Jump to content

பொதுத் தேர்தலில் சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்க TELO தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தலில் சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்க TELO தீர்மானம்

 

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது.

TELO சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைமைக்குழு உறுப்பினருமான சுரேன் என்றழைக்கப்படுகின்ற சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்ததாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று அறிவித்துள்ளார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ரெலோவிற்காக ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவருக்கு வழங்குவதற்குத் தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டவரும் சிறந்த கல்வியலாளருமான சுரேந்திரன் குருசுவாமிக்கு அந்த ஆசனத்தை ஒதுக்குவதன் மூலம் நிர்வாகத் திறனும் மும்மொழித் தேர்ச்சியும் ஆளுமையும் மிக்க ஒருவரை தமது கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியும் என செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானத்தின் மூலம் கட்சி, யாழ். மாவட்டத்தில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற முடியும் எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.newsfirst.lk/tamil/2020/01/22/பொதுத்-தேர்தலில்-சுரேந்த/

Link to comment
Share on other sites

இது  நல்லது , இந்த முறையாவது ஒரு படித்த பண்புள்ளவரை டெலோ களமிறங்குகிறது।  இருந்தாலும் அடைக்கலம் போன்ற ஆயுதக்குளுக்கள் படித்தவர்களுக்கு இடமளித்துவிட்டு வெளியேறுவது நல்லது। எதனை காலத்துக்கு இவர்கள் கதிரையை சூடக்கப்போகிறார்கள்।

சிங்களம் தெரியாது, ஆங்கிலம் தெரியாது , ஒரு அபிவிருத்தி சமபந்தமாக வெளிநாட்டில் இருந்து யாரவது வந்தால், இனப்பிரச்சினை சமபந்தமாக யாருடனாவது பேசுவதாக இருந்தால் ஒரு ஒழுங்கான மொழியும் தெரியாது। தமிழனின் தலை எழுத்து।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

இது  நல்லது , இந்த முறையாவது ஒரு படித்த பண்புள்ளவரை டெலோ களமிறங்குகிறது।  இருந்தாலும் அடைக்கலம் போன்ற ஆயுதக்குளுக்கள் படித்தவர்களுக்கு இடமளித்துவிட்டு வெளியேறுவது நல்லது। எதனை காலத்துக்கு இவர்கள் கதிரையை சூடக்கப்போகிறார்கள்।

சிங்களம் தெரியாது, ஆங்கிலம் தெரியாது , ஒரு அபிவிருத்தி சமபந்தமாக வெளிநாட்டில் இருந்து யாரவது வந்தால், இனப்பிரச்சினை சமபந்தமாக யாருடனாவது பேசுவதாக இருந்தால் ஒரு ஒழுங்கான மொழியும் தெரியாது। தமிழனின் தலை எழுத்து।

செல்வம் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித்தலைவர் பதவியில் இருக்கிறார். சபாநாயகர், பிரதி சபாநாயகர் இல்லாதவிடத்து அவரே சபையை நடத்துவார். நேற்று ரஞ்சன் ராமநாயக்க பேசும் போது சபை செல்வத்தின் தலைமையில் நடந்தது. சபையை அவர் சிங்கள மொழியிலேயே நடத்தினார்.

Link to comment
Share on other sites

Just now, goshan_che said:

செல்வம் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித்தலைவர் பதவியில் இருக்கிறார். சபாநாயகர், பிரதி சபாநாயகர் இல்லாதவிடத்து அவரே சபையை நடத்துவார். நேற்று ரஞ்சன் ராமநாயக்க பேசும் போது சபை செல்வத்தின் தலைமையில் நடந்தது. சபையை அவர் சிங்கள மொழியிலேயே நடத்தினார்.

அவரது சிங்களத்தை கேட்டிருந்தால் உங்களுக்கு விளங்கி இருக்கும் அவர் சிங்களம் கதைக்கிறாரா இல்லை வேறு ஏதும் மொழி பேசுகிறாரா என்று।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Vankalayan said:

அவரது சிங்களத்தை கேட்டிருந்தால் உங்களுக்கு விளங்கி இருக்கும் அவர் சிங்களம் கதைக்கிறாரா இல்லை வேறு ஏதும் மொழி பேசுகிறாரா என்று।

நான் கேட்ட அளவில் அவர் உச்சரிப்புத்தான் தமிழ்-தனமாக இருந்ததே ஒழிய மொழிநடையில் பிழையேதும் இல்லை.

