Jump to content

அலாவுதீனும் அற்புத அனுபவமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DA21-FCCC-A8-F1-4-D71-B02-C-ABB6485369-B
Aladdin, Tarzan, Tanz der Vampire, Koenig der Loewe போன்ற இசை நடன நிகழ்ச்சிகள் பற்றிய
விளம்பரங்கள் தொலைக்காட்சியில்  வரும் போதெல்லாம் ஒருதடவை போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நீண்ட காலங்களாக  என்னுள் அந்த விருப்பம் இருந்தும்  ஏனோ முடியவில்லை. ஒன்று நுழைவுச் சீட்டின் விலை அதிகம் என்பதால் இருக்கலாம் இல்லை அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும்  என்பதாகவும் இருந்திருக்கலாம்இதை எல்லாம் தாண்டி இப்பொழுது அது நிறைவேறி இருக்கிறது

நிகழ்ச்சி முடிய இரவு 11 மணி ஆகிவிடும். குளிர்காலமாதலால் வீதிகளில்  பனி படர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் வர ஒரு நாளுக்காக ஒரு ஹொட்டலில் தங்கி விட முடிவு செய்தேன். நுழைவுச் சீட்டுக்கு மட்டும் 142 யூரோக்கள்ஆனாலும் இவ்வளவு பணத்தை, நேரத்தை செலவழித்து நிகழ்ச்சியைப் போய்ப் பார்ப்பது பெறுமதியாக இருக்குமா என்றொரு அச்சம் கடைசிவரை என்னுள் இருந்தது. தனியாகப் போய்ப் பாரப்பதில் ஏதும் இருக்கப் போவதில்லை. மனைவியை அழைத்துப் போகும் போது செலவு இரட்டிப்புஆனாலும் இறுதி முடிவாக மனது சொன்னதுகாசைப் பார்க்காதே, நிகழ்ச்சியைப் போய்ப் பார்என்று.

Stuttgart SI Cntrum  என்ற இடத்தில் நிகழ்ச்சி. முதலில் SI Centrum பற்றிச் சொல்லிவிடுகிறேன். இதை ஒரு கேளிக்கை நிலையம் எனலாம். நடன இசை  நிகழ்ச்சிகளுக்காக Stage Apollo Theater, Stage Palladium Theater  என இரண்டு அரங்குகள்,  11 உணவு விடுதிகள், 7 மதுபான பார்கள், 3 கோப்பி நிலையங்கள், ஆறு சினிமா தியேட்டர்கள்,  3 சூதாட்ட மையங்கள், 22 மாநாட்டு மண்டபங்கள்  அத்தோடு ஒரு ஆரோக்கிய நிலையம் என்று யேர்மனியர்களுக்காக மட்டுமல்லாமல்  சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் மையப் படுத்தி  உருவாக்கப்பட்டது இந்த SI Centrum

நாங்கள் நிகழ்ச்சி பார்க்கப்  போன Aladdin இசை நடன நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் 1807 இருக்கைகள் கொண்ட  Palladium Theater. பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக சோதனைகள் நடத்தியே அரங்குக்குள் அனுமதித்தார்கள்.

அரங்கம் முழுமையானதாக நிறைந்திருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் போதே "போட்டோ எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ, தொலை பேசி உரையாடலோ அரங்கத்துக்குள் தயவு செய்து வேண்டாம்" என்று அறிவித்து விட்டார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்த நேரத்தில் இருந்து எந்த ஒரு வினாடியும் இடை விடாது நிகழ்ச்சி போய்க் கொண்டே இருந்தது.. மேடையிலே நகரும் கட்டிடங்கள், ஓடும் மேகங்கள், ஒளிபாய்ச்சும் சூரியன், பாழிக்கும் நிலவு, மின்னும் நட்சத்திரங்கள், களை கட்டி நிற்கும் சந்தை, வண்டிகள் போகும் வீதிகள் என ஒரு சினிமா பார்ப்பது போன்ற பிரமையே இருந்தது. நாடகத்தை ரசித்து, பார்வையாளர்கள் கைதட்டி, தங்களது பாராட்டுக்களைத் தெரியப்படுத்தாமல் மட்டும் இருந்திருந்தால் கண் முன்னாலே அவர்கள் வந்து நடித்துக் கொண்டிருந்ததை ஒரு அகன்ற திரையில் ஒரு சினிமா என்றுதான் நினைத்திருப்பேன்.

