Jump to content

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை


Recommended Posts

11 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

 

 

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

 

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தார்கள் எமன்பது முக்கியமல்ல நிகழ்காலமும் எதிர்காலமுமே முக்கியம் ,என்னைப்பொறுத்தவரை சாதாரண பொதுமக்களே போராளிகளைவிட மேலானவர்கள் இந்த போராட்டத்தில் பொருளாதார தடை காலகட்டத்திலும் உணவு , மருந்து மற்றும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்பட்டவர்கள் , போரில் உயிர் , அவயங்களையும் இழந்தார்கள் யாராவது கூறுங்கள் போராளிகள் இந்த சாதாரண மக்களைவிட எந்த வகையில் சிறந்தவர்கள் என்று? எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் ? ஏற்கனவே ஒரு அம்மையார் பதவி கிடைத்தவுடன் அவர் யார் என்று தெரியாது என்று சொன்ன ஒரு பெரியவடன் கடுமையாக நடந்து கொண்டார்,  மக்களுக்காகப்போராடுகிறோம் என்பதெல்லாம் சரி அனால் அதனை உண்மையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் இப்போது என்னதான் பிரச்சனை ? கைக் கூலி என்று கூறுவதை தவிர்த்து அவர்களது தற்போதை சூழலையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்து எங்கள் வார்த்தைகளை கொஞ்சம் அவதானத்துடன் கதைப்போம் என்பதா ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சண்டமாருதன் said:

 

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

 

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

நன்றி சண்டமாருதன்.

உங்கள் விளக்கம் எனக்கு மேலும்  தெளிவை ஏற்படுத்தியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

ஏன் அண்ணா இயக்கம் பலவந்தமாய் ஆட்களை பிடிக்கேல்லையோ?... உங்கட பொலிசி எனக்கு பிடித்திருக்கு உங்களுக்கு விருப்பமானதை  செய்தால் தியாகிகள் அல்லாட்டில் துரோகிகள் சரியா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

தாங்களாகவே விரும்பி சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கியவர்களையும், 2009 வைகாசி மாதம் வரை நேர்மையாகப் போராடி கைது செய்யப்பட்டு சூழ்னிலைக் கைதிகளானோரையும் ஒப்பீடு செய்வது சரிதானா ? என்றொரு கேள்வி இருப்பினும்...

இந்தத் திரியில் வரும் வாதப் பிரதிவாதங்களை நான் நன்மையானதாகவே பார்க்கிறேன். 

ஏனென்றால் இந்த வாதங்கள் யாவும் எங்கள் சிந்தனை முறையில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதுடன் அதனை எழுத்திலும் பேச்சிலும் நாம்  காண்போம் என்பது திண்ணம்.  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

தாங்களாகவே விரும்பி சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கியவர்களையும், 2009 வைகாசி மாதம் வரை நேர்மையாகப் போராடி கைது செய்யப்பட்டு சூழ்னிலைக் கைதிகளானோரையும் ஒப்பீடு செய்வது சரிதானா ? என்றொரு கேள்வி இருப்பினும்...

இந்தத் திரியில் வரும் வாதப் பிரதிவாதங்களை நான் நன்மையானதாகவே பார்க்கிறேன். 

ஏனென்றால் இந்த வாதங்கள் யாவும் எங்கள் சிந்தனை முறையில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதுடன் அதனை எழுத்திலும் பேச்சிலும் நாம்  காண்போம் என்பது திண்ணம்.  😀

இருவகையினரதும் வரலாறுகள் வேறு வேறாகவே இருக்கிறன என்பதும், இருவகையினர்க்குமிடையேயான வித்தியாசங்கள் பல என்பதும் உண்மையே.

ஆனால் - இப்போ இருவகையினரும் வேறு ஒருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் இருக்கிறார்கள் எனும் போது - அவர்கள் இடையேயான வரலாற்று வழிபட்ட வித்தியாசம் முக்கியம் இழந்து போவதும் உண்மையே.

