Jump to content

மாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..!


Recommended Posts

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81..%21
 
மாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..!
 
27,132
 
Views
மாத்தறை மருத்துவமனையில் ஆண் ஒருவர் பிரசவித்த குழந்தையை ஏற்றுக் கொள்ள அவரே மறுப்பு தெரிவித்துவருவதாக மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

தனக்கு குழந்தையை பராமறிக்க முடியாது என்றும், குழந்தையை எவறேனும் வளர்ப்பதற்கு இணங்குவார்களாயின் அவர்களுக்கு வழங்குமாறும் குழந்தையினை பெற்றெடுத்தவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆணாக வசித்து வந்த குறித்த பெண்ணுக்கு, நீண்டகாலமாக காதலி ஒருவர் இருந்துள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னைய பதிப்பு............

வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக காற்சட்டையும் ஆண்கள் அணியும் மேற்சட்டையும் அணிந்தவாறு தாடியுடன் நபர் ஒருவர் மாத்தறை பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தனக்கு தொடர்ச்சியாக தாங்கி கொள்ள முடியாதவாறு வயிற்று வலி காணப்படுவதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரை வைத்திய பரிசோதனைக்குட்படுத்திய மருத்துவர்கள் ஆண்கள் நோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆண்கள் நோயாளர் சிகிச்சை அறையில் கடமையில் இருந்து மருத்துவர்கள் குறித்த நபரின் வயிற்றினை பரிசோதித்த பின்னர் அவர் கர்பமடைந்திப்பதற்காக அறிகுறிகள் காணப்படுவதாக அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர்.

இதன் பின்னர் அவரின் வயிற்று பகுதியினை ஸ்கேன் செய்வதற்கு மருத்துவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளனர்.

ஸ்கேன் செய்ததன் பின்னர் அவர் கர்பிணி என்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உடனடியாக அவருக்கு கர்ப்பிணி தாயர்மார்கள் அணியும் ஆடை மருத்துவமனையின் நிர்வாகத்தினரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

கர்பபிணி தாய்மார்களின் உடையினை அணிவித்த மருத்துவர்கள் அவரை மகபேற்று தாய்மார்கள் தங்கும் அறைக்கு மாற்றியுள்ளனர்.

முகத்தில் தாடியுடன் முழுமையாக ஆண் உருவத்தினை கொண்ட நபர் ஒருவர் மகப்பேற்று பிரசவ அறைக்கு கர்ப்பிணி தாயர்மார்களின் ஆடையுடன் வருகை தந்ததும் அங்கிருந்த ஏனைய கர்ப்பிணி தாய்மார்கள் வியப்புடன் அவரை பார்த்துள்ளனர்.

சிகிச்சைப் பெற்றுவந்த குறித்த நபர் நேற்றிரவு கடும் வேதனைக்கு உள்ளான நிலையில் ஆண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார்.

எனினும் அவருக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதோடு தாய்ப்பால் கொடுக்கும் வகையில் அவரது மார்ப்பகம் இல்லை எனவும் அறிவித்துள்ளனர்.

காரணம் குறித்த நபர் நீண்ட காலத்திற்கு முன்னர் தனது மார்பகங்களை சத்திரசிகிச்சை மூலமாக அகற்றிக்கொண்டுள்ளார் என வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறித்த நபர் இயற்பிறவியில் பெண்ணாக காணப்பட்டாலும் அவர் ஆண் சுபாபம் கொண்டே இதுவரை காலம்  வாழ்ந்து வந்துள்ளார்.

இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை தொடர்பில் மருத்துவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இந்த தகவலானது பரவியதும் அவரை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் மாத்தறை மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

மேலும் அவர் தன்னுடைய தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆணின்  பெயரிலேயே பெற்றுக்கொண்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியாக கடமையாற்றி வந்த இவர் குழந்தை ஒன்றினை பிரசவித்த பின்னரே பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டா/டி  ஹெல்மட் போட்டுகொண்டு வண்டி ஓட்டி இருக்கலாமேடா/டி  பாவி..... இப்ப பார் உன்னால எவ்வளவுபேருக்கு பிரச்சினை, எதிர்காலத்தில் அந்தப் பிள்ளையும் சிரமங்களை அனுபவிக்க போகுது......!   🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.