக்கு இலங்கைத் தமிழர் பலம் பெற கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அவ்வாறாக, இலங்கைத் தமிழரின் பலத்தை மட்டுப்படுத்துவதில், சனத்தொகை வளர்ச்சியை குறைப்பதும் ஒரு அணுகுமுறையாகும்.

 

1 hour ago, Kapithan said:

1) இலங்கைத் தமிழரின் சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தல். அது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.

2) இந்தியத் தமிழர்களை / இந்தியர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுதல்.ஆனால் எவ்வாறு ? (இவ்வாறான ஒரு சூழல் ஏற்படுவதற்கு வடக்கு கிழக்கை இந்தியாவின் ஒரு பிரத்தியேக அதிகாரங்கள் கொண்ட மானிலமாக இணைக்க வேண்டும்.)

இலங்கைக்கு இந்திய இராணுவம் வர முதல் ரெலோவை அழித்தபின் விடுதலைப்புலிகள் மக்களை சந்தித்து தந்த விளக்கம், ரெலோ இந்திய இரகசிய இராணுவ பிரிவு என்றும், ரெலோவை விட்டுவைத்திருந்தால் இந்திய இராணுவம் வந்து தமிழீழத்தை தமிழ்நாட்டின் ஒரு பாகமாக்கி விட்டிருப்பர் என்பதாக இருந்தது. 

சீன, அமெரிக்க நகர்வுகளை பொறுத்தே அடுத்த இந்திய நகர்வு அமையும். எனது அபிப்பிராயம் MCC உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா நேரடியாக இலங்கையில் தன்னை தேவையான அளவில் உறுதிப்படுத்திக் கொள்ளும். அமெரிக்க - சீன போட்டில் பங்காற்றும் அளவுக்கு இந்தியா பலமான நாடல்ல. இந்த அமெரிக்க - சீன போட்டியில் இலங்கைத் தமிழர்களால் இரண்டு பகுதிக்கும் பயன் மிகக் குறைவு. ஆகவே, இலங்கைத் தமிழர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போவதை எவரும் தடுக்கப் போவதில்லை. இந்தியா ஓரளவுக்கு அதை விரும்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கற்பகதரு said:

எதற்கான விஞ்ஞான விளக்கத்தை கேட்கிறீர்கள்? எப்படி சனத்தொகையை பெருக்குவது என்பது பற்றிய விஞ்ஞான விளக்கமா?
 

இலங்கையில் தமிழரின் இருப்பு” என்பதும் “தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி”  என்பதும் இலங்கை தமிழரின் சனத்தொகை பற்றிய, ஆனால் வேறு வேறான குணாம்சங்கள். இலங்கையில் தமிழரின் இருப்பு இந்தியாவுக்கு தேவையாக இருக்கிறது, ஆனால் இலங்கைத் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி இந்தியாவுக்கு சாதகமா, அல்லது பாதகமா என்பது விவாதத்துக்கு உரியது. இன்றைய நிலையில் இலங்கைத் தமிழர் இலங்கைக்கு தலையிடி கொடுக்கும் அளவுக்கு மட்டுமே பலமாக இருக்க வேண்டும், பிரச்சினையை தீர்த்து, தலையிடியை நிவாரணம் செய்யும் அளவுக்கு இலங்கைத் தமிழர் பலம் பெற கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அவ்வாறாக, இலங்கைத் தமிழரின் பலத்தை மட்டுப்படுத்துவதில், சனத்தொகை வளர்ச்சியை குறைப்பதும் ஒரு அணுகுமுறையாகும்.

 

இலங்கைக்கு இந்திய இராணுவம் வர முதல் ரெலோவை அழித்தபின் விடுதலைப்புலிகள் மக்களை சந்தித்து தந்த விளக்கம், ரெலோ இந்திய இரகசிய இராணுவ பிரிவு என்றும், ரெலோவை விட்டுவைத்திருந்தால் இந்திய இராணுவம் வந்து தமிழீழத்தை தமிழ்நாட்டின் ஒரு பாகமாக்கி விட்டிருப்பர் என்பதாக இருந்தது. 

