Jump to content

அரசாங்கம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய முயற்சிப்பது ஏன்? – லக்ஷமன் கேள்வி


Recommended Posts

அரசாங்கம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய முயற்சிப்பது ஏன்? – லக்ஷமன் கேள்வி

 

     by : Jeyachandran Vithushan

Lakshman-Kiriella.jpg

19 ஆவது திருத்தச்சட்டத்தை எந்த நோக்கத்திற்காக அரசாங்கம் இல்லாது செய்ய முற்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் 18 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முழுமையான அதிகாரம் கொண்ட ஒருவராகத்தான் இருந்தார்.

இதன் ஊடாக, அவர் நீதிமன்றங்களுக்குக் கூட அழுத்தம் பிரயோகிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இதனை இல்லாது செய்யும் நோக்கில்தான் நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தோம்.

அதில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன, சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் தொடர்பாக ஒரு நாள் முழுவதும் நாடாளுமன்றில் விவாதம் நடைபெற்றது. அனைவரின் ஒப்புதலுடன்தான் இது நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், தற்போது இதனை ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அதேநேரம், தங்களின் வேலைத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என அரசாங்கம் தற்போதுக் கூறிக்கொண்டிக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கவும், ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை.

எமது 100 நாள் அரசாங்கத்தின்போது நாம் பாரிய வேலைத்திட்டங்களை செய்திருந்தும், இந்த அரசாங்கம் இன்று தடுமாற்றத்துடன்தான் ஆட்சி செய்து வருகிறது” என்றார்.

http://athavannews.com/அரசாங்கம்-19-ஆவது-திருத்தச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19ஆம் திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு மூன்றில் இரண்டு  பெரும்பான்மையை ஜனாதிபதி கொண்டுவந்து அதை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றால்  சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அதிகார பரவலாக்கம் அல்லது சமஷ்டி போன்ற தீர்வுகளை நிறைவேற்றிகொள்ளவும் அதே இரண்டில் மூன்று பெரும்பான்மையை பயன்படுத்திகொள்ளமுடியும்தானே.

அல்லது 19 ஆம் திருத்த சட்டத்தை இல்லாதொழித்தபின் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்துவதன்மூலம் மேற்சொன்னவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும்தானே.

Link to comment
Share on other sites

4 hours ago, vanangaamudi said:

19ஆம் திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு மூன்றில் இரண்டு  பெரும்பான்மையை ஜனாதிபதி கொண்டுவந்து அதை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றால்  சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அதிகார பரவலாக்கம் அல்லது சமஷ்டி போன்ற தீர்வுகளை நிறைவேற்றிகொள்ளவும் அதே இரண்டில் மூன்று பெரும்பான்மையை பயன்படுத்திகொள்ளமுடியும்தானே.

அல்லது 19 ஆம் திருத்த சட்டத்தை இல்லாதொழித்தபின் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்துவதன்மூலம் மேற்சொன்னவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும்தானே.

இருந்தாலும் இப்போது இருக்கும் தேர்தல் நடைமுறையினால் 2 / 3 பெற்றுக்கொள்ளுவது மிகவும் கடினம்। சிங்களவர்கள் பெருவாரியாக வாக்களித்தாலும் இது முடியாது। எனவே அரசும் எதிர்க்கட்சியும் சேர்ந்து முதலில் தேர்தல் சடடத்தை மாற்ற வேண்டும்। அப்படி செய்தால் மலையக தமிழ் கட்சிகளையும், முஸ்லீம் கட்சிகளையும் அது பாதிக்கும்।

இனப்பிரச்சினையை  பொறுத்தவரையில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து தீர்க்கும்போதுதான் அது நிலையான தீர்வாகவும் , முழுமையான தீர்வாகவும் அமையும்। இல்லாவிட்டால் அரசிய இலாபத்துக்காக அதை பயன்படுத்துவார்கள்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.