அலாவுதீன் கதை ஏற்கனவே தெரிந்திருந்ததால், Aladdin நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சோர்வு வந்து விடுமோ என்ற என்னுள் இருந்த அச்சம் வீணாகிப் போனதுமேடையிலே மறைந்து தோன்றும் பூதம், நொடிப் பொழுதில் அரண்மனை மறைந்து சந்தைகள், வீடுகள், அந்தப்புரம், படுக்கையறை  தோன்றும் காட்சிகள், எம்ஜிஆர் பாணி வாள்ச் சண்டைகள் என்று எல்லாவற்றிலும் என்னை நான் மறந்து போனேன்.

நடிகர்கள் பாடி ஆடி நடித்தது இன்னும் நிகழ்ச்சியை மெருகூட்டியது. நடிகர்களில், ஆபிரிக்கவைச் சேர்ந்தவர்கள் மூவர் இருந்தார்கள். அலாவுதீன் இளவரசியுடன் கம்பளத்தில் பறக்கும் காட்சி வருமா, அது இந்த மேடையில் சாத்தியமாகுமா என்ற ஆவலான கேள்வி எனக்குள் இருந்தது. என் எதிர்பார்ப்புக்கு மேலாக அந்தக் காட்சி அமைந்திருந்தது. அலாவுதீனும் இளவரசியும் கம்பளத்தில் பறந்த காட்சி என்னை மட்டுமல்ல மற்றைய பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்திருந்தது என்பது அரங்கம் வெடித்து விடும் அளவுக்கு எழுந்த கரகோசம் சொன்னது.

6-CB253-D8-8-AE5-4472-8-E39-1-D9-D8-A474

எண்ணிக்கைகளில் குறைந்த நடிகர்கள்தான் பங்கு பற்றி இருந்தார்கள். ஆனால் உடைகளை, வேசங்களை நொடிப் பொழுதில் மாற்றி வந்து மேடையை நிறைத்திருந்தார்கள். நடிப்பில் இசையில் ஏதேனும் பிழைகள் இருந்திருக்கலாம். அவை எல்லாம் பார்வையாளரைச் சென்றடையாமல் கையாளும் திறமை அவர்களிடம் இருந்திருக்கும்.

நிகழ்ச்சி முடிந்த போது எழுந்த கரகோசம் அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

Back stage பார்ப்பதற்கு மறுநாள் 11.30க்குப் போனோம்அதற்கும் கட்டணம் இருந்தது. 20 பேர் கொண்ட குழுக்களாக அழைத்துப் போய் காட்டி விளக்கம் தந்தார்கள்

நடிகர்கள் உடனடியாக ஓடி வந்து இருட்டினிலும் எடுத்து மாற்றக் கூடிய முறையில் உடைகளை தனித்தனியாக ஒழுங்காக  வைத்திருந்தார்கள். அதேபோல்தான் தலையில் போடும் விக்குகள், ஆபகரணங்கள், கையில் வைத்திருக்கும் பொருட்கள்  எல்லாம் ஒழுங்கான முறையில் வைக்கப்பட்டிருந்தன. தலை விக்குகளில் எப்படி மைக்கை பொருத்தி மறைத்து வைப்பது, தலைமயிர் இல்லாத பூத்த்தின் தாடிக்குள் மைக்கை எப்படி பொருத்துவது என்பதை எல்லாம் விளக்கினார்கள். பத்தாயிரம் யூரோ  பெறுமதியான ஆடைகள் இருபது கிலோவரையிலான அலாவுதீனின் உடைகள் எல்லாம் காட்டினார்கள். ஆனால் தொட்டுப் பார்க்கக் கூட அனுமதி தரமாட்டோம் என்றார்கள். மேடைத் தளத்திலேயே சிறிய லிப்ற் அமைத்திருந்தார்கள். அதனூடாகத்தான் பூதம் தோன்றி மறைவதை விளங்கப் படுத்தினார்கள். கம்பளத்தில் அலாவுதீனும் இளவரசியும் எப்படிப் பறந்தார்கள் என்பதை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்கள்.

