Jump to content

யேசு அழைக்கிறார்" தினகரனின் தீர்க்கதரிசனங்கள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யேசு அழைக்கிறார்" தினகரனின் தீர்க்கதரிசனங்கள்!!!

- தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "உண்மை"(மே 1-15) இதழில் வெளிவந்த கட்டுரை -

மதத்தை மூலதனமாக வைத்து வணிகம் செய்யும் மதவாதிகள் இப்போதெல்லாம் காலத்திற்குத் தக்கவாறு மாறிக் கொள்கிறார்-கள். கருத்தால் மாற்றிக் கொள்ளவில்லை. கரன்சிக்காக மாறிக் கொள்கிறார்கள். இந்து மதத்தைத் தக்க வைத்துக்கொள்ள தியானம், யோகம், வாழும் கலை என்று புதிய பெயர்களுடன் கும்பலைத் திரட்டுகிறார்கள். கிறித்துவப் பிரச்சாரகர்களோ இன்னும் புதிய வழியைத் தேடுகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன் 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வு சமயம் தேர்வில் வெற்றி பெற பிரார்த்தனை என்று ஒரு கூட்டத்தைத் திரட்டினார் திருவாளர் பால் தினகரன். இவர் நீண்ட நாட்களாக இயேசுவை அழைத்துக் கொண்டிருக்கும் தினகரனின் மகன். தொலைக்காட்சிகளில் பார்க்கலாம், தனது மனைவி, குழந்தைகளோடு ஆடல் பாடல் மூலம் பிரார்த்தனை செய்வார். எல்லா வயதினரையும் ஈர்க்க இப்படி பகுத்தறிவோடு (?) புறப்பட்டு விடுகிறார்கள். மக்களும் தங்களது மூளைக்கு வேலை கொடுக்காமல் முண்டியடித்துக் கொண்டு வரிசை கட்டுகிறார்கள்

இந்த பால் தினகரனும் இவரது தந்தை தினகரனும் பிரார்த்தனை செய்யும் படத்துடன் வெளியாகியுள்ள இயேசு அழைக்கிறார் என்ற நூலின் நகலை நமக்கு வாசகர் திருநெல்வேலி ப.குமார் அனுப்பி வைத்துள்ளார். அந்தப் படங்களைப் பாருங்கள். அட்டையில் சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்த சகோதரர்கள் கைகுலுக்குகிறார்கள். இலங்கைக்காகப் பிரார்த்தனை என தலைப்பு. இதழ் 2006 ஜூன் என நாளிடப்பட்டுள்ளது.

உள்பக்கத்தில் “ஏப்ரல் 2 மற்றும் 7, 8, 9 தேதிகளில் (அதாவது 2006 ஏப்ரல்) சிறப்புக் கூட்டங்கள் மூலம் ஆண்டவர் தமது அன்பை வெளிப்படுத்தினார்” எனவும் “அரசு விருந்தினராக டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன், டாக்டர் பால் தினகரன் குடும்பத்தினர் வரவேற்கப்பட்டனர்” எனவும் செய்தி தரப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இலங்கை தேசியக் கொடியை பற்றியபடியே இலங்கையின் சமாதானத்திற்காக பிரார்த்தனை செய்தார்களாம். சர்வ மத குருக்களும் வருகை தந்தார்களாம். அடுத்த பக்கத்தில் தான் காமெடியே ஆரம்பம் படியுங்கள்.

டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் மூலம் வெளிப்பட்ட தீர்க்கதரிசனம்:

1. இலங்கை தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்! (உபா 32:43)

2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை (எசே 34:26)!

3. எல்லா தேயிலைத் தோட்டங்களும் செழிக்கும்.

4. இதனால் ஏற்றுமதி ஏராளமாக பெருகும், வருமானம் அதிகரிக்கும்.

5. இலங்கை அரசு பல தேசங்களுடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பணிபுரியும், வேலை வாய்ப்புகள் பெருகும், வேலையில்லாத் திண்டாட்டம் குறையும்.

6. நாட்டின் பெரும் பகுதி வருமானம் பாதுகாப்புக்காக செலவு செய்யப்படுகிறது. இந்த செலவை தேவன் குறைப்பார், அதை நாட்டு மக்களின் நலனுக்காக செலவு செய்வார்கள்.

இதையெல்லாம்ஆண்டவர் அருளியதாக அள்ளிவிட்டுள்ளார் தினகரன். இந்த திருவாய் மலர்ந்ததெல்லாம் ஓராண்டுக்கு முன்பு. அதாவது கடந்த 2006 ஏப்ரல் 2 மற்றும் 7, 8, 9-களில்.

இந்த ஓராண்டில் என்னென்ன நடந்து விட்டது ஈழ மண்ணில். எத்தனை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளார்கள். செஞ்சோலையில் பிஞ்சுகள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசிக் கொன்றதே. குடியிருப்பு-களில் குண்டு மழை பொழிந்தார்களே. சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் மீதே தாக்குதல் தொடுத்துக் கொன்றதே.

டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் மூலம் வெளியிடப்பட்ட தீர்க்கதரிசனத்தில் இந்த உண்மைகளெல்லாம் வெளிப்படவில்லையே! ஏன்?

தமிழர்களைக் கொன்று குவிக்கும் ரத்தக் கறை படிந்த சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சேயின் கையைக் குலுக்கும் தினகரனுக்கு தன் தமிழினத்தை விட தன் மதமே பெரிதாய்ப் போய்விட்டது என்பதுதானே மெய்.

