Jump to content

இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

வரலாற்று ஆய்வாளர் திரு.தெய்வநாயகம் அவர்களின் பேச்சு, அவசியம் காண  வேண்டிய காணொளி..!

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தகவல்கள் நிறைந்த காணொளி.இவரின் ஆய்வுகள் பொக்கிசமானமை.இவையும் பாதுகாக்கப்பட வேண்டும்.ஐயா கூறியது போல் எமது தமிழர் வரலாறுகளை உரியமுறையில் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை எல்லோரிடமும் இருக்கின்றது.
இணைப்பிற்கு மிக்க நன்றி ராசவன்னியர்.இப்படியான காணொளிகளை இணையுங்கள்.

கலோ இனி பேசுவ...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நேர்தியான, அதைவிட நேர்மையான பேச்சு.

ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியை விட, தன் சுய கீர்த்தியை ஐயா பேசினாலும் கூட, அதையும் அறிவுச் செருக்கு என்று ரசிக்கவே முடிகிறது.

ரோமில் தமிழர் குடியிருப்பு இருந்தது, சோழ நாணயங்கள் கிடைத்தன எனவே ரோமனியர்கள் தமிழர்கள், சீலன் என்ற பெயர்தான் மருவி சீசர் என்றாகியது என்று பைத்தியக்காரத்தனம் பண்ணாமல் விட்டார் பாருங்கள் - அதுதான் முத்தாய்ப்பு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

மிக நேர்தியான, அதைவிட நேர்மையான பேச்சு.

ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியை விட, தன் சுய கீர்த்தியை ஐயா பேசினாலும் கூட, அதையும் அறிவுச் செருக்கு என்று ரசிக்கவே முடிகிறது.

ரோமில் தமிழர் குடியிருப்பு இருந்தது, சோழ நாணயங்கள் கிடைத்தன எனவே ரோமனியர்கள் தமிழர்கள், சீலன் என்ற பெயர்தான் மருவி சீசர் என்றாகியது என்று பைத்தியக்காரத்தனம் பண்ணாமல் விட்டார் பாருங்கள் - அதுதான் முத்தாய்ப்பு.

 

ஒன்றுமே இல்லாத/தெரியாத குடுகுடுப்பைகள் குலுக்கும் இந்தக்காலத்தில் ஐயாவைப் போன்று நாலு விடயங்கள் தெரிந்தவர்கள் தங்களைப்பற்றி சொல்வதில் எந்த தவறும் இல்லை.

ஒருவர் தன்னைப்பற்றி பகிரங்கமாக சொல்வதன் மூலம்தான் இவர் அந்த விடயத்தைப்பற்றி சொல்வதற்கு தகுதியானவரா என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஒன்றுமே இல்லாத/தெரியாத குடுகுடுப்பைகள் குலுக்கும் இந்தக்காலத்தில் ஐயாவைப் போன்று நாலு விடயங்கள் தெரிந்தவர்கள் தங்களைப்பற்றி சொல்வதில் எந்த தவறும் இல்லை.

ஒருவர் தன்னைப்பற்றி பகிரங்கமாக சொல்வதன் மூலம்தான் இவர் அந்த விடயத்தைப்பற்றி சொல்வதற்கு தகுதியானவரா என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்,

உதாரணதுக்கு இவர் இவ்வளவவையும் சொல்லி இராவிட்டால், எனக்கு இவரின் பின்புலம் பற்றி தெரிந்திராது. யாரோ இன்னுமொரு யுடியூப் கோமாளி என்று நினைத்திருக்கவும் கூடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்,

உதாரணதுக்கு இவர் இவ்வளவவையும் சொல்லி இராவிட்டால், எனக்கு இவரின் பின்புலம் பற்றி தெரிந்திராது. யாரோ இன்னுமொரு யுடியூப் கோமாளி என்று நினைத்திருக்கவும் கூடும்.

இதென்ன புது கண்டுபிடிப்பா இருக்கே..?
அதற்கு உங்கள் வரைவிலக்கணம் எப்படியோ..? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே காணொளியில் பேசுபவர், முனைவர்.கோ.தெய்வநாயகம் அவர்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக பணியாற்றியவர்.