திரும்பி வரும் பொழுது Aladin நிகழ்ச்சியைப்  பார்தத்தற்கு கொடுத்த பணத்துக்கு மேலான திருப்தி இருந்தது. ஆனாலும் எங்களவர்களது நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரத்திற்கு பின்னால் இருக்கிறது என்ற ஒரு ஆதங்கம் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரைப்படத்தை நான் கம்போடியா சென்றபோது விமானத்தில் பார்த்தேன். சலிப்பை ஏற்படுத்தாத படம். அரங்கத்தில் நேரடியாக நடிப்பதைப் பார்ப்பதே ஓர் அலாதியான அனுபவம். நான் The lion King ஐ பார்த்தபோது உணர்ந்து கொண்ட அனுபவம். சில நல்ல அனுபவங்களுக்காக பணத்தை இழப்பது பெரிதல்ல அண்ணா. நாம் அனுபவித்தால்த்தான் அதன் அருமை தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். 
லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் 
இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள்.

பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . 🙏 

ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார்.
இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார்.

இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்"  Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது.

வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.

Link to comment
Share on other sites

அலாவுதீன் இசை நடன நிகழ்ச்சியை மகளின் பாடசாலையில் பாத்தபோதே நன்றாக இருந்தது... அதை இப்படி ஒரு பிரமண்ட படைப்பில் பார்க்கும் போது சொல்லத்தேவையில்லை.

உங்கள் விமச்சனத்தை வாசித்தபின்பு அலாவுதீன் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

சசி அண்ணா சொன்னது போல் இங்கு இது  எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றே சொல்வேன்.

நானும் Waitress, Come from away, Legally Blonde, Chicago, Les Mis, Fiddler on the roof  பார்த்துள்ளேன்.... என்னவாக பாடி நடிக்கின்றார்கள்.  வரும் ஏப்பிரலில் Hamilton பார்க்க போகவுள்ளேன். ( இவற்றில் முதல் இரண்டு தான் Down Town Theater ல்  போய்ப்பார்த்தேன் மற்றவை எனது மகள் படிக்கும் இசைப்பள்ளியில் பார்த்தேன்)

Shen Yun ம் முடிந்தால் போய் பார்க்கவேண்டும்.

அலாவுதீனின் விமர்ச்சனத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விமர்சனம்.......இதுவரை பார்த்ததில்லை, இனிமேல் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்பேன்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழினி said:

அலாவுதீன் இசை நடன நிகழ்ச்சியை மகளின் பாடசாலையில் பாத்தபோதே நன்றாக இருந்தது... அதை இப்படி ஒரு பிரமண்ட படைப்பில் பார்க்கும் போது சொல்லத்தேவையில்லை.

உங்கள் விமச்சனத்தை வாசித்தபின்பு அலாவுதீன் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

சசி அண்ணா சொன்னது போல் இங்கு இது  எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றே சொல்வேன்.

நானும் Waitress, Come from away, Legally Blonde, Chicago, Les Mis, Fiddler on the roof  பார்த்துள்ளேன்.... என்னவாக பாடி நடிக்கின்றார்கள்.  வரும் ஏப்பிரலில் Hamilton பார்க்க போகவுள்ளேன். ( இவற்றில் முதல் இரண்டு தான் Down Town Theater ல்  போய்ப்பார்த்தேன் மற்றவை எனது மகள் படிக்கும் இசைப்பள்ளியில் பார்த்தேன்)

Shen Yun ம் முடிந்தால் போய் பார்க்கவேண்டும்.

