Jump to content

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா – பிரதி சபாநாயகர் அறிவிப்பு


Recommended Posts

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா – பிரதி சபாநாயகர் அறிவிப்பு

Jayampathy-Vigramaranta.jpg

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜயம்பதி விக்ரமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார் என, பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) அறிவித்தார். குறித்த கடிதத்தினை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் சமர்ப்பித்தார்.

ஜனவரி 20, 2020 முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு செயலாளர் நாயகம் உள்ளிட்ட நாடாளுமன்ற பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் ஜயம்பதி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் ஊடாக அவர் நாடாளுமன்ற உறுப்பினரான தெரிவு தெரியப்பட்டிருந்தார்.

ஜயம்பதி விக்ரமரத்ன, சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை, உள்ளக நிருவாகம், அரச முகாமைத்துவம், நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://athavannews.com/jayampathy-wickramaratne-has-tendered-his-resignation-as-a-member-of-parliament/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.