Jump to content

முஸ்லிம்களின் தலைவர் ஹக்கீமுக்கு அரசியல் அச்சுறுத்தல் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

 

எனக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - பாராளு மன்றத்தில் ஹக்கீம். - செய்தி
.

.
2000 வசந்த காலமென ஞாபகம். இரவிரவாக தோழர் தலைவர் அஸ்ரப்புடன் பேசிக்கொண்டிருந்தேன்.அதிகாலைதான் என்னை என் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மாலை நோர்வேக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். ஆனால் சற்று நேரத்தில் தோழர் அஸ்ரப் கார் அனுப்பி திரும்பவும் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மாலை என்னை விமான நிலையம் அனுப்பிவைப்பதாக கூறி அதிகாலை தோழர் தலைவர் அஸ்ரப் அவர்கள் என்னை மாவனல்ல அழைத்துச் சென்று காலை விருந்தின்போது தனது வலது கையென தோழர ரவூப் ஹக்கீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்க்கு கொழும்பில் முதல்நாள் தனது வீட்டில் வைத்து தோழர் பசீர் சேகு தாவுதை எனது கை வாழ் என அறிமுகம் செய்திருந்தார். காலை மாவனல்லவில் இருந்து விடைபெறும்போது இறுதிச் சந்திபென நான் உணரவில்லை,
.
தோழர் தலைவர் அஸ்ரப் அவர்களின் வலது கையும் கைவாழும் பிரிந்தபோது என்னைவிட யாரும் அதிகமாக கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் தனிப்பட்ட ரீதியிலாவது ஒருவருக்கு ஒருவர்பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் தோழர் தலைவர் அஸ்ரப்பின் விருப்பமாக இருந்திருக்க வேண்டும். இன்றைய நெருக்கடி சேதி முதலில் எனக்கு இச்சம்பவத்தைத்தான் நினைவு படுத்தியது.
.
ஒருபோதும் தோழர் ரவூப் ஹக்கீம் வன்முறையை ஆதரிப்பவரல்ல. ஒரு தலைவர் என்கிற முறையில் அவர் எல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புகிறவர். அவர்மீது அவதூறுகூறி அரசியல் பழிவாங்கும் முயற்ச்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த தருணத்தில் தோழர் பசீர், அன்பர் சேகு இசத்தின், மதிப்புக்குரிய அதாவுல்லா உட்பட தோழர் அஸ்ரப்பின் வழிவந்த அனைவரும் தோழர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இளைக்கப்படும் அரசியல் பழிவாங்கலுக்கு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். செல்வநாயகம் அவர்களது மரபையும் முன் உதாரணங்களையும் பின்பற்றி சம்பந்தர் ஐயாவும் கூட்டமைப்பும் தோழர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு துணை நிற்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
.
இறுதியில் தர்மம் வெற்றி பெறும்.

 

.

1W9IAlmT_400x400.jpg

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/24/2020 at 10:53 AM, poet said:

செல்வநாயகம் அவர்களது மரபையும் முன் உதாரணங்களையும் பின்பற்றி சம்பந்தர் ஐயாவும் கூட்டமைப்பும் தோழர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு துணை நிற்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

தனக்கு தனக்கு என வரும் போதுதான் சிலருக்கு தமிழனையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென யோசனை வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/24/2020 at 12:23 AM, poet said:

 

எனக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - பாராளு மன்றத்தில் ஹக்கீம். - செய்தி
.

