Jump to content

தமிழ் மரபுத்திங்கள் 2020


Recommended Posts

imageproxy.php?img=&key=8f8f7ea9d4e61b45

கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இம் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மேலோங்கி தெரிகின்றது என்று எல்லோராலும் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. மொழிகளுக் கெல்லாம் தாய் நமது தாய்மொழி ''தமிழ்'' எனும் கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.

நமது மருத்துவமும் விஞ்ஞானமும் கட்டிடக்கலையும் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கின்ற ஒன்று "முன் தோன்றிய மூத்த குடிகள்" என்று சொல்லுமளவு நமது வரலாறு பழமையானது ஆயினும் அந்த அளவு அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அச் சிறப்புப்புக்களை புலம்பெயர் தேசங்களில் ஆவணப் படுத்தியிருக்கின்றோம் என்றால் அது எண்ணிக்கையில் மிகக் குறைவே இவ்வாறு உறுதியாக நமது இருப்பை நிறுவாது போனோமானால் எதிர்காலத்தில்  தமிழரின் தொன்மை,வரலாறு, அடையாளம் என்பன அற்றுப் போய்விடக் கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை கருத்தில் கொண்டே இத் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் தமிழர் தொன்மையை பெருமையை,ஏனைய மொழி பேசுகின்ற மக்களுக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சொல்வதற்கும் எமது வளங்களை, கலைகளை எல்லாம் பறைசாற்றும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது.

இம்முத்திரையில் தமிழர் தொடர்பிலான முக்கிய அம்சங்கள் குறியீடுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது வேரினை பிரிந்து வந்த தமிழினம் இன்று தேசங்கள் தோறும் கிளைபரப்பி இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கனடிய மண்ணில் பேரம் பேசும் சக்திகளாய் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது பெரும் பெருமை. அத்துடன் நாம் யார் என்பதை காண்பிக்க ஒரு குலச் சின்னம் போலவே நமது வாழ்வையும் வீழ்வையும் நன்கு அறிந்து நம்மோடு பயணப் பட்டிருக்கும் நமது குல விருட்சம் கற்பகத் தருவாம் பனையின் படம் முத்திரையில் இடம் பெற்றிருக்கின்றது.

 

கியூபெக் மாகாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் நினைவுத் தபால் முத்திரை..!

 

 

5e285c357922f.jpg

கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இம் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மேலோங்கி தெரிகின்றது என்று எல்லோராலும் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. மொழிகளுக் கெல்லாம் தாய் நமது தாய்மொழி ''தமிழ்'' எனும் கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.

நமது மருத்துவமும் விஞ்ஞானமும் கட்டிடக்கலையும் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கின்ற ஒன்று "முன் தோன்றிய மூத்த குடிகள்" என்று சொல்லுமளவு நமது வரலாறு பழமையானது ஆயினும் அந்த அளவு அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அச் சிறப்புப்புக்களை புலம்பெயர் தேசங்களில் ஆவணப் படுத்தியிருக்கின்றோம் என்றால் அது எண்ணிக்கையில் மிகக் குறைவே இவ்வாறு உறுதியாக நமது இருப்பை நிறுவாது போனோமானால் எதிர்காலத்தில்  தமிழரின் தொன்மை,வரலாறு, அடையாளம் என்பன அற்றுப் போய்விடக் கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை கருத்தில் கொண்டே இத் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் தமிழர் தொன்மையை பெருமையை,ஏனைய மொழி பேசுகின்ற மக்களுக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சொல்வதற்கும் எமது வளங்களை, கலைகளை எல்லாம் பறைசாற்றும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது.

இம்முத்திரையில் தமிழர் தொடர்பிலான முக்கிய அம்சங்கள் குறியீடுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது வேரினை பிரிந்து வந்த தமிழினம் இன்று தேசங்கள் தோறும் கிளைபரப்பி இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கனடிய மண்ணில் பேரம் பேசும் சக்திகளாய் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது பெரும் பெருமை. அத்துடன் நாம் யார் என்பதை காண்பிக்க ஒரு குலச் சின்னம் போலவே நமது வாழ்வையும் வீழ்வையும் நன்கு அறிந்து நம்மோடு பயணப் பட்டிருக்கும் நமது குல விருட்சம் கற்பகத் தருவாம் பனையின் படம் முத்திரையில் இடம்  பெற்றிருக்கின்றது.   

 

                                               5e285bef62867.jpg

அத்துடன் அப்பனையின் வேரிலே விழுதுகள் தம் வேர்களை முளைத்து கொள்ளுவது போல முடியுடைய மூவேந்தர்களாய் கொடி பரப்பி நிலைத்து நின்ற நம் மூதாதையர் சேர சோழ பாண்டியரின் சின்னங்கள் வரையப்பட்டுள்ளது.முதலாம் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு 12ம் நூற்ற்றாண்டில் 16 கோபுரங்களுடன் (கோபுரம் நுழைவாயில்), அதனை அண்டியுள்ள 7 தூண்கள் (பிராகாரத்தில்), 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் (அரங்குகள்) மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் (கோவில் குளங்கள்)கொண்டு 12ம் நூற்றாண்டில் இல் கட்டப்பட்ட மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் கோயில் தமிழர் கட்டிட கலையின் பொக்கிசமும் இம்முத்திரையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

5e285be54f5eb.jpg5e285bff97614.jpg

சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.காலப்போக்கில் தமிழரின் எத்தனையோ தற்காப்புக் கலைகள் காணாமல் போயிருந்தாலும் இன்றைக்கும் உலக அளவில் உயிர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டம். அகம் புறம் என பகுத்து வாழ்ந்த ஆதித்தமிழரின் வீரக்கலையான சிலம்பம் இடம் பெற்றிருக்கின்றது.

அத்துடன் நமது நிலம் வளம் வாழ்வில் இதில் எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் கலை என அனைத்து அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தம் வாழ்வில் தவிர்க்க முடியாததாக இருக்கும் யாழ் இசைக் கருவி தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கின்றது. ஆதி தமிழர் வாசித்த யாழ் இசைக் கருவி தவறாது இம் முத்திரையில் இடம் பிடித்திருக்கின்றது.

நமது மொழியின் இனத்தின் பெருமையை செழுமையை நினைவுகூற வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் வெறுமனே அந்தந்த நாட்களோடு முடிந்து விடக்கூடாது. இனிவரும் வரலாறு பேசும் அளவு அவற்றை உறுதியான சான்றாதாரங்களையும் ஆவணப்படுத்தி விட வேண்டும் எனும் நோக்கிலேயே இம் முத்திரையை கனடா தபால் தினைகளத்தின் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது இவ் நினைவு முத்திரையை சிறந்த முறையில் வடிவமைத்த இளம் மாணவி சியானி சரவணமுத்து அவர்களுக்கும் அவறோடு இணைந்து உதவிய அணைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்......பகிர்வுக்கு நன்றி நண்பரே ......!   🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.