Jump to content

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை

Jan 26, 20200

 

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கொழும்பு தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள பொது இடங்கள் மற்றும் ஹோட்டல் உணவகங்களுக்குள் நுழையும்போது ஹோட்டல் ஊழியர்கள் வருபவர்களிடம் அவர்களது வாயை நன்றாக கழுவசொல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரில் பெருமளவான சீனர்கள் வசிப்பதால் சீனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முறையைப் பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார்

 

http://www.samakalam.com/செய்திகள்/வைரஸ்-அச்சுறுத்தலை-அடுத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளருக்கும்  சாதகமாய்ப் போய்ச்சு 

Link to comment
Share on other sites

இலங்கையர்களை மீள அழைத்துவர நடவடிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான சீனா உகான் நகரில் உள்ள 32 இலங்கையர்களே மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் பீஜிங்க், ஷென்ஹூ ஆகிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 40 மாணவர்களையும் மீள நாட்டுக்கு அழைத்துவருதற்கும் தேவையன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயரகள-மள-அழததவர-நடவடகக/150-244517

Link to comment
Share on other sites

17 hours ago, கிருபன் said:

கொழும்பு நகரில் பெருமளவான சீனர்கள் வசிப்பதால் சீனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முறையைப் பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார்

சீனர்களின. பாதுகாப்புக்காகவா அல்லது சீனாவில் இருந்து நோய் இலங்கைக்கு பரவாமல்  தடுப்பதற்காகவா? 

Link to comment
Share on other sites

52 minutes ago, tulpen said:

சீனர்களின. பாதுகாப்புக்காகவா அல்லது சீனாவில் இருந்து நோய் இலங்கைக்கு பரவாமல்  தடுப்பதற்காகவா? 

பெருமளவு சீனர்கள் புதுவருட விடு முறையை கழிக்க  இலங்கைக்கு வந்துகொண்டிருக்கிறார்க l  அத்துடன்  புதுவருட விடுமுறைக்காக அங்கு போன சீனர்களும் விரைவில் திரும்புவார்கள்। எனவே இதனை கருத்தில்கொண்டு இங்குள்ள மக்களை   முக மூடி அணியும்படி கேட்கப்பட்டுள்ளது। இங்குள்ளவர்களை பாதுகாப்பதட்காக என்று கருதலாம்। இருந்தாலும் அது எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்று தெரியவில்லை। 

Link to comment
Share on other sites

7 நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ்.. இதுவரை 80 பேர் பலி..!

Jan 27, 2020

சீனாவின் வூஹான் நகரில் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு இந்நோயின் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5 பேருக்கு இந்நோய்க்கூறு பரவியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கோரனோ வைரஸ் பரவிஇருப்பதையடுத்து பல்வேறு விமான நிலையங்களில் மருத்துவ சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன . உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் குறித்த பதற்றம் பரவி வருகிறது.

வூஹானில் உள்ள அமெரிக்கர்களை சான்பிரான்சிஸ்கோவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை சீன அரசு தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மாணவர்களும் நாடு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வெளியிடங்களுக்கு விலங்குகள், இரைச்சி போன்றவற்றை வர்த்தகம் செய்வதற்கும் சீன அரசு தடை அறிவித்துள்ளது.

https://www.polimernews.com/dnews/98340/7-நாடுகளுக்கு-பரவிய-கொரோனாவைரஸ்..-இதுவரை-80-பேர்-பலி..!

Link to comment
Share on other sites

சீனாக்காரன் செய்த முகமூடியை அணியலாமா?

சீனாக்காரன் வைரஸையும் அவிழ்த்துவிட்டு தன்ர முகமூடியையும் விக்கப்போறான் போல இருக்கு.

Link to comment
Share on other sites

இலங்கை வந்த சீனப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்

Monday, January 27, 2020 - 8:51pm

இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை சுகாதார மேம்பாட்டுக்கு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹுபேயிலிருந்து வந்த 43 வயதான சீனப் பெண் ஒருவர் இவ்வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதற்கான தகவல் அல்ல எனவும், விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது எனவும், சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த பெண் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, சுகாதாரத்துறையினர் இதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.

