Jump to content

அலாவுதீனும் அற்புத அனுபவமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DA21-FCCC-A8-F1-4-D71-B02-C-ABB6485369-B
Aladdin, Tarzan, Tanz der Vampire, Koenig der Loewe போன்ற இசை நடன நிகழ்ச்சிகள் பற்றிய
விளம்பரங்கள் தொலைக்காட்சியில்  வரும் போதெல்லாம் ஒருதடவை போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நீண்ட காலங்களாக  என்னுள் அந்த விருப்பம் இருந்தும்  ஏனோ முடியவில்லை. ஒன்று நுழைவுச் சீட்டின் விலை அதிகம் என்பதால் இருக்கலாம் இல்லை அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும்  என்பதாகவும் இருந்திருக்கலாம்இதை எல்லாம் தாண்டி இப்பொழுது அது நிறைவேறி இருக்கிறது

நிகழ்ச்சி முடிய இரவு 11 மணி ஆகிவிடும். குளிர்காலமாதலால் வீதிகளில்  பனி படர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் வர ஒரு நாளுக்காக ஒரு ஹொட்டலில் தங்கி விட முடிவு செய்தேன். நுழைவுச் சீட்டுக்கு மட்டும் 142 யூரோக்கள்ஆனாலும் இவ்வளவு பணத்தை, நேரத்தை செலவழித்து நிகழ்ச்சியைப் போய்ப் பார்ப்பது பெறுமதியாக இருக்குமா என்றொரு அச்சம் கடைசிவரை என்னுள் இருந்தது. தனியாகப் போய்ப் பாரப்பதில் ஏதும் இருக்கப் போவதில்லை. மனைவியை அழைத்துப் போகும் போது செலவு இரட்டிப்புஆனாலும் இறுதி முடிவாக மனது சொன்னதுகாசைப் பார்க்காதே, நிகழ்ச்சியைப் போய்ப் பார்என்று.

Stuttgart SI Cntrum  என்ற இடத்தில் நிகழ்ச்சி. முதலில் SI Centrum பற்றிச் சொல்லிவிடுகிறேன். இதை ஒரு கேளிக்கை நிலையம் எனலாம். நடன இசை  நிகழ்ச்சிகளுக்காக Stage Apollo Theater, Stage Palladium Theater  என இரண்டு அரங்குகள்,  11 உணவு விடுதிகள், 7 மதுபான பார்கள், 3 கோப்பி நிலையங்கள், ஆறு சினிமா தியேட்டர்கள்,  3 சூதாட்ட மையங்கள், 22 மாநாட்டு மண்டபங்கள்  அத்தோடு ஒரு ஆரோக்கிய நிலையம் என்று யேர்மனியர்களுக்காக மட்டுமல்லாமல்  சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் மையப் படுத்தி  உருவாக்கப்பட்டது இந்த SI Centrum

நாங்கள் நிகழ்ச்சி பார்க்கப்  போன Aladdin இசை நடன நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் 1807 இருக்கைகள் கொண்ட  Palladium Theater. பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக சோதனைகள் நடத்தியே அரங்குக்குள் அனுமதித்தார்கள்.

அரங்கம் முழுமையானதாக நிறைந்திருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் போதே "போட்டோ எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ, தொலை பேசி உரையாடலோ அரங்கத்துக்குள் தயவு செய்து வேண்டாம்" என்று அறிவித்து விட்டார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்த நேரத்தில் இருந்து எந்த ஒரு வினாடியும் இடை விடாது நிகழ்ச்சி போய்க் கொண்டே இருந்தது.. மேடையிலே நகரும் கட்டிடங்கள், ஓடும் மேகங்கள், ஒளிபாய்ச்சும் சூரியன், பாழிக்கும் நிலவு, மின்னும் நட்சத்திரங்கள், களை கட்டி நிற்கும் சந்தை, வண்டிகள் போகும் வீதிகள் என ஒரு சினிமா பார்ப்பது போன்ற பிரமையே இருந்தது. நாடகத்தை ரசித்து, பார்வையாளர்கள் கைதட்டி, தங்களது பாராட்டுக்களைத் தெரியப்படுத்தாமல் மட்டும் இருந்திருந்தால் கண் முன்னாலே அவர்கள் வந்து நடித்துக் கொண்டிருந்ததை ஒரு அகன்ற திரையில் ஒரு சினிமா என்றுதான் நினைத்திருப்பேன்.

