Jump to content

ஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி எப்படி

ஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்!

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய தவறான கருத்துக்கு எதிராக இன்று அவர் வீடு முன் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் ரஜினிகாந்த் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நபர்கள், பல்வேறு பாஜகவினர், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசினார். அதில், பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.

பெரியாரின் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கள் சில தவறானது ஆகும். வரலாற்று ரீதியாக தவறாக சில தகவல்களை ரஜினி குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு எதிராக பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது. மொத்த 3 போலீஸ் நிலையங்களில் ரஜினி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தவும் திட்டங்கள் போடப்பட்டுள்ளது. ரஜினி வீடு முற்றுகைப் போராடம் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக நாளை நடப்பதாக இருந்தது. ஆனால் இன்று காலையிலேயே இந்த போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். ரஜினிக்கு எதிராக பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நாளை திராவிடர் விடுதலை கழகம் ரஜினி வீடு முன் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். அதனால் இன்றும் நாளையும் ரஜினி வீடு முன் பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கலாம் என்று கூறப்பட்டுகிறது. இதனால் ரஜினி சார்பாக போலீசில் பாதுகாப்பு கோரப்பட்டது.

இதையடுத்து தற்போது சென்னை போலீஸ் சார்பாக ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு முன் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். ஷூட்டிங் இப்போது இல்லாத காரணத்தால் ரஜினி வீட்டில்தான் இருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/police-protection-increased-in-front-of-rajinikanth-house-after-his-remark-against-periyar-374622.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழே தெரியாத ,தமிழ் கலாச்சாரம் தெரியாத/தெரிய மறுக்கும்,தமிழ் வரலாறு தெரியாத கூத்தாடியை வைத்து தமிழகம் அல்லோலகல்லோலப்படுகின்றது.
இவர் ஒரு சந்தர்ப்பவாதி.இவர் ஒரு சுயநலவாதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி, கமல் அரசியலை பற்றி சீமான் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. இவர்கள் இருவரும் சந்தர்ப்ப அரசியல் செய்கின்றார்கள், கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் அரசியல் பக்கம் வந்திருப்பார்களா? இந்த இரு பெரும் மலைகளுடன் மோதும் திராணி இவர்களுக்கு வருமா? விஜயகாந்தை போல் துணிவு இவர்களுக்கு இல்லை.மக்களுக்கு சேவை செய்யாமல் சுய நல அரசியல் லாபம் தேட முனைகிறார்கள்.முதல்வர் கதிரை காலியாக இவர்களுகென்று இருக்கிறதாக நினைக்கிறார்கள். 60 வருடங்களாக அரசியல் செய்யும் தி மு க வெறும் 26% வாக்கு வாங்கியே வைத்திருக்கிறது.இத்தனைக்கும் அரசியலுக்கு வராமலே ரஜனி சொல்கிறார் தனக்கு 21% வாக்கு வங்கி இருக்கென்று சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Ahasthiyan said:

ரஜனி, கமல் அரசியலை பற்றி சீமான் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. இவர்கள் இருவரும் சந்தர்ப்ப அரசியல் செய்கின்றார்கள், கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் அரசியல் பக்கம் வந்திருப்பார்களா? இந்த இரு பெரும் மலைகளுடன் மோதும் திராணி இவர்களுக்கு வருமா? விஜயகாந்தை போல் துணிவு இவர்களுக்கு இல்லை.மக்களுக்கு சேவை செய்யாமல் சுய நல அரசியல் லாபம் தேட முனைகிறார்கள்.முதல்வர் கதிரை காலியாக இவர்களுகென்று இருக்கிறதாக நினைக்கிறார்கள். 60 வருடங்களாக அரசியல் செய்யும் தி மு க வெறும் 26% வாக்கு வாங்கியே வைத்திருக்கிறது.இத்தனைக்கும் அரசியலுக்கு வராமலே ரஜனி சொல்கிறார் தனக்கு 21% வாக்கு வங்கி இருக்கென்று சொல்கிறார்.

வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை.

எல்லாம் குருமூர்தி உத்தரவு.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை.

எல்லாம் குருமூர்தி உத்தரவு.

கோசான் அண்ணை... 
"காற்றுப் பறிதல்",
"காற்றில், பறந்த தமிழரின் கலாச்சாரம்"
இரண்டுக்கும்... ஏதாவது,  "தொப்புள் கொடி"  தொடர்பு இருக்குமோ....  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கோசான் அண்ணை... 
"காற்றுப் பறிதல்",
"காற்றில், பறந்த தமிழரின் கலாச்சாரம்"
இரண்டுக்கும்... ஏதாவது,  "தொப்புள் கொடி"  தொடர்பு இருக்குமோ....  🤣

எல்லாம் கரியமி(ம)லவாயு செய்தவேலையோ😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/23/2020 at 10:07 PM, goshan_che said:

வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை.

எல்லாம் குருமூர்தி உத்தரவு.

சீமான் மூலம் மக்கள் விழிப்படைய ஆரம்பித்து விட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

சீமான் மூலம் மக்கள் விழிப்படைய ஆரம்பித்து விட்டார்கள்.

 

இது எனது நப்பாசையும்தான். மக்கள் விழிப்புணர்வு என்பது காட்டாறு போல,  சில நேரம் அலையின் நுனியில் நிப்பவர் அலையை தன் சுயவிருப்பில் செலுத்தலாம் என்ற கள்ள எண்ணத்தில் நிற்க, அலை ஆளை தூக்கி வீசிவிட்டுதன்பாட்டில் ஓடும் (அமிர்தலிங்கத்துக்கு நடந்தது போல).

சீமான் பிடிக்கும் குரங்கு, பிள்ளையார் ஆகினால் எனக்கும் சந்தோசமே.

ஆனால் இது சீமானை மீறி நடந்தாலே ஒழிய வேறு வழியில்லை:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு உபதேசம் சொல்லிய, கருணாநிதியின். கடைசி வாழ்க்கை.
இன்னுமா.... தமிழகம்..... அவர்களை, நம்புகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ... கடவுளே....
இந்த,  இழவுகளை.. நம்பவும்,  தமிழ் நாட்டில்... ஒரு கோஷ்ட்டி  இருக்குமே.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/23/2020 at 10:07 PM, goshan_che said:

வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை.

எல்லாம் குருமூர்தி உத்தரவு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.