சீன, அமெரிக்க நகர்வுகளை பொறுத்தே அடுத்த இந்திய நகர்வு அமையும். எனது அபிப்பிராயம் MCC உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா நேரடியாக இலங்கையில் தன்னை தேவையான அளவில் உறுதிப்படுத்திக் கொள்ளும். அமெரிக்க - சீன போட்டில் பங்காற்றும் அளவுக்கு இந்தியா பலமான நாடல்ல. இந்த அமெரிக்க - சீன போட்டியில் இலங்கைத் தமிழர்களால் இரண்டு பகுதிக்கும் பயன் மிகக் குறைவு. ஆகவே, இலங்கைத் தமிழர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போவதை எவரும் தடுக்கப் போவதில்லை. இந்தியா ஓரளவுக்கு அதை விரும்பும்.

1) ராஜேஸ் கூறியபடி சனத்தொகையை பெருக்க முடியாது என்பதை.

2) இலங்கையில் தமிழரின் இருப்பு (பலம்) என்பது இன்னும் சில பத்தாண்டுகளில் அறவே இல்லாது அல்லது பேரம் பேசக்கூடிய நிலையில் இல்லாது போம். அதே நேரம் சிங்களத்தின் பலம் பன்மடங்கு பெருகும். சிங்களத்தின் பலம் என்பது சீனாவின்  பலம். ஆகவே தவிர்க்கவியலாது இந்தியா தனது நலனின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் தான் அல்லது தனது நலனை பேணக்கூடிய சக்தியை அதிகாரத்தில் வைத்திருக்கவேண்டி ஏற்படும்.
 

3) அண்மையில் நானறிந்த வகையில் இந்தியா  Crimia வில் ரஸ்யா மேற்கொண்ட நடவடிக்கை போன்றதொரு நடவடிக்கைக்கு (?) தயாராகிவருவதாக தெரிகிறது. 

 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

1) ராஜேஸ் கூறியபடி சனத்தொகையை பெருக்க முடியாது என்பதை.

 

7 hours ago, கற்பகதரு said:

 

கீழே உள்ள அட்டவணையை பாருங்கள். 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியமில்லை.

large.102966E3-F55A-4908-8C20-1D170090E1

https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka

இந்த அட்டவணை இலங்கை சனத்தொகை வளர்ச்சியை காட்டுகிறது. இலங்கை சனத்தொகை இறுதியாக இரண்டு மடங்காக அதிகரிக்க எடுத்துக் கொண்ட காலம் 49 வருடங்கள் ( 1963 - 2012) . ஆகவே, 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியம் இல்லை. ஆனால், சிவாஜிலிங்கம் சொல்லுவது இதனிலும் அதிகமான தமிழர் தொகை குறையும் வீதம் பற்றிது. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழர் பெருமளவில் சிங்களவராகவும், கனேடியர், பிரெஞ்சுக்காரர் ஜேர்மானியர் போன்ற வேறு இனங்களுக்கும் மாற உள்ளதால், மேலும் தமிழர் சனத்தொகை குறைவடைய போகிறது. 

வரலாற்றில் 49 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது சனத்தொகையை இரண்டு மடங்காக்க. அதை 10 வருடத்தில் செய்வதானால், ஏதாவது அதி அற்புத மாற்றம் நிகழ வேண்டும். அப்படி எதுவும் நிகழவில்லை.

 

Link to comment
Share on other sites

On 1/20/2020 at 8:12 AM, கற்பகதரு said:

வரலாற்றில் 49 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது சனத்தொகையை இரண்டு மடங்காக்க. அதை 10 வருடத்தில் செய்வதானால், ஏதாவது அதி அற்புத மாற்றம் நிகழ வேண்டும். அப்படி எதுவும் நிகழவில்லை.

 

On 1/20/2020 at 12:30 AM, கற்பகதரு said:

உப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது.     

உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ?

ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ?

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ?

அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ?

ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.