அலாவுதீன் கதை ஏற்கனவே தெரிந்திருந்ததால், Aladdin நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சோர்வு வந்து விடுமோ என்ற என்னுள் இருந்த அச்சம் வீணாகிப் போனதுமேடையிலே மறைந்து தோன்றும் பூதம், நொடிப் பொழுதில் அரண்மனை மறைந்து சந்தைகள், வீடுகள், அந்தப்புரம், படுக்கையறை  தோன்றும் காட்சிகள், எம்ஜிஆர் பாணி வாள்ச் சண்டைகள் என்று எல்லாவற்றிலும் என்னை நான் மறந்து போனேன்.

நடிகர்கள் பாடி ஆடி நடித்தது இன்னும் நிகழ்ச்சியை மெருகூட்டியது. நடிகர்களில், ஆபிரிக்கவைச் சேர்ந்தவர்கள் மூவர் இருந்தார்கள். அலாவுதீன் இளவரசியுடன் கம்பளத்தில் பறக்கும் காட்சி வருமா, அது இந்த மேடையில் சாத்தியமாகுமா என்ற ஆவலான கேள்வி எனக்குள் இருந்தது. என் எதிர்பார்ப்புக்கு மேலாக அந்தக் காட்சி அமைந்திருந்தது. அலாவுதீனும் இளவரசியும் கம்பளத்தில் பறந்த காட்சி என்னை மட்டுமல்ல மற்றைய பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்திருந்தது என்பது அரங்கம் வெடித்து விடும் அளவுக்கு எழுந்த கரகோசம் சொன்னது.

6-CB253-D8-8-AE5-4472-8-E39-1-D9-D8-A474

எண்ணிக்கைகளில் குறைந்த நடிகர்கள்தான் பங்கு பற்றி இருந்தார்கள். ஆனால் உடைகளை, வேசங்களை நொடிப் பொழுதில் மாற்றி வந்து மேடையை நிறைத்திருந்தார்கள். நடிப்பில் இசையில் ஏதேனும் பிழைகள் இருந்திருக்கலாம். அவை எல்லாம் பார்வையாளரைச் சென்றடையாமல் கையாளும் திறமை அவர்களிடம் இருந்திருக்கும்.

நிகழ்ச்சி முடிந்த போது எழுந்த கரகோசம் அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

Back stage பார்ப்பதற்கு மறுநாள் 11.30க்குப் போனோம்அதற்கும் கட்டணம் இருந்தது. 20 பேர் கொண்ட குழுக்களாக அழைத்துப் போய் காட்டி விளக்கம் தந்தார்கள்

நடிகர்கள் உடனடியாக ஓடி வந்து இருட்டினிலும் எடுத்து மாற்றக் கூடிய முறையில் உடைகளை தனித்தனியாக ஒழுங்காக  வைத்திருந்தார்கள். அதேபோல்தான் தலையில் போடும் விக்குகள், ஆபகரணங்கள், கையில் வைத்திருக்கும் பொருட்கள்  எல்லாம் ஒழுங்கான முறையில் வைக்கப்பட்டிருந்தன. தலை விக்குகளில் எப்படி மைக்கை பொருத்தி மறைத்து வைப்பது, தலைமயிர் இல்லாத பூத்த்தின் தாடிக்குள் மைக்கை எப்படி பொருத்துவது என்பதை எல்லாம் விளக்கினார்கள். பத்தாயிரம் யூரோ  பெறுமதியான ஆடைகள் இருபது கிலோவரையிலான அலாவுதீனின் உடைகள் எல்லாம் காட்டினார்கள். ஆனால் தொட்டுப் பார்க்கக் கூட அனுமதி தரமாட்டோம் என்றார்கள். மேடைத் தளத்திலேயே சிறிய லிப்ற் அமைத்திருந்தார்கள். அதனூடாகத்தான் பூதம் தோன்றி மறைவதை விளங்கப் படுத்தினார்கள். கம்பளத்தில் அலாவுதீனும் இளவரசியும் எப்படிப் பறந்தார்கள் என்பதை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்கள்.

