Jump to content

சரணடைந்தவர்களே பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டனர்!


Recommended Posts

gota-colombo-telegraph-720x480-1.jpg

விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மேலும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உரிய உதவிகளை வழங்கமுடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது  தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/war-missing-claimed-dead/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித் திமிராக் கதைக்கும் கோட்டாவை எதிர்கொள்வதற்கு சுயநலமற்ற தமிழ் தலைமையை ஈழத்திலுள்ள புலத்திலுள்ள தமிழர்களெல்லாம் ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்குரிய முயற்சியாகவே வேரோரு திரியில் ஒரு healthy debate ஐ பற்றிய கருத்தை வைத்தேன் பலர் வந்து கருத்து வைத்தார்கள் ஆனால் நான் எதிர்பார்த்தது போல் எல்லோரின் பங்களிப்பும் இல்லை 

ஒரு நண்பர் கருணாவைத் தெரிவு செய்திருந்தார். ஒரு வகையில் அது சரியாக்கூட இருக்கலாம். இப்படியான ஆனாதரவாக இருக்கும் நேரத்தில் தமிழர்கள் எதிரிகளை கூட்டாமல் நண்பர்களை அதிகரித்து கோட்டா மகிந்த கும்பலை வெல்ல ஒரு வழியமைப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முரளிதரன்  கோத்தாவின் கைபொம்மையே.  தமிழரின் வாக்கு வாங்கி அதன்மூலம் கோத்தபாயவே   தமிழரின்  ரட்ஷகர் என்று சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்து எஜமானை சர்வதேச போர்குற்றத்திலிருந்து விடுவிக்க  இந்த கரெட்டி ஓணானும்,  தமிழரின் தலைவர்கள்  என்று  காட்டிக்கொடுத்த கூட்டத்தை சர்வதேசத்துக்கு காட்டி சந்திப்புகளை ஏற்படுத்தி தனக்கு சான்றிதழ் பெற சிங்களமும்  காத்திருக்குது. சிங்களத்தின் காவலில், தடுப்பில் இருந்து கொலை செய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆதாரங்களையும், உறவினர்களால் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆதாரங்களையும் திரட்டி சர்வதேசத்துக்கு அனுப்பி, இந்த கோத்தபாய ஒரு பொய்யன் என நிருபிக்க ஆவன செய்ய வேண்டும்.  ராஜதந்திரிகள் என பிதற்றுபவர்கள் இதைக்கூட செய்யல எண்டா இவர்கள் என்னதான் செய்து தமிழ்த் தலைவர்கள் என்று பேரம் பேசப்போகினம்?

Link to comment
Share on other sites

9 hours ago, satan said:

தமிழரின் தலைவர்கள்  என்று  காட்டிக்கொடுத்த கூட்டத்தை சர்வதேசத்துக்கு காட்டி சந்திப்புகளை ஏற்படுத்தி தனக்கு சான்றிதழ் பெற சிங்களமும்  காத்திருக்குது.

அதுக்கு சுமந்திரன், மாவை, ... இப்பிடி ஒரு கூட்டம் அண்டா குண்டாகளோட ரெடியா இருக்கீனம்.

Link to comment
Share on other sites

சரணடைந்தவர்களே பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டனர்!

 

 

[Wednesday 2020-01-22 08:00]

இறுதிப்போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே இதை தெரிவித்தார்.

இறுதிப்போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே இதை தெரிவித்தார்.

   
 

போரின் இறுதி கட்டங்களில் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் இராணுவத்திடம் சரணடைந்தனர். எனவே பொறுப்புக்கூறலையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும். மேலும் இறுதிப் போரின்போது பலர் இராணுவத்தில் சரணடைந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விவகாரங்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் முறையான தீர்வொன்று கிடைக்கப்படாவிட்டால், உலகில் நிராகரிக்கப்பட்ட இனமான தமிழினம் மாற்றமடையும் என்றும் அவர் கூறினார்.

https://www.seithy.com/breifNews.php?newsID=239551&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people sitting

ஆம்  கெளரவ ஜனாதிபதி அவர்களே! 
அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்ததுபோல் எங்களுக்கும் தெரியும் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்றுதான் கேட்கிறோம். அது உங்களுக்கு மாத்திரம்தான் தெரியும்

அவர்களை சுட்டுக்கொன்றீர்களா? இல்லை வெட்டிப்புதைத்தீர்களா? சுறாவுக்கு தீனியாக போட்டீர்களா? இதற்கு பதில் சொன்னால் போதும் காணாமல் போனோரை நாம் இனி தேடமாட்டோம்...

