Jump to content

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

111-1.jpg

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

முன்னாள் போராளிகள் பலரின் ஒருங்கிணைவில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியொன்று உதயமாகின்றது.

இந்த கட்சியின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அண்மையில் வவுனியாவில் ஒன்று கூடியிருந்த முன்னாள் போராளிகள் அணிகளான ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் அணி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சமூக செயற்பாடுகளில் பங்கேற்றிருந்த தரப்பினர் உள்ளிட்டவர்கள் சமகால சூழலில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.

மாவீர்களின் உறவுகளையும் முன்னாள் போராளிகளையும், தாயக மக்களையும் மையமாக வைத்து அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த இணக்கப்பாட்டினை அடுத்து 14 பேர் கொண்ட தலைமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.

மேலும் முன்னாள் போராளிகள் பலர் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதம் உள்ளடங்கும் வகையிலேயே கட்சியின் பெயர் அமைய வேண்டும் என்பதில் அதீத விருப்பினை கொண்டிருந்தமையை முன்னிலைப்படுத்தி கட்சியின் பெயர் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

எனினும் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதத்தினை உள்ளீர்க்கும் பட்சத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நகர்வுகளைச் செய்கின்றபோது சிக்கல்கள் உருவாகும் என்ற அடிப்படையில் ஒரு சிலர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் கட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் ‘விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை’ என்ற பெயர் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புதிதாக-மலர்கிறது-விடுதல/

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு இக்கட்சி பற்றி எந்த முடிவும் எடுக்கும் முன் இந்திய அரசு தடை செய்ய முனைவானே ! அதிலும் கட்சி உதயமாகும் முன்பே தடை பண்ண யோசிப்பார்கள் கிராதகர்கள் ! (இவர்கள் தடையால்  ........ரே போச்சு என்பது வேறு விடயம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

9 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இலங்கை அரசு இக்கட்சி பற்றி எந்த முடிவும் எடுக்கும் முன் இந்திய அரசு தடை செய்ய முனைவானே ! அதிலும் கட்சி உதயமாகும் முன்பே தடை பண்ண யோசிப்பார்கள் கிராதகர்கள் !

 

Link to comment
Share on other sites

15 minutes ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரையைப் பாவிப்பதில் ஒன்றும் குற்றமில்லையே. 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

 

ஓ ! 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

கட்சியும் பேரவையும் தான் கூடுகிறது பிரச்சினை தீர்ந்த பாடில்லை கூடித்தான் செல்கிறது 

இதில் கூத்தமைம்பும் இருந்தும் பலன் இல்லை  அப்படி இருந்தும் ஒன்றையும் செய்யமுடியல அவர்கள் மட்டும் சுகபோக வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்துவிட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

 

எவ்வளவு இலகுவாக இழிவு படுத்துகிறோம். உயிரை கொடுக்கத்துணிந்த போது விடுதலைப் போராளிகள், தற்போது கைக் கூலிகள் ?

உங்கள் கணிப்பு சரியாகவே இருந்தாலும் அவர்களை இழிவு படுத்தாமல் கூறுவதில் தவறேதும் இல்லையே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எவ்வளவு இலகுவாக இழிவு படுத்துகிறோம். உயிரை கொடுக்கத்துணிந்த போது விடுதலைப் போராளிகள், தற்போது கைக் கூலிகள் ?

உங்கள் கணிப்பு சரியாகவே இருந்தாலும் அவர்களை இழிவு படுத்தாமல் கூறுவதில் தவறேதும் இல்லையே ?

தவறென்றால் 

மரியாதையும்  முன்னைய அர்ப்பணிப்புக்களும்  எவ்வாறு  கனம் செய்யப்படும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

தவறென்றால் 

மரியாதையும்  முன்னைய அர்ப்பணிப்புக்களும்  எவ்வாறு  கனம் செய்யப்படும்???

நான் மீராவின் பார்வையில் சரியென்றாலும் என்ற அர்த்தத்தில் கூறினேன். மீராவின் கருத்துடன் நான் உடன்படுவதாக அல்லது எதிர்ப்பதாக கொள்ளவேண்டியதில்லை.

 நாகரீகமாக கருத்திடலாம் என்பதுதான் என் கூற்றின் சாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நான் மீராவின் பார்வையில் சரியென்றாலும் என்ற அர்த்தத்தில் கூறினேன். மீராவின் கருத்துடன் நான் உடன்படுவதாக அல்லது எதிர்ப்பதாக கொள்ளவேண்டியதில்லை.

 நாகரீகமாக கருத்திடலாம் என்பதுதான் என் கூற்றின் சாரம்.