எம்மை பிரதிநிதப் படுத்துபவர்களின் ஏக எஜமான்;

1. எமது இனத்தின் மீட்சியா

2. அவர்களின் தற்போதைய போசகர்களா

3. அல்லது அவர்களின் சுயநலமா

என்பதை தரவுகளின் அடிப்படையில் (பொத்தாம் பொதுவாக அன்றி) நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டியது அவசியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை கைக் கூலிகள் என அழைப்பதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை.

ஆனால், போராட்டத்தில் பங்கு கொள்ளாமல், பயந்தோடி, தனது குடும்பத்தை, தனது உறவினரை, தனது ஊரவனை, தனது சாதியைச் சேர்ந்தவனை வெளிநாடுகளிற்கு எடுத்துவிட்டு, போராட்டம் தொடர்பாக வெட்டிக் கதைபேசி,  வீறாப்பு பேசி, துரோகி, தேசத்துரோகி, கைக் கூலி, கோடாரிக் காம்பு, காட்டிக் கொடுத்தவன் என பட்டம் சூட்டி, எந்த ஒரு புல்லும்ம்(😀) பிடுங்காமல் காலத்தை ஓட்டும்(நானும் உள்ளடங்கலாக) எம் புலம் பெயர்ந்தோருக்கு ஒரு பொருத்தமான பெயரைச் சூட்டிய பின்னர் நானும் மற்றெல்லோரையும் போல போராடி அழிந்தவர்களை இழிவாக அழைக்கிறேன்.

அதுவரை மல்லுக்கட்ட நானும் ஆயத்தம்.

 எப்படி வசதி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

அவர்களை கைக் கூலிகள் என அழைப்பதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை.

ஆனால், போராட்டத்தில் பங்கு கொள்ளாமல், பயந்தோடி, தனது குடும்பத்தை, தனது உறவினரை, தனது ஊரவனை, தனது சாதியைச் சேர்ந்தவனை வெளிநாடுகளிற்கு எடுத்துவிட்டு, போராட்டம் தொடர்பாக வெட்டிக் கதைபேசி,  வீறாப்பு பேசி, துரோகி, தேசத்துரோகி, கைக் கூலி, கோடாரிக் காம்பு, காட்டிக் கொடுத்தவன் என பட்டம் சூட்டி, எந்த ஒரு புல்லும்ம்(😀) பிடுங்காமல் காலத்தை ஓட்டும்(நானும் உள்ளடங்கலாக) எம் புலம் பெயர்ந்தோருக்கு ஒரு பொருத்தமான பெயரைச் சூட்டிய பின்னர் நானும் மற்றெல்லோரையும் போல போராடி அழிந்தவர்களை இழிவாக அழைக்கிறேன்.

அதுவரை மல்லுக்கட்ட நானும் ஆயத்தம்.

 எப்படி வசதி ?

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எவரினது தூண்டுதலாலோ அல்லது தாமாக விரும்பியோ அரசியலில் ஈடுபட்டாலும், தமிழரின் நலன்களே இவர்களது உண்மையான நோக்கமாக இருந்தாலும் இவர்களால் இப்போது தமிழர்கள் இருக்கும் அரசியல் அதள பாதாள நிலையிலிருந்து அவர்களை வெளியே இழுத்துவர முடியுமா? 

இதுவரை தமிழர்கள் செய்துவந்த அனைத்து அரசியல் செயற்பாடுகளும் எந்தவித பலனையும் தராதபோது, இப்போதிருக்கும் அதிதீவிர பெளத்த சிங்கள ஏகாதிபத்திய அரசின் முன்னால் எம்மால் செய்வதற்கு இன்னுமிருக்கும் அரசியல் என்னவென்பது எனது கேள்வி. 

உள்நாட்டில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வெளிநாடுகளாலும், குறிப்பாக பிராந்திய வல்லரசுகளாலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்களம் செய்யும் கொடுமைகளை வெளியே எம்மால் கொண்டுபோகவும் முடியாது, அப்படிக் கொண்டுபோனாலும் எதுவுமே நடக்கப்போவதுமில்லை. 

