Jump to content

மறக்கப்படும் தீர்வு


Recommended Posts

மறக்கப்படும் தீர்வு

 

என்.கே. அஷோக்பரன்  

ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியலில் சில விடயங்கள் முக்கியத்துவம் மிக்கவையாக இருக்கும். சமகால அரசியல் என்பது, அந்த விடயங்களைச் சுற்றியே கட்டமைக்கப்படும். அரசியல் வாதப்பிரதிவாதங்கள் எல்லாம், அது தொடர்பாகவே அமையும். அந்த விடயங்களே அரசியல்வாதிகளின் மூலதனமுமாகும்.   

இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், 1956 ‘தனிச்சிங்களம்’ சட்டத்தின் பின்னரிலிருந்து, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு’ என்பது, மிக முக்கியமானதும் மய்யமானதுமான பேசுபொருளாக இருந்து வருகிறது.   

இலங்கை அரசியல் என்பது, அன்றிலிருந்து இனப்பிரச்சினையைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இனப்பிரச்சினையை மய்யப்படுத்தியே, தமது அரசியலை முன்னெடுத்தனர். இது அனைத்துத் தரப்புக்கும் பொருந்தும்.  

image_40a56d2a70.jpgகுறிப்பாக, 1983 இற்குப் பின்னரான இலங்கை அரசியலின் மிக முக்கிய பேசுபொருள் இனப்பிரச்சினையாகும். இனப்பிரச்சினையும் அதற்கான தீர்வும் இலங்கை அரசியலின் உயிர்நாடி எனலாம்.   

ஒரு வகையில் யோசித்தால், இனப்பிரச்சினையைத் தவிர்த்து விட்டால், இங்குள்ள பலருக்கு அரசியல் செய்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கும்.  

நாட்டைப் பிளவுபடாது பாதுகாத்தல்; தமிழருக்குத் தன்னாட்சி வழங்கமுடியாது; தமிழருக்குக் காணி, பொலிஸ் அதிகார‍ங்கள் வழங்க முடியாது; இது ‘சிங்கள-பௌத்த’ நாடு போன்ற பகட்டாரவாரங்கள், பேரினவாத அரசியலின் அடிநாதம் ஆகும்.   

மறுபுறத்தில், தனிநாடு பெறுவோம், பிரிவினை பெறுவோம் என்பது, தமிழ்த் தேசிய அரசியலின் அடிநாதம் ஆகும்.   

இனப்பிரச்சினை நீடிக்கின்ற வரை, இந்தப் பிரிவினையை வைத்து, ‘நாம்’ எதிர் ‘அவர்கள்’ என்ற அடிப்படையில், தமது அரசியல் மூலதனத்தைக் கட்டமைத்து அரசியல் செய்வதில், இலங்கை அரசியல் தலைமைகள் உருசிகண்டு விட்டன.   

ஆகவே, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதைவிட, அது தொடர்வதே அரசியல்வாதிகளுக்குத் தமது அரசியலை, இலகுவாக முன்னெடுப்பதற்கு வழிவகுப்பதாக அமைகிறது. நிற்க!  

தமிழர்களைப் பொறுத்தவரையில், ‘தமிழ்த் தேசியத்துக்காக’ அவர்கள் செய்த தியாகங்கள் தொடர்ச்சியானதும் அளப்பரியதுமாகும். ‘தமிழ்த் தேசியத்துக்கான’ அங்கிகாரத்துக்காகத் தமிழ் மக்கள், தமது முன்னேற்றம், அபிவிருத்தி என்பவற்றை விட்டுக்கொடுத்து இருக்கிறார்கள்.   

வடக்கை விட, கிழக்கில் இது மிகவும் தெட்டத் தௌிவாக, அனைவருக்கும் புலப்படத்தக்க ஓர் உதாரணமாக இருக்கிறது. கொள்கைக்காகவே தொடர்ந்து வாக்களித்து, சலுகை அரசியலுக்கு விலைபோகாது, தமது முன்னேற்றம் முட்டுக்கட்டை நிலையை எய்தினாலும் பரவாயில்லை; ஆனால், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமது அடிப்படை அரசியல் அபிலாசைகளை, அவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதை, 1956 முதல், தமிழ்மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்திருக்கிறார்கள்.   

மறுபுறத்தில், தமிழ்த் தலைமைகளும் தமது பதவிகளைத் தக்கவைப்பதற்கு, தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி, பகட்டாரவாரப் பேச்சுகளால் தூபமிட்டு, தமிழ் மக்களின் வாக்குகளைக் கைப்பற்றி வந்திருக்கிறார்கள்.   

ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தலைமைகள், அரசியல் நேர்மையுடன் செயற்படவில்லை என்று சொல்லிவிட முடியாது. பண்டா-செல்வா, டட்லி-செல்வா, ஜே.ஆர்-அமிர் என, ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்த் தலைமைகள் இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளுடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை இணக்கபூர்வமாக நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பெரும் விட்டுக்கொடுப்புகளுடன் கூடிய சமரசத்துக்குக் கடும் முயற்சிகளை நேர்மையுடன் முன்னெடுத்திருந்தார்கள்.   

ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 1950களில் தமிழ்த் தலைமைகளிடையே போட்டியிருந்தது. அதாவது, தமிழ் மக்களிடையே கட்சிப் பிளவுகள் இருந்தன. குறிப்பாக, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி பிரிவினை, தமிழ் மக்களிடையே இருந்தது.   

ஆயினும், 1972இல் தமிழ்த் தேசியத்தின் நலன் கருதி, தமிழ் மக்களின் அரசியல் குரல் ஒன்றுபட்டதாக இருப்பதே, தமிழ் மக்களின் பலத்தை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில், பிரிந்து நின்ற அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டன.   

பின்னர் காலவோட்டத்தில், தனிநபர் முரண்பாடுகளால், அவை பிரிந்த துரதிர்ஷ்டமும் தமிழர் அரசியல் வரலாற்றின் முக்கிய பாகமாகும். அதன் பின்னர், கட்சிகள், ஆயுதக் குழுக்கள் என தமிழர் அரசியல் கொத்துண்டு, சில்லறை சில்லறையாகச் சிதறிக் கிடந்த ஒரு காலகட்டமும் இருந்தது.  

தமிழர் ஆயுதப் போராட்டம், விடுதலைப் புலிகள் என்ற ஒற்றைச் சக்தியின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர், அவர்களே தமிழ்த் தேசிய அரசியலின் கொண்டு நடத்துநரானார்கள்.  

 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது; அன்றில் நேரடியாகவோ மறைமுகமாகவோ, எதிர்ப்பது என்ற, இரண்டு நிலைப்பாடுகளில் பிரிந்திருந்தார்கள்.   

இந்த காலகட்டம் கூட, தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பலம் சேர்ப்பதாக இருக்கவில்லை. ஏனெனில், தமிழர் அரசியலுக்குள் இருந்த இந்தப் பிரிவும் உள்முரண்பாடும் தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்தி இருந்தது.   

இந்த நிலையில்தான், மீண்டும் பிரிவினையைக் கடந்து கட்சிகள் ஒன்றிணைந்தன; அவை விடுதலைப் புலிகளுடனும் கைகோர்த்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றைக் குரலில் பலமாக முன்னெடுத்தன. ஆனால் 2009 யுத்த நிறைவுக்குப் பின்னர், அரசியல் களம் முற்றாக மாற்றப்பட்டிருந்தது.   

ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் என்பது முற்றாக, ஜனநாயக அரசியலின் கைகளிலேயே தங்கியிருந்தது. தமிழ்த் தேசியத்துக்காக இன்னும் பலமாகச் செயற்பட்டிருக்க வேண்டிய நிலையிலிருந்த தமிழ்த் தேசியத்தின் பெயரால், பதவிகளைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தலைமைகள், தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்கத் தொடங்கியதன் விளைவாக, தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் மீண்டும் பிளவுபடத் தொடங்கியது.   

தமிழ்த் தேசிய நலனுக்காகச் செயற்பட வேண்டிய கட்சிகள், மீண்டும் உள்குத்துகளிலும் தனிநபர் தாக்குதல்களிலும் கட்சி முரண்பாடுகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கின.   

தமிழ் அரசியல் பரப்பை, அதுவரை ஆக்கிரமித்திருந்த தாயகம், தேசியம் சுயநிர்ணயம் என்ற கோசங்கள் பின்னணிக்குச் சென்று, ‘நீயாநானா’ வகையறா, குழாயடிச் சண்டைகள், தமிழர் அரசியலின் முன்னரங்குக்கு வரத்தொடங்கின; கூட்டணியும் கட்சிகளும் பிரிவடையத் தொடங்கின.   

இதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் தமிழ்த் தேசியத்தின் பெயரால், உதிரிக் கட்சிகள் பல உதயமாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியத்தின் தாற்பரியம் முற்றாக மறக்கப்பட்டு, அர்த்தம் தெரியாது உச்சரிக்கும் மந்திரம் போல, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பன பயன்படுத்தப்பட்டு வருகின்றன.   

தமது செயற்பாடுகள், தமிழ்த் தேசிய அபிலாசைகளுக்கு ஆதரவாக இருந்தாலும் எதிராக இருந்தாலும், அதற்கு முரணாக அவர்களது பேச்சு, எப்போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசிய மந்திரத்தை ஜெபித்துக்கொண்டு இருக்கிறது.   

ஏனென்றால், தமிழ்த் தேசியம் என்பது, தேர்தலில் வெற்றிபெறவும், தமிழ் மக்களின் அங்கிகாரத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கும் மட்டுமானதொன்றாகவே, சமகாலத்                 

தமிழ்த் தேசிய நலனுக்காக, அவர்கள் ஆற்றும் பணி என்று ஒன்றையும் காணக்கிடைக்கவில்லை. வெறும் பகட்டாரவாரப் பேச்சாகவும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டித் தமது அரசியல் இருப்பைத் தக்கவைக்கும் ஒரு பலமான ஆயுதமாகவும் மட்டுமே, அவர்கள் தமிழ்த் தேசியத்தைக் கையாள்கிறார்கள்.  

