Jump to content

காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் - புதிய பரிமாணம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

புதிய பரிமாணம் !

 

காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் புதிய பரி­மா­ணத்­துக்குள் பிர­வே­சித்திருக்­ கின்­றது. முடி­வின்றி தொடர்­கின்ற இந் தப் பிரச்­சி­னைக்குத் தீர்வுகாணப்­பட வேண்டும் என்­ப­தற்­கான போராட்­டங்கள் வருடக் கணக்­காகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. நிலை­மா­று­கால நீதியின் அடிப்­ப­டையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொறுப்புக் கூறு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட  காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­முறை செயல் வல்­லமை அற்ற நிலையில் தேங்கி நிற்­கின்­றது.

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் காணா மல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் புதிய பரி­ மா­ணத்­துக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்றது. காணாமல் போன­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு விட்டார்கள் என்று இப் போது அர­சாங்­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள் ளது.

ஐ.நா.வின் இலங்­கைக்­கான இணைப்­பாளர் அனா சிங்­க­ருக்கும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வுக்கும் இடை­யி­லான சந்­திப்­பின்­போது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர் கள் பற்­றிய விடயம் பற்றி குறிப்­பிட்ட ஜனா­தி­பதி, அவர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டனர் என கூறி­யி­ருந்தார். இதனை ஜனா­தி­பதி அலு­வ­லக செய்­திக்­கு­றிப்பு அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யிட்­டி­ருந்­தது.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான யுத்த மோதல்­க­ளின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர் கள் காணாமல் போயுள்­ளார்கள். இவர்கள் அரச தரப்­பி­னரால் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட குடும்­ பங்­களைச் சேர்ந்த­வர்­களும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் குற்றம் சுமத் தியுள்­ளன. இந்த வகையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்­கான பொறுப்புக்கூறும் விட­யத்தில்  இலங்­கையில் ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டமை என்­பது மிகவும் பார­தூ­ர­மான ஒரு விட­ய­மா­கவும் தீர்வு காணப்­ப­டாத ஒரு விட­ய­மா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது.

காணாமல் போன­வர்கள் பல்­வேறு சந்­ தர்ப்­பங்­களில், காணாமல் ஆக்­கப்­பட்­டார் கள். இதனை இந்த விவ­காரம் குறித்த விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட ஒன்­றுக்கும் மேற்­பட்ட ஆணைக்­கு­ழு­வி­ன­ரிடம் சாட்­சி­ய­ம­ளித்த பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த உற­வி­னர்கள் ஆதா­ரங்­க­ளுடன் தெரி­வித்­தி­ருந்­தனர்.

உயிர்த்­து­டிப்பு கொண்ட

எரியும் பிரச்­சினை

இந்த விவ­காரம் குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. காணாமல் ஆக்கப்­ பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் பொறு ப்புக்கூற வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை இந்த விடயம் தொடர்பில் பிரே­ர­ணை­களை நிறை­வேற்றி அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இந்த வகையில் இலங்­கையின் காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் ஓர் எரியும் பிரச்­சி­னை­யாக இன்னும் சர்­வ­தேச மட்­டத்தில் உயிர்த்­து­டிப்­புடன் தொடர்­கின்­றது.

பொறுப்புக் கூறு­வ­தற்­கான பொறிமுறை­ களை உரு­வாக்கி உரிய நட­வ­டிக்­கைகளை மேற்­கொண்டு நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்­டு­மாறு ஐ.நா.வின் பிரே­ர­ணைகள் இலங்கை அர­சாங்­கத்தைப் பல தட­வை­களில் கோரி­யுள்­ளன. இந்தக் கோரிக்கை தொடர்­பி­லான ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணை­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்கி அவற்றை தீர்­மா­னங்­க­ளாக நிறை­வேற்­று­வ­தற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது என்­பது பலரும் அறிந்த விடயம்.

பொறுப்புக் கூறு­வ­தற்­கான நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கு­ரிய பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் கடந்த அர­சாங்க காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.  குறிப்­பாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறு­வ­தற்­காக காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­மு­றையை உரு­வாக்கி அதற்­கான ஆள­ணி­களை நிய­மித்து மாகாண, மாவட்ட மட்­டங்­க­ளிலும் துணை அலு­வ­ல­கங்­களை அரசு உரு­வாக்கியிருந்­தது.

