Jump to content

ரெலோவில் இருந்து விலகுகிறார் விந்தன் – கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Vinthan-Kanagaratnam.jpg

ரெலோவில் இருந்து விலகுகிறார் விந்தன் – கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ரெலோ சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும், தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை வெற்றி வேட்பாளராக களமிறக்குவதாக அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று  உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்தே விந்தன் கனகரட்ணம் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து விலகுவதான அறிவிப்பை தலைமைக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு உத்தியோகபூர்மாக அறிவிக்கவுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் ரெலோ கட்சிக்கு வழங்கப்பட்ட ஆசன ஒதுக்கீட்டில் விந்தன் கனகரட்ணம் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டிருந்தார். எனினும் அந்தக் கட்சியின் செயற்குழு அதற்கு அனுமதியளிக்கவில்லை.

இந்நிலையில், ரெலோவிலிருந்து விலகி விந்தன் கனகரட்ணம், வேறு கட்சியில் இணைவது தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக எந்தத் தீர்மானத்தையும் தான் எடுக்கவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ரெலோவில்-இருந்து-விலகுகி/

Link to comment
Share on other sites

மீண்டும் உடையும் ரெலோ!- வெளியேறுகிறார் விந்தன்

 

 

[Wednesday 2020-01-22 08:00]

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் இன்று வெளியிடவுள்ளார்.

 

 

 

 

 

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் இன்று வெளியிடவுள்ளார்.

 

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூலமாக கட்சியின் தேசிய அமைப்பாளரும், தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை வெற்றி வேட்பாளராக களமிறக்குவதாக அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அதனையடுத்தே விந்தன் கனகரட்ணம் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து விலகுவதான அறிவிப்பை தலைமைக்குத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்குஇன்று உத்தியோகபூர்மாக அறிவிக்க உள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

எனினும் ரெலோவிலிருந்து விலகி விந்தன் கனகரட்ணம், வேறு கட்சியில் இணைவது தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்தவிட்டார். அதுதொடர்பில் எந்தத் தீர்மானத்தையும் தான் எடுக்கவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கட்சியின் மூத்த உறுப்பினர்களான என்.ஸ்ரீகாந்தா மற்றும் எம்.கே சிவாஜிலிங்கம் விலகி புதுக்கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது விந்தன் கனகரட்ணத்தின் வெளியேற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.seithy.com/breifNews.php?newsID=239552&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

வேறு கட்சியில் இணைவது தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

வேற யார் சேர்த்துக்கொள்ள போக்கினம்?
புதுசா ஒரு கட்சியை தொடங்கலாம்.

Link to comment
Share on other sites

16 hours ago, Gowin said:

வேற யார் சேர்த்துக்கொள்ள போக்கினம்?
புதுசா ஒரு கட்சியை தொடங்கலாம்.

நீதியரசர் விக்கி ஐயாவுடன் இணையலாமே? இல்லாவிட்டால் கஜேந்திரன் ஐயாவுடன் இணையலாம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Vankalayan said:

நீதியரசர் விக்கி ஐயாவுடன் இணையலாமே? இல்லாவிட்டால் கஜேந்திரன் ஐயாவுடன் இணையலாம்।

அதுக்கு... அவர்கள், சம்மதிக்க வேணுமே.......... :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

அதுக்கு... அவர்கள், சம்மதிக்க வேணுமே.......... :grin:

 சம்மதிப்பார்கள் எண்டு எதிர்பார்க்கலாம்। தேர்தல் காலத்தில் கட்சிமாற்றி ஆதரவைப்பெறுவதட்கு  முயட்சிப்பார்கள்। என்ன இருந்தாலும் விந்தனுக்கு ஒரு வாக்கு வங்கி இருக்கத்தானே செய்யும்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.