இந்த 2007ஆம் ஆண்டில் இலங்கை நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புச் செலவுகளுக்கு அதிக நிதியை மகிந்த ராஜபக்சே அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் தினகரனின் தீர்க்க தரிசனத்தில் பாதுகாப்பு செலவு குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.

கொழும்பில் தனது கடையைத் திறக்க வேண்டும் என்பதற்காக டி.ஜி.எஸ். தினகரன் வார்த்தைகளை வாரி இறைத்து விட்டு வந்துள்ளார்.

சிங்களப் பேரினவாத அரசு மக்கள் மீது குறி வைத்து பல ஆண்டுகளாக தாக்கி வருகிறது. அதன் இலக்குகளுக்கு இந்துக் கோயில்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ தேவாலயங்களும் தப்பியதில்லை. ஜோசப் பராஜசிங்கம், என்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தேவாலயத்திலேயே கொல்லப்பட்டார். இந்தச் செய்தியெல்லாம் அற்புதச் செய்தி சொல்லும் தினகரனுக்குத் தெரியாதா? இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ள அந்த இயேசுவும் வரவில்லை.

கடவுள், மத மோசடிப் பித்தலாட்டங்களுக்கு இது ஒரு உதாரணம்தான். இந்த இயேசு அழைக்கிறார், புத்தகத்தைப் போலவே, பிற மத நூல்களையும் ஓராண்டு கழித்து எடுத்துப் பாருங்கள். இதேபோல நல்ல ஜோக்குகளாகத்தான் இருக்கும். அந்தந்த சீசனுக்கு சரக்கு விற்கும் தந்திரம்தான் இந்த ஆன்மிக ஆசீர்வாதங்கள்.

அன்பை போதித்த புத்தரின் உருவச் சிலைகளை ஆராதித்துக் கொண்டு உயிர்களைக் கொன்று குவிக்கிறது சிங்களப் பேரின வாதம். அந்த அரசோடு இயேசுவை அழைக்கும் தினகரனும் கைகுலுக்குகிறார். மதம் மதவாதிகளுக்குப் பயன்பட்டிருக்கிறதேயொழிய மக்களுக்குப் பயன்பட்டதுண்டா?

நன்றி : www.webeelam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதம் என்றாலே மடமையின் பிறப்பிடம், உருப்படாதவர்கள் உருவாக்கிவிட்டுச் சென்ற உளறல்களின் களஞ்சியம். இதற்கு எம் மதமும் விதிவிலக்கல்ல.

மூட நம்பிக்கைகள் என்று பார்க்கும்போது கிறிஸ்தவமானது இந்துமதம் இஸ்லாமைக் காட்டிலும் பல மடங்கு மோசமாக உள்ளது.

அது மட்டுமல்ல மதமூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் பல தமிழர்களைப் பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு தமிழின உணர்வு கிடையாது.

Link to comment
Share on other sites

தவறு மதங்கள் எதுவுமே தவறான எதையும் கூறுவதில்லை..

மனிதனை செம்மைப்படுத்த பக்குவப்படுத்த நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவையே மதங்கள்..

மனிதன்தான அவற்றை தவறாக உபயோகப்படுத்துகிறான்..

விஞ்ஞானம் வளர முதல் எழுதப்பட்ட குரானாலும்..

பைபிளாலும்..

என் இந்துமத வேதங்களாலும் நான் கவரப்பட்டவன்..

சில வாசகங்கள் மிக ஆச்சரியமானது..அழ்ந்த கருத்தைக்கொண்டது..

நாம்தான் மதத்தை சுயநலத்துக்காக துஸ்பிரயோகம் செய்கிறோம்

Link to comment
Share on other sites

நானும் தினகரன் குடும்பத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.

சகிக்க முடியவில்லை. சில வேளைகளில் பிரார்த்தனை செய்யும்போது நகைச்சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு மதங்கள் எதுவுமே தவறான எதையும் கூறுவதில்லை..

மனிதனை செம்மைப்படுத்த பக்குவப்படுத்த நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவையே மதங்கள்..

மனிதன்தான அவற்றை தவறாக உபயோகப்படுத்துகிறான்..

விஞ்ஞானம் வளர முதல் எழுதப்பட்ட குரானாலும்..

பைபிளாலும்..

என் இந்துமத வேதங்களாலும் நான் கவரப்பட்டவன்..

சில வாசகங்கள் மிக ஆச்சரியமானது..அழ்ந்த கருத்தைக்கொண்டது..

நாம்தான் மதத்தை சுயநலத்துக்காக துஸ்பிரயோகம் செய்கிறோம்

என் கருத்தும் அதுவே

ஆனால் ஏமாற நாம் தயாராக இருக்கும்வரை

ஏமாற்றுபவரை குறைசொல்லி என்ன பயன்???

நானும் 1990 களில் தினகரனின் திருவிளையாட்டுக்களைப்பார்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ கடவுளே (இருந்தால்)இவங்களின்ட அட்டகாசத்தை தாங்கமுடியவில்லை

இப்படிதான் மெல்பனில் இலங்கையில் சமாதானம் வேண்டி கிறிஸ்தவாமைப்பை சேர்ந்தவர்கள் உபவாசம் இருந்து ஒரு நாள் பிரார்தனையும் மெல்பமில் சேர்தார்கள்.இதற்கு பிரபல வானொலிகளும் அவுஸ்ரெலியாவில் உள்ள தமிழ்பிரபல பத்திரிகைகளும் விளம்பரம் கொடுத்தன.

