Jump to content

பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்கின்றேன்


Recommended Posts

பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்கின்றேன்

 

பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்கின்றேன்

 
 

 

குரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென்று பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் நேற்று (21) பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அவர் பாராளுமன்றத்தில் விசேட உரையை ஆற்றுவதற்கு முயற்சித்தார். அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஒழுங்குவிதிகள் முன்மொழிகள் மீதான விவாதத்தில் உரையாற்றினார்.

குரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென பிரதமர் கூறுகின்றார். இதனை வரவேற்கின்றேன். அந்த ஆணைக்குழுவுக்கு தேவையான கோப்புகளை வழங்குவேன். இது தொடர்பாக ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோருகிறேன் என்றும் அவர் குறிப்பிடார்.

குரல் பதிவுகள் வெளியிட்டு எவரது குடும்ப வாழ்க்கையை அல்லது எவரது அமைதியை சீர்குழைப்பதற்கு நான் இதனை செய்யவில்லை என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தனது பாதுகாப்பு கருதியே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததாக கூறினார்.

குரல் பதிவுகள் வெளியானது தொடர்பாக தன்னுடன் தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மிக முக்கியமான குரல் பதிவுகள் பல தன்னிடம் இருப்பதாகவும் அவற்றை ஹாட் டிஸ்களில் இட்டு நாட்டுக்கு வெளியே பாதுகாப்பு பெட்டகங்களில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நான் நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்துவதற்கு பல விடயங்கள் உள்ளன. என்னுடன் கதைத்தவர்கள் என கூறப்படும் உளவாளிகள், தகவல்களை வழங்குபவர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மதத் தலைவர்கள், நீதிபதிகள், நீதிமன்றதுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பாக மக்கள் கேட்டிருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

எனது தொலைபேசி, மடிக்கணனி மற்றும் தரவு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறி கடந்த 4 ஆம் திகதி பொலிஸார் எனது வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்றுள்ளனர். ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டம் தொடர்பான இந்த குரல் பதிவுகள் வெளியாகியுள்ள அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். நான் வேண்டுமென்றே இதனை செய்யவில்லை.

அத்துடன் என்னிடமிருக்கும் நாட்டுக்கு வெளிவராத , மறைக்கப்படும் உரையாடல் பதிவுகளையும் நான் சபையில் சமர்பிக்கின்றேன். என்னுடன் கதைத்த நீதிபதிகள், பிரதம நீதியரசர்கள், அரச தலைவர்கள் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன் அரசியல்வாதிகள், அவர்களின் மனைவிகள், பிள்ளைகளும் அதற்குள் அடங்குவர். இவர்களின் குரல் பதிவுகளையும் சபையில் சமர்பிக்கின்றேன். சொன்னதை இல்லையென்று கூறிபவர்கள் இருப்பதால் நான் அதற்கான ஆதரங்களை வைத்திருந்தேன். எனது கருத்துக்களுக்கு சாட்சி கேட்பதால் தேவையான சாட்சிகளை வைத்திருந்தேன். எனக்கு யாரிடமிருந்தும் நற்சான்று தேவையில்லை.

சில நீதிபதிகளுக்கு வழக்கு தீர்ப்புகளை வழங்குவதில் அச்சம் இருந்தது. சரத் அம்பேபிட்டியவுக்கு நடந்ததை போன்று தமக்கும் நடந்துவிடுமோ என அஞ்சினர். இதனால் இந்த விடயங்கள் தொடர்பாகவே கதைத்தோம்.

வேறு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை. நான் எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திலேயே இருந்து செயற்படுகின்றேன். செல்வந்தர்களின் பக்கம் இன்றி அப்பாவி மக்களின் பக்கமே இருந்து செயற்பட்டேன்.

நான் சுயாதீனமாக போட்டியிடுவேன். என்னை வீட்டுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை. சிறையில் இருந்தாலும் பரவாயில்லை. நீதியின் பக்கத்தில் உண்மையாக இருந்தவன் என்ற திருப்தியுடன் இருப்பேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.