Jump to content

“என்னிடம் இன்னும் பல குரல் பதிவுகள் உண்டு“ – நாடாளுமன்றத்தில் மிரட்டிய ரஞ்சன்


Recommended Posts

“என்னிடம் இன்னும் பல குரல் பதிவுகள் உண்டு“ – நாடாளுமன்றத்தில் மிரட்டிய ரஞ்சன்

ranjan-11-1.jpg

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அவர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க  நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் கூறிய  விடயங்களை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை உருவாக்க வேண்டும்.

அப்போது ஆவணங்களுடன் அதில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்கின்றேன். மேலும் தன்னிடம் இருக்கும் குரல் பதிவுகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் குரல் பதிவுகள் இல்லை.

ஆனாலும் ஆளும் தரப்பை சேர்ந்த மற்றும் முன்னாள் அரசியல் சார்ந்தவர்களின் குரல் பதிவுகளை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றேன்.

இந்த உலகில் பேசிய விடயங்களை மறைக்கும் பலர் இருக்கின்றனர். இத்தகையவர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே  தொலைபேசி மற்றும் முக்கிய கலந்துரையாடல்களை பதிவு செய்து கொண்டேன்.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள், அமைச்சரவை அமைச்சர்களின் மனைவிமார்களின் குரல்பதிவுகள் என அனைத்து குரல் பதிவுகளையும் நாடாளுமன்றில் வெளிப்படுத்துவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/முன்னாள்-ஜனாதிபதிகள்-அம/

Link to comment
Share on other sites

நேற்று பாராளுமன்றில் சூடான விவாதம்। ரஞ்சனுக்கு வேறு தேர்வில்லை। எனவே நேற்று பாராளுமன்றில் ஒரு பயங்கர அறிக்கையை விட்டிருக்கிறார்। எல்லோரும் கப்சிப்பாக இருக்கிறார்கள்। நடிகர் ராஜனிகாந்தும் அதட்குள் சிக்கியிருப்பதாக ஒரு பேச்சு। உண்மை தெரியவில்லை। ஹிருணிக்கா நேற்று அங்கு பேசிய பேச்சுக்களை இங்கு எழுத முடியாது। அது அவ்வளவு மோசமாக இருந்தது। நியூஸ் பெஸ்ட (நியூஸ் 1 st ) நேற்று பார்த்தவர்களுக்கு விளங்கியிருக்கும்। இப்போது இங்கு இது ஒரு சூடான விவாதமாக இருக்கிறது।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் எனது கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன்..

82479941_2750377665048548_6523043604422721536_n.jpg?_nc_cat=108&efg=eyJpIjoidCJ9&_nc_oc=AQm9cPiWIbY51BZ_nHl811eCyck2alpTB7ahWGY73PEPvkKLrxfV4XzOyppEm_veJyY&_nc_ht=scontent-lax3-1.xx&_nc_tp=12&oh=783e80efc6fc17e63f0e7de76e44791c&oe=5E98E0FC

 

தனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் தனது கணவருக்கு மாத்திரமே கொடுத்துள்ளதாக

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருநிகா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.

 
தான் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சகோதரியாக நண்பியாக பழகியதாக கூறிய அவர் நண்பர்களாக கதைத்துக்கொண்டதை எடிட் செய்து தன் மீது சேறு பூசுவதாக கூறினார்.
 
பாராளுமன்றில் அதிகமாக ஆண்களே இருப்பதாகவும் அவர்களுடனே பழகவேண்டிய நிர்ப்பந்தம் தன் போன்ற பெண் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.