இவர்களின் இச்செயற்பாடு இவ்வளவு காலமும் போராடிய நம்மவர்கள் எதையும் சாதிக்கமுடியாது,இந்த உபாவாசம் மூலம் சாதிக்கலாம் என்ற தொனிபொருளில் அமைந்திருந்தது இவர்களின் பிரசாரம்.இவர்களால் ஏன் களத்தில் நின்று பிரசாரம் செய்யமுடியவில்லை புலத்தில் மட்டும் பிரசாரம் செய்கிறார்கள் இதை பற்றி நான் அடுத்த சிட்னி கோசிப்பில் எழுதுகிறேன்(என்னை பிரபலயபடுத்த தான்)

1 மாதத்திற்கு முதல் உலக சமாதன வேண்டு சாய்பாபா கோஷ்டிகளும் மெல்பனில் பாதஜாத்திரை நடத்தினார்கள் இதை நடத்தியதும் எம்மவர்கள் தான் இந்த பாதஜாத்திரையில் பாபா பஜனை அதிகம் பாடபட்டது அதுவும் ஆங்கிலத்தில்.ஏன் இவர்கள் புலத்திலோ அல்லது ஈராக்கிலோ சென்று பாதஜாத்திரை ஏன் நடத்த முடியாது?

Link to comment
Share on other sites

மதத்தின் பெயரில் வியாபாரம் செய்வோர் இல்லவே இல்லை என்று எவரும் கூறமுடியாது. அதுவும் நீங்கள் குறிப்பிடும் |இவான்ஜலிஸ்ற்| வகையறாக்கள் பற்றி கூறவே தேவையில்லை. நேற்றைய தினம், அமெரிக்காவில் இந்த இவான்ஜலிஸ்ற் இயக்கத்தை அரசியல் வீரியமுடையதாக்கிக ஜெரி பல்வெல்என்னும்

நபர் இறந்து போனது இந்தக் கூட்டத்திற்கு ஒரு பலத்த அடியாகக் கருதப்படுகின்றது. இந்த நபர் தான் ரெலிரபீஸ் என்ற சிறுவர் நிகழ்ச்சியில்வரும்அனிமேற்ர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் என்ற ஒன்று மனிதனால் மனிதர்களுக்காக படைக்கப்பட்டது.

அது பல காலங்களுக்கு முன்பிருந்தே மனிதனுடன் இழுபடுகின்றது.

அந்தந்த காலத்திற்கேற்ப மனிதனை பக்குவபடுத்த சில அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்குள் கடவுள் புகுத்தப்படுகிறார். அல்லது மனிதனிடத்தில் இருக்கும் கடவுள்பயத்தை காட்டி மனிதனை பக்குவபடுத்த அவர்கள் முனைந்திருக்கலாம்.

இது கலிகலாம் கடவுளை யார் அறவே நம்புவதில்லையோ அவன்தான் கோயில்களை கட்டுகிறான். கடவுளுக்கு தொண்டு செய்வதாக கூறி ஏமாருவோரின் பணத்தை கொள்ளை அடிக்கிறான்.

கடவுள் என்ற ஒன்றிருக்க எந்த வாய்ப்புமில்லை.

எந்த மதமானாலும் ஆதாரமாக தமது மூல நூல்களை சாடுகின்றனவே தவிர இந்த விஞ்ஞான உலகிற்கேற்ப விளக்கம் எவரிடத்திலுமில்லை. இதில் ஒரு வேடிக்கையிருக்கிறது. எல்லா மதங்களின் நுல்களிலும் கடவுளின் பெயர் குறிப்பிடபடுகின்றது. எல்லா மனிதர்களையும் படைத்தவர் அவரெனில் தானாக தோன்றிய அவருக்கு பெயர் சூட்டியிருக்க யாரும்மிருந்திருக்கவும் சாத்தியமில்லை. பெயர் தேவையுமில்லை. ஏன் அவருக்கு பெயர் ?

மற்ற மதங்கள் கொஞ்சம் பரவாயில்லை. ஒரு மனிதனிதனின் உருவத்தை வணங்குவதோடு நின்றுவிட்டது. இந்து சமயத்தை தொன்று தொட்டே ஏமாற்றுகாரர் வளர்த்ததால் பாம்பு எலி நாய்களும் கடவுளாகி இன்று பாம்புக்கு கோயில் கடடும் நிலையில் மனிதன்.......

கடவுளொருவர் இருந்திருப்பின் மனிதனை படைக்க வேண்டி எந்த அவசியமும் அவருக்கில்லை.

ஆனால் இந்த ஏமாற்றுகாரர்களுக்கு கடவுளை படைக்கவேண்டிய காரணம் நிறையவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயோ கடவுளே (இருந்தால்)இவங்களின்ட அட்டகாசத்தை தாங்கமுடியவில்லை

இப்படிதான் மெல்பனில் இலங்கையில் சமாதானம் வேண்டி கிறிஸ்தவாமைப்பை சேர்ந்தவர்கள் உபவாசம் இருந்து ஒரு நாள் பிரார்தனையும் மெல்பமில் சேர்தார்கள்.இதற்கு பிரபல வானொலிகளும் அவுஸ்ரெலியாவில் உள்ள தமிழ்பிரபல பத்திரிகைகளும் விளம்பரம் கொடுத்தன.