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் ஒவ்வாத விடுதலைப்புலிகள் என்ற பெயரை வைத்து ஏதாவது செய்யலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

முன்னாளில் மதிப்புக்குரியவராக இருந்தவரை முன்னாள் போராளி என்று சொல்வதை ஏன் அபத்தம் என்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முன்னாளில் மதிப்புக்குரியவராக இருந்தவரை முன்னாள் போராளி என்று சொல்வதை ஏன் அபத்தம் என்கிறீர்கள்?

வழி  தடுமாறினால் ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இலங்கை அரசு இக்கட்சி பற்றி எந்த முடிவும் எடுக்கும் முன் இந்திய அரசு தடை செய்ய முனைவானே ! அதிலும் கட்சி உதயமாகும் முன்பே தடை பண்ண யோசிப்பார்கள் கிராதகர்கள் ! (இவர்கள் தடையால்  ........ரே போச்சு என்பது வேறு விடயம்).

வடகிழக்கு மாகாணங்களில் சகல நடைமுறைகளையும் இந்திய புலனாய்வுத்துறையே முன்னெடுக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

தயவுசெய்து முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம். நாங்கள் அவர்களது தற்போதைய சூழலை புரிந்துகொள்ள வேண்டும். நான் தெழிவாக இழிவுபடுத்தாமல் எழுதலாமே என்றுதான் வேண்டி நின்றேன். இதில் தவறொன்றும் இல்லையே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

தயவுசெய்து முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம். நாங்கள் அவர்களது தற்போதைய சூழலை புரிந்துகொள்ள வேண்டும். நான் தெழிவாக இழிவுபடுத்தாமல் எழுதலாமே என்றுதான் வேண்டி நின்றேன். இதில் தவறொன்றும் இல்லையே ?

சரியுங்க

மீராவின்  எழுத்தில் மயிர்  புடுங்கியதால்  தான்  இது  வந்தது

மீராவின்  எழுத்தில்  எங்கே மரியாதைக்குறைவு  இருந்தது என்று  சொன்னால் தொடரலாம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சரியுங்க

மீராவின்  எழுத்தில் மயிர்  புடுங்கியதால்  தான்  இது  வந்தது

மீராவின்  எழுத்தில்  எங்கே மரியாதைக்குறைவு  இருந்தது என்று  சொன்னால் தொடரலாம்??

கைக்கூலி என்கின்ற சொல் உங்களுக்கு நியாயமானதாக தெரிகிறதா ? மனச் சாட்சியுடன் பதிலிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா ...அவர்கள் கைக்கூலிகள் என்பது உங்கள் அனுமானமா ? அல்லது ஏதாவது நம்பக்கூடிய ஆதாரங்கள் , உரையாடல் , நடவடிக்கைகள் எதுவும் இருக்கிறதா?
அப்படி எதுவும் இருந்தால் நீங்கள் எழுதியதில் தவறில்லை. உண்மையை சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
இல்லை, அப்படி எதுவுமே இன்னும் இல்லை, என்றால் அது இப்போதைக்கு வெறும் கற்பனை, அல்லது ஊகம்  மட்டுமே.

எங்களை விட அவர்களுக்கு தகுதிகள் அதிகம், அனைத்தும் துறந்து போராடியவர்கள், சிறையில் கிடந்தது சின்னாபின்னப்பட்டவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தலைவரால் வளர்க்கப்பட்டு, வழிகாட்டப்பட்டவர்கள்.
(பலர் வழி மாறி எமக்கு எதிராக திரும்பியவர்களும் இருக்கிறார்கள்) ஆனாலும் எல்லோரையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியா?
இந்த மன நிலை எமக்கு ஒரு மாற்று அரசியல் சக்தியை வளர விடாமல் முலையோடு கிள்ளி எரியும் செயலாக கூட இருக்கலாம் அல்லவா?

பரந்த நோக்கோடு சில காரியங்களை பார்ப்பது கூட காலத்தின் தேவை தான்.
அவர்கள் ஜனநாயக அரசியலுக்கு தானே வருகிறார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

கைக்கூலி என்கின்ற சொல் உங்களுக்கு நியாயமானதாக தெரிகிறதா ? மனச் சாட்சியுடன் பதிலிடுங்கள்.

அதை நிரூபிக்கவேண்டியவர்கள் அவர்கள்

அதைவிட எனக்கு  மீராவைத்தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

அதை நிரூபிக்கவேண்டியவர்கள் அவர்கள்

அதைவிட எனக்கு  மீராவைத்தெரியும்

மீரா நல்லவர் கெட்டவர் என்பதுவோ அல்லது மீரா அவ்வாறு கூறினார் என்பதோ அல்ல விடயம். கைக்கூலி என்கின்ற சொல்லுக்குப் பதிலாக வேறு சொற்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதுதான் நான் கூற விரும்பியது. 