இன்னொரு காணொளியும் இருக்கு..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்,

உதாரணதுக்கு இவர் இவ்வளவவையும் சொல்லி இராவிட்டால், எனக்கு இவரின் பின்புலம் பற்றி தெரிந்திராது. யாரோ இன்னுமொரு யுடியூப் கோமாளி என்று நினைத்திருக்கவும் கூடும்.

 

அண்மைக்காலங்களின் யாழ்களத்தில் ஒரு சிலரால் யுடியூப் கோமாளிகள் என மிக இலகுவாக நக்கலடித்து தங்களின் அதிமேதாவித்தனமான கருத்துக்களை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
இன்றைய தொலைக்காட்சி  வானொலி ஊடகங்களே தங்கள் செய்திகளை யுடியூப்பில் தரவேற்றுவதில் ஆர்வம்  காட்டுகின்றார்கள்.அந்த அளவிற்கு யுடியூப் முக்கிய தளமாக உருவாகி விட்டது. அதை விட யுடியூப் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவுகளும் நிறையவே வந்து கொண்டிருக்கின்றது.பல தொழில்நுட்ப செய்முறைகள் எல்லாம்  யுடியூப் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகின்றது.புத்தக படிப்பின் மூலம் தெரிந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு விடயத்தை இனங்காண முடியாவிடில் எல்லாம்  கோமாளித்தனமாகவே தெரியும்..:cool:

இனி பேசுவ...? 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இதென்ன புது கண்டுபிடிப்பா இருக்கே..?
அதற்கு உங்கள் வரைவிலக்கணம் எப்படியோ..? :)

 

1 hour ago, ராசவன்னியன் said:

மேலே காணொளியில் பேசுபவர், முனைவர்.கோ.தெய்வநாயகம் அவர்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக பணியாற்றியவர்.

இன்னொரு காணொளியும் இருக்கு..!

 

 

மன்னிக்கவேண்டும் ரா.வ,

நான் இவரை யூடியூப் கோமாளி எனக் கூறவில்லை. இவர் தன் தகமைகள் பற்றி கூறி இராவிடின், இவரையும் அப்படி நினைத்திருப்பேன் என்றே கூறினேன்.

யுடியூப் கோமாளிகள் டிஸ்கி:

தமக்கு முற்றிலும் விளக்கம் இல்லாத ஒரு விடயத்தை, எந்த ஆராய்சி, துறைசார் நிபுணத்துவம், உசாத்துணை ஆதாரம் ஏதுமின்றி மானாவாரியாக வியாக்கியானம் கொடுப்பவர்கள்.

யார் யுடியூப் கோமாளிகள்? சில உதாரணங்கள் கீழே

 

 

எல்லாம் லைக் வாங்கி காசு பார்க்கத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

அண்மைக்காலங்களின் யாழ்களத்தில் ஒரு சிலரால் யுடியூப் கோமாளிகள் என மிக இலகுவாக நக்கலடித்து தங்களின் அதிமேதாவித்தனமான கருத்துக்களை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
இன்றைய தொலைக்காட்சி  வானொலி ஊடகங்களே தங்கள் செய்திகளை யுடியூப்பில் தரவேற்றுவதில் ஆர்வம்  காட்டுகின்றார்கள்.அந்த அளவிற்கு யுடியூப் முக்கிய தளமாக உருவாகி விட்டது. அதை விட யுடியூப் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவுகளும் நிறையவே வந்து கொண்டிருக்கின்றது.பல தொழில்நுட்ப செய்முறைகள் எல்லாம்  யுடியூப் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகின்றது.புத்தக படிப்பின் மூலம் தெரிந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு விடயத்தை இனங்காண முடியாவிடில் எல்லாம்  கோமாளித்தனமாகவே தெரியும்..:cool:

இனி பேசுவ...? 🤣🤣🤣

பொழுது போக்கு, செய்திக்கு யுடியூப் ஓகே ஆனால் அறுவை சிகிச்சை எப்படி செய்வது என்பதை யூடியூப் பார்த்து கற்ற ஒருவரிடம் நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய ரெடியா?

வரலாற்று ஆராய்சி, தொல்லியல் தடயவியல் என்பது வேற லெவல் மேட்டர். இதற்கென தனிப்பட்ட பயனாளர் (subscriber) தளங்கள் உள்ளன, ஜேர்னல்கள் உள்ளன, பீல்ட் வேர்க், Peer review இப்படி பல விடயங்கள் மூலம் ஒரு எடுகோளை நிறுவ வேண்டும்.