இவர்களின் இச்செயற்பாடு இவ்வளவு காலமும் போராடிய நம்மவர்கள் எதையும் சாதிக்கமுடியாது,இந்த உபாவாசம் மூலம் சாதிக்கலாம் என்ற தொனிபொருளில் அமைந்திருந்தது இவர்களின் பிரசாரம்.இவர்களால் ஏன் களத்தில் நின்று பிரசாரம் செய்யமுடியவில்லை புலத்தில் மட்டும் பிரசாரம் செய்கிறார்கள் இதை பற்றி நான் அடுத்த சிட்னி கோசிப்பில் எழுதுகிறேன்(என்னை பிரபலயபடுத்த தான்)

ஆமாம் இதற்காக இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியிலும் விளம்பரம் செய்தார்கள். அதனைப் பார்க்கும்போதே நகைப்பாக இருந்தது. இலண்டனில் உள்ள கிறீஸ்தவ தேவாலயங்கள் பல அநாதரவாக இருக்கும்போது எம்மவர்கள் மட்டும் (அண்மைக்காலமாக) இளம் பெண்கள், சிறு பிள்ளைகளுடன் வீடுவீடாகச் சென்று மதப்பிரசாரம் செய்கிறார்கள். ''நாம் கிறீஸ்தவர்கள் அல்ல" என்று கூறினாலும் ''பரவாயில்லை இதனை வாசித்துப் பாருங்கள்" என்று தமது பிரச்சாரப் பத்திரங்களை திணிக்க முற்படுவார்கள். ''அதுவும் வேண்டாம்" என்று சொல்லியதும் ஒரு கடுமையான பார்வை பார்ப்பார்கள். ''இதற்காக உங்களுக்கு எவ்வளவு பணம் தருகின்றார்கள்" என்று கேட்கவேண்டும் போல் தோன்றும். இப்படிப் பல.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினகரனில் பிழையில்லை. அவர் பின்னால் பாரப்பட்டு ஜெபித்துக்ககொண்டு திரியும் எம்மவர்களில்தான் பிழை. அங்கிலிக்கன் திருச்சபை பேராயரும் இலங்கை அரசின் விருந்துண்டபின் யுத்தத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். அதேபோல் தினகரன் போன்றவர்களும் விவிலியத்தை கையிலும் கொடுவாளை நெஞ்சிலும் கொண்டுள்ளார்கள். உண்மையில் இவர்கள் மக்களில் அன்பு கொண்டவர்கள் என்றால் வாகரையிலிருந்து வெளியேறி மரங்களுக்குக் கீழ் வாழும் மக்களைச் சென்று பார்த்து ஆறுதல் கூற வேண்டுமேயொழிய ராஜபக்சவின் இடியப்பத்துக்கும் சொதிக்கும் நாக்கை இழுத்திருக்கக்கூடாது. அல்லேலூயா.

Link to comment
Share on other sites

மதம் என்ற ஒன்று மனிதனால் மனிதர்களுக்காக படைக்கப்பட்டது.

அது பல காலங்களுக்கு முன்பிருந்தே மனிதனுடன் இழுபடுகின்றது.

அந்தந்த காலத்திற்கேற்ப மனிதனை பக்குவபடுத்த சில அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்குள் கடவுள் புகுத்தப்படுகிறார். அல்லது மனிதனிடத்தில் இருக்கும் கடவுள்பயத்தை காட்டி மனிதனை பக்குவபடுத்த அவர்கள் முனைந்திருக்கலாம்.

இது கலிகலாம் கடவுளை யார் அறவே நம்புவதில்லையோ அவன்தான் கோயில்களை கட்டுகிறான். கடவுளுக்கு தொண்டு செய்வதாக கூறி ஏமாருவோரின் பணத்தை கொள்ளை அடிக்கிறான்.

மனிதனிற்கு எவற்றின் மீதெல்லாம் ஈடுபாடுள்ளதோ அதையெல்லாம் வியாபார மூலதனமாக்குவது வியாபாரிகளின் இயல்பு. கல்வியில் தமிழர்க்கு ஈடுபாடு அதிகம் என்பதனால், இலவசமாய்ப் பள்ளியில் கற்பிப்பதற்குப் பதில் ரியூசன் நடாத்தினார்கள் பல வாத்தியார்கள். தாம்கற்பிப்பதற்காக ஊதியம் பெறுகின்ற பள்ளி வகுப்பறைளகிற் கூட பகிரங்கமாகத் தமது ரியூற்ரறிகளிற்கு வருமாறு பள்ளி மாணவர்களை அவர்கள் விளம்பரம் செய்து அழைத்தார்கள். நிலமை இவ்வாறு உள்ளதனால், அதாவது உண்மையான குருவாக அமைந்து அறிவைப் பகிர முயலாத வியாபாரிகள் தான் இன்று அதிகம் கற்பித்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பதனால், கற்பதைப் புறக்கணிப்போம் என்று எவரும் சொல்வதில்லை எப்போதும் சொன்னதில்லை.

விஞ்ஞானத்தை வைத்து வைத்தியர் முதல், மருந்துக் கொம்பனிகள் விஞ்ஞானிகள் என்று செய்யாத வியாபாரம் எதுவும் இல்லை. உதாரணத்திற்கு வறுமைப் பட்ட நாடுகளில் மாற்றப்படக்கூடிய வருத்தங்களால் மக்கள் மடிகையில், அவ்வருத்தங்களிற்கான மருந்து கையில் இருந்தும் கூட பணம் வராததால் அதை அனுப்பி வைக்க மறுக்கும் விஞ்ஞான வியாபாரம் தான் மேற்கில் உள்ளது. அதற்காக, உண்மையான மனித சேவையை அடிப்படையாகக் கொண்டியங்காத பணம் பண்ண விரும்புவோர் தான் இன்று வைத்தியராயும் விஞ்ஞானியாயும் வருகின்றனர் எனவே மருத்துவ விஞ்ஞானத்தைப் புறக்கணிப்போம் என்று எவரும் சொல்வதில்லை. மருத்துவ விஞ்ஞானம் அல்ல விஞ்ஞானத்தின் அனைத்துக் கூறுகளிற்கும் இது பொருந்தும்.