மற்றும், நாங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோம் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்பதும் நியாயமானது அல்ல.

கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள் நான் கூறுவதிலுள்ள உண்மை புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

மீரா நல்லவர் கெட்டவர் என்பதுவோ அல்லது மீரா அவ்வாறு கூறினார் என்பதோ அல்ல விடயம். கைக்கூலி என்கின்ற சொல்லுக்குப் பதிலாக வேறு சொற்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதுதான் நான் கூற விரும்பியது. 

மற்றும், நாங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோம் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்பதும் நியாயமானது அல்ல.

கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள் நான் கூறுவதிலுள்ள உண்மை புரியும்.

உங்களது குற்றச்சாட்டுக்கு  மீரா  பதில் தருவார் என நினைக்கின்றேன்

எனக்கென்று ஒரு  பார்வையும்   தெளிவும்  இருக்கிறது

அதன்படி அடுத்த  தலைவர்களுக்கு முன்னாள்கள்  என்ற அடைமொழி தேவையற்றது

அவர்கள் தம்மை  மக்களிடையே இனித்தான்  நிரூபிக்கணும் முன்னையைவிட  அதிகமாக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தார்கள் எமன்பது முக்கியமல்ல நிகழ்காலமும் எதிர்காலமுமே முக்கியம் ,என்னைப்பொறுத்தவரை சாதாரண பொதுமக்களே போராளிகளைவிட மேலானவர்கள் இந்த போராட்டத்தில் பொருளாதார தடை காலகட்டத்திலும் உணவு , மருந்து மற்றும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்பட்டவர்கள் , போரில் உயிர் , அவயங்களையும் இழந்தார்கள் யாராவது கூறுங்கள் போராளிகள் இந்த சாதாரண மக்களைவிட எந்த வகையில் சிறந்தவர்கள் என்று? எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் ? ஏற்கனவே ஒரு அம்மையார் பதவி கிடைத்தவுடன் அவர் யார் என்று தெரியாது என்று சொன்ன ஒரு பெரியவடன் கடுமையாக நடந்து கொண்டார்,  மக்களுக்காகப்போராடுகிறோம் என்பதெல்லாம் சரி அனால் அதனை உண்மையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களது குற்றச்சாட்டுக்கு  மீரா  பதில் தருவார் என நினைக்கின்றேன்

எனக்கென்று ஒரு  பார்வையும்   தெளிவும்  இருக்கிறது

அதன்படி அடுத்த  தலைவர்களுக்கு முன்னாள்கள்  என்ற அடைமொழி தேவையற்றது

அவர்கள் தம்மை  மக்களிடையே இனித்தான்  நிரூபிக்கணும் முன்னையைவிட  அதிகமாக...

நீங்கள் சொல்வது சரிதான் அவர்கள் தங்களை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். ஆனால் எந்த மக்களுக்கு ? தாயகத்திலுள்ளோருக்குத்தானே ? அதுவரை நாங்கள் அவர்களை தூற்றாமல் இருக்கலாமல்லவா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் இப்பொழுது சாதரணமக்களே. இவர்கள் காலத்தில் ஒரு ஆயுதம் தூக்கி போராடினார்கள் இப்பொழுது ஜானநாயக ரீதியாக ஒன்றிணைந்து ஏதோ தங்களால் முடிந்தளவு மக்களுக்கு ஏதுவும் செய்ய முயற்சிக்கின்றார்கள். பாரட்டுக்கள்.

இதேவேளை வெளி நாடுகளில் புலிகளின் பினாமி சொத்துக்களை ஆட்டையை போட்டவர்களை பற்றி யாரும் ஒன்றும் கதைக்க மாட்டார்கள். இத்தகையவர்கள் கோவில் தர்மகர்த்தாக்களாகவும், தொழில‌திபர்களாகவும் வலம் வருவார்கள்.  இவர்கள் சமுதாயத்தில் முக்கிய புள்ளிகள். ஏனென்றால் இவர்கள் செல்வந்தர்கள் இவர்களை கைக்கூலிகள் / கால் கூலிகள் என கூறமுடியாது. சீ என்ன உலகமிது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து தமிழர்கள் நாங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சொற்பதத்தை தயாராக வைத்திருப்போம், அடுத்தவனை பேசவிடாமல், அடுத்தவனை சிந்திக்க விடாமல், தேவைக்கேற்ப தூக்கி அடிப்போம்... 
கைக்கூலி , 
சமூக விரோதி, 
காவடித்தூக்கி , 
செம்பு தூக்கி,
ஒட்டுக்குழு,
 
முட்டையில் மயிரை புடுங்கு, 
சொட்டையில எண்ணெய்யை தடவு..

இதில் மட்டுமே நாங்கள் கைதேர்ந்த கில்லாடிகள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.