.
2000 வசந்த காலமென ஞாபகம். இரவிரவாக தோழர் தலைவர் அஸ்ரப்புடன் பேசிக்கொண்டிருந்தேன்.அதிகாலைதான் என்னை என் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மாலை நோர்வேக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். ஆனால் சற்று நேரத்தில் தோழர் அஸ்ரப் கார் அனுப்பி திரும்பவும் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மாலை என்னை விமான நிலையம் அனுப்பிவைப்பதாக கூறி அதிகாலை தோழர் தலைவர் அஸ்ரப் அவர்கள் என்னை மாவனல்ல அழைத்துச் சென்று காலை விருந்தின்போது தனது வலது கையென தோழர ரவூப் ஹக்கீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்க்கு கொழும்பில் முதல்நாள் தனது வீட்டில் வைத்து தோழர் பசீர் சேகு தாவுதை எனது கை வாழ் என அறிமுகம் செய்திருந்தார். காலை மாவனல்லவில் இருந்து விடைபெறும்போது இறுதிச் சந்திபென நான் உணரவில்லை,
.
தோழர் தலைவர் அஸ்ரப் அவர்களின் வலது கையும் கைவாழும் பிரிந்தபோது என்னைவிட யாரும் அதிகமாக கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் தனிப்பட்ட ரீதியிலாவது ஒருவருக்கு ஒருவர்பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் தோழர் தலைவர் அஸ்ரப்பின் விருப்பமாக இருந்திருக்க வேண்டும். இன்றைய நெருக்கடி சேதி முதலில் எனக்கு இச்சம்பவத்தைத்தான் நினைவு படுத்தியது.
.
ஒருபோதும் தோழர் ரவூப் ஹக்கீம் வன்முறையை ஆதரிப்பவரல்ல. ஒரு தலைவர் என்கிற முறையில் அவர் எல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புகிறவர். அவர்மீது அவதூறுகூறி அரசியல் பழிவாங்கும் முயற்ச்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த தருணத்தில் தோழர் பசீர், அன்பர் சேகு இசத்தின், மதிப்புக்குரிய அதாவுல்லா உட்பட தோழர் அஸ்ரப்பின் வழிவந்த அனைவரும் தோழர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இளைக்கப்படும் அரசியல் பழிவாங்கலுக்கு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். செல்வநாயகம் அவர்களது மரபையும் முன் உதாரணங்களையும் பின்பற்றி சம்பந்தர் ஐயாவும் கூட்டமைப்பும் தோழர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு துணை நிற்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
.
இறுதியில் தர்மம் வெற்றி பெறும்.

 

.

1W9IAlmT_400x400.jpg

.

தர்மத்தின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறதா ? 

மேலே உங்களால் குறிப்பிடப் பட்ட ஆட்கள் எல்லோரும் தர்மத்தின் வழி நின்றுதான் செயற்படுகிறார்களா ?

அல்லது

இறுதியில் தர்மம் வெல்லும் போது அதை பார்க்க தமிழ் இனம் என்கின்ற ஒன்று இலங்கையில் இருக்குமா ?

(எல்லாம் ஒரு சலிப்பில் வந்த கேள்விகள். கோவிக்காதீர்கள் கவிஞரே)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

தர்மத்தின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறதா ? 

மேலே உங்களால் குறிப்பிடப் பட்ட ஆட்கள் எல்லோரும் தர்மத்தின் வழி நின்றுதான் செயற்படுகிறார்களா ?

அல்லது

இறுதியில் தர்மம் வெல்லும் போது அதை பார்க்க தமிழ் இனம் என்கின்ற ஒன்று இலங்கையில் இருக்குமா ?

(எல்லாம் ஒரு சலிப்பில் வந்த கேள்விகள். கோவிக்காதீர்கள் கவிஞரே)

 

இதில் என்ன கோபிக்க இருக்கிறது நியாமான கேள்விகள் தனக்கு எதிராக கைகள் திரும்பும் போதுதான்  தான் நல்லவன் எனக் காட்டமுனைகிறார்கள் இதில் ஹக்கீம் மட்டும் அல்ல சம்பந்தரும் பாராளுமன்றத்திலே தனது பங்களாவையும்  ஓடின கார் தூரத்தையும் சொல்லி விளக்குறார் என்றால் பாருங்கோவன் மக்கள் பிரச்சினைகள் எல்லாம் கையோடு கம்மாரிசு தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.