Link to comment
Share on other sites

சிங்களவனது நோக்கமே பாரதியார் பாடியது போல இலங்கையை சிங்கள தீவாக்குவதுதான்। அதாவது இதில் ஏறக்குறைய ஐம்பது வீதம் செய்துவிடடார்கள்।

அதாவது கொழும்பு , நீர்கொழும்பு , சிலாபம், புத்தளம் பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் இப்போது சிங்களம்தான் பேசுகிறார்கள்। வயது சென்றவர்கள் தமிழ் பேசினாலும் இப்போதைய சந்ததி அநேகமாக சிங்கள மொழியில்தான் கல்வி கேட்கிறார்கள்।

இன்னும் வவுனியா , திருகோணமலை, மடடக்ளப்பு , அமபரை , மன்னர் , முல்லைத்தீவு போன்ற இடங்களில் நிறையவே குடியேற்றங்கள் செய்துவிடடார்கள்। இன்று வவுனியா நெடுங்கேர்னி பிரதேச சபையை கைப்பற்றும் அளவுக்கு சிங்களவர்கள் வடக்கு நோக்கி முன்னேறிவிடடார்கள்।

என்னதான் பேசினாலும் அவர்களது ரகசிய திடடம் சிங்கள மக்களை பரவலாக எல்லா இடமும் குடியேற்றி சிங்கள நாடக மாற்றுவதே।

சிவாஜிலிங்கம் சொன்னதுபோல தமிழர்கள் இருப்பார்கள் ஆனால் சிங்கள மொழி பேசுவார்கள்।

Link to comment
Share on other sites

19 hours ago, Gowin said:

 

உப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது.     

உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ?

ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ?

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ?

அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ?

ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.

நீங்கள் பெத்து விட்டது இதுவரை எத்தனை? எல்லாம் வெறும் விண்ணாளும் வண்டாவாள கதை மட்டும் தானா?

 

Link to comment
Share on other sites

9 minutes ago, கற்பகதரு said:

நீங்கள் பெத்து விட்டது இதுவரை எத்தனை? எல்லாம் வெறும் விண்ணாளும் வண்டாவாள கதை மட்டும் தானா?

 

சரியாக சொன்னீர்கள்। 

Link to comment
Share on other sites

14 hours ago, கற்பகதரு said:

நீங்கள் பெத்து விட்டது இதுவரை எத்தனை? எல்லாம் வெறும் விண்ணாளும் வண்டாவாள கதை மட்டும் தானா?

 

ஓ! உங்கட ஆதார வண்டவாளம் உடைஞ்சு போச்சோ?

லிங்கத்தை வரிந்து கட்டினாலும் வண்டவாளங்களுக்கு குறைவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2020 at 7:42 AM, Gowin said:

 

உப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது.     

உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ?

ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ?

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ?

அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ?

ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.

குழந்தைப் பேறு என்பது சீசனுக்கு வரும் ஓடர் போல சடுதியாக  கூட்டிக் குறைக்க முடியுமா ? 

பொருளாதார வளம், உடல் ஆரோக்கியம் (Health), காலம் அளவுடன் தொடர்புபட்ட விடயங்கள் அல்லவா ?

சடுதியாக அதிகரிக்க முடியும் என நம்புகிறீர்களா ? ஆம் என்றால் விளங்கப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

குழந்தைப் பேறு என்பது சீசனுக்கு வரும் ஓடர் போல சடுதியாக  கூட்டிக் குறைக்க முடியுமா ? 

பொருளாதார வளம், உடல் ஆரோக்கியம் (Health), காலம் அளவுடன் தொடர்புபட்ட விடயங்கள் அல்லவா ?

சடுதியாக அதிகரிக்க முடியும் என நம்புகிறீர்களா ? ஆம் என்றால் விளங்கப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

kapithaan அவர்களே சரியாக கூறினீர்கள்। விளக்கம் தந்தால் நல்லது। சம்பந்தனுக்கு இதுக்கும் என்ன தொடர்பென்று விளங்கவில்லை। 

Link to comment
Share on other sites

8 hours ago, Rajesh said:

ஓ! உங்கட ஆதார வண்டவாளம் உடைஞ்சு போச்சோ?

லிங்கத்தை வரிந்து கட்டினாலும் வண்டவாளங்களுக்கு குறைவில்லை!

லிங்கம் இல்லாத வண்டாவாளமா? இதென்ன புதுக்கதை 😁

Link to comment
Share on other sites

11 hours ago, Kapithan said:

குழந்தைப் பேறு என்பது சீசனுக்கு வரும் ஓடர் போல சடுதியாக  கூட்டிக் குறைக்க முடியுமா ? 

