Jump to content

நித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-720x447.jpg

நித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை கைதுசெய்வதற்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் (Blue Corner notice) வெளியிட்டுள்ளது.

சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், அவரைப் பிடிப்பதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்ரர்போலிடம் உதவி பெறும் வகையில் குஜராத் மாநில பொலிஸார் குற்றவியல் விசாரணைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதேசமயம், நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில்,  நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கோர்னர் நோட்டீஸ் வழங்கக் கோரி டெல்லி  சி.பி.ஐ. மற்றும் இன்ரர்போல் அலுவலகத்திற்கு குஜராத் மாநில பொலிஸார் கடிதம் எழுதியிருந்தனர்.

குறித்த கடிதங்களை ஏற்றுக்கொண்ட இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நித்தியானந்தாவை-கைதுசெய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

இன்ரர்போல் அளவுக்கெல்லாம் நா ஓர்த் இல்லடா .. வுடுங்கடா ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

‘கைலாச நாட்டின் அதிபர்’ நித்தியானந்தாவுக்கு இண்டர்போல் நீல அறிக்கை!

 

ஜனவரி 22, 2020

nithyananda-courtesy-website-compressed_ ‘கைலாச’ நாட்டின் அதிபர் ‘சுவாமி’ நித்தியானந்தா

பாலியல் மற்றும் வயதுகுறைந்தோரை ஆசிரமத்தில் தடுத்துவைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்தியாவிலிருந்து தப்பியோடிய ‘சுவாமி’ நித்தியானந்தா பற்றி மேலதிக விபரங்களைப் பெறும்பொருட்டு சர்வதேச காவற்துறை (இண்டர்போல்) ‘நீல அறிக்கை‘ (blue notice) பிறப்பித்துள்ளது.

Interpol-Blue-Notice.jpeg

ஒருவரது அடையாளம் நிரூபிக்கப்படவேண்டி இருப்பின், அல்லது அவர் பற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படின் அல்லது ஒருவர் காணாமற் போயின் அவரைத் தேடுவதற்காக அல்லது ஒரு அடையாளம் காணப்படாத சர்வதேச குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக, சர்வதேச காவற்துறை இந் நீல அறிக்கைகளை (விளக்கம் கோரும் அறிக்கைகள்) விடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் அவர் அடையாளம் காணப்பட்டால் அவரை சம்பந்தப்பட்ட நாட்டுக்குக் கொண்டுவர அக் காவற்துறை முயற்சி செய்யும்.

குஜராத் மற்றும் கர்நாடகா காவற்துறையினர் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினருக்கு (CBI) விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அது அப் பொறுப்பை இம்டர்போலிடம் கையளித்திருந்தது.

அடுத்த நடவடிக்கையாக, நித்தியானந்தாவைக் கைது செய்யும் பொருட்டு ‘சிவப்பு அறிக்கையை’ வெளியிடும்படி இண்டர்போலிடம் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவிருப்பதாக குஜராத், கர்நாடக காவற்துரையினர் தெரிவித்துள்ளனர்.

அஹ்மெதாபாதத்திலிருந்த நித்தியானந்தாவின் ஆச்சிரமத்திலிருந்து இரு பெண்கள் காணாமற்போனமை தொடர்பாக குஜராத் காவற்துறை அவர் மீது வழக்குப்பதிந்திருந்தது. குழந்தைகளைக் கடத்தித் தனது ஆச்சிரமத்தில் வைத்து அவர்கள் மூளம் தன் பக்தர்களிடமிருந்து பணம் அறவிட்டார் எனவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குஜராத் காவற்துறை அவரை ஏற்கெனவே தேடிக்கொண்டிருந்த நிலையில், அவர் ஏகுவாடோர் நாட்டுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் ‘இந்து நாடொன்றை’ அமைத்துள்ளதாகவும் அதற்கு அவர் ‘கைலாச’ என்று பெயரிட்டு அதற்குத் தனியே ஒரு கொடி, அரசியல் கட்டமைப்பு ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளதாகவும் டிசம்பர் மாதமளவில் செய்திகள் வெளியாகியிருந்தன.

 

https://marumoli.com/கைலாச-நாட்டின்-அதிபர்-நி/?fbclid=IwAR359MFWz2__nOD1m_QdDaaQNpUW7uC2jM6INzydi14YbLgcw39uRwLbp_g

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.