மக்கள் பீதி அடைய வேண்டாம் என தெரிவித்துள்ள பணியகம், nCoV வைரஸை அடையாளம் காண்பதற்கான வசதிகளைக் கொண்ட ஆய்வகங்களில் இலங்கையும் ஒன்றாகும் என பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் IDH வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் இக்கால அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நோயாளியுடன் இருந்தவர்களை சோதனை செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thinakaran.lk/2020/01/27/உள்நாடு/47524/இலங்கை-வந்த-சீனப்-பெண்ணுக்கு-கொரோனா-வைரஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல உந்த காணிபிடிச்சு புத்தகோயில் கட்டுற பிக்குமாரையும், இப்பவும் வகாப்பிசம் நாம சவூதிகாரர் என்று தம்பட்டம் அடிக்கும் முசுலிம் மவுலபிகளையும் ...இந்துவில் சிலர் மட்டுமே....எயார்பொட்டுக்கு அனுப்புங்கோ ....வரசு அப்படியே அழிஞ்சிடும்...

Link to comment
Share on other sites

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சீன கப்பல்களினூடாக கொரோனா பரவ வாய்ப்பு

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்கள் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் இலகுவாக உள்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.  

அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம், புத்தளம் மாவட்ட மீன்பிடி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று மாரவிலவில் செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தன.  

இதன்போதே அவர்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இது தொடர்பில் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். இதற்கிணங்க வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு மீன் பிடிப்பதற்காக வரும் கப்பல்களை இலங்கை கடலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த கப்பல்களை இலங்கை மீனவர் துறைமுகங்களுக்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாதென்றும் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.  

தற்போது விமான நிலையங்களில் அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் மீன்பிடித் துறைமுகங்களில் அவ்வாறான சுகாதார பாதுகாப்பு செயற்றிட்டங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். (ஸ)

http://www.thinakaran.lk/2020/01/27/உள்நாடு/47478/இலங்கை-கடற்பரப்பில்-மீன்பிடிக்கும்-சீன-கப்பல்களினூடாக-கொரோனா-பரவ-வாய்ப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bandaranaike-International-Airport.jpg

இலங்கையில் விமான நிலையத்திற்குள் நுழைய தடை

விமான பயணிகளை தவிர்ந்த ஏனைய நபர்களுக்கு விமான நிலையத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் இவ்வாறு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இதுவரையில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

43 வயதான குறித்த பெண் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே விமான பயணிகளை தவிர்ந்த ஏனைய நபர்களுக்கு விமான நிலையத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/விமான-பயணிகளை-தவிர்ந்த-ஏ/

Link to comment
Share on other sites

On 1/27/2020 at 9:58 AM, tulpen said:

சீனர்களின. பாதுகாப்புக்காகவா அல்லது சீனாவில் இருந்து நோய் இலங்கைக்கு பரவாமல்  தடுப்பதற்காகவா? 

 

10 hours ago, ampanai said:

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சீன கப்பல்களினூடாக கொரோனா பரவ வாய்ப்பு

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்கள் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் இலகுவாக உள்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.  

அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம், புத்தளம் மாவட்ட மீன்பிடி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று மாரவிலவில் செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தன.  

இதன்போதே அவர்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இது தொடர்பில் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். இதற்கிணங்க வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு மீன் பிடிப்பதற்காக வரும் கப்பல்களை இலங்கை கடலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த கப்பல்களை இலங்கை மீனவர் துறைமுகங்களுக்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாதென்றும் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.  

தற்போது விமான நிலையங்களில் அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் மீன்பிடித் துறைமுகங்களில் அவ்வாறான சுகாதார பாதுகாப்பு செயற்றிட்டங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். (ஸ)

http://www.thinakaran.lk/2020/01/27/உள்நாடு/47478/இலங்கை-கடற்பரப்பில்-மீன்பிடிக்கும்-சீன-கப்பல்களினூடாக-கொரோனா-பரவ-வாய்ப்பு

சீனாவிலிருந்து எகிப்துக்கு போன வணிக கப்பலில் வேலை செய்யும் இலங்கையர் ஆறு பேர் இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்। 

இப்போது  இங்கு கடைகளில் முக மூடிக்கு பெரும் தட்டுப்பாடு।  சீனாவில் இருந்து வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை।

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இரத்த மாதிரிகளை ஹொங்கொங்கில் உள்ள ஆய்வத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்களை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் இரத்த மாதிரிகளின் முடிவுகளை ஒரு நாளுக்குள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய ஹொங்கொங்கில் அதிக வசதிகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், கொரோனா வைரஸ் ஆய்வக சோதனைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இரசாயனப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

https://www.virakesari.lk/article/74307

Link to comment
Share on other sites

சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் தியத்தலாவை முகாமுக்கு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

குறித்த மாணவர்களை தியதலாவை இராணுவ முகாமில் 2 வாரங்கள் வைத்து கண்காணிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சனவலரநத-வரம-மணவரகள-தயததலவ-மகமகக/175-244629

 

 

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தாக்கம் - சீன எல்லையை மூடியது மொங்கோலியா!

