Jump to content

நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல!


Recommended Posts

 

நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல!

 

 

[Tuesday 2020-01-21 08:00]

“இந்திய உள்ளிட்ட, சர்வதேச வல்லரசுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்துள்ளார். அத்துடன் தங்களது உரிமைசார்ந்த கோரிக்கைகளையே தாம் முன்வைப்பதாகவும்  அவர் கூறினார்.  சர்வதேச அரசியல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்திய உள்ளிட்ட, சர்வதேச வல்லரசுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்துள்ளார். அத்துடன் தங்களது உரிமைசார்ந்த கோரிக்கைகளையே தாம் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். சர்வதேச அரசியல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

   
 

வல்லரசு நாடுகளுகளை, தாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான கொள்கைகளை தாங்கள் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்திய எதிர்ப்புக் கொள்கைகளாக சாதிக்க முடியுமா என்று அவரிடம் வினவியபோது, இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு கொள்கைகளையோ நிலைப்பாடுகளையோ தாங்கள் முன்வைக்கவில்லை என்றும் அந்த விமர்சனங்கள் தங்கள் மீது முன்வைக்கப்படும்போது, தமிழ் மக்களை ஒரு பிழையான கோணத்துக்கு இட்டுச்செல்லும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் நலன்கள் பேணப்படல் வேண்டும் என்பதில், எந்தவிதமான மாற்றுக்கருத்துகளும் கிடையாது என்றும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு விடயத்தில், தமிழீழ தாயக நிலப்பரப்பு, எந்தவொரு விடயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயற்படாம் தடுப்பதற்கு, தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால், அதை இந்தியா உணர்ந்து, தமிழ்த் தேசத்தை அங்கிகரிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசத்துடைய தங்களது இருப்பையும் அங்கிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாதான் பிரச்சனையே. இதனை எந்த தமிழ் அரசியல்வாதி உரத்துச் சொல்கிறானோ அப்போதுதான் உண்மையான அரசியல் தொடங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9nb3V

அதெல்லாம் பல முறை சொல்லியாச்சு.. 😢

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

இந்திய உள்ளிட்ட, சர்வதேச வல்லரசுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்துள்ளார்.

இப்போது நீங்கள் தமிழர்களுக்குத் தான் எதிரிகளாகச் செயற்படுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9nb3V

அதெல்லாம் பல முறை சொல்லியாச்சு.. 😢

 

9 hours ago, nunavilan said:

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு விடயத்தில், தமிழீழ தாயக நிலப்பரப்பு, எந்தவொரு விடயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயற்படாம் தடுப்பதற்கு, தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் என்ன அடக்கு முறை நடந்தாலும் தமிழீழம் கண்டு கொள்ளாது என்பதை பல முறை சொல்லியாச்சு.

Link to comment
Share on other sites

6 hours ago, போல் said:

இப்போது நீங்கள் தமிழர்களுக்குத் தான் எதிரிகளாகச் செயற்படுகிறீர்கள்.

தமிழர்களுக்கு எதிரான கோஷ்டியாக கஜேந்திரகுமார் கோஷ்டி இருப்பதால கஜேந்திரகுமார் கோஷ்டி இந்தியாவுக்கு எதிரானதாக இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது,

15 hours ago, nunavilan said:

இந்திய உள்ளிட்ட, சர்வதேச வல்லரசுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல

20071127001.jpg

 

2007 ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் கேட்டதாக இந்த எளியவனுக்கு நினைவில் உள்ளது.

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழகத்தில் என்ன அடக்கு முறை நடந்தாலும் தமிழீழம் கண்டு கொள்ளாது என்பதை பல முறை சொல்லியாச்சு

இது எப்போது யார் சொன்னார்கள் என்று நினைவில் இல்லை தோழர். தமிழக தோழர்களுக்கு தாங்கள் விளங்கபடுத்த வேண்டும்..👍

Link to comment
Share on other sites

2 hours ago, Rajesh said:

தமிழர்களுக்கு எதிரான கோஷ்டியாக கஜேந்திரகுமார் கோஷ்டி இருப்பதால கஜேந்திரகுமார் கோஷ்டி இந்தியாவுக்கு எதிரானதாக இருக்க முடியாது.

இன்னும் இன்னும் இவர்கள் இந்தியாவை நம்புவது எந்த எண்ணத்தில் என்று தெரியவில்லை। இலங்கையில் இந்தியாவுக்கு சார்பான நிலைமை இருக்கும் வரையும், இலங்கை இந்தியாவை நண்பனாக பார்க்கும் வரையும் தமிழர் உரிமை பற்றி இந்தியா பெரிதாக அலட்டிக்கொள்ளாது। அப்படி நெருக்கினாள் இந்தியா சீன பக்கம் முழுமையாக சாய்ந்துவிடுமென்று தெரியும்। இப்போதும் இலங்கை சீன சார்பு நாடுதான்। இருந்தாலும் இந்தியா நலனில் இலங்கை இப்போது அக்கறை கொண்டுள்ளது।மேட்கு நாடுகள் உதவினாலே ஒழிய இன்னும் ஒரு எழுபது வருடங்கள் இப்படியே ஓடும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2020 at 3:45 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது எப்போது யார் சொன்னார்கள் என்று நினைவில் இல்லை தோழர். தமிழக தோழர்களுக்கு தாங்கள் விளங்கபடுத்த வேண்டும்..👍

தோழர் இப்படி தமிழகத்தில் என்ன அடக்கு முறை நடந்தாலும் தமிழீழம் கண்டு கொள்ளாது என்று நேரடியாக சொல்லவில்லை. இவர் கஜேந்திரகுமார் சொல்கிற பாணியிலேயே புலிகள் கிந்தியாவின் நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளமாட்டோம் என்று சொன்னதை கேட்டும் வாசித்தும் இருக்கிறேன்.தூத்துக்குடியில் மக்கள் மீது பொலிசு துப்பாக்கிச் சூடு நடத்தி மக்கள் கொல்லபட்டால்  பத்திரிக்கையாளரின் கேள்விக்கு தமிழீழ அமைச்சர் என்ன பதில் சொல்வார் கிந்தியா எமது நட்புநாடு அவர்களின் பாதுகாப்பே முக்கியம் தூத்துக்குடி மக்கள் நலனை இந்தியா கவனித்து கொள்ளும்😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தோழர் இப்படி தமிழகத்தில் என்ன அடக்கு முறை நடந்தாலும் தமிழீழம் கண்டு கொள்ளாது என்று நேரடியாக சொல்லவில்லை. இவர் கஜேந்திரகுமார் சொல்கிற பாணியிலேயே புலிகள் கிந்தியாவின் நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளமாட்டோம் என்று சொன்னதை கேட்டும் வாசித்தும் இருக்கிறேன்.தூத்துக்குடியில் மக்கள் மீது பொலிசு துப்பாக்கிச் சூடு நடத்தி மக்கள் கொல்லபட்டால்  பத்திரிக்கையாளரின் கேள்விக்கு தமிழீழ அமைச்சர் என்ன பதில் சொல்வார் கிந்தியா எமது நட்புநாடு அவர்களின் பாதுகாப்பே முக்கியம் தூத்துக்குடி மக்கள் நலனை இந்தியா கவனித்து கொள்ளும்😥

அதென்னவோ 101 % உண்மை  தோழர் ..😢

Thoothukudi-massacre-protest-Jaffna-3-39

j1.png

IMG_5526.jpg

ஆனால் தமிழீழ சொந்தங்கள் தெளிவாக உள்ளார்கள் .. மகிழ்ச்சி..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.