திரும்பி வரும் பொழுது Aladin நிகழ்ச்சியைப்  பார்தத்தற்கு கொடுத்த பணத்துக்கு மேலான திருப்தி இருந்தது. ஆனாலும் எங்களவர்களது நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரத்திற்கு பின்னால் இருக்கிறது என்ற ஒரு ஆதங்கம் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரைப்படத்தை நான் கம்போடியா சென்றபோது விமானத்தில் பார்த்தேன். சலிப்பை ஏற்படுத்தாத படம். அரங்கத்தில் நேரடியாக நடிப்பதைப் பார்ப்பதே ஓர் அலாதியான அனுபவம். நான் The lion King ஐ பார்த்தபோது உணர்ந்து கொண்ட அனுபவம். சில நல்ல அனுபவங்களுக்காக பணத்தை இழப்பது பெரிதல்ல அண்ணா. நாம் அனுபவித்தால்த்தான் அதன் அருமை தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். 
லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் 
இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள்.

பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . 🙏 

ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார்.
இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார்.

இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்"  Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது.

வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.

Link to comment
Share on other sites

அலாவுதீன் இசை நடன நிகழ்ச்சியை மகளின் பாடசாலையில் பாத்தபோதே நன்றாக இருந்தது... அதை இப்படி ஒரு பிரமண்ட படைப்பில் பார்க்கும் போது சொல்லத்தேவையில்லை.

உங்கள் விமச்சனத்தை வாசித்தபின்பு அலாவுதீன் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

சசி அண்ணா சொன்னது போல் இங்கு இது  எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றே சொல்வேன்.

நானும் Waitress, Come from away, Legally Blonde, Chicago, Les Mis, Fiddler on the roof  பார்த்துள்ளேன்.... என்னவாக பாடி நடிக்கின்றார்கள்.  வரும் ஏப்பிரலில் Hamilton பார்க்க போகவுள்ளேன். ( இவற்றில் முதல் இரண்டு தான் Down Town Theater ல்  போய்ப்பார்த்தேன் மற்றவை எனது மகள் படிக்கும் இசைப்பள்ளியில் பார்த்தேன்)

Shen Yun ம் முடிந்தால் போய் பார்க்கவேண்டும்.

அலாவுதீனின் விமர்ச்சனத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விமர்சனம்.......இதுவரை பார்த்ததில்லை, இனிமேல் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்பேன்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழினி said:

அலாவுதீன் இசை நடன நிகழ்ச்சியை மகளின் பாடசாலையில் பாத்தபோதே நன்றாக இருந்தது... அதை இப்படி ஒரு பிரமண்ட படைப்பில் பார்க்கும் போது சொல்லத்தேவையில்லை.

உங்கள் விமச்சனத்தை வாசித்தபின்பு அலாவுதீன் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

சசி அண்ணா சொன்னது போல் இங்கு இது  எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றே சொல்வேன்.

நானும் Waitress, Come from away, Legally Blonde, Chicago, Les Mis, Fiddler on the roof  பார்த்துள்ளேன்.... என்னவாக பாடி நடிக்கின்றார்கள்.  வரும் ஏப்பிரலில் Hamilton பார்க்க போகவுள்ளேன். ( இவற்றில் முதல் இரண்டு தான் Down Town Theater ல்  போய்ப்பார்த்தேன் மற்றவை எனது மகள் படிக்கும் இசைப்பள்ளியில் பார்த்தேன்)

Shen Yun ம் முடிந்தால் போய் பார்க்கவேண்டும்.