ஒரு கோயிலை வீடியோ எடுத்து விட்டு அதை டப்பிங் பண்ணி யுடியூப்பில் ஏத்தினால் -அதையும் நம்பி - அதையும் “ஆராய்சி” என பார்ப்பீர்களா?

அப்போ நீங்கள் அடுத்த கண் ஆப்பரேசனையும் ஒரு யுடியூப் டாக்டரிடமே செய்யுங்கள். 

பார்வை பிச்சிக்கும் 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பொழுது போக்கு, செய்திக்கு யுடியூப் ஓகே ஆனால் அறுவை சிகிச்சை எப்படி செய்வது என்பதை யூடியூப் பார்த்து கற்ற ஒருவரிடம் நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய ரெடியா?

அறுவை சிகிச்சை பற்றிய காணொகள் அது சம்பந்தமாக படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். என் போன்றவர்களுக்கு அப்படியான காணொளிகள் மர்மமாக இல்லாமல் எப்படி செய்கின்றார்கள் என தெரிந்து கொள்ள உதவும்.

உங்களை போன்ற ஜாம்பவான்களுக்கு சத்திர சிகிச்சை கூடங்களில் அருகில் நின்று பார்க்க வசதிகள் இருக்கும். நமக்கு????:(

நான் யுடியூப் பார்ப்பது ஒன்றை தெரிந்து கொள்வதற்கு மட்டுமே. பார்த்ததை வைத்து தொழில் செய்வதற்கு அல்ல. சில வேளைகளில் மின்சார இணைப்புகள்,தொலைபேசி இணைப்புகள்,அலுமாரி கட்டில் கதிரை பொருத்துதல் பற்றிய விவரங்களுக்கு யுரியூப்பை பார்ப்பேன்.பேருதவியாக இருக்கும். எனக்கு தெரிய வாகனம் திருத்துபவர்கள் கூட புதிய வாகனங்களில் வரும் சிக்கல்களை யுடியூப் காணொளிகளை பார்த்து தெரிந்து கொள்கின்றனர்..அண்மையில் நான் வேறு வாகனம் வாங்கும் போது கூட யுடியூப்பில் வரும் காணொளியில் வரும் கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் வைத்தே தெரிவு செய்தேன்.

5 hours ago, goshan_che said:

வரலாற்று ஆராய்சி, தொல்லியல் தடயவியல் என்பது வேற லெவல் மேட்டர். இதற்கென தனிப்பட்ட பயனாளர் (subscriber) தளங்கள் உள்ளன, ஜேர்னல்கள் உள்ளன, பீல்ட் வேர்க், Peer review இப்படி பல விடயங்கள் மூலம் ஒரு எடுகோளை நிறுவ வேண்டும்.

இப்படியான தளங்கள் பல உண்மைக்கு புறம்பான ஆய்வுமுடிவுகளையும் வெளியிடுகின்றன.எல்லாவற்றையும் நம்ப ஏற்க முடியாதவை.

5 hours ago, goshan_che said:

ஒரு கோயிலை வீடியோ எடுத்து விட்டு அதை டப்பிங் பண்ணி யுடியூப்பில் ஏத்தினால் -அதையும் நம்பி - அதையும் “ஆராய்சி” என பார்ப்பீர்களா?

கண்ணா! சந்தைக்கு கத்தரிக்காய் வாங்கப்போனால் வியாபாரி தூக்கிப்போடுற கத்தரிக்காய் எல்லாத்தையும் எடுக்கப்படாது.சூத்தை கத்தரிக்காயும் அதுக்கை இருக்கும்.பார்த்து நல்லதாய் தெரிஞ்சு எடுக்கணும்.வெண்டிக்காய் வாங்கினால் முறிச்சுப்பார்த்து வாங்கணும்.அது போலத்தான் யுடியூப் விடியோக்களும்.தெரிஞ்சு தேடி நல்லதை மட்டும் பாக்கணும்😂

5 hours ago, goshan_che said:

அப்போ நீங்கள் அடுத்த கண் ஆப்பரேசனையும் ஒரு யுடியூப் டாக்டரிடமே செய்யுங்கள். 

பார்வை பிச்சிக்கும் 🤪

லண்டனிலை இருக்கிற எங்கட ரமில் டொக்டர் பொடியளை நக்கலடிக்கிறியள் போல.. 🤪

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.