யாரோ போடுற ஓடர்களுக்கு வேலை செய்து பழகின தோஷத்தில ஓடர் நினைவுக்கு வந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

யாரோ போடுற ஓடர்களுக்கு வேலை செய்து பழகின தோஷத்தில ஓடர் நினைவுக்கு வந்திருக்கு.

பிறரை இழிவுபடுத்த விரும்புவதனனூடாக நீங்கள் என்ன வகையான அனுபவத்தைப்  பெறுகிறீர்கள் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மூண்டு நாலு பிள்ளைகளை யாழ்பாணத்தில் பெத்து போட்டால் யார் கவனிப்பது ?

முஸ்லிம்களாக மதம் மாறி முஸ்லிம் சன தொகை பெருகி முஸ்லிம் நாடு உருவாகும்🥵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இன்னும் பத்தாண்டில் சீனன் இலங்கை முழுவதும் குடியேறிவிடுவான்.  எதற்கும் அந்த மொழியை முன்னெச்சரிக்கையாய்  படித்து வைப்பது நன்மை பயக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:


இன்னும் பத்தாண்டில் சீனன் இலங்கை முழுவதும் குடியேறிவிடுவான்.  எதற்கும் அந்த மொழியை முன்னெச்சரிக்கையாய்  படித்து வைப்பது நன்மை பயக்கும். 

ஏற்கனவே அண்ணளவாக  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் இலங்கையின் தென்பகுதியில் நிலை (!) கொண்டுள்ளனர் என நான் அறிகிறேன். காரணம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி கட்டுமானப் பணிகள் நிமித்தம் வந்திருக்கிறார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாய் தான் முடியும். சீனன் கால் வைத்த இடத்தை சொந்தமாக்காமல் விடமாட்டான். பல்லி, பாம்பு,  பூச்சிகளுக்கும் அழிவுதான்.

Link to comment
Share on other sites

4 minutes ago, satan said:

அபிவிருத்தி கட்டுமானப் பணிகள் நிமித்தம் வந்திருக்கிறார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாய் தான் முடியும். சீனன் கால் வைத்த இடத்தை சொந்தமாக்காமல் விடமாட்டான். பல்லி, பாம்பு,  பூச்சிகளுக்கும் அழிவுதான்.

கொழும்பில் இப்போது கட்டாக்காலி  நாய்கள்  மிகக்குறைவு । இந்த சீனாக்காரன்  எல்லாவற்றையும்   முடித்து  விடடான்। அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது। நிறைய சீன பொருட்களை  கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் । இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள்। தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள்। இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது। கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பில் முக மூடி (Face Mask ) அணியும்படி கேட்டிருக்கிறார்கள்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டியிட்டை எடுத்த வடையை நரியிட்ட பறிகொடுத்த காகம் மாதிரி, சிங்களவனும் ஒரு நாள்  ஏமாறலாம். தமிழரின் உரிமைகளை கொடுத்து சேர்ந்து வாழ விரும்பாமல், பேராசைப்பட்டு வெளிநாடுகளுக்கு பிரிச்சு குடுத்திட்டு, அப்புறம்  குடையேக்கை தெரியும் தங்கள் முட்டாள் தனமான தந்திரம். சிங்களவரின் வாக்கு  நாட்டை, கேட்டு கேள்வி இல்லாமல்  அந்நிய தேசத்துக்கு இப்போ குத்தகை. பின்னாளில் விற்பனைக்கே வழிவகுக்கும். தமிழரை அடிமைப்படுத்துற குஷியில் இப்போ ஒன்றும் புரியாது. புரியேக்கை எல்லாம் கைமாறிப் போய்விடும்.  சிங்களவன் எவ்வளவு முட்டாள் என்பதை புரிந்துள்ள ஒவ்வொரு நாடும் இனப்பிரச்சனைக்கு தீனி போட்டு நன்றாக எல்லாப் பக்கமும் வளைத்து மூச்சு விடமுடியாத படி இறுக்கப் படுகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.