ஆனாலும் அந்த அலு­வ­ல­கத்­தினால் நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்த விசா­ர­ணைகள் எதிர்­பார்த்த வகையில் நடத்­தப்­ப­ட­வில்லை.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பா­ன பொறி­முறை உரு­வாக்­கத்தில் ஐ.நா. அறி­வித்­தி­ருந்­த­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­களின் பங்­க­ளிப்பு இல்­லா­ம­லேயே அதற்­கான அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டது. தன்­னிச்சைப் போக்­கி­லான இந்த நட­வ­டிக்­கையை பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் வன்­மை­யாகக் கண்­டித்­தி­ருந்­தன. அரசு உரு­வாக்­கி­யுள்ள அலு­வ­ல­கத்தில் நம்­பிக்கை யில்லை என தெரி­வித்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் ஆர்ப்­பாட்­டங்­களின் ஊடாகத் தமது எதிர்ப்பை  பல தட­வைகள் வெளி­யிட்­டி­ருந்­தனர்.  

ஆனால் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யிலும் அந்த அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டது. அந்த வகையில் யாழ்ப்­பா­ணத்தில் அமைந்த அலு­வ­ல­கத்தைத் திறந்து வைக்கும் நிகழ்­வுக்கு எதி­ரான எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை முறி­ய­டிக்கும் வகையில் அதி­காலைப் பொழுதில் பார்­வை­யா­ளர்கள், பங்­க­ாளர்­க­ளான காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­களின் பங்­க­ளிப்பின்றி இர­க­சி­ய­மாக அதி­கா­ரிகள் சென்று அதனை வைப­வ­ரீ­தி­யாகத் திறந்­து­விட்டு கத­வு­களைப் பூட்­டி­விட்டுச் சென்­றார்கள்.

அர்த்­த­மில்­லா­தது....

Mulaa.jpg

இத்­த­கைய திறப்பு விழா நிகழ்வைத் தொடர்ந்து யாழ். செய­ல­கத்தில் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளுக்கும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வு­க­ளுக்குமிடையில் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த சந்­திப்பில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தரப்பிலிருந்து கார­சா­ர­மான கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.  

அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் முன்­னைய விசா­ர­ணை­களைப் போலல்­லாமல் விரி­வான முறையில் நம்­பிக்­கைக்குரிய வகையில் விசா­ர­ணைகளை நடத்தும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட போதி லும் அத்­த­கைய செயற்­பா­டு­களை அதி­கா­ரி­க­ளினால் முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை.

மாறாக முன்­னைய ஆணைக்­கு­ழுக்­க ளைப் போலல்­லாமல் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உண்­மையில் என்ன நடந்­தது, அவர்கள் என்­ன­வா­னார்கள் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­களை நியா­ய­மா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் இந்த அலு­வ­லகம் நடத்தி ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு நீதி­யையும் நியா­யத்­தையும் இந்த அலு­வ­லகம் பெற்­றுத்­தரும் என்ற நம்­பிக்­கையை முதலில் ஏற்­ப­டுத்த வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு ஆளா­கி­யது.

இந்த நம்­பிக்­கை­யூட்டும் நட­வ­டிக்­கையை விழிப்­பு­ணர்வு செயற்­பாடு என்ற பெயரில் ஒரு பிர­சார நட­வ­டிக்­கை­யா­கவே அந்த அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரிகள் மாவட்­டந்­தோறும் மேற்­கொண்­டி­ருந்­தனர். ஆனால் அந்த நட­வ­டிக்­கைகள் வெற்­றி­பெ­று­வ­தற்குப் பதி­லாக அந்த அலு­வ­ல­கத்­துக்கு எதி­ரான எதிர்ப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­து­வ­தற்கே வழி வகுத்­தி­ருந்­தது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­ப­டு­கின்ற உண்­மைகள் வெளிப்­ப­டுத்­தப்­படமாட்டாது. அந்தத் தக­வல்கள் ஆட்­களைக் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரான நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளுக்குப் பயன்­ப­டுத்தப்பட­மாட்­டாது. விசா­ர­ணை­களின் மூலம் காணாமல் ஆக்­கப்­பட்ட ஒருவர் கண்­ட­றி­யப்­பட்டால், அவர் இருக்­கின்ற இடமும் வெளிப்­ப­டுத்தப்பட­மாட்­டாது. ஆனால் காணாமல் போயுள்­ள­வர்­க­ளுக்கு மரணச் சான்­றி­த­ழுடன், இழப்­பீட்டுக் கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். - இதுவே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­க­ளாக அமைந்­திருக்கும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் இத்­த­கைய செயற்­பா­டுகள் தங்­க­ளுக்குத் தேவையில்லை. தங்­க­ளுக்கு இழப்­பீட்டுக் கொடுப்­ப­ன­விலும் பார்க்க காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை யார் காணாமல் போகச் செய்­தார்கள் என்ற உண்மை நிலைமையைக் கண்­ட­றிந்து தெரி­விக்­க வேண்டும். அதற்குக் கார­ண­மா­ன­வர்கள், பொறுப்­பா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்தி, தங்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்­பதே தமது கோரிக்கை என்றே பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர். இதனால் ஐ.நா. பிரே­ர­ணைக்­க­மைய பொறுப்புக் கூறு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­முறை பாதிக்­கப்­பட்ட மக்­களின் கோரிக்­கையை நிறை­வேற்­றத்­தக்­க­தா­கவும் அவர்­க­ளுக்குப் பய­னற்­ற­தா­கவும் அமைந்­துள்­ளது.