இது போன்றே சட்டம், பொறியியல், அரசியல், விவசாயம் என்று எந்தத் துறையை எடுத்தாலும் அங்கு முதலாளித்துவம் கால்பதிக்கத் தவறுவதில்லை. இவைகளைப் போன்று தான் மக்களின் கடவுள் தொடர்பான ஈடுபாட்டையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

எனவே உண்மையில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இதயசுத்தியான மனிதநேயத்தாலும் சமூகஅக்கறையாலும் உந்தப்பட்டு ஒருவர் கடவுள் நம்பிக்கை என்ற விடயத்தை அணுகும் போது, அங்கு கடவுள் நம்பிக்கை வியாபாரமாக்கப்படுவதால் அது ஒழிக்கப்படவேண்டும் என்ற கறுப்பு வெள்ளைப் பார்வையை ஒத்த வாதங்கள் உருவாக வாய்ப்பில்லை.

அது தவிர மக்கள் தமக்குள் என்னத்தை உணர்கின்றனர், தாம் உணரும் உணர்வுகள் பற்றி எதற்காக தம்மை ஒத்த உணர்வுடையோரிடம் அவர்கள் கருத்துப் பகிர்கின்றனர், அத்தகைய கருத்துப் பகிர்வுகளிற்கு அவர்கள் என்ன பெயர் கூட்டுகின்றாhக் என்பதெல்லாம் அவரவர் சுதந்திரம். சக மனிதரின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் மக்கள் எந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் அதை அவர்கள் நிறுத்தவேண்டும் என்று நினைப்பதற்கு எவரிற்கும் உரிமை இல்லை. மேலும, மாபெரும் அறிவாளி எனக்கே கடவுள் என்ற உணர்வு வரவில்லை இந்த அற்பப் பதர்களிற்கா கடவுள் உணர்வு வரும், சரி அப்படியே தான் வருகின்றது என்றாலும் கூடு அந்த உணர்வைப் பிரதிபலிக்க அதற்கு என்ன பெயர் வைக்கிறார்கள் என்று பாருங்கள,; சற்றுமே அழகாயில்லையே என்ன இரசனை இவர்களிற்கு முதலிய கேள்விகளைப்பொறுத்தவரை அவை அவற்றின் பேசுபொருளைக் காட்டிலும் பேசுபவரைப் பற்றி அதிகம் சங்கதிகள் சொல்கின்றனவோ என்று கூடச் சிலரிற்குத் தோன்றலாம்.

Link to comment
Share on other sites

எங்களுக்கு மேலான சத்தி ஒன்று இருக்கிறது என்பது என் கருத்து. சமயம் என்பது மனிதனை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது ஆனால் இன்று பணம் சம்பாதிக்க பகடக்காயாக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பெரியவர்கள் இங்கு பெரிய பெரிய கருத்துக்கள் கூறுகின்றார்கள். நானும் இங்கு ஏதாவது எழுத அனுமதி உண்டோ அல்லது பேசாமல் எனது வாயை மூடிக்கொண்டு இன்னும், இன்னும் சுமக்கின்ற பாவ மூட்டையை பெரிதாக்காமல் இருப்போமா? :lol::unsure::blink:

Link to comment
Share on other sites

இலக்கியன் சொன்னது தான் உண்மை! இதுதான் என் கருத்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு மேலான சத்தி ஒன்று இருக்கிறது என்பது என் கருத்து. சமயம் என்பது மனிதனை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது ஆனால் இன்று பணம் சம்பாதிக்க பகடக்காயாக்கப்பட்டுள்ளது.

இதை தான் எல்லோரும் சொல்கிறார்கள்.

நீங்கள் கூட கடவுள் பயத்தினால்தான் இதை நம்புகின்றீர்கள்.

அந்த சக்தி இவ்வுலகில் என்னதான் செய்தது?

இன்னமும் எதுவும் செய்யாமிலிருக்க காரணம் என்ன?

நாம் செய்யும் பாவங்களுக்கு ஒரு பரிவிடை தேட கடவுளை நம்புகிறோம் அவ்வளவுதான்.

கடவுள் ஒருவர் இருந்திருப்பின் எந்த அடிப்படை வசதியிமில்லாமல் மனிதனை படைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன்?

ஏன் அவர் மனிதனை படைக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி

இங்கே நான் எழுதினால் விதாண்டாவாதங்கள் தான் வரும். இருந்தாலும் ஒன்று சொல்கின்றேன்.

மனிதனால் என்றைக்கு உலகத்தை, அல்லது இந்தப் பிரபஞ்சத்தை தன் கட்டளைக்கு அமைய செலுத்த முடிகின்றதோ, அன்று வரைக்கும் எமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்ற நம்பிக்கையை மாற்ற ஒரு போதும் முடியாது. இலக்கியன் சொன்னது பயமல்ல. அது தான் உண்மை.

இன்று கண்டு பிடிப்புக்களை வைத்துக் கொண்டு, கடவுளை வென்று விட்டோம் என்று மார்தட்டிட முடியாது.

இன்றைக்கு மனிதனுக்குப் பிரச்சனை கொடுத்து வரும் இயற்கையைக் கூட மனிதனால் வெல்லவே முடியவில்லை. மழை வருவதையோ, புயல் வருவதையோ, இம்மியளவும் தடுக்க அவனால் முடிந்துள்ளதா? அதை அறிந்து தற்பாதுகாப்பு மட்டுமே செய்ய முடிகின்றதே தவிர, அதை நம் வழிக்குள் கொண்டு வரவே முடியவில்லை. இன்றைக்கு ஐநா சூழலில் வெப்ப அதிகரிப்பால் ஏற்படப் போகின்ற பிரச்சனை குறித்து எச்சரிக்கை விடுகின்றது.

