Jump to content

புதிய கட்டமைப்புடன் 2022ஐ நோக்கி பயணிக்குமா இலங்கை U19 அணி?


Recommended Posts

புதிய கட்டமைப்புடன் 2022ஐ நோக்கி பயணிக்குமா இலங்கை U19 அணி?

 

ஐசிசி இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியிருந்த இலங்கை இளையோர் அணி நியூசிலாந்து இளையோர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்து காலிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

 இலங்கை இளையோர் அணி, தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணத்துக்காக அசான் திலகரட்னவின் பயிற்றுவிப்பின் கீழ் கடந்த இரண்டு வருடங்களான சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இப்போது, அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை இளையோர் அணி Plate கிண்ணத்திற்காக போட்டிகளில் விளைாயடவுள்ளதுடன், கடந்த 2018ம் ஆண்டைப் போன்று ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.

தெரிவுகள் சரியானதா? 

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தெரிவு மற்றும் துடுப்பாட்ட வரிசையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன. 

குறிப்பாக, இலங்கை அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் ஓட்ட எண்ணிக்கையை சிறப்பாக நகர்த்தக்கூடியவர் என பயிற்றுவிப்பாளரால் பேசப்பட்டவர் அஹான் விக்ரமசிங்க. ஆனாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை பொருத்தவரை, 8வது துடுப்பாட்ட வீரராகவே அவர் களமிறக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 141 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், களமிறங்கிய இவர், 48 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை விளாசியதுடன், இலங்கை அணி 242 ஓட்டங்களை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இப்படி, சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடியவர் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறக்கப்படவில்லை என்ற விமர்சனம் ஏற்கனவே எழுந்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் ஏன் 8வது துடுப்பாட்ட வீரராக அஹான் விக்ரமசிங்க களமிறக்கப்பட்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அதேபோன்று, இலங்கை அணியால் 243 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இருந்த போதும், நியூசிலாந்து அணியின் முன்வரிசை வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தமையினால் அந்த அணி த்ரில் வெற்றியையும் பெற்றுக்கொண்டது.

ஆனால், இலங்கை இளையோர் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான அம்ஷி டி சில்வா குறித்த போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். தென்னாபிரிக்கா ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தும், ஒரு வேகப் பந்துவீச்சாளருடன் மாத்திரமே இலங்கை அணி விளையாடியமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. அத்துடன், கடந்த 12-24 மாதங்களில் இலங்கை இளையோர் அணி ஒரு வேகப் பந்துவீச்சாளருடன் களமிறங்கிய முதல் சந்தர்ப்பமாகவும் இந்தப் போட்டி அமைந்திருந்தது.

நியூசிலாந்து இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் அதிக சுழல் பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி களமிறங்குவது திட்டமாக இருந்தாலும், புதிய மற்றும் ஆட்டத்தின் இறுதி நேரங்களில் சிறப்பாக பந்துவீசக் கூடிய அம்ஷி டி சில்வா நீக்கப்பட்டமை மற்றுமொரு தவறாக பார்க்கப்படுகிறது.

அஷான் திலகரட்னவின் பயிற்றுவிப்பின் கீழ் கடந்த 2 வருடங்களாக சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த இலங்கை இளையோர் அணிக்கு இறுதியாக பெற்ற இரண்டு தோல்விகள் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. எனினும், இந்த தோல்விகளானது இந்த இளம் வீரர்களுக்கு முடிவு கிடையாது. அணியில் நிபுன் தனன்ஜய உள்ளிட்ட 4 அல்லது 5 திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இவர்கள், எதிர்வரும் காலங்களில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்டுத்துவார்கள் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்

இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி கடந்த 13 இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களில் தோல்வியை தழுவி வருகின்றது. இதற்கான காரணம் இலங்கை பாடசாலை கிரிக்கெட் கட்டமைப்பாகவும் இருக்கலாம்.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் கட்டமைப்பானது கடந்த 2 தசாப்தத்தில் மிகச்சிறந்த கட்டமைப்பாக இருந்தாலும், தற்போது அது கணிசமாக பலமின்றியதாக மாறி வருகின்றது. எனவே, இலங்கை கிரிக்கெட் மற்றும் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் என்பன இணைந்து கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நேரமாக இது மாறியுள்ளது.

இலங்கை பாடசாலை U19 கிரிக்கெட் டிவிஷன் 1 போட்டிகளில் 36 பாடசாலைகள் மோதுகின்றன. இது இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. மொத்தமாக 200 இற்கும் அதிகமான பாடசாலைகள் உள்ளதுடன், அனைத்து பாடசாலைகளும் 6-7 தரநிலைகளுக்கு கீழ் பிரிக்கப்பட்டு, போட்டித் தொடர்களில் பங்கேற்க வேண்டும்.

