Jump to content

விக்கி தலைமையிலான மாற்று அணி படுபாதகமானது!


Recommended Posts

விக்கி தலைமையிலான மாற்று அணி படுபாதகமானது!

 

 

[Tuesday 2020-01-21 08:00]

மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

 

 

 

 

 

 

மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

  
 

கூட்டமைப்புக்குள் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமுகமாக பேசித்தீர்த்து வருகின்றோம். தேர்தல் தொடர்பாகவும் சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. எதிலும் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை.

இதில் முதலாவது விடயம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் எவ்விதமான குழப்பமும் இல்லை. கடந்த இரண்டு மூன்று கூட்டங்களில் எல்லாவற்றையும் சுமுகமாகப் பேசி இணங்கியிருக்கிறோம்.எவருமே கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக சொன்னதும் கிடையாது.

கூட்டமைப்பு ஒழுங்காக எந்தவித குழப்பமும் இன்றி தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றது.இதற்கு முன்னர் மக்களிடம் இருந்து கிடைத்த ஆணையை விட சிறப்பான ஆணையை இம்முறை தேர்தலில் பெறுவோம்.

ஒற்றுமைக்கான அழைப்பொன்றை நாங்கள் விடுத்திருந்தோம்.ஆனால் அந்த ஒற்றுமைக்கான அழைப்பை அல்லது ஒற்றுமையை விரும்பாமல் ஏன் நிராகரிக்கின்றார்கள் என்றால் அதனை நிராகரிப்பவர்களே கூற வேண்டும்.நான் அவர்களிடம் விடுத்த அழைப்புக்கு பிரதான காரணம் தமிழ் தரப்புக்கள் ஒன்றாக பலமாக நிற்கவேண்டும்.தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அந்த ஒற்றுமை இருக்கவேண்டும் என்பதுதான்.

உண்மையில் ஒற்றுமை ஒன்று இருந்தால் தமிழ்தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்குள் பிரதானமாக இருக்கின்ற கட்சியோடு மற்றவர்கள் சேர்வதுதான். சாத்தியமானது. தமிழ்தேசிய கூட்டமைப்புதான் அந்த பிரதானமான கட்சி.அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களையும் அவர்கள் சொல்ல முடியாது.

எனவே அதில் வந்து சேருமாறு நான் அழைப்பு விடுத்தேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் கூட்டமைப்புக்குள் ஏற்கனவே இருந்தவர்கள்.எனவே அந்த கட்சிக்கு அவர்கள் திரும்பி வருவதில் எந்நவிதமான பிரச்சினைகளும்் இல்லை. ஆனால் அவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பிரிந்து போனவர்கள்.அந்தக்காரணங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தற்போது ஒவ்வொரு நொண்டிச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்று அணி எங்களுக்குத் தேவையில்லை. அது வரக்கூடாது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் தலைமையில் வந்தால் அது படுபாதகமானது. ஆனாலும் அது அவரின் வேலையாக இருக்கலாம்.அவர் உருவாக்க விரும்பினால் உருவாக்கட்டும்.ஆனால் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான்.கூட்டமைப்புக்கு அது தாக்கத்தை செலுத்தாது.ஆனால் மக்கள் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

https://www.seithy.com/breifNews.php?newsID=239481&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாம்.

விக்கி சதியில் எட்டடி பாய்ந்தால் அவரிடம் பயின்ற சுமந்திரன் சதியில் பதினாறடி பாயவேண்டும். பாய்கிறார். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் ?

திண்ணைக்குத் தான் அடி புடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தம்பி எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் ?

திண்ணைக்குத் தான் அடி புடி.

ப்ரோ,

அது அண்ணன் ப்ரோ😂

#சும்மா பகிடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

ப்ரோ,

அது அண்ணன் ப்ரோ😂

#சும்மா பகிடி

இறுதியில் போட்டி எதில் வந்து நிற்கிறது பார்த்தீர்களா ? SJV சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது .

கடவுள்தான் இனி எங்களை காப்பாற்ற  வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

இறுதியில் போட்டி எதில் வந்து நிற்கிறது பார்த்தீர்களா ? SJV சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது .

கடவுள்தான் இனி எங்களை காப்பாற்ற  வேண்டும்.

நோ டென்சன் கற்பிதன்,

போட்டி ஏதுமில்லை. சும்மா ஒரு சின்ன பகிடி அவ்வளவே. 

இவ்வளவு சீரியஸ்சான ஆளா நீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நோ டென்சன் கற்பிதன்,

போட்டி ஏதுமில்லை. சும்மா ஒரு சின்ன பகிடி அவ்வளவே. 

இவ்வளவு சீரியஸ்சான ஆளா நீங்கள்?

ஐயோ, 

நான் உங்களைக் கூறவில்லை. அரசியலை அரசியல்வாதிகளை கூறினேன்.😀

Link to comment
Share on other sites

14 hours ago, nunavilan said:

மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

விக்கியரின் கூட்டணி சுமந்திரன் போன்ற கயவர்களுக்கு செம அடி என்று விளங்குது.
அப்பிடி என்டா விக்கியரின் கூட்டணி வளர்வதில் தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

விக்கியரின் கூட்டணி சுமந்திரன் போன்ற கயவர்களுக்கு செம அடி என்று விளங்குது.
அப்பிடி என்டா விக்கியரின் கூட்டணி வளர்வதில் தவறில்லை.

உண்மை. சுமந்திரன் அலறினால்.... விக்யரின் கூட்டணியில்  விஷயம் இருக்குது என்று அர்த்தம்.

Link to comment
Share on other sites

2 hours ago, Rajesh said:

விக்கியரின் கூட்டணி சுமந்திரன் போன்ற கயவர்களுக்கு செம அடி என்று விளங்குது.
அப்பிடி என்டா விக்கியரின் கூட்டணி வளர்வதில் தவறில்லை.

 அணிகள் வளரட்டும் , கூட்டணிகள்  வளரட்டும்। எமக்கு அது பிரச்சினையே இல்லை। மக்கள் வளர்வார்களா ? மக்களுக்கு உரிமை கிடைக்குமா? அதுதான் இங்குள்ள பிரச்சினை। யார் குத்தியும் அரிசியாகினால் சரிதான்। இந்த எழுபது வருடமாக குத்துகிறார்கள்। இன்னும் நெல்லாகத்தான் இருக்குது। பாவம் தமிழன்।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.