என்றைக்கு உங்களால் இத்தனை தடையையும் தகர்க்க முடிகின்றதோ அன்று வந்து கடவுள் பற்றி சவாலை விடுங்கள். அதுவரைக்கும் எமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்பதை மறுப்பதற்கில்லை

அந்த சக்தி இவ்வுலகில் என்னதான் செய்தது?

இன்னமும் எதுவும் செய்யாமிலிருக்க காரணம் என்ன?

நாம் செய்யும் பாவங்களுக்கு ஒரு பரிவிடை தேட கடவுளை நம்புகிறோம் அவ்வளவுதான்.

கடவுள் ஒருவர் இருந்திருப்பின் எந்த அடிப்படை வசதியிமில்லாமல் மனிதனை படைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன்?

ஏன் அவர் மனிதனை படைக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்குப் பதில் என்பது தேடலாகும். நாஸ்திக சிந்தை கொண்டிருந்த விவேகானந்தரும் இப்படி ஒரு தேடல் செய்யவெளிக்கிட்டுத் தான் சைவத் துறவியானார். நீங்களோ நானோ எப்படிப் பிறந்தோம், எதற்காகப் பிறந்தோம், எங்கிருந்து பிறந்தோம், மறைந்த பின் எங்கே போவாம் என்று தெரிந்திருந்தால் இத்தனை மனச்சஞ்சலங்கள் வந்திருக்காதே. அதற்கு வைத்திருக்கின்ற பதில்கள் தான் மதக்கோட்பாடு. உங்களுக்கு வேறு தெரிந்திதால் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் என்ற சொல் சங்ககாலத்தில் முனிவர்களை குறிபிட்டது என்று சில புத்தகங்கள் கூறுகிறது.சில உதாரணங்கள்.

"கடவுள் நண்ணிய பாலை போல

ஓரீனன் ஓழுகும் என்னைக்குப்

பரியலேன் மன்யான் பண்டொரு காலே"

வாயிலாக குறுந்தொகை பாட்டில்(203) துறவியாக முனிவர் கடவுள் என்று கூறபடுவது காண்க

மதுரைகாஞ்சியிலே

"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்

றொன்முது கடவுள் பின்னர் மேய

வரைதாழ் அருவிப் பொருப்பிற் பொருந"

என வரும் அடிகளில் கடவுள் என்னும் சொல்லுக்கு முனிவனாகிய அகத்தியன் என்று பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்

கடவுள் என்று மனிதர்களைக் குறிப்பிடுவது தவறல்ல. அதையும் இந்து மதம் ஏற்றுக் கொள்கின்றது.

கதிர்காமத்திற்குச் செல்கின்ற பக்தர்கள் மற்றவர்களைச் சுவாமி என்று தான் அழைப்பார்களாம். அதன் அர்த்தம் மனித உருக் கொண்டு கடவுள் வருவார் என்ற நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர்களையும் கடவுளுக்கு நிகராக கணிக்கப்படுவது தான்.

கணவன், மனைவியைத் தேவி என்று அழைப்பதும், மனைவி கணவனைச் சுவாமி என்று அழைப்பதும் அந்த அர்த்தமாக இருக்கலாம்.

ஒரு மனிதன் இறந்து சவமாக இருக்கின்ற நிலையில் இருந்து அதைச் சிவமாக்கத் தான், இறுதிக்கிரிகைகள் நடத்தப்படுகின்ற விதம் அமைந்திருக்கும். அதாவது ஒரு மனிதன் இறந்த பின்னர் இறைவனோடு ஒன்றித்து விடுகின்றான் என்பதே அதன் பொருள். அதன் பின்னர் எட்டு நிகழ்வும், அந்தியோட்டியும், வருடாவருடம் திதி கொண்டாடி அவர்கள் வணங்கப்படுவார்கள். அப்போது இறந்தவர்களையே முதன்மைப்படுத்தி வணங்குவார்கள்.

சொல்லப் போனால் இந்து மதப் பக்தி என்பது மனிதவாழ்வில் ஒன்றித்தாதாக, கடவுளுக்கும் மனித உருக் கொடுத்து வழிபடுவதால் தான் இப்படியான ஒன்றித்த எண்ணங்களுக்கு காரணமாக இருக்கலாம். எனவே முனிவர்களைக் கடவுள்களாக விளிப்பதில் தவறில்லை.

Link to comment
Share on other sites

கடவுள் இருப்பது நல்லம்தான்.

காசுக்கு காசாப் போச்சு..

சாப்பாடுக்கு சாப்பாடாப் போச்சு...

இன்பத்துக்கு இன்பம்(பிரேமானந்தா)...

எல்லாம் சும்மாவே கிடைக்கும்.

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளிலேயே அதிக உயிர்களைப் பலி கொன்ற கொன்றுகொண்டிருக்கும் கண்டுபிடிப்பு மதம்.

Link to comment
Share on other sites

ஒரு இலையானுக்கு மனிதன் ஒரு கடவுள். இலையானின் அறிவுக்கு மனிதன் செய்வதெல்லாம் விந்தைதானே! அதுபோல மனிதர்களும் எதையாவது கண்டிருப்பார்கள் அந்தக்காலத்தில்.. (பறக்கும்தட்டு...? :o )

எனக்குத்தெரிந்து ஆத்திகர்கள் நாத்திகவாதிகளைவிட நன்றாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை. நான் இன்னும் ஆத்திகன்தான். ஆனால் முந்தின அளவுக்கு இல்லை.. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருப்பது நல்லம்தான்.