கொரோனா வைரஸ் தாக்கம் - சீன எல்லையை மூடியது மொங்கோலியா!

 

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொங்கோலியாவில் பாடசாலைகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நாடுகளுமே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சீனாவின் அண்டை நாடான மொங்கோலியா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் ஊடுருவிடக் கூடாது என்பதற்காக சீனாவுடான எல்லையை மூடிவிட்டது.

இதனால், சீனாவில் இருந்து வரும் வாகனங்கள் மொங்கோலியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இது தொடா்பாக அந்நாட்டு துணை பிரதமா் உல்சிசைகான் கூறியதாவது: சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியாவோா் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. எனவே, சீனாவுடனான மொங்கோலியா எல்லையை மூட முடிவு செய்துள்ளோம். எனவே, அந்த எல்லை வழியாக மொங்கோலியாவில் இருந்து சீனா செல்லவும், சீனாவில் இருந்து மொங்கோலியா வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதவிர, மாா்ச் 2 ஆம் திகதி வரை மொங்கோலியாவில் பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மக்கள் அதிக அளவில் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வா்த்தக கூட்டங்கள், மாநாடு உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த தடை பொருந்தும் என்றாா் அவர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=125066

Link to comment
Share on other sites

’மக்கள் அச்சப்படத் தேவையில்லை’

 

image_497ac316e0.jpgகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது.

அருகிலிருந்து உரையாடுவதையோ, சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். 

சீன பிரஜை ஒருவரே குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை” என்று டொக்டர் அனில் ஜாசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மககள-அசசபபடத-தவயலல/150-244624

Link to comment
Share on other sites

31 minutes ago, nunavilan said:

சீன பிரஜை ஒருவரே குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை” என்று டொக்டர் அனில் ஜாசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

டொக்டரின் தியரி படு முட்டாள்தனமானதா இருக்குது.

Link to comment
Share on other sites

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்! குணமாக்கக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு

  • கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவிற்கு 106 பேர் தற்போது வரை பலியாகியுள்ளனர்.

அந்நாட்டை நிலைகுலையச் செய்திருக்கும் இவ்வைரஸ் தொடர்பில் மருத்துவர்கள் தங்கள் முயற்சிகள் அனைத்தையும் முடுக்கி விட்டிருக்கின்றனர். சில நகரங்களை அரசு தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

சீனாவில் தங்கியிருக்கும் பிரஜைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு விரைந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு தங்களிடம் மருந்து இருப்பதாகவும் அரசு அனுமதியளித்தால் சீனா செல்லத் தயார் எனவும் சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் பேசிய அவர்,

 

 

https://www.ibctamil.com/world/80/135996?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

இலங்கையிலுள்ள சீன தூதரகம் விடுக்கும் முக்கிய செய்தி

சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன பிரஜைகளுக்கு இலங்கையிலுள்ள சீன தூதரகம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.


china.jpg

இந்நிலையில் தங்களது இலங்கைச் சுற்றுலாத் திட்டத்தை இரத்துச் செய்து, சனத்தொகை அதிகமாக மற்றும் நெரிசலாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தூதரகம் சீன நாட்டவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை இலங்கையில் தடுக்கும் திட்டமாகவே இது அமைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/74362

Link to comment
Share on other sites

இலங்கையில் மிருகங்களால் கொரோனா பரவ வாய்ப்பில்லை"

கொரோனா ஆட்கொல்லி வைரஸ் சீனாவில் மிருகங்களில் இருந்தே ஆரம்பத்தில் பரவியிருந்தது. அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு அது பரவியது.

எனினும் தற்போது  இலங்கையில் மிருகங்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என மத்திய மாகாண மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர்.எம்.கே.பீ.ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவில் இந்த வைரஸ் ஆரம்பமாக ஏற்பட்டிருப்பது வெளவ்வால் மற்றும் பாம்பினால் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/74365
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.