Jump to content

வவுனியா- ஏ9 வீதியை அண்டிய பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா- ஏ9 வீதியை அண்டிய பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கை

வவுனியா- ஏ9 வீதியை அண்டிய பகுதியில்  இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கை

வவுனியா புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சந்தேகத்திற்கிடமாக வீதியால் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன், மோப்ப நாயின் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாடுமுழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கூறியதனையடுத்து, பொதிகளுடன் வருபவர்களிடமும் சந்தேகத்திற்கிடமான பேருந்துகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் வவுனியா- ஏ9 வீதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/வவுனியா-ஏ9-வீதியை-அண்டிய-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்காலம் போன்று சிங்கள முப்படைகளினதும் சோதனைக் கெடுபிடிகள்.. அதிகரித்து காணப்படுவதோடு.. நாட்டில் சுமூக நிலை இருக்கா என்ற கேள்வியையும் உல்லாசப் பயணிகளிடம் ஏற்படுத்துவதை அடுத்து.. உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. 

உல்லாசப் பயணிகள் மட்டுமன்றி.. இந்தச் சோதனை நடவடிக்கைகளால்.. உள்ளூர் மக்களும் விசனத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இருந்தாலும் வாள் வெட்டு மற்றும் குடுக்கும்பல்களின் செயற்பாட்டை இது குறைக்கும் என்று மக்களில் சிலர் நம்புகின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயமுறுத்தியும், ஆசைவார்த்தை கூறியும் வாக்கு சேர்த்து தமிழ் மக்கள் எங்கள் கொள்கைகளை ஏற்று எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். எங்கள் பிரச்னையை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம். தமிழர் வாயைப்பொத்திக்கொண்டு நாங்கள் தருவதை பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். பவுத்தம் முக்கிய மதம், சிங்களம் பிரதான மொழி, வாய்பிளந்த சிலதுகள் தமிழ்த்தலைமைகள். இதற்காக அவன் செய்யும் ஏற்பாடுகள் இவை. அறிவிலிகளோடு கதைப்பதால்: அதை சிங்கள மக்களிடத்தில்  பெரிது படுத்தி எதிர்க்கட்சி ஒன்று இல்லாமல் தாங்களே சர்வாதிகாரிகளாக அரசியல் செய்யவும் வாய்ப்புண்டு. ஆகவே இவர்களோடு கதைப்பதை விடுத்து, நம்மை நாம் நிர்வகிக்க வேண்டிய காரணம் என்ன என்பதற்கான ஆதாரங்களை திரட்டி, அதற்கான ஆதரவுகளை திரட்டுவதும், சிங்களம் தெரிந்தவர்கள் தங்கள் முகநூல் மூலம் சிங்கள இளம் தலை முறையினருக்கு விளங்கப்படுத்தவும், வெளிநாட்டிலுள்ளோர் தங்கள் அரசாங்ககங்களுக்கு விளங்கப்படுத்தியும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். நாங்கள் அழியப்போகிறோம் என கூப்பாடு போடுவதிலும் பார்க்க, அதற்குமுன் எம்மாலான முயற்சிகளை செய்து பார்த்தபின்பு அழிவதில் தப்பில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.