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டமைப்பினாலே இதுவரை தமிழர் நலன் தொடர்பில் எதையுமே செய்யமுடியவில்லை என்று ஆகிறபோது, முன்னாள்ப் போராளிகளினால் எதைச் செய்துவிட முடியும் என்கிற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. 

இவர்கள் சார்ந்த சமூகத்திற்கும், உறவுகளுக்கும் ஏதாவது நல்லவிடயங்களை இவர்கள் செய்யமுடிந்தால், அதுவே எம்மால் இன்றுள்ள அரசியலில் செய்யக்கூடிய அதிகூடிய முயற்சியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

மீரா....  கூறியதில், தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
"விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை" என்ற கட்சி ஆரம்பிக்கப் பட்டு,  24 மணித்திலாத்திற்கு மேலாகியும்,  இதுவரை... ஐக்கிய தேசியக் கட்சியடமிருந்தோ   புத்த பிக்குகளிடம் இருந்தோ, 
ஜே.வி.பி., ஜாதிக கெல  உறுமய போன்ற கடும் போக்கான சிங்கள கட்சிகளிடம் இருந்தோ....
இதுவரை எந்த கண்டனக் குரல்களும் வரவில்லை.

அப்படியென்றால்.... மகிந்த, கோத்தா போன்றவர்கள் அவர்களிடம் ஏற்கெனவே...
பேசி முடிவு எடுத்த பின்தான்.... இந்தக் கட்சியை, கூ ட் டமைப்புக்கு எதிராக, 
களமிறக்கியுள்ளார்கள்  என்பதை, சாதாரண  மனிதனுக்கும் விளங்கும்.

அதுகும்... மகிந்த, கோத்தா போன்றவர்கள் ஆட்சியிலிருக்கும் போது...
தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதற்காகவும்,
தலைவரின் படத்தை வைத்திருந்தற்காகவும், புலிப் படம் அச்சிடப் பட்ட  
(விடுதலைப் புலிகளின் சின்னம் அல்ல)   ரீ  சேர்ட்டை  அணிந்த, 
சிறுவன் முதல் கொண்டு பலரையும்,புலனாய்வுத்துறை விசாரித்த 
செய்திகளை நாம் பார்த்திருக்கின்றோம்.

அப்படியிருக்க.... இவர்கள் ஆடசியில், விடுதலைப்புலிகள் பெயரில் ஒரு கட்சி  ஆரம்பிப்பதற்கு 
அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க சந்தர்ப்பம் அறவே கிடையாது என்பதே யதார்த்தம்.

அதனைத் தான்... மீரா, முன் எச்சரிக்கையாகவும், 
எதற்காக களம்  இறக்கப்படுகிறார்கள் என்பதையும்  தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை அங்கீகரிப்பதன் ஊடாக சிங்கள அரசு தனது நலன்களை பாதுகாத்தது மட்டுமல்லாது தமிழர் விரோத செயற்பாடுகளையும் கரூணா என்ற கைக்கூலி மூலம் ஊக்கிவித்தது. அதற்காக விடுதலைப்புலிகள் என்ற சொல்லை மகிந்த சகோதரர்களின் குறிப்பாக ஜனாதிபதி கோத்தாவின் ஆசீர்வாதம் இல்லாமல் எவரும்  பயன்படுத்தமுடியாது.அப்பாவி போராளிகள் இதுபோன்ற சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு கெட்டபெயர் வாங்குவது மிக சாதாரணமாகிவிட்டது. எப்போது கோத்தா ஆட்சிக்கு வருவார் விடுதலை புலிகளின் பெயரில் கட்சி தொடங்கலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்ததுபோல் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஜாக்கிரதை: தனியாகவோ சிறு சிறு குழுக்களாகவோ இலங்கையிலும்வெளி நாடுகளிலும்  தேசியத்துக்காக இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், தொண்டர்கள், தமிழின ஆதரவாளர்கள் அவசரப்பட்டு இதுபோன்ற கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது உசிதமானது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

கைப்பாவைக்கும் கைக் கூலிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றது. 

நான் எப்போதுமே யோசிப்பது இதனைத்தான் - எங்கள் சமூகத்தின் சிந்தனை முறையின் குறைபாட்டிற்கு என்ன காரணம். 

