Jump to content

இன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்


Recommended Posts

இன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்!

ranjan-ramanayke1.jpg

நாடாளுமன்றில் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக தன்னிடம் இருக்கும் பல குரல் பதிவுகளை சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரச தலைவர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், அமைச்சர்களின் குடும்ப உறவுகள் என அனைவரின் குரல் பதிவுகளும் உள்ளன என ரஞ்சன் ராமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு அவற்றினை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதாகவும் குரல் பதிவுகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் அவற்றினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு காஞ்சனா விஜயசேகர தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இந்த குரல்பதிவுகள் அடங்கிய இறுவெட்டு மற்றும் வன் தட்டு ஒரு குறிப்பிட்ட வங்கியில் பாதுகாப்பு லொக்கரில் இருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

http://athavannews.com/இன்று-முக்கிய-குரல்பதிவு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இவரது பாராளுமன்ற உரையை கேட்டவை பலர் இவர் நல்லவர் என்று சொல்லினம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

நேற்று இவரது பாராளுமன்ற உரையை கேட்டவை பலர் இவர் நல்லவர் என்று சொல்லினம் 🤣

ஏன் மொட்டை அடிச்சவராம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஏன் மொட்டை அடிச்சவராம்?

ஜெயிலுக்குள்ள வைச்சு மொட்டை அடிச்சிட்டாங்கள் போல இருக்கு ...அங்கே இருந்து தான் வந்தவர் 

மருதரின்ட ஹிருனிகாவின்ட  குரல் பதிவும் இருக்குதாம்😂

Link to comment
Share on other sites

இன்னும் குரல் பதிவுகள் வெளியிடவில்லை। இரண்டு நாட்கள் வெளியில் விடடால் எல்லாவற்றையும் சமர்ப்பிப்பதாக கூறி இருக்கிறார்। இன்று அவரின் குரல் பதிவு சோதனை நடைபெற இருக்கிறது। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலி பதிவுகளை வைத்து என்ன செய்வது அட போங்கப்பா..  😄

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒலி பதிவுகளை வைத்து என்ன செய்வது அட போங்கப்பா..  😄

<ரஞ்சன் ராமநாயக்க>இந்த நொடியில் என் மனதில்…(22/01/20)

மதுபானசாலை பர்மிட் உள்ள 100 எம்பீக்கள் பற்றி சொன்னார். போதை தூள் வியாபாரம் செய்யும் 2 எம்பீக்களை பற்றி சொன்னார். எதனோல் இறக்குமதி செய்யும் 4 எம்பீக்களை பற்றி சொன்னார். மணல் பர்மிட் உள்ள 75 எம்பீக்களை பற்றி சொன்னார். சூது வியாபாரம் செய்யும் 1 எம்பீயை பற்றி சொன்னார். கொகெயின் புகைக்கும் எம்பீகளை பற்றியும் சொன்னார்.

பிரதமர் மகிந்தவுடன் நடத்திய உரையாடல்களை பற்றி சொன்னார். மகிந்தவுடன் நடத்திய மொத்தம் ஏழு உரையாடல்கள் இருப்பதாக சொன்னார்.

ஷாருக்கானை நோக்கி வீசப்பட்ட குண்டின் பின் யார் இருக்கிறார்கள் என எம்பி உதய கம்மன்பிலவிடம் கேட்கும்படி சொன்னார்.

கிரிகட் போட்டி முடிவுகளை நிர்ணயம் செய்கிறார் என எம்பி திலங்க சுமதிபாலவை பற்றி சொன்னார்.

பிரதமர் யோகம் கிடைக்கும் என்று ஜோசியர் சொன்னதால், தன்னை விவாகரத்து செய்து விட்டு, இன்னொரு அமைச்சரின் மனைவியை கல்யாணம் செய்த ஒரு அமைச்சரை பற்றி, அவரது முன்னாள் மனைவி சொன்னதை சொன்னார். இன்னமும் பல அமைச்சர்களின் மனைவிகள் பேசிய உரையாடல்களை பற்றி சொன்னார்.

அர்ஜுனா அலோசியசின் பென்த்ஹவுஸின் (Penthouse Apartment) கதவை தட்டிய போது திறந்த பெண்மணி யாருடைய மனைவி என சொன்னார்.