அலாவுதீனின் விமர்ச்சனத்திற்கு நன்றிகள்.

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

இப்படியான  நிகழ்வு ஒன்றை 12 ம் வகுப்பு மாணவர்கள் நடாத்தி இருந்தார்கள். ஏறத்தாள ஒரு வருடம் பயிற்சி செய்து இருந்தார்கள். நானும் அரை மனமாக தான் சென்றேன்.

கொஸ்ரியூமில் இருந்து பின்ணணி இசை வரை ஒவ்வொரு ஆசியர் பொறுப்பெடுத்து செய்து இருந்தார்கள். பாடசாலை இசைக்குழுவே பின்னணி இசையை செய்து இருந்தார்கள். பல்வேறு நாட்டு பின்ணணிகளை கொண்ட  மாணவர்கள் பங்கு பற்றி பின்னி எடுத்து விட்டார்கள். ஒருவர்  இனிமையாக பாடுவதே அதிசயம். ஒரு குழு பாடி , ஆடி நடிப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அத்தனை  திறமை இந்த சிறுவர்களிடமா என பிரமித்து நின்றேன். பார்த்த காட்சியின் பெயர் legally blond.

கவி அவர்களே உங்கள் காட்சி வருணனை அருமை. நேரே காட்சியை பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. நன்றிகள்

 

 

Link to comment
Share on other sites

56 minutes ago, Sasi_varnam said:

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழினி said:

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

 

மிக்க மகிழ்ச்சி தமிழினி,
எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ  ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது  இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .

Link to comment
Share on other sites

12 minutes ago, Sasi_varnam said:

மிக்க மகிழ்ச்சி தமிழினி,
எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ  ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது  இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .

நன்றி சசி அண்ணா. சிறு வயதில் இருந்தே இசை மேல் அவவிற்கு ஆர்வம் இருந்ததால் அவவின் தெரிவு Art School ஆக இருந்தது.  அவவின் விருப்பப்படி அங்கு தான் தற்போது High School படிக்கின்றா. எதிர்காலத்தில் அவவின் விருப்பங்கள் மாறக்கூடும் ஆனால் எதை படிக்க விரும்பினாலும் அவவின் விருப்பம் தான் எம் விருப்பமாகவிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம், சென்ற  செவ்வாய்க் கிழமை பதிந்த பதிவை... இன்று தான்...  கண்டேன். :rolleyes:

அதுகும்... எமக்கு அருகில் உள்ள இடம். அங்கு... இப்படி  ஒரு, அருமையான நிகழ்ச்சி.... 
அங்கு  நடந்திருக்கும் என்று, நான் எதிர் பார்க்கவேயில்லை. 

அனுமதி சீட்டு.... 147 €  எனும் போது, அந்த ஆசையை விடலாம் என யோசித்தாலும்,
நானும், ஒய்வு (பென்ஷன்)  :grin: எடுத்த பின்...   அங்கு ஒரு முறை சென்று பார்க்க,
கவி அருணாசலத்தின்... அழகிய எழுத்து நடையுடன் உள்ள பதிவு, என்னைத் தூண்டியுள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கவி அருணாசலம், சென்ற  செவ்வாய்க் கிழமை பதிந்த பதிவை... இன்று தான்...  கண்டேன். :rolleyes:

அதுகும்... எமக்கு அருகில் உள்ள இடம். அங்கு... இப்படி  ஒரு, அருமையான நிகழ்ச்சி.... 
அங்கு  நடந்திருக்கும் என்று, நான் எதிர் பார்க்கவேயில்லை. 

