Jump to content

பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரான்சு மண்ணில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானத்தை பிரெஞ்சு மாநகரமுதல்வருடன் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று 22.01.2020 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்!

IMG-20200122-WA0012.jpg?fit=640%2C311


பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்தில் இருக்கும் சுவாசிலே றூவா பிராங்கோ தமிழ்சங்கத்தினதும் தமிழ் மக்களின் தொடர் முயற்சியில் மாநகர முதல்வரும் அவரின் சார்பானவர்களும் பல வழிகளில் தமிழ்மக்களுக்கும் அவர்களின் நியாயமான முன்னெடுப்புக்களுக்கும் உதவி வருகின்றனர்.

கடந்த காலங்களில் தமிழின மக்களுக்கு இழைக்கப்பட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி ஈருருளி பயணத்தையும், நடைப் பயணத்தையும் பரப்புரைகளையும் மேற்கொண்டபோது அதனை மேற்கொண்ட தமிழின விடுதலைச் செயற்பாட்டாளர்களை அழைத்துப் பேசி உற்சாகத்தை வழங்கியதோடு அதற்கான அரசியல் செயற்பாடுகளை செய்வோம் என்று இது சம்பந்தமாக பிரான்சு சனாதிபதி அவர்களுக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த 2019 டிசெம்பர் மாதம் மாநகரசபை ஏற்பாட்டில் ஆளும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், விமர்சகர்கள் போன்றவர்களை அழைத்து மாநாட்டினை நடாத்தியிருந்தனர்.

இம் மாநாட்டில் தமிழர் தரப்பில் சர்வதேச ரீதியாகவும், ஐரோப்பிய பாராளுமன்றம், ஐ.நா. மனிதஉரிமைகள் செயலகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றவர்கள். இளையவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். தமிழர்களின் 70 வருடகால போராட்டம் பற்றியும், சிங்கள் பௌத்த தமிழர் விரோத செயற்பாடும் அதன் தொடர்ச்சியாய் தொடர்ந்த இனக்கலவரங்கள் கல்வித் தரப்படுத்தல் முதல் இறுதி முள்ளிவாய்க்கால் வரை சான்றுகள் பகிரப்பட்டது. அன்றைய நாளில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகவும் விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளர் கூட தமிழர் தரப்பின் நியாயங்களைக் கேட்டு அமைதியாக இருந்தமையும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு. தமிழினப்படுகொலைக்கு சவர்வதேச நீதி காண வேண்டும். 70 வருடங்களாக இத்தனை தமிழர்களின் உயிர், உடமை அழிவுக்கும் நிம்மதியான சுதந்திரமான வாழ்வுக்கும் ஒரே தீர்வு தமிழீழமே என்பதையும் தெரியப்படுத்தப்பட்டது. இத்தீர்மானம் ஏற்கனவே பாசிலோனா, கத்தலோனியா இடங்கங்களில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தீர்மானத்தை முதற்சந்திப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து 28 நாட்கள் நிறைவில் மீண்டும் இன்று மாநகர மண்டபத்தில் முதல்வர் முன்னிலையில் அனைத்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் முதல்வரின் முன்மொழிதல் மூலம் அத்தீர்மானம் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டது. 2020 இல் இந்த முக்கியமான செயற்பாட்டை, அடுத்த கட்டம் நோக்கி செயற்படுத்துவதற்கு ஊக்கசக்தியாக அமைந்திருப்பதாகவே பல தாயகச்செயற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் நகரங்களிலும் நகரசபைகளிலும் தமது தமிழ்ச்சங்கங்கள் மூலம் முன்னெடுக்க இதுவோர் ஊக்க சக்தியாக இருக்கும். வரும் உள்ளூராட்சித்தேர்தலும், அதில் எமது தரப்பில் நியமிக்கப்படும் வேட்பாளர்களும் அவர்களின் வெற்றியும் எமது மக்களின் ஓரணியிலான பங்களிப்பும் வரும் காலத்தில் தமிழினத்தின் இலக்கை அடைய ஏதுவாக இருக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக அமைகின்றது

 

http://www.errimalai.com/?p=48853&fbclid=IwAR3JNdoIU6h4qrpzXQtBQChm99fG0GyPh8K58ceRmxPi0gRi-F4qWOFoB9k

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தளவு முடிந்தவையெல்லாம் செய்யப்படுகின்றது........எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்...... வாழ்த்துக்கள்....!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.