பிணைமுறி வழக்கின் பிரதான சந்தேக நபர் தனக்கு லஞ்சம் வழங்க பேசிய உரையாடல் பற்றி சொன்னார்.

இன்னமும் பல கேலோலி, காணொளி ஆதாரங்கள், உள்நாட்டு, வெள்நாட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் இருப்பதாகவும் சொன்னார்.

தன் மாமா விஜய குமாரதுங்கவை போல் தன்னையும் கொலை செய்தால், அந்த ஆதாரங்கள் உடன் வெளிவரும் வண்ணம், தான் ஏற்பாடு செய்து இருப்பதாகவும் ஒரு அதிர்ச்சி குண்டை அவர் சபையில் வீசினார்.

'எனது ஒலிநாடாக்களில் வெளியாகியுள்ள விடயங்களை பற்றி ஆராய ஒரு ஆணைக்குழு நியமியுங்கள். அனைத்து ஆதாரங்களையும் அள்ளி வழங்குகிறேன். ஆணைக்குழு நியமிக்க முடியுமா?' என ஜனாதிபதி, பிரதமர் இருவரை விளித்து ஒரு சவாலையும் ரஞ்சன் விடுத்தார்.

அவரது கைபேசியில் நிரந்தரமாக 'Recording App' ஐ 'On' செய்து வைக்க வேண்டிய தேவை இருந்ததால், தனிப்பட்ட உரையாடல்களும் பதிவாகி விட்டன என்று என்னிடம் சொன்னார். அதற்காக அவர் பொது மன்னிப்பும் கேட்டுகொண்டார்.

இனி அவரது தனிப்பட்ட உரையாடல்களை பற்றி எவரும் பெரிதும் அலட்டிக்கொள்ள போவதில்லை.

ஆனால், அவருடன் உரையாடிய, இன்றைய அரசின் பல, அன்றைய அரசின் ஒருசில, "பெரீய" மனிதர்கள் தான் ஆடிப்போயுள்ளனர்.

ரஞ்சன் என்ற பூதத்தை “ஜீபூம்பா” என மந்திரம் போட்டு ஜாடியிலிருந்து வெளியில் எடுத்தோர், இப்போது அதை மீண்டும் எப்படி ஜாடிக்குள் போடுவது என்ற மந்திரத்தை மறந்து தடுமாறுகின்றனர்.

பூதத்தையும் போட முடியாது. அவரையும் போட முடியாது. இதுதான் சிக்கல்.

ரஞ்சன் உண்மையை பேசி சுய விளக்கம் அளித்தார். தனக்கு சொந்த வீடு கூட இல்லை. தான் நினைத்திருந்தால், ரகசியங்களை விலை பேசி விற்றிருக்கலாம். அதை செய்யவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கத்திலேயே எப்போதும் இருந்தேன் என்றார்.

ரஞ்சன் பேசி முடித்த பிறகு, என்னிடம் வந்து, ‘சிறு குற்றம்’ ஒன்றை செய்ததால், இன்று தன்னுடன் சிறையில் இருக்கும், கொழும்பை சேர்ந்த நானறிந்த ஒரு நபரை பற்றி சொன்னார். அந்த கைதியின் குடும்பத்துக்கு உதவி செய்யும்படி அவர் என்னிடம் கூற சொன்னதாக, ரஞ்சன் என்னிடம் சொன்னார்.

“நானறிய இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இந்தளவு வெளிப்படுத்தல் (Revelation) உரையை நான் கேட்டதில்லை. நானும் 2001ம் ஆண்டு முதல் 15 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறேன். நீ அடையாளம் காட்டிய மதுசாலை பர்மிட், போதை தூள், மணல் பர்மிட், எதனோல், சூது, கொகெயின் என்ற எந்தவொரு பாவச்செயலையும் செய்யாத அனைத்து கட்சிகளையும் சார்ந்த ஒரு சில எம்பிக்களின் நானும் ஒருவன் என்பதில் நான் பெருமை அடைகிறேன்” என்று கூறி நான் நண்பன் ரஞ்சனின் கையை குலுக்கினேன்.

Image may contain: 2 people
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.