இது, ஒருவகையில் பேரினவாத தலைமைகளுக்கும் சாதகமாக அமைகிறது. அவர்களும் இதையே விரும்புகிறார்கள். தமிழர் அரசியல், அதன் மய்ய நோக்கமான தமிழ்த் தேசியத்தில் இருந்தும் அதன் அடிப்படை அபிலாசைகளான ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்பவற்றில் இருந்தும் விலகி, கட்சிகளிடையேயானதும் தனிநபரிடையேயானதுமான முரண்பாடுகளில் கவனம் செலுத்துவது நிச்சயமாக அவர்களுக்குச் சாதகமானதே.   

2009இற்குப் பின்னர், 13ஆவது திருத்தம் 10 ஆகி, 13- ஆகி, இன்று, “அதிகாரப்பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை”: என்று பேரினவாதத் தலைமைகள் சொல்லும் நிலை வந்திருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழ்த் தேசிய அரசியல், நீர்த்தப் போனமையாகும்.   

2015இல் மாற்றத்தைக் கொண்டு வந்ததில், தமிழ்த் தேசியம் ஒரு பங்காளிகள் என்று மார்தட்டும் அரசியல் தலைமைகள், 2015இன் பின்னர் கூட, காத்திரமானதோர் அரசியல் அடைவை, தமிழ்த் தேசத்துக்குப் பெற்றுக்கொடுக்க முடியாது போனது ஏன் என்ற கேள்விக்கும், தமிழ் மக்களுக்கு வகை சொல்ல வேண்டும்.   

மேலும், 2015 முதல் 2019 வரை கிடைத்த சாதகமான காலப்பகுதியில், தமிழ் மக்களினதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளினதும் நலன் கருதி, தமிழ்த் தலைமைகள் முன்னெடுத்த காத்திரமான நடவடிக்கைகள் என்ன என்று சிந்தித்தால், அதற்கான தகுந்த விடையேதுமில்லை என்பதுதான் உண்மை.   

2015இற்கு முன்னர், தமிழ் அரசியலில் முன்னரங்கு பெற்றிருந்த ‘தமிழ்த் தேசியம்’ 2015இன் பின்னர், நீர்த்துப் போயுள்ளது என்பதுதான் தெட்டத் தௌிவான உண்மை.   

இன்று அரசியல் முன்னரங்கில், இனப்பிரச்சினை தீர்வு என்பது, ஓரங்கட்டப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. தென்னிலங்கை அரசியலை இன்று அவதானித்தால், இனப்பிரச்சினைத் தீர்வு என்பதற்கு, அந்த நிகழ்ச்சிநிரலில் இடமேயில்லை; அதைப்பற்றி அவர்கள் பேசுவது கூட இல்லை.   

மறுபுறத்தில், அது பற்றிக் கட்டாயம் பேச வேண்டிய தமிழ்த் தலைமைகள், தம்மிடையேயான முரண்பாடுகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, இலங்கை அரசியலில் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.  

சமகாலச் சூழலில், இனப்பிரச்சினைத் தீர்வு என்பது, தென்னிலங்கை அரசியலுக்கு மிக முக்கியமான ஒன்றல்ல. 2009 இற்கு முன்னர், ஆயுதப்போராட்டத்தின் அழுத்தம் தென்னிலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிச் சிந்திப்பதற்கான தேவையை உருவாக்கியிருந்தது.   

2009இன் பின்னர், சர்வதேச அழுத்தம் அந்தத் தேவையை உருவாக்கியிருந்தது. ஆனால், 2015இன் பின்னர், சர்வதேச அழுத்தமும் மழுங்கிப்போனது; தீர்வுக்காகத் தமிழர் அரசியலும் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கவில்லை.   

இன்று, தமிழர் அரசியல் தமக்குள் முரண்பட்டுக் கொண்டு, அந்த முரண்பாடுகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், சர்வதேச அரசியலை கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கம், தந்திரோபாய ரீதியில் சமாளித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசவோ, ஏன் சிந்திக்கவோ வேண்டிய எந்தத் தேவையும் அழுத்தமும் தென்னிலங்கை அரசியலில் இல்லை.                                  

இனப்பிரச்சினைத் தீர்வு பற்றித் தொடர்ந்து பேச வேண்டியவர்கள், அதற்கான அழுத்தத்தை உருவாக்க வேண்டியவர்கள், தமிழ்த் தலைமைகளே. அதுவே அவர்களது அடிப்படைக் கடமை.   

ஆனால் அவர்கள், தமது கடமையை மறந்ததன் விளைவுதான், இன்று இனப்பிரச்சினைத் தீர்வு என்பது பேசப்படாப் பொருளாக மாறியிருக்கிறது. இனியும் தமிழ்த் தலைமைகள் விழித்துக்கொள்ளவில்லை என்றால், தமிழ்த் தேசியம் அதனைக் காப்பாற்ற வேண்டியவர்களாலேயே அநாதையாக்கப்படும் நிலைதான் ஏற்படும்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மறக்கப்படும்-தீர்வு/91-244239

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.