அலாவுதீனின் விமர்ச்சனத்திற்கு நன்றிகள்.

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

இப்படியான  நிகழ்வு ஒன்றை 12 ம் வகுப்பு மாணவர்கள் நடாத்தி இருந்தார்கள். ஏறத்தாள ஒரு வருடம் பயிற்சி செய்து இருந்தார்கள். நானும் அரை மனமாக தான் சென்றேன்.

கொஸ்ரியூமில் இருந்து பின்ணணி இசை வரை ஒவ்வொரு ஆசியர் பொறுப்பெடுத்து செய்து இருந்தார்கள். பாடசாலை இசைக்குழுவே பின்னணி இசையை செய்து இருந்தார்கள். பல்வேறு நாட்டு பின்ணணிகளை கொண்ட  மாணவர்கள் பங்கு பற்றி பின்னி எடுத்து விட்டார்கள். ஒருவர்  இனிமையாக பாடுவதே அதிசயம். ஒரு குழு பாடி , ஆடி நடிப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அத்தனை  திறமை இந்த சிறுவர்களிடமா என பிரமித்து நின்றேன். பார்த்த காட்சியின் பெயர் legally blond.

கவி அவர்களே உங்கள் காட்சி வருணனை அருமை. நேரே காட்சியை பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. நன்றிகள்

 

 

Link to comment
Share on other sites

56 minutes ago, Sasi_varnam said:

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழினி said:

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

 

மிக்க மகிழ்ச்சி தமிழினி,
எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ  ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது  இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .

Link to comment
Share on other sites

12 minutes ago, Sasi_varnam said:

மிக்க மகிழ்ச்சி தமிழினி,
எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ  ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது  இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .

நன்றி சசி அண்ணா. சிறு வயதில் இருந்தே இசை மேல் அவவிற்கு ஆர்வம் இருந்ததால் அவவின் தெரிவு Art School ஆக இருந்தது.  அவவின் விருப்பப்படி அங்கு தான் தற்போது High School படிக்கின்றா. எதிர்காலத்தில் அவவின் விருப்பங்கள் மாறக்கூடும் ஆனால் எதை படிக்க விரும்பினாலும் அவவின் விருப்பம் தான் எம் விருப்பமாகவிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம், சென்ற  செவ்வாய்க் கிழமை பதிந்த பதிவை... இன்று தான்...  கண்டேன். :rolleyes:

அதுகும்... எமக்கு அருகில் உள்ள இடம். அங்கு... இப்படி  ஒரு, அருமையான நிகழ்ச்சி.... 
அங்கு  நடந்திருக்கும் என்று, நான் எதிர் பார்க்கவேயில்லை. 

அனுமதி சீட்டு.... 147 €  எனும் போது, அந்த ஆசையை விடலாம் என யோசித்தாலும்,
நானும், ஒய்வு (பென்ஷன்)  :grin: எடுத்த பின்...   அங்கு ஒரு முறை சென்று பார்க்க,
கவி அருணாசலத்தின்... அழகிய எழுத்து நடையுடன் உள்ள பதிவு, என்னைத் தூண்டியுள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கவி அருணாசலம், சென்ற  செவ்வாய்க் கிழமை பதிந்த பதிவை... இன்று தான்...  கண்டேன். :rolleyes:

அதுகும்... எமக்கு அருகில் உள்ள இடம். அங்கு... இப்படி  ஒரு, அருமையான நிகழ்ச்சி.... 
அங்கு  நடந்திருக்கும் என்று, நான் எதிர் பார்க்கவேயில்லை. 