அதேநேரம், பாடசாலை U19 கிரிக்கெட் டிவிஷன் 1 அணிகள் 16 ஆக குறைக்கப்பட்டு, ரவுண்ட்-ரொபின் சுற்று அடிப்படையில் செப்டம்பர் தொடக்கம் ஜனவரி வரை போட்டிகள் நடாத்தப்பட வேண்டும். அத்துடன், பாடசாலைகளின் மரபு ரீதியான போட்டிகள், இந்த காலப்பகுதிகளை தவிர்த்து, பருவகாலத்துக்கு முன்னர், அல்லது பருவகாலம் முடிவடைந்து நடத்தப்பட வேண்டும். அதுமாத்திரமின்றி இறுதிச் சுற்றுப் போட்டிகள் இரண்டு நாட்கள் கொண்ட போட்டிகளாக இல்லாமல் மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக நடத்தப்பட வேண்டும். 

 

 

 

பாடசாலைகளுக்கான 19 வயதுக்குட்பட்டோர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளும், இரண்டு நாட்கள் போட்டித் தொடருடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். இப்படி நடத்தும் பட்சத்தில் பாடசாலை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளை வளர்க்க முடியும். 

பாடசாலை 19 வயதுக்குட்பட்டோர் தொடரை தவிர்த்து, பாடசாலைகளுக்கான மாபெரும் கிரிக்கெட் சமர், 5 மாகாண அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் என்பவற்றை நடத்துவது அவசியம். அதேநேரம், புதிய வீரர்களை அடையாளம் காணும் பொருட்டு ஏனைய மாகாணங்களை உள்ளடக்கிய டியர் 2 தொடர்களை நடத்த வேண்டும். முக்கியமாக மாகாணங்களுக்கு இடையிலான தொடரில் அனைத்து வகையான போட்டிகளும் நடத்தப்பட வேண்டும். 

இதேபோன்ற கட்டமைப்பு U17 மற்றும் U15 வயதுப்பிரிவுகளுக்கும் நடத்தப்பட வேண்டும். எனினும், அதிகமான அணிகள் பங்கேற்பதால் இந்த செயன்முறை கடினமான ஒன்றாக அமையாலாம். ஆனாலும், புதிய திறமைகளை இனங்காணுவதற்கு மாவட்டமட்ட போட்டிகளில் இருந்து வீரர்களை அவதானிக்க வேண்டும். அப்படி, அடையாளம் காணப்படும் வீரர்களை 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் குழாம் என்ற அடிப்படையில் 4 வருடங்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி ஒரு குழாமாக மாற்ற வேண்டும்.

2022ம் U19 உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்

இலங்கை கிரிக்கெட் 2022ம் ஆண்டுக்கான U19 உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்களை இப்போது இருந்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக இம்முறை U19 உலகக் கிண்ணத் தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போதும், அங்கு எந்தவொரு இரு தரப்பு தொடர்களையும் இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்யவில்லை. இதுவொரு மிக முக்கிய தவறாகும்.

டில்ஷான் மதுசங்க மாத்திரம் இலங்கை வளர்ந்து வரும் அணியுடன் தென்னாபிரிக்கா சென்று விளையாடியிருந்தார். இந்த குழாத்தில் நிபுன் தனன்ஜய, கமில் மிஷார, சொனால் தினூஷ மற்றும் அஷைன் டேனியல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். 

அடுத்த இளையோர் உலகக் கிண்ணம் நடைபெறுவதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் சபை மேற்கிந்திய தீவுகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் இரண்டு வருடங்களில் இரண்டு இருதரப்பு தொடர்களையேனும் இளையோர் அணிக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். 

இம்முறை நடைபெற்ற U19 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை தோல்வியடையச் செய்த நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள், கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருதரப்பு மற்றும் முத்தரப்பு தொடர்களில் விளையாடியிருந்தன.

இதேவேளை, இலங்கை U19 அணியை தவிர்ந்த ஏனைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் இம்முறை காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அதேநேரம், இம்முறை முதல் 8 அணிகளுக்குள் இடம்பிடிக்க முடியாத இலங்கை அணி 2022ம் ஆண்டுக்கான குழுநிலையில், 2 முதல் நிலை அணிகள் இடம்பெறும் குழாத்துக்குள் இடம்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.thepapare.com/change-the-system-and-start-planning-for-2022-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.