Jump to content

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Pillaiyan-Case.jpg

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலல் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (புதன்கிழமை) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதி இஸ்ஸடீன் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பெப்ரவரி 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக, சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் எனும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் முன்னாள் இராணுவச் சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pillaiyan-Case-2.jpg

http://athavannews.com/பிள்ளையானின்-விளக்கமறி-2/

Link to comment
Share on other sites

ரஞ்சன் ராமநாயகே இந்த வழக்கில் தலையிட்டிருப்பர் எண்டு நான் நினைக்கவில்லை। இருந்தாலும் இந்த அரசு பொதுத்தேர்தலின் பின்னர் பிணை வழங்கும் என எதிர்பார்க்கலாம்।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.