இந்த நிலையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஐ.நா.வின் இலங்­கைக்­கான இணைப்­பாளர் ஹனா சிங்­க­ரிடம் தெரி­வித்­தி­ருப்­பது ஓர் அர்த்­த­மில்­லாத அர­சியல் ரீதி­யான கருத்­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

முக்­கி­யஸ்­தர்­களின் முக்­கி­ய­மான சந்­திப்பு

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று அரச தரப்பிலிருந்து முதன் முறை­யாக ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட கருத்தை சாதா­ர­ண­மா­ன­தாகக் கொள்ள முடி­யாது. ஏனெனில் இந்தக் கருத்து வெளி­யி­டப்­பட்ட சந்­தர்ப்­பமும், சந்­திப்பும் அதி முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை.

இந்த நாட்டின் அதி­யுயர் அதி­கா­ர­முள்ள தலை­வ­ரா­கிய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கும் ஐக்­கிய நாடுகள் மன்­றத்தின் இலங்­கைக்­கான இணைப்­பா­ள­ருக்குமிடையில் நடை­பெற்ற உயர் மட்டச் சந்­திப்­பாகும். இதில் கலந்து கொண்­ட­வர்கள் இரு­வ­ருமே இரு முனை­க­ளிலும் நிறு­வன ரீதி­யிலும் பதவி வழி­யிலும் முக்­கி­ய­மா­ன­வர்கள்.

அதே­போன்று பேசப்­பட்ட விட­யமும் அதிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அது அனைத்­து­லக அளவில் மனித உரி­மைகள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­டைய ஒரு விட­ய­மாகும். இந்த விடயம் குறித்து நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் தெரி­விக்­கப்­பட்ட கருத்தை சாதா­ர­ண­மாகக் கொள்ள முடி­யாது. அத்­துடன் அரச தலைவர் என்ற ரீதியில் பொறுப்­பு­மிக்க நிலையிலிருந்தே கருத்து வெளி­யிட வேண்டும். வெளிப்­பட்­டி­ருக்க வேண்டும்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று அந்த விட­யத்­துடன் சம்­பந்­தமும் தொடர்பும் இல்­லாத ஒருவர் கூறு­கின்ற சாதா­ரண கருத்­தாக அதனை வெளி­யிட முடி­யாது. அதே­நேரம் அர­சியல் ரீதி­யான பிர­சாரம் உள்­ளிட்ட வேறு கார­ணங்­க­ளுக்­காக வெளி­யி­டப்­ப­டு­கின்ற கருத்தைப் போன்று இந்த விட­யத்தில் கருத்­து­ரைக்க முடி­யாது.

ஏனெனில் ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு முன்னர் யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் அரச படை­களின் செயற்­பா­டு­க­ளுக்கு மூல­கர்த்தா என்ற நிலையில் மிகவும் பொறுப்­பான பத­வி­யொன்றை வகித்­தி­ருந்­தவர். அப்­போ­தைய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக அவர் பொறுப்­பேற்றுச் செயற்­பட்­டி­ருந்தார்.

பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என் றால் சாதா­ரண நிலையில் அவர் அந்தப் பத­வியில் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. மிகவும் அதி­கார பலத்­துடன் அதுவும் இரா­ணுவத் தள­ப­தியை மேவி யுத்தச் செயற்­பா­டு­களை நேர­டி­யாகக் கையாள்­கின்­ற­வ­ரா­கவும், யுத்­தத்தை வழி­ந­டத்­து­ப­வ­ரா­க­வுமே அவர் செயற்­பட்­டி­ருந்தார்.

தனது சகோ­த­ர­ரா­கிய நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்த ஜனா­தி­ப­தியின் வலது கர­மாக பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என்ற பத­வியில் - அந்த அந்­தஸ்தில் அதீத உரி­மை­க­ளையும் உரித்­துக்­க­ளையும் கொண்டு செயற்­பட்­டி­ருந்தார். இதன் கார­ண­மா­கவே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விவ­காரம் தொடர்பில் அவர் மீது பொறுப்­புக்கள் சுமத்­தப்­பட்டு குற்­றச்­சாட்­டுக்­க­ளும்­கூட முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

பொறுப்பு இரட்­டிப்­பா­னது

அர­சி­யல்­வாதி என்ற முன் அனு­ப­வமும் செயல்­வ­ழியும் இல்­லாமல் இத்­த­கைய பின்­பு­லத்தைக் கொண்டு ஆட்சி மாற்­றத்தின் மூலம் நேர­டி­யாக ஜனா­தி­ப­தி­யாகத் தேர்தல் மூல­மாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்டு விட்­டார்கள் என்று நாட்டின் ஜனா­தி­பதி தெரி­விப்­பதை உண்மை என்று ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதே­வேளை அந்தக் கருத்தை அர­சி­யல்­வாதி ஒரு­வரின் கருத்து என்று சாதா­ர­ண­மாகக்கொண்டு கடந்து சென்­று­வி­டவும் முடி­யாது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களில் கணி­ச­மா­ன­வர்கள் இறுதி யுத்­தத்­தின்­போது அர­சாங்­கத்தின் கோரிக்­கையை ஏற்று, தங்­க­ளுக்குப் பாது­காப்பும் பொது­மன்­னிப்பும் கிடைக்கும் என்ற உத்­த­ர­வாதத்தின் மீது நம்­பிக்கை வைத்து இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தார்கள். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது, அவர்கள் எங்கே வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்ற கேள்­விக்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய தட்­டிக்­க­ழிக்க முடி­யாத பொறுப்பு அர­சாங்­கத்­துக்குள்­ளது.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷவைப் பொறுத்­த­மட்டில் இது இரட்­டிப்புப் பொறு ப்­பா­னது. ஏற்­க­னவே யுத்­த­கா­லத்தில் காணாமல் போன­வர்கள் - குறிப்­பாக இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு உள்­ளது. போர்க்­காலச் செயற்­பா­டு­களில் நேர­டி­யாகப் பங்­கு­கொண்ட இப்­போ­தைய ஜனா­தி­பதி என்ற வகையில் அந்தப் பொறுப்பும் கடப்­பாடும் மிகவும் கன­தி­யா­னது.

ஐ.நா. அதி­கா­ரி­யு­ட­னான சந்­திப்­பின்­போது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் ஜனா­தி­பதி தெரி­வித்த கருத்­துக்­களை ஜனா­தி­பதி செய­லகம் அறிக்கை மூல­மாக வெளி­யிட்­டுள்­ளது.

அதன்­படி, இந்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் உண்­மை­யி­லேயே கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள். அவர்­களில் அநே­க­மானோர் எல்.­ரீ­.ரீ­.ஈ.யி­னரால் வலிந்து ஆட்­சேர்ப்பு செய்­யப்­பட்­ட­வர்கள். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் இதனை உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன. ஆயினும் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என தெரி­யாமல் அவர்­களை இந்தக் குடும்­பங்கள் காணாமல் போயுள்­ள­வர்கள் என கூறு­கின்­றார்கள். முறை­யான விசா­ர­ணை­களின் பின்னர் காணாமல் போயுள்­ள­வர்­க­ளுக்கு மரணச் சான்­றிதழ் வழங்­கவும், அதன் பின்னர் காணாமல் போயுள்­ள­வர்­களின் குடும்­பங்கள் வாழ்க்­கையைத் தொடர்ந்து நடத்­து­வ­தற்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விட­யத்­துக்­கான இந்தத் தீர்வு தங்­க­ளு­டைய அர­சியல் நிகழ்ச்சி நிரலைப் பாதித்­து­விடும் என்ற கார­ணத்­துக்­காக தமிழ் அர­சி­யல்­வா­திகள் இதனை நிரா­க­ரித்­துள்­ளார்கள் என்றும் ஜனா­தி­பதி இந்தச் சந்­திப்­பின்­போது குறிப்­பிட்­டுள்ளார்.  