அனுமதி சீட்டு.... 147 €  எனும் போது, அந்த ஆசையை விடலாம் என யோசித்தாலும்,
நானும், ஒய்வு (பென்ஷன்)  :grin: எடுத்த பின்...   அங்கு ஒரு முறை சென்று பார்க்க,
கவி அருணாசலத்தின்... அழகிய எழுத்து நடையுடன் உள்ள பதிவு, என்னைத் தூண்டியுள்ளது. :)

Image associée

நீங்கள் பென்சன் எடுத்திட்டு போய் நாடகம் பார்க்கும்போது அலாவுதீனும் இளவரசியும்  கம்பளத்தை எறிஞ்சு போட்டு கிளைடரில் பாறப்பார்கள்.......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நீங்கள் பென்சன் எடுத்திட்டு போய் நாடகம் பார்க்கும்போது அலாவுதீனும் இளவரசியும்  கம்பளத்தை எறிஞ்சு போட்டு கிளைடரில் பாறப்பார்கள்.......!    😁

சுவியர்...  "அலாவுதீனும் அற்புத விளக்கும்" என்ற கதை...
ஒருவரின்..  சிறு வயதில், மனதில்  "கல் வெட்டாக"  பதிந்த கதை.

அந்தக் கதை...  பாஞ்ச் அண்ணைக்கும்,  ராஜவன்னியனுக்கும், விசுகு, ஈழப்பிரியன், 
புங்கையூரான்... போன்ற எல்லோருக்கும் பொருந்தும்.
வாழ்க்கை என்பது, ஒரு... வட்டம்  தானே.. சுவி அண்ணா. :)

ஆனால்....  "அலாவுதீனும் அற்புத விளக்கும்"  என்ற கதையை....
"பாட்டி... வடை, சுட்ட கதை" ... என்ற மாதிரி,
அடுத்த  தலைமுறையும், விரும்பி ரசிக்கும், 
காலத்தால்.... அழியாத கதைகளில், இதுவும் ஒன்று.  ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/23/2020 at 9:43 PM, Sasi_varnam said:

(Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். 
லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் 
இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள்.

பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . 🙏 

ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார்.
இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார்.

இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்"  Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது.

வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.

இதைத்தான் (மியூசிக்கல்) எங்கள் ஊரில் நாட்டிய நாடகம் என்பார்கள் ?

றஹ்மானும் அன்ரு லாயிட் வெபரும் இணைந்து படைத்த நாட்டியநாடகம் பம்பே டிரீம்ஸ்.

செஹன் யூன் அருமையான படைப்பு. இதை பலுங் கொங்கின் அங்கம் என்று சீனாவில் தடை செய்துள்ளார்கள். பார்த்துவிட்டு வெளியே வரும்போதும் மறைமுகமாக சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்-எதிர் செய்திகளை நாமே இனம் காணலாம். வெளியே ஓபனாககவே பலுங்கொங் பிரசுரங்கள் இருக்கும்.

இன்னொரு அரிய படைப்பு War Horse. இதை பார்த்து அழாமால் இருக்க யாராலும் முடியாது.

7 hours ago, தமிழினி said:

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

 

எதிர்காலத்தில் மேற்கத்திய இசை உலகில் முடிசூடும் தமிழ் பெண் என்ற செய்தி வரத்தான் போகிறது. இவவின் அம்மாவை எனக்கு சமூக வலைத்தளத்தில் பழக்கம் என நானும் ஓரிரு பார்டிகளில் விலாசம் காட்டத்தான் போறன். 😂

வாழ்துகள் ☘️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

யோசிக்காமல்- திறமையை இனம் கண்டால் - களத்தில் இறங்குங்கள் சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி... யாழ். களத்திலுள்ள  புத்திசாலியான பெண்.
அவரின்...... குட்டி,  இன்னும், கூட.. பாய வேண்டும், என வாழ்த்துகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புஉறவுகள் தமிழினி, சசிவர்ணம் ஆகியோரின் பிள்ளைகள் சகல வளமும் பெற்றுவாழ  வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் .....!   🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.