சுப்ரமணிய பிரபா

Link to comment
Share on other sites

On 1/20/2020 at 6:55 PM, Gowin said:

அதுக்கு சுமந்திரன், மாவை, ... இப்பிடி ஒரு கூட்டம் அண்டா குண்டாகளோட ரெடியா இருக்கீனம்.

அப்படியே விக்கி, சுரேஷ், கஜேந்திரன் , அனந்தி, சிவசக்தி, செல்வம்   இன்னும் அடுக்கலாம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஆம்  கெளரவ ஜனாதிபதி அவர்களே! 
அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்ததுபோல் எங்களுக்கும் தெரியும்

:rolleyes:

காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை தமக்கு காட்டும்படி, ஒப்படைக்கும் படி அல்லவா காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் தெரிவித்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

:rolleyes:

காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை தமக்கு காட்டும்படி, ஒப்படைக்கும் படி அல்லவா காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் தெரிவித்தனர்.

நீங்கள் சொல்வது,  உண்மையாக இருக்க வேண்டும் என்றே நானும் விரும்புகின்றேன்.
அப்படி அவர்கள் இன்னும்..  இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால்,

எதிர்க் கட்சி தலைவராக இருந்த  சம்பந்தன், சுமந்திரன் போன்றோர்...
மைத்திரி, ரணிலுடன்... ஒட்டி உறவாடிய போது,
சாமர்த்தியமாக அவர்களை, வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும்.

அந்த புத்திசாலித் தனமும்.. கூட்டமைக்கு இல்லாமல் போனது...
தமிழ் மக்களின் தலைவிதி என்றே கூற வேண்டும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னது சரி

On 1/24/2020 at 5:18 AM, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்வது,  உண்மையாக இருக்க வேண்டும் என்றே நானும் விரும்புகின்றேன்.
அப்படி அவர்கள் இன்னும்..  இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால்,

எதிர்க் கட்சி தலைவராக இருந்த  சம்பந்தன், சுமந்திரன் போன்றோர்...
மைத்திரி, ரணிலுடன்... ஒட்டி உறவாடிய போது,
சாமர்த்தியமாக அவர்களை, வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும்.

அந்த புத்திசாலித் தனமும்.. கூட்டமைக்கு இல்லாமல் போனது...
தமிழ் மக்களின் தலைவிதி என்றே கூற வேண்டும்.   


ஆனால் சுப்ரமணிய பிரபா என்பவர் மிகவும் இலகுவாக அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் எங்களுக்கும் தெரியும் என்றது காணாமல் போனவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு எதிரானது.

Link to comment
Share on other sites

On 1/20/2020 at 6:55 PM, Gowin said:

அதுக்கு சுமந்திரன், மாவை, ... இப்பிடி ஒரு கூட்டம் அண்டா குண்டாகளோட ரெடியா இருக்கீனம்.

இதுல முக்கியமா சம்பந்தன், செல்வம் பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு சின்னத்தில கேட்டு பாராளுமன்றம் போய் சம்பந்தன் சாதிச்ச ஒரு விஷயம் தனக்கு கொழும்புல ஒரு வீட்டை பெற்றுக்கொண்டது தான்.

Link to comment
Share on other sites

On 1/24/2020 at 9:48 AM, தமிழ் சிறி said:

எதிர்க் கட்சி தலைவராக இருந்த  சம்பந்தன், சுமந்திரன் போன்றோர்...
மைத்திரி, ரணிலுடன்... ஒட்டி உறவாடிய போது,
சாமர்த்தியமாக அவர்களை, வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும்.

அந்த புத்திசாலித் தனமும்.. கூட்டமைக்கு இல்லாமல் போனது...
தமிழ் மக்களின் தலைவிதி என்றே கூற வேண்டும்.   

அப்பிடி சிங்களத்துக்கு ஒத்து ஊதினத்துக்கு பரிசா சம்பந்தனுக்கு ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.