தட்­டிக்­க­ழிக்க முற்­ப­டு­வது நல்­ல­தல்ல

ஆட்­களைக் காணா­ம­லாக்­கு­வது என்­பது சர்­வ­தேசக் குற்­றச்­செ­ய­லாகக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. சாதா­ரண நிலையில் சாதா­ர­ண­மா­ன­வர்கள் இந்தக் குற்றச் செயலைச் செய்ய முடி­யாது. இது பொது­வா­கவே நாடு­களில் பார­தூ­ர­மான குற்­றச்­செ­ய­லாகக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

எனவே, பொறுப்­பான பத­வி­களிலுள்­ள­வர்­க­ளி­னாலும், பொறுப்­பு­மிக்க கட­மை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளி­னாலும் ஆட்கள் காணாமல் ஆக்­கப்­ப­டு­வது என்­பது இன்னும் மோச­மான குற்றச் செய­லாகக் கரு­தப்­படும். அந்த வகையில் போர்க்­கா­லத்தில் இடம்­பெ­று­கின்ற ஆட்­களைக் காணாமல் ஆக்­கப்­ப­டு­கின்ற குற்றச் செய­லா­னது போர்க்­குற்றச் செய­லா­கவே சர்­வ­தேச மட்­டத்தில் கரு­தப்­ப­டு­கின்­றது.

அத்­த­கைய ஒரு பார­தூ­ர­மான விவ­கா­ரத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனைவரும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள். அதற்கு விடு­த­லைப்­பு­லி­களே பொறுப்பு எனக்கூறி கைக­ழுவி விட முடி­யாது.

இந்த விடயத்தை அரசாங்கம் மிகுந்த பொறுப்போடு கையாள வேண்டும். காணா மல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற உண்மை நிலையை நியாயமான நம்பிக்கைக்கு உரிய வகையில் கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக போர்முடிவின்போது பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக் கள் பார்த்திருக்க,  இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும், சரணடைந் தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டியது அர சாங்கத்தின் கட்டாயக் கடமையாகும்.

அதற்குரிய விசாரணைகளை நடத்து வதற்கு அரசாங்கம் தாமதமின்றி நடவ டிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண் டும். யுத்தத்தை முன்னின்று நடத்தி, அதனை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களே இப்போது அதிகாரத்தில் இருக்கின்றார்கள். குறிப்பாக நிறைவேற்று அதிகார பலத்தைக் கொண்டவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜ­பக் ஷ திகழ்கின்றார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந் ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர் கள் பற்றிய விவகாரம் படிப்படியாக மேலெழுந்தபோது அதற்கு முடிவு காண ப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தப் பொறுப்பிலிருந்து அப்போதைய அரசாங் கமும் ஆட்சியாளர்களும் தவறி விட்டார்கள்.  அவர்கள் பதவியிழந்து மீண்டும் மக்க ளால் தெரிவு செய்யப்பட்டவர்களாக அதி காரத்துக்கு வந்துள்ள நிலையில் முன்னர் தவறவிடப்பட்ட விடயத்துக்கு நியாயமா னதும் நீதியான முறையிலும் தீர்வுகாண வேண்டும்.

அதனைத் தட்டிக்கழிக்க முற்படுவது நல்லதல்ல. ஏனெனில் போர்க்குற்றச் செய ல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்து எந்தவேளையிலும் பற்றி எரியக் கூடும். அத்தகைய நிலைமை என்பது அனைவருக்கும் பாரதூரமான பாதிப்புக் களை ஏற்படுத்துவதாகவே இருக்கும். எனவே நிலைமைகளின் தீவிரத் தன் மையை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை ஆறுதல்படுத்தவும் தங்கள் மீது சூழ்ந்துள்ள பழிபாவங்களைத் துடைத் தெறிவதற்காகவும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதே முக்கியம்.

- பி. மாணிக்கவாசகம்

https://www.virakesari.lk/article/73803

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.