Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

depositphotos_115721902-stock-illustrati

 

ஊர்ப் புதினம் கதைப்பதில் பெண்கள்தான் முன்னணியில் நிற்பதாக நான் இத்தனை நாட்களும் எண்ணியிருந்தேன். என் கணவர் கூட முன்னர் நானும் மகளும் யார் பற்றியாவது கதைத்தால் அல்லது நண்பிகளுடன் கதைத்தால் உடனே உங்களுக்கு வேறுவேலை இல்லை. உப்பிடிக் கதைப்பதை விட்டுவிட்டு உருப்படியான அலுவல் இருந்தால் பாருங்கள். இதுபோலத்தானே உங்களை பற்றியும் எத்தனைபேர் கதைப்பார்கள் என்பார்.

கதைத்தால் கதைத்துவிட்டுப் போகட்டும். எமக்குத் தெரியவா போகிறது? அதற்காக நாம் கதைக்காமல் விடமுடியாது என்பேன் நான். இப்ப ஒரு ஆண்டாக நான் கவனித்ததில் என் கணவரோடு வேலை செய்பவர்கள் சிலர் வாரத்தில் இரண்டு தடவையாவது தொலைபேசியில் கணவருடன் கதைப்பார்கள். பார்த்தால் காதலன் காதலியுடன் உரையாடுவதுபோல் மணித்தியாலங்கள் வரை கதை தொடரும். யாராவது பெண்ணாக இருக்கலாமோ என்னும் சந்தேகம் ஒருசிலநாட்கள் இருந்தாலும் மனுசனை நேரில் கேட்கப் பயந்து தற்செயலாகப் போவது போல் பக்கத்தில் போய் இருந்து கேட்டதில் அது ஆண்கள் தான் என்பதை உறுதி செய்தபின் தான் மனம் நின்மதியானது.

வேலையால் வந்தாலும் போன் வந்தால் உடனே மனிசன் கதைக்கத் தொடங்கிவிடுவார். இருந்து நான் பொறுமையாக பேசுவதைக் கேட்டால் எல்லாம் மனேஜரைப் பற்றிய புகார்களாகத்தான் இருக்கும். எனக்கோ பொறுமை போய்க் கோபம் தான் வரும். ஏன் உங்களுக்கு எடுத்து மூக்கால் அழுகிறார்கள். ஏரியா மனேஜரிடம் கூறுவதுதானே என்று கூறுவேன். எல்லாரும் வேலை போய்விடும் என்னும் பயத்தால் யாரிடமும் கூறமாட் டார்கள். என்னிடம் தான் எடுத்து மூக்கால் அழுவார்கள். பாவம் அவர்கள். என்னிடம் சொல்வதானால் மனப்பாரம் குறையுதாக்கும் என்று நினைத்து நானும் அவர்களுடன் காதைக்கிறேன் என்பார். அவர்களுக்குத் துணிவு இல்லை என்றால் என்னிடம் தொலைபேசி இலக்கம் தாருங்கள் அந்த மனேஜருக்கு நான் ஒரு வழி  பண்ணுகிறேன் என்று கேட்டாலும் நீ இதில் தேவையில்லாமல் தலையிடாதே என்று முகத்திலடித்தது போல் சொல்லிவிட்டு மனிசன் அடுத்த போனை எடுத்துக் கதைக்க தயாராகிவிடுவார். அவர்கள் கதையைக் கேட்டுக்கேட்டு உங்களுக்கு வருத்தம் வராமல் இருந்தால் சரி என்று கூறுவதை மட்டும்தான் என்னால் செய்ய முடிகிறது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für மனைவியின் கேள்விகள்

இஞ்சையொரு வீட்டிலை அவையள் ஒரு கையிலை ரிவி ரிமோட். மற்றக்கையிலை ரெலிபோன். டெய்லி காலை மாலை ஐஞ்சு கண்டத்துக்கும் ரெலிபோன் எடுத்து பஞ்சபுராணம் பாடுவினம். ஆனால் அந்த அப்பாவி அதாவது அந்த ஆண்சிங்கம் எப்பவாவது ரெலிபோன் எடுத்தால் இல்லாட்டி அந்த சிங்கத்துக்கு வீடுதேடி ரெலிபோன் வந்தால்......பூட்டியிருந்த கதவை திறந்து விடுவினம். அடுத்த றூமிலை வேலை செய்து கொண்டு தங்கடை ஏரியலை ரெலிபோன் கதைக்கிறவர்ரை பக்கம் திருப்பி விடுவினம். அண்டையான் பொழுது அந்த அப்பாவி சிங்கத்துக்கு துலைஞ்சுது.கேள்விக்கணைகள் விண்னை பிளக்கும்.
1) ஆர் ரெலிபோன்லை
2) ஆர் ரெலிபோன் எடுத்தது
3) என்னவாம்
4) அதேன் இப்ப ரெலிபோன் எடுத்தவர்
5) கொஞ்ச நேரம் கதைக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தீங்கள் என்ன சொன்னவர்
6) இடக்கிடை ஓமோம் எண்டு சொல்லிக்கொண்டிருந்தியள் என்னவாம்
7) இடையிலை பெரிசாய் சிரிச்சியள் ஏன் என்னத்துக்கு
8 )மனிசி எங்கை வேலைக்கு போட்டாவாமோ
9) ஒருக்கால் ஓ...மேனகாவோ எண்டியள் ஆரது
10)  உங்களுக்கு ஊரார்ரை கதையள்ள் ஒண்டும் வேண்டாம் பேசாமல் இருங்கோ
இன்னும் கனக்க.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