தவிரவும் ஒரு முன்னாள் போராளி, இந்தளவுக்காவது முயற்சிக்கிறாரே?

எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல, நெஞ்சுரமும், பிரட்சினை பற்றிய தெளிவான புரிதலுமே போதும். மொழியை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் போதும்.

பிரபாவும் தமிழ்செல்வனும் எடுத்து சொல்லாததையா நன்கு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் சம்பந்தனும், சுமந்துரனும் விக்கியும் கூறி விட்டார்கள்?

குருசாமியை படித்தவர் என வரவேற்கும் நீங்கள், அந்த படித்தவரை நியமிக்கும், நீங்கள் ஆதரிக்கும் நல்ல முடிவை, எடுத்தது செல்வம் என்ற படிக்காத முன்னாள் ஆயுததாரி என்பதை மறுக்க முடியுமா?

செல்வத்தின் மீதோ அவரின் அரசியல் மீதோ எனக்கு துளியூண்டும் நம்பிக்கை இல்லை.

ஆனால் இதற்கும் படிப்புக்கும் மொழி ஆற்றலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

 

Link to comment
Share on other sites

17 hours ago, goshan_che said:

நான் கேட்ட அளவில் அவர் உச்சரிப்புத்தான் தமிழ்-தனமாக இருந்ததே ஒழிய மொழிநடையில் பிழையேதும் இல்லை.

தவிரவும் ஒரு முன்னாள் போராளி, இந்தளவுக்காவது முயற்சிக்கிறாரே?

எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல, நெஞ்சுரமும், பிரட்சினை பற்றிய தெளிவான புரிதலுமே போதும். மொழியை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் போதும்.

பிரபாவும் தமிழ்செல்வனும் எடுத்து சொல்லாததையா நன்கு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் சம்பந்தனும், சுமந்துரனும் விக்கியும் கூறி விட்டார்கள்?

குருசாமியை படித்தவர் என வரவேற்கும் நீங்கள், அந்த படித்தவரை நியமிக்கும், நீங்கள் ஆதரிக்கும் நல்ல முடிவை, எடுத்தது செல்வம் என்ற படிக்காத முன்னாள் ஆயுததாரி என்பதை மறுக்க முடியுமா?

செல்வத்தின் மீதோ அவரின் அரசியல் மீதோ எனக்கு துளியூண்டும் நம்பிக்கை இல்லை.

ஆனால் இதற்கும் படிப்புக்கும் மொழி ஆற்றலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

 

செல்வம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு என்ன செய்தார்। அதட்காக மற்றவர்கள் எல்லாம் கிழித்தார்கள் எண்டு சொல்லவில்லை।  அவரது தொழில்என்ன தெரியுமா? நான் அதை எழுத விரும்பவில்லை । இதுக்குத்தானா ஆயுதம் தூக்கினார்கள்।

வன்னியில் இருந்து படித்தவர்களை போட்டியிட வாய்ப்பை கொடுக்கவில்லை। இப்போது தெரிவாகி இருப்பவர் படித்தவர் என்று நான் சொல்லவில்லை। செல்வம் சொன்னதைத்தான் நான் எழுதினேன்। படித்தவரா , முடடாளா எண்டு பிறகுதான் தெரியவரும்।

உங்களுக்கு அவருடைய சிங்களம் நன்றாக இருந்தால் அது நல்லது। நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை।

மன்னரை அபிவிருத்தி செய்த மன்னரை சேர்ந்த ஒரு முன்னாள் அரச அதிபரை TNA தனது கட்சி  சார்பாக போட்டியிட கேட்ட்து। இதை அறிந்த செல்வம் அவரிடம் ஓடிப்போய் ஐயா நீங்கள் மட்டும் கேட்க வேண்டாம் , அப்படி கேடடாள் தனக்கு இடம் இல்லாமல் பொய் விடும் எண்டு சொன்னவர்தான் இவர்।

இருந்தாலும் அந்த அதிகாரி நல்ல ஒரு உயர்ந்த பதவியில் இருப்பதால் இந்த அரசியில் சாக்கடையில் விழ சம்மதிக்கவில்லை।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.