காசுக்கு காசாப் போச்சு..

சாப்பாடுக்கு சாப்பாடாப் போச்சு...

இன்பத்துக்கு இன்பம்(பிரேமானந்தா)...

எல்லாம் சும்மாவே கிடைக்கும்.

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளிலேயே அதிக உயிர்களைப் பலி கொன்ற கொன்றுகொண்டிருக்கும் கண்டுபிடிப்பு மதம்.

எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் வருது

:P

புத்தன்

கடவுள் என்று மனிதர்களைக் குறிப்பிடுவது தவறல்ல. அதையும் இந்து மதம் ஏற்றுக் கொள்கின்றது.

கதிர்காமத்திற்குச் செல்கின்ற பக்தர்கள் மற்றவர்களைச் சுவாமி என்று தான் அழைப்பார்களாம். அதன் அர்த்தம் மனித உருக் கொண்டு கடவுள் வருவார் என்ற நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர்களையும் கடவுளுக்கு நிகராக கணிக்கப்படுவது தான்.

கணவன், மனைவியைத் தேவி என்று அழைப்பதும், மனைவி கணவனைச் சுவாமி என்று அழைப்பதும் அந்த அர்த்தமாக இருக்கலாம்.

ஒரு மனிதன் இறந்து சவமாக இருக்கின்ற நிலையில் இருந்து அதைச் சிவமாக்கத் தான், இறுதிக்கிரிகைகள் நடத்தப்படுகின்ற விதம் அமைந்திருக்கும். அதாவது ஒரு மனிதன் இறந்த பின்னர் இறைவனோடு ஒன்றித்து விடுகின்றான் என்பதே அதன் பொருள். அதன் பின்னர் எட்டு நிகழ்வும், அந்தியோட்டியும், வருடாவருடம் திதி கொண்டாடி அவர்கள் வணங்கப்படுவார்கள். அப்போது இறந்தவர்களையே முதன்மைப்படுத்தி வணங்குவார்கள்.

சொல்லப் போனால் இந்து மதப் பக்தி என்பது மனிதவாழ்வில் ஒன்றித்தாதாக, கடவுளுக்கும் மனித உருக் கொடுத்து வழிபடுவதால் தான் இப்படியான ஒன்றித்த எண்ணங்களுக்கு காரணமாக இருக்கலாம். எனவே முனிவர்களைக் கடவுள்களாக விளிப்பதில் தவறில்லை.

குறிப்பாக மக்கள் காலத்துக்கு காலம் மதம் மாறி கொண்டு வருகிறது உதாரணமாக தமிழரை எடுத்தால் வைதீக மதம்,சமண மதம் பெளத்த மதம்,வைணவ,சைவ,இப்பொழுது இந்துவாக,கிறிஸ்தவன்,இஸ்லாம் ஆக மாறி நிற்கிறார்கள் இதற்கு என்ன காரணம்?

கடவுள் நம்பிக்கை குறைவாலேயா அல்லது கடவுள் ஒன்றும் செய்யமாட்டார் நாம் செய்வதே செய்வோம் என்று செய்து கொண்டு போறானா.

Link to comment
Share on other sites

இதை தான் எல்லோரும் சொல்கிறார்கள்.

நீங்கள் கூட கடவுள் பயத்தினால்தான் இதை நம்புகின்றீர்கள்.

அந்த சக்தி இவ்வுலகில் என்னதான் செய்தது?

இன்னமும் எதுவும் செய்யாமிலிருக்க காரணம் என்ன?

நாம் செய்யும் பாவங்களுக்கு ஒரு பரிவிடை தேட கடவுளை நம்புகிறோம் அவ்வளவுதான்.

கடவுள் ஒருவர் இருந்திருப்பின் எந்த அடிப்படை வசதியிமில்லாமல் மனிதனை படைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன்?

ஏன் அவர் மனிதனை படைக்க வேண்டும்?

வணக்கம் மருதங்கேணி உங்கள் கேள்விகளுக்கு தூயவன் நல்ல கருத்துக்கள் தந்துள்ளார்

இதை தான் எல்லோரும் சொல்கிறார்கள்.

நீங்கள் கூட கடவுள் பயத்தினால்தான் இதை நம்புகின்றீர்கள்.

நான் கடவுள் பயத்தினால் இந்தக்கருத்தை முன்வைக்கவில்லை சிந்து வெளிநாகரிக காலத்தில் இருந்த மக்கள்தான் இயற்கை மீது கொண்ட பயத்தின் காரணமாக இடி மின்னல் மழை காற்று கல் மரம் என்பவற்றை கடவுளாக வழிபட்டார்கள் என ஆராட்சியாளர்கள் கூறுகின்றார். அந்தக்காலத்துக்கு அது பொருந்தக்கூடியது அமைந்திருக்கலாம். சித்தாந்த இலக்கியங்கள் கடவுள் பற்றிக்கூறும் கருத்து

எமது உடல் ஜடம் ( தானாக இயங்கமாட்டாதவை) இந்த உடலை இயக்க ஒரு சத்தி வேண்டும் அதுதான் ஆன்மா அல்லது உயிர் என்கின்றோம். அதே போல இந்த உலகம் ஒரு ஜடம் அதை இயக்கும் சத்திதான் கடவுள் என்கின்றது

அந்த சக்தி இவ்வுலகில் என்னதான் செய்தது?