1) ஆர் ரெலிபோன்லை
2) ஆர் ரெலிபோன் எடுத்தது
3) என்னவாம்
4) அதேன் இப்ப ரெலிபோன் எடுத்தவர்
5) கொஞ்ச நேரம் கதைக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தீங்கள் என்ன சொன்னவர்
6) இடக்கிடை ஓமோம் எண்டு சொல்லிக்கொண்டிருந்தியள் என்னவாம்
7) இடையிலை பெரிசாய் சிரிச்சியள் ஏன் என்னத்துக்கு
8 )மனிசி எங்கை வேலைக்கு போட்டாவாமோ
9) ஒருக்கால் ஓ...மேனகாவோ எண்டியள் ஆரது
10)  உங்களுக்கு ஊரார்ரை கதையள்ள் ஒண்டும் வேண்டாம் பேசாமல் இருங்கோ
இன்னும் கனக்க.......

என்ன கும்ஸ் உங்கள் வீட்டிலுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

என்ன கும்ஸ் உங்கள் வீட்டிலுமா?

என்ரை வீட்டிலை???  நோ....நோ...நெவர் 😂
இது பக்கத்து ஊர் கந்தையா வீட்டு சமாச்சாரம் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

என்ரை வீட்டிலை???  நோ....நோ...நெவர் 😂
இது பக்கத்து ஊர் கந்தையா வீட்டு சமாச்சாரம் :cool:

முருகன், கந்தன், சண்முகன், குமாரசாமி, வேலவன் எல்லாம் ஒருவரைத்தானே குறிக்கிறது😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kavi arunasalam said:

முருகன், கந்தன், சண்முகன், குமாரசாமி, வேலவன் எல்லாம் ஒருவரைத்தானே குறிக்கிறது😏

Ähnliches Foto

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für மனைவியின் கேள்விகள்

இஞ்சையொரு வீட்டிலை அவையள் ஒரு கையிலை ரிவி ரிமோட். மற்றக்கையிலை ரெலிபோன். டெய்லி காலை மாலை ஐஞ்சு கண்டத்துக்கும் ரெலிபோன் எடுத்து பஞ்சபுராணம் பாடுவினம். ஆனால் அந்த அப்பாவி அதாவது அந்த ஆண்சிங்கம் எப்பவாவது ரெலிபோன் எடுத்தால் இல்லாட்டி அந்த சிங்கத்துக்கு வீடுதேடி ரெலிபோன் வந்தால்......பூட்டியிருந்த கதவை திறந்து விடுவினம். அடுத்த றூமிலை வேலை செய்து கொண்டு தங்கடை ஏரியலை ரெலிபோன் கதைக்கிறவர்ரை பக்கம் திருப்பி விடுவினம். அண்டையான் பொழுது அந்த அப்பாவி சிங்கத்துக்கு துலைஞ்சுது.கேள்விக்கணைகள் விண்னை பிளக்கும்.
1) ஆர் ரெலிபோன்லை
2) ஆர் ரெலிபோன் எடுத்தது
3) என்னவாம்
4) அதேன் இப்ப ரெலிபோன் எடுத்தவர்
5) கொஞ்ச நேரம் கதைக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தீங்கள் என்ன சொன்னவர்
6) இடக்கிடை ஓமோம் எண்டு சொல்லிக்கொண்டிருந்தியள் என்னவாம்
7) இடையிலை பெரிசாய் சிரிச்சியள் ஏன் என்னத்துக்கு
8 )மனிசி எங்கை வேலைக்கு போட்டாவாமோ
9) ஒருக்கால் ஓ...மேனகாவோ எண்டியள் ஆரது
10)  உங்களுக்கு ஊரார்ரை கதையள்ள் ஒண்டும் வேண்டாம் பேசாமல் இருங்கோ
இன்னும் கனக்க.......

குமாரசாமி வீட்டுச் சனமும் அவரைப்போல அப்புராணியள் என்று நினைச்சன். அங்கு கூடவா இதே நிலை  🤣🤪

 

3 hours ago, Kavi arunasalam said:

முருகன், கந்தன், சண்முகன், குமாரசாமி, வேலவன் எல்லாம் ஒருவரைத்தானே குறிக்கிறது😏

😂🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.