அனுமதி சீட்டு.... 147 €  எனும் போது, அந்த ஆசையை விடலாம் என யோசித்தாலும்,
நானும், ஒய்வு (பென்ஷன்)  :grin: எடுத்த பின்...   அங்கு ஒரு முறை சென்று பார்க்க,
கவி அருணாசலத்தின்... அழகிய எழுத்து நடையுடன் உள்ள பதிவு, என்னைத் தூண்டியுள்ளது. :)

Image associée

நீங்கள் பென்சன் எடுத்திட்டு போய் நாடகம் பார்க்கும்போது அலாவுதீனும் இளவரசியும்  கம்பளத்தை எறிஞ்சு போட்டு கிளைடரில் பாறப்பார்கள்.......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நீங்கள் பென்சன் எடுத்திட்டு போய் நாடகம் பார்க்கும்போது அலாவுதீனும் இளவரசியும்  கம்பளத்தை எறிஞ்சு போட்டு கிளைடரில் பாறப்பார்கள்.......!    😁

சுவியர்...  "அலாவுதீனும் அற்புத விளக்கும்" என்ற கதை...
ஒருவரின்..  சிறு வயதில், மனதில்  "கல் வெட்டாக"  பதிந்த கதை.

அந்தக் கதை...  பாஞ்ச் அண்ணைக்கும்,  ராஜவன்னியனுக்கும், விசுகு, ஈழப்பிரியன், 
புங்கையூரான்... போன்ற எல்லோருக்கும் பொருந்தும்.
வாழ்க்கை என்பது, ஒரு... வட்டம்  தானே.. சுவி அண்ணா. :)

ஆனால்....  "அலாவுதீனும் அற்புத விளக்கும்"  என்ற கதையை....
"பாட்டி... வடை, சுட்ட கதை" ... என்ற மாதிரி,
அடுத்த  தலைமுறையும், விரும்பி ரசிக்கும், 
காலத்தால்.... அழியாத கதைகளில், இதுவும் ஒன்று.  ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/23/2020 at 9:43 PM, Sasi_varnam said:

(Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். 
லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் 
இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள்.

பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . 🙏 

ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார்.
இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார்.

இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்"  Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது.

வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.

இதைத்தான் (மியூசிக்கல்) எங்கள் ஊரில் நாட்டிய நாடகம் என்பார்கள் ?

றஹ்மானும் அன்ரு லாயிட் வெபரும் இணைந்து படைத்த நாட்டியநாடகம் பம்பே டிரீம்ஸ்.

செஹன் யூன் அருமையான படைப்பு. இதை பலுங் கொங்கின் அங்கம் என்று சீனாவில் தடை செய்துள்ளார்கள். பார்த்துவிட்டு வெளியே வரும்போதும் மறைமுகமாக சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்-எதிர் செய்திகளை நாமே இனம் காணலாம். வெளியே ஓபனாககவே பலுங்கொங் பிரசுரங்கள் இருக்கும்.

இன்னொரு அரிய படைப்பு War Horse. இதை பார்த்து அழாமால் இருக்க யாராலும் முடியாது.

7 hours ago, தமிழினி said:

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

 

எதிர்காலத்தில் மேற்கத்திய இசை உலகில் முடிசூடும் தமிழ் பெண் என்ற செய்தி வரத்தான் போகிறது. இவவின் அம்மாவை எனக்கு சமூக வலைத்தளத்தில் பழக்கம் என நானும் ஓரிரு பார்டிகளில் விலாசம் காட்டத்தான் போறன். 😂

வாழ்துகள் ☘️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

யோசிக்காமல்- திறமையை இனம் கண்டால் - களத்தில் இறங்குங்கள் சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி... யாழ். களத்திலுள்ள  புத்திசாலியான பெண்.
அவரின்...... குட்டி,  இன்னும், கூட.. பாய வேண்டும், என வாழ்த்துகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புஉறவுகள் தமிழினி, சசிவர்ணம் ஆகியோரின் பிள்ளைகள் சகல வளமும் பெற்றுவாழ  வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் .....!   🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.