இன்னமும் எதுவும் செய்யாமிலிருக்க காரணம் என்ன?

நாம் செய்யும் பாவங்களுக்கு ஒரு பரிவிடை தேட கடவுளை நம்புகிறோம் அவ்வளவுதான்.

கடவுள் ஒருவர் இருந்திருப்பின் எந்த அடிப்படை வசதியிமில்லாமல் மனிதனை படைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன்?

ஏன் அவர் மனிதனை படைக்க வேண்டும்?

உங்களுக்கு எழுந்துள்ள கேள்விகளுக்கு விடை யாராலும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய கேள்விதான் யாராவது பதில்தரவும். மேலிருந்து அப்பிள் பழம் விழுந்த போது யாருக்கு புலப்படவில்லை ஏன் கீழ் நோக்கி அப்பிள் பழம் விழுகின்றது என அதை நியூட்டன் கண்டு பிடித்தார் இதற்கு காரணம் பூவியீர்ப்பு விசை என. இதைப்போல இந்த உலகை இயக்கும் சத்தி எது எனக்கண்டு கொள்ளும் காலம் வரும்வரை ஏமாற்றும் வித்தைகள் தொடரும் .

கடவுளின் அவதாரம் அல்லது தூதுவர் என்று சொல்லும் சிலர் திருநீறு சிவலிங்கம் மணிக்கூடு என்பவற்றை அற்புதம் மூலமாக எடுப்பதாக சொல்கிறார்கள் அந்த சிவலிங்கம் அல்லது திருநீறு இந்த பிரபஞ்சத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாகவே உள்ளன இது அற்புதம் என்றால் இந்த உலகத்தில் இல்லாத தாதுப்பொருள்களினால் அது ஆக்கப்பட்டு இருக்க வேண்டுமே :lol:

என்னைப்பொறுத்தவரை ஆதிமனிதன் பயத்தினால் ஏற்படுத்திய கடவுள் இன்று பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது என்பதேயாகும்

கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்து நல்ல கட்டுரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகை ஒரு சக்தி இயக்குகிறது அதுதான் கடவுள் என்று பலர் நினைக்கிறார்கள். உலகை இயக்கும் சக்திகளை அறிவியல்மேதை ஐன்ஸ்டீன் வரையறுத்துக் கூறுகிறார். மொத்தம் நான்கு சக்திகள்.

1. அணுக் கருவுக்குள் உள்ள லேசான ஈர்ப்பு விசை,

2. அணுக் கருவுக்கு வெளியே உள்ள வலுவான ஈர்ப்பு விசை,

3. மின் காந்த விளைவு,

4. புவி ஈர்ப்பு

அடுத்து நீயூட்டனின் முதலாவது விதிப்படி (அசைய நிலை விதி). ஏதாவது பொருளின் மீது விசை ஏதும் செலுத்தப் படாமல் இருந்தால் அது இருந்த இடத்தில்இருக்கும் அல்லது முன்பு இருந்தது போல் அசைந்து கொண்டு இருக்கும்.

ஐன்ஸ்டீன் கூறிய நான்கு சக்திகளும்ஏதாவது திடப் பொருள்மீது படும் போது இயக்கம் உண்டாகிறது. கடவுள்தான் உலகத்தை இயக்குகிறார் என்பது மிகைப் படுத்தப் பட்ட ஒன்று.

இந்த நான்கு சக்திகளையும் ஒன்று படுத்தினால் கடவுளின் இருப்பு பொய்த்து விடும் என்பது ஐன்ஸ்டீனின் கருத்தாக இருந்தது. ஆனால் அவரால் அது முடியவில்லை. அனால் அவருக்கு பின் வந்தவர்கள் அந்த நான்கு சக்திகளில் இரண்டை ஒன்றிணைத்து நோபிள் பரிசு பெற்றிருக்கிறார்கள். இனி வரும் விஞ்ஞானிகள் இந்த நான்கையும் ஒன்றிணைக்க மாட்டார்களா?

தத்துவார்த்த அடிப்படையில் பார்க்கப்போனால் கடவுள் இருக்கிறார் என்ன கருத்து இவ்வுலகத்தில் தோற்றம் பெறும் போதே கடவுள்இல்லை என்ற கருத்தும் தோற்றம் பெற்று விட்டது. கடவுள் இல்லை என அறிவியல் அடித்து கூறவில்லை ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் கடவுளின் இருப்பை பொய்ப்பித்துக் கொண்டுதான் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை மனித உருவில காண விரும்புறவங்களும் காண விரும்பாதவங்களும்.. அடிப்பட்டிட்டு இருக்காங்க.. அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கத் தேவையில்ல..கடவுள் இல்லையா இருக்கா என்று.

அறிவியல் விளக்கங்கள் சக்தியின் மாறுபட்ட வடிவங்கள் மற்றும் அவற்றின் விளைவுகளை பற்றிச் சொல்கின்றனவே தவிர சக்தியின் முதல் எது என்பதை இன்னும் தான் தேடிக் கொண்டிருக்கின்றன. கடவுள் என்பது சக்தியின் மூலமாக இருக்கிறது..! அவ்வளவும் தான்..! இதை விளங்கிக்க ஏன் தான் கஸ்டப்படுறாங்க மனிசாள்..! :P :icon_idea:

Link to comment
Share on other sites

என்னைப்பொறுத்தவரை ஆதிமனிதன் பயத்தினால் ஏற்படுத்திய கடவுள் இன்று பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது என்பதேயாகும்

இதுதான் உண்மை.

இதுவே தான் என்னுடைய கருத்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.