எங்எகளுக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மமதையா அல்லது எங்கள் கல்வி முறையின் குறைபாடுதான் காரணமா ? 

உண்மையில் எங்கள் சமூகத்தின் கடின உழைப்பிற்கும் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமைக்கும் எங்களிடம் ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறை இருந்திருப்பின் , எமது இனம் தென் ஆசியாவையே கட்டி ஆண்டிருக்கும்.

ஆனால் எங்கள் இனத்தின் ஒழுக்கமின்மை (Discipline)  எங்கள் இனத்தையே கருவறுத்து விட்டது. யாரை நோக ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கைப்பாவைக்கும் கைக் கூலிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றது. 

நான் எப்போதுமே யோசிப்பது இதனைத்தான் - எங்கள் சமூகத்தின் சிந்தனை முறையின் குறைபாட்டிற்கு என்ன காரணம். 

எங்எகளுக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மமதையா அல்லது எங்கள் கல்வி முறையின் குறைபாடுதான் காரணமா ? 

உண்மையில் எங்கள் சமூகத்தின் கடின உழைப்பிற்கும் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமைக்கும் எங்களிடம் ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறை இருந்திருப்பின் , எமது இனம் தென் ஆசியாவையே கட்டி ஆண்டிருக்கும்.

ஆனால் எங்கள் இனத்தின் ஒழுக்கமின்மை (Discipline)  எங்கள் இனத்தையே கருவறுத்து விட்டது. யாரை நோக ?????

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

Link to comment
Share on other sites

மலரட்டும் மலரட்டும் । வாடிப்போகாமல் இருந்தால் சரிதான்। அது சரி இது எத்தனையாவது மலர் , அதாவது எத்தனையாவது கட்சி ? இன்னும் எதனை கட்சி வரப்போகுதோ। சிவ சிவா।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

உண்மையில் அந்த வசவுத் தொனிதான் எனது பிரச்சனையே. முன்னாள் போராளிகள் அமைப்பை இயக்குவது யாராக இருக்கலாம் என்று நாம் ஊகிப்பது கடினமல்ல. ஆனால்க அவர்களை அரச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் / வழி நடத்துதலில் இயங்குகின்றனர் என கூறுவதற்கும் கைக்கூலி எனகூறுவதற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரிது .

அதனை சுட்டிக்காட்ட விரும்பினேன்(கொஞ்சம் காரமாக) அது இங்கே வந்து நிற்கிறது.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

உண்மையில் அந்த வசவுத் தொனிதான் எனது பிரச்சனையே. முன்னாள் போராளிகள் அமைப்பை இயக்குவது யாராக இருக்கலாம் என்று நாம் ஊகிப்பது கடினமல்ல. ஆனால்க அவர்களை அரச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் / வழி நடத்துதலில் இயங்குகின்றனர் என கூறுவதற்கும் கைக்கூலி எனகூறுவதற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரிது .

அதனை சுட்டிக்காட்ட விரும்பினேன்(கொஞ்சம் காரமாக) அது இங்கே வந்து நிற்கிறது.😀

சகோ

நீங்கள் எழுதும்  விடயங்கள் நாம்  அறியாததல்ல.

இது  போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட   போதெல்லாம் மக்களின்  வரவேற்பை  பெறமுடியவில்லை.

காரணம்  சந்தேகமும் இன்றைய சூழ்நிலையும் இவர்களுடைய செயற்பாடுகளும்  தான்.

எனவே இவர்கள் ஆரம்பத்திலிருந்து மக்கள்  பணியை ஆரம்பிப்பதே வரவேற்கத்தக்கது.

புலிகளின் பெயரைப்பாவிப்பதோ

அவர்களின் அடுத்த  கட்டமாக செயற்படுதோ

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சகோ

நீங்கள் எழுதும்  விடயங்கள் நாம்  அறியாததல்ல.

இது  போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட   போதெல்லாம் மக்களின்  வரவேற்பை  பெறமுடியவில்லை.

காரணம்  சந்தேகமும் இன்றைய சூழ்நிலையும் இவர்களுடைய செயற்பாடுகளும்  தான்.

எனவே இவர்கள் ஆரம்பத்திலிருந்து மக்கள்  பணியை ஆரம்பிப்பதே வரவேற்கத்தக்கது.

புலிகளின் பெயரைப்பாவிப்பதோ

அவர்களின் அடுத்த  கட்டமாக செயற்படுதோ

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

டொட்.

விசுகு அண்ணா ,
இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள்.

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்...

காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக  இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா ,
இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள்.

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்...

காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக  இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.

உங்களது கருத்தோடு முரணில்லை  சசி

2009 க்குப்பின்னர் முன்நாள்கள் என்று  ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் செயற்பாடுகளால் வந்த  விரக்தி  இது.

காலம்   பதில்  சொல்லட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

நானும் சொல்ல நினச்சன் நீங்க சொல்லிட்டீங்க  கோசான் 

தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வைக்க முனைந்த போது இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் பெயரை வைத்து கட்சி ஆரம்பிக்க முடியாது என அரசு கூறியது  அதை மாற்றியே அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என வைத்தார்கள் .

 இந்தப்பேரவை தொடங்கினாலும் பிற கட்சியால் ஓரங்கப்பட்டு வைக்கப்படுவார்கள் அல்லது  அமத்தி வைக்கப்படுவார்கள் அது  தற்போதும் சரி முன்னரும் சரி தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை வாங்கி கொடுப்போம் என இன்று வரை பதவி விலகாமல் பதவியில் ஒட்டியிருந்து சுகபோக வாழ்க்கை அனுபவித்துவரும் நபர்கள் இவர்களை வளர விடுவார்களா?? என்பது பல கேள்விகளை ஏற்படுத்துகிறது .

இவர்கள் முன்னாள் போராளிகள் என்றால்  போராளிகள் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் முன்னாள் போராளிகள் பலர் இப்பவும் சொல்வார்கள் தமிழ் மக்களுக்கு அரசியாலால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது அது சாத்தியமில்லை என்று. கனபேர் ஒதுங்கியுள்ளார்கள் இவர்கள் தற்போது கிளம்பியிருப்பதும் அதுவும் பயன்படுத்த முடியாத பெயரை கொண்டுவந்திருப்பதும் பல கேள்விகளை உண்டாக்கி இருக்க வேணும் ஆனால் அதையெல்லாம் நாம் யோசிக்க மாட்டம் இவர்கள் போராளிகள் என்று சண்டை பிடிப்பம். 

 

அப்படி பார்த்தால்  இயக்கத்த விட்டவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள் என்று சொல்பவர்கள் (யாரும் காணவில்லை) ஏன் அப்படி அழைக்கலாம் கைக்கூலியென அப்படி  சொல்ல யாருக்கு உரிமை உண்டு?? கர்ணா அம்மான் சொல்லுவார் தலைவரே சொல்லமாட்டார் தன்னை துரோகி என சொன்னதாக எங்கயோ கேட்ட ஞாபகம் 😄 

Link to comment
Share on other sites

17 hours ago, goshan_che said:

 

இது யாழில் சாதாரண வழமைதான்.

யாழில் (மட்டும்) அல்ல, எம் சமூகம் முழுதுமே இப்படித்தான் சிந்திக்கின்றது. இது அரசியல் விடயங்களில் மட்டுமல்ல, ஒரு ஆண் / பெண் தற்கொலை / கொலை ஆனால் கூட தம் விருப்பு வெறுப்புகளையும் புரையோடிப்போன முன் முடிவுகளையும் வைத்து கொண்டு தான் சிந்திக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் என்றும் கூறலாம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

இதனைக் கூறி தாங்கள் புளகாங்கிதமடைவதை நான் கலைக்க  விரும்பவில்லை கனம்  நீதிபதியவர்களே.😜

2 hours ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

மீராரா மிகவும் திருகுதாளம் செய்பவர் என்று கூறினால்  ஆதாரமெல்லாம் கேட்கக் கூடாது சரிதானே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.