Jump to content

“ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் முட்டாள்களின் வாரிசுகள் ” - ட்ரம்ப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் முட்டாள்களின் வாரிசுகள் ” - ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள்  முட்டாள்களின் வாரிசுகள் ” என  காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா தன்பர்க்கை விமர்சித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் டாவோஸ் 2020 உலக பொருளாதார மாநாட்டில் ஐம்பதாவது கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், நம் வீடு (புவி) இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. நாங்கள் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்குத் தேவையான எந்த நடவடிக்கையும் உலக நாடுகள் செய்ததாகத் தெரியவில்லை. நாம் பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளவுள்ளோம்.

காலநிலை  மாற்றத்தை ஒரு முக்கியப் பிரச்னையாக நாம் கருதாதவரை இதற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்கப்போவதில்லை. இப்போது காலநிலையும்  சுற்றுச்சூழலுமே உலகின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. மரங்கள் நட்டால் மட்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு சரியாகாது. அதற்காக நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும். உலகத் தலைவர்கள், சுற்றுச்சூழலைக் காக்க நடவடிக்கை எடுப்பதாக வெற்று வார்த்தைகளையும் பொய்யான சத்தியங்களையும் மட்டுமே செய்து வருகின்றனர். இதுபற்றி குழந்தைகள் கவலைப்படவேண்டாம் எனக் கூறுகிறார்கள். ஆனால், இன்று சுற்றுச்சூழல் தொடர்பான இளைஞர்களின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதே டாவோஸ் 2020 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மாநாட்டில் மக்கள் கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்த கிரேட்டா தன்பெர்க்கையும் அவரது கருத்துகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

125.jpg

நிகழ்ச்சியில் பேசிய அவர், ``அழிவின் வற்றாத தீர்க்கதரிசிகள் கூறும் பேரழிவு பற்றிய கணிப்புகளை நாம் நிராகரிக்க வேண்டும். மக்கள் தொகையால் நெருக்கடி ஏற்படும், வெகுஜன மக்கள் பட்டினியால் வாடுவார்கள்; விரைவில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் எனப் பல அறிவியலாளர்கள் எச்சரித்தனர். ஆனால், அவர்களின் கணிப்பு அனைத்தும் முற்றிலும் தவறாகவே இருந்தது. நம் வீடு எரிந்துகொண்டிருப்பதாக கிரேட்டா தன்பெர்க் கூறும் எச்சரிக்கையைக் கேட்க எனக்கு நேரமில்லை. அளவுக்கு அதிகமான புவி வெப்ப மயமாதல் மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் நேற்றைய முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும்” எனப் பேசியுள்ளார்.

இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.
 

https://www.virakesari.lk/article/73806

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.