Jump to content

“காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா

On Jan 26, 2020

13.01.2020 சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் பயிற்சி பெறத்தொடங்கிய மனுசா மக்களன்பன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இப்பயிற்சியைத் தொடர இருக்கின்றார். இவர் ஏற்கெனவே சுவிற்சர்லாந்தின் காவல்துறையில் எழுதுவினைஞராக மூன்றாண்டுகள் தொழிற்கல்வியை நிறைவு செய்தவர் ஆவார். அத்தொழிற்கல்வியை மேற்கொள்கின்ற போது, காவல்துறையின் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இவரும் பங்குபற்றியிருந்தார். “அந்த வேளையில் தான் காவல்துறையாக வர வேண்டும்” என விரும்பினார் மனுசா. தற்போது இவர் செய்து வரும் இந்த சுவிற்சர்லாந்தின் தரைப்படைப்பயிற்சி எதிர்காலத்தில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகும்.

CEBF97ED-4FB3-4FF7-8D23-C823EED7D98A.jpe

மனுசாவிடம் தரைப்படைப்பயிற்சி பற்றி கேட்டேன். “இப்பயிற்சியைப்பெறுவது வாழ்க்கைக்கான ஒரு கல்வியாகும். இரண்டு கிழமைகள் தரைப்படைப்பயிற்சியிலேயே ஒழுக்கம், விடாமல் போராடுதல் போன்று பலவற்றை நான் கற்றுள்ளேன். பெண்ணான எனக்கு இது ஓர் சவால் எனவே எண்ணுகின்றேன். ஒரு இலக்கை அடைவதற்கு- அதற்காகப் போராட வேண்டும்- என்று என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன்.”

இதே நேரத்தில் சுவிற்சர்லாந்தில் பல ஈழத்தமிழர்கள் தரைப்படையில் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச்சொல்வதாக இருந்தால் சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் உயர்ந்த பதவியில் இருக்கும் துருபன் துச்சாதனன் சூரிச் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானமும் கற்று வருகின்றார். இவர் தான் தரைப்படையில் இருப்பது பற்றி ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையில் “பன்முகப்பண்பாடுகளை அறியும் வேளையில் சுவிற்சர்லாந்தின் தரைப்படைச்சீருடையில் இருப்பதை விரும்புகின்றேன்!” – எனத் தெரிவித்துள்ளார்.

455EF01E-6F7B-4CDB-B359-9216002A4979.jpe

இதே வேளை மனுசா மக்களன்பன் காவல்துறையாக வர விரும்பி, தரைப்படையைப்பயிற்சியைப் பெற்று வருகின்றவர் – தமிழுலகில் தாய்மொழியையும், கலைத்துறையில் பரதநாட்டியத்திலும் ஈடுபட்டு வருபவர்- மிக மனவலிமையுடன் தரைப்படைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார் எனது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி: நிதுர்ஷனா ரவீந்திரன்


 

https://www.thaarakam.com/news/110417

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களின் சுயதம்பட்டத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

பிள்ளை பொலீஸ் அலுவலகத்தில் கிளார்க் இப்போ பொலீஸ் உத்தியோகத்துக்கு முயல்கிறாவாம். சந்தோசம் ஆனால் பேப்பரில போடும் அளவுக்கு இது சாதனையா என்ன 🤦‍♂️.

எனக்கென்னமோ இது சாமத்திய வீடு மாரி ஒரு தம்பட்டம் அடிக்கும் செயல்பாடு மாரியே விளங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

எனக்கென்னமோ இது சாமத்திய வீடு மாரி ஒரு தம்பட்டம் அடிக்கும் செயல்பாடு மாரியே விளங்குகிறது.

முன்னணி காவல் துறையோ அல்லது தரைப்படையோ அல்லது எந்த அரச சேவையாயினும், முதலில் இருக்கவேண்டியது பொறுப்பும் அடக்கமும் ,,எவ்வளவு அதி தீவிர சாதனைகளை செய்தாலும்.

இவர் இப்பொது செய்வது, சுவிஸ் இல் அரசுக்கு ஆற்ற வேண்டிய  கட்டாய கடமை (mandatory military training).

இதை தவிர்பதற்கே, எம்மவர்களில் கணிசமானவர்கள் சுவிஸ் குடி உரிமை எடுப்பதை 40 (எனது நினைவில் உள்ளது, 50 ஆகவும் இருக்க இடமுள்ளது) வயது வரை தவிர்த்தார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

எனக்கென்னமோ இது சாமத்திய வீடு மாரி ஒரு தம்பட்டம் அடிக்கும் செயல்பாடு மாரியே விளங்குகிறது.

இது அவர்களாக செய்தால் நீங்கள் சொல்வது போல இருக்கலாம்.

ஆனால் ஊடகம் தானாக போய் மூக்கை நுழைத்து பேட்டி எடுத்து போட்டா அந்த பிள்ளை என்ன தான் செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இது அவர்களாக செய்தால் நீங்கள் சொல்வது போல இருக்கலாம்.

ஆனால் ஊடகம் தானாக போய் மூக்கை நுழைத்து பேட்டி எடுத்து போட்டா அந்த பிள்ளை என்ன தான் செய்ய முடியும்?

இதென்னையா,

நீங்கள் கேள்வி பட்டதில்லையா, முன்னம் ஒரு போத்தல் மெண்டிசுக்கு வீரகேசரியில் செய்தி போடும் ரிப்போர்டஸ் கூட இருந்தவை.

மோட்டார் சைக்கிளை ஸாண்ட்டில் விட்டு படம் எடுத்து போடேக்கயே தெரியணும் இது ஆர் சொல்லி நடக்குது என்று 😂

இதை ஏன் கிருபன் இங்கே காவி வந்தார் என்பதுதான் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஏன் கிருபன் இங்கே காவி வந்தார் என்பதுதான் தெரியவில்லை

பெயர்கள் பிடித்திருந்தன😬

மனுசா மக்களன்பன்

துருபன் துச்சாதனன்

குடும்பப்பெயர்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளன!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழை எங்கள் மீதுதான். இப்படியான ஆக்கங்களுக்கு எதிர்வினையாற்றுவது தவறு. மிகச் சுருக்கமான இரண்டு கடியுடன் நிறுத்தினால் , சிறிது  சிறிதாக மறைந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பெயர்கள் பிடித்திருந்தன😬

மனுசா மக்களன்பன்

துருபன் துச்சாதனன்

குடும்பப்பெயர்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளன!

 

பெயர் ஒரு தினுசா இருக்கே என நானும் யோசிச்சேன். சீப் பப்ளிசிட்டி தேடுவதில் உள்ள ஆர்வத்தை பெயர்களே கட்டியம் கூறுகிறன 😂

 

2 hours ago, Kapithan said:

பிழை எங்கள் மீதுதான். இப்படியான ஆக்கங்களுக்கு எதிர்வினையாற்றுவது தவறு. மிகச் சுருக்கமான இரண்டு கடியுடன் நிறுத்தினால் , சிறிது  சிறிதாக மறைந்துவிடும்.

உண்மை.

இதே போல் யாழ்பாண மன்னன் என இன்னொரு மறை கழண்ட கேசும் உலாவுது😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

பெயர் ஒரு தினுசா இருக்கே என நானும் யோசிச்சேன். சீப் பப்ளிசிட்டி தேடுவதில் உள்ள ஆர்வத்தை பெயர்களே கட்டியம் கூறுகிறன 😂

 

உண்மை.

இதே போல் யாழ்பாண மன்னன் என இன்னொரு மறை கழண்ட கேசும் உலாவுது😂

நெதர்லாந்திலிருந்து ... 

அவரையா கூறுகிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

நெதர்லாந்திலிருந்து ... 

அவரையா கூறுகிறீர்கள் ?

அவரேதான், இம்சை அரசன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசிலை பல்கலை கிடைத்த்வுடன்...டாக்டராகிட்டா என்று முகநூலிலை தம்பட்டமே அடிப்பாங்கள்.. அதுக்கு ஜால்ரா போடுற கூட்டமும் ஆண்டபரம்பரை அந்தப் பரம்பரையின்னு வாசித்திட்டே போகும் கடைசியில் ஒண்ணும் இருக்காது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்கு பொலிசுக்கு பிளைட் எஞ்சினியருக்கு படிக்கப்போறதெல்லாம் ஒரு செய்தியா வெளியிடுறாங்க.....
அய்யோ....அய்யோ 😎
அது சரி உது தனிநபர் விசயமெல்லோ🤔
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

சுவிசிலை பல்கலை கிடைத்த்வுடன்...டாக்டராகிட்டா என்று முகநூலிலை தம்பட்டமே அடிப்பாங்கள்.. அதுக்கு ஜால்ரா போடுற கூட்டமும் ஆண்டபரம்பரை அந்தப் பரம்பரையின்னு வாசித்திட்டே போகும் கடைசியில் ஒண்ணும் இருக்காது..

வட அமெரிக்காவில் காசுக்கு கவுரவ கலாநிதிப் பட்டம் பெற்று கூவிக்கூவி கொண்டாடி  பாட்டி வைக்கிறதெண்டு சொல்லுறவங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வட அமெரிக்காவில் காசுக்கு கவுரவ கலாநிதிப் பட்டம் பெற்று கூவிக்கூவி கொண்டாடி  பாட்டி வைக்கிறதெண்டு சொல்லுறவங்கள்.

விட்டிட்டம்...அதுஒரு காலம் இருந்ததது அண்ணா..250 டொலர் பட்டம் ..அதுக்கு ஜெர்மன் சுவிலையும் கூப்பிட்டு பாராட்டு வைத்தவை..தெரியாதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, alvayan said:

விட்டிட்டம்...அதுஒரு காலம் இருந்ததது அண்ணா..250 டொலர் பட்டம் ..அதுக்கு ஜெர்மன் சுவிலையும் கூப்பிட்டு பாராட்டு வைத்தவை..தெரியாதே..

இப்ப பட்டம் கொடுக்கிறத  நிப்பாட்டிப் போட்டாங்களோ.

 

(எமது சமூகத்திலுள்ள வறுமையின் உச்சம் ? )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிச்சம் வந்தவுடனை அதை எடுக்கிறவை விட்டிட்டினம்...அதுவரை இங்கத்தை பேப்பர் காரருக்கும் உழைப்புத்தான்.....கனடாவில் கரிபடிந்த காலம்..

Link to comment
Share on other sites

மனுசாவுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். துருபனையும் வாழ்த்துகின்றேன். உங்கள் எங்கள் அன்பு ஆற்றல் ஆலோசனை வருமானம் தாயகத்தில் அல்லலுறும் நம்மவர்களுக்கும் பயன்பட வேண்டும். அவர்கள் போராடியதால் இரத்தம் சிந்தியதால்  மட்டுமே உங்கள் எங்கள் குடும்பங்கள் சுவிஸ் குடிமக்களாகும் வாய்ப்பு கிடைத்தது.  புலம் பெயர்ந்த நாம் ஈழ தாயகத்துக்கு இரத்தக்கடன் செலுத்த வேண்டியவர்கள் என்பதையும்  ஒருபோதும் மறக்கக்கூடாது. மறக்க மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையுடன் மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/26/2020 at 7:55 AM, goshan_che said:

இதென்னையா,

நீங்கள் கேள்வி பட்டதில்லையா, முன்னம் ஒரு போத்தல் மெண்டிசுக்கு வீரகேசரியில் செய்தி போடும் ரிப்போர்டஸ் கூட இருந்தவை.

மோட்டார் சைக்கிளை ஸாண்ட்டில் விட்டு படம் எடுத்து போடேக்கயே தெரியணும் இது ஆர் சொல்லி நடக்குது என்று 😂

இதை ஏன் கிருபன் இங்கே காவி வந்தார் என்பதுதான் தெரியவில்லை.

 

On 1/26/2020 at 12:55 PM, goshan_che said:

பெயர் ஒரு தினுசா இருக்கே என நானும் யோசிச்சேன். சீப் பப்ளிசிட்டி தேடுவதில் உள்ள ஆர்வத்தை பெயர்களே கட்டியம் கூறுகிறன 😂

 

உண்மை.

இதே போல் யாழ்பாண மன்னன் என இன்னொரு மறை கழண்ட கேசும் உலாவுது😂

பேச முன்னர் ஒரு தரம் யோசி 
எழுதுமுன்னர் 2 முறை யோசி என்பார்கள் 

உங்கள் கருத்து ஏற்புடையது 
ஆனால் வார்த்தைகள்  அனாவசியமானவை 
இப்போ பேஸ்புக்கில் தட்டினாலே பல போட்டோக்களை எடுக்க முடியும் 
இது அவர் தனது சொந்த முகநூலில் ஏற்றிய படங்கள் 

அதை ஒரு குறுக்கு  தடவி எடுத்து தனது செய்தி பசியை தனித்திருக்கிறது. 

தமிழ் ஊடகம் என்று ஒன்று இல்லை 
காரணம் எந்த மூதேவியும் எனக்கு தெரிந்து குறைந்த பட்ஷம் 
ஒரு எழுத்து வகுப்புக்கு கூட போனதில்லை. 

சாதாரணமாக இங்கு நீங்கள் எந்த துறையில் பட்டம் எடுத்தாலும்  
ஜெனரல் கிளாஸ் என்று இரண்டு எழுத்து கிளாஸ்கள் பாஸ் பண்ணி இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி: நிதுர்ஷனா ரவீந்திரன்

 

இவரும் அங்குதான் வசிக்கிறார் 
ஒரு வேலை பெண்களை வலிமை படுத்தும் எண்ணம் இருந்து இருக்கலாம். 


ஒன்று மட்டும் உண்மை அமேரிக்கா கனடா ஜெர்மனி போல அல்ல 
சுவிஸில் படித்து பாஸ் பண்ணுவது என்பது கல்லில் நார் உரிப்பதுபோலதான் 

ஆனாலும் ஜேர்மன் எமது இளைