Jump to content

கெஹலிய மற்றும் ஜயம்பதி ஆகிய இருவரும் வழக்கில் இருந்து விடுதலை


Recommended Posts

கெஹலிய மற்றும் ஜயம்பதி ஆகிய இருவரும் வழக்கில் இருந்து விடுதலை

கெஹலிய மற்றும் ஜயம்பதி ஆகிய இருவரும் வழக்கில் இருந்து விடுதலை

 

பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்த அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் அந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அப்போதைய ஊடக அமைச்சராக செயற்பட்ட கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு சொந்தமான தனியார் கைப்பேசியின் கட்டணமான இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவினை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பணத்தில் செலுத்தியதன் ஊடாக அரசிற்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அந்த கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை தாக்கல் செய்த போது இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் குறித்த வழக்கு தாக்கலுடன் தொடர்புடைய அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரின் எழுத்து மூல அனுமதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்படாததால் அதனை விசாரணைக்கு உட்படுத்த இயலாது என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் அடிப்படை ஆட்சேபனை மனுவொன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

எனினும், குறித்த அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்த நீதவான் நீதிமன்றம் குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்த நிலையில், குறித்த தீர்மானத்திற்கு எதிராக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றில் சீர்த்திருந்த மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

குறித்த சீர்த்திருத்த மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன், வழக்கொன்றை தாக்கல் செய்யும் போது ஆணைக்குழுவின் ஆணையாளர்களின் எழுத்து மூல அனுமதியினை சமர்ப்பிப்பது அத்தியாவசிய அம்சமாக அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தீர்ப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இந்த வழக்கு தாக்கல் செய்த போது இலஞ்ச ஆணைக்குழுவினால் குறித்த அத்தியாவசிய அம்சங்கள் முழுமைப்படுத்தப்படாததால் அது சட்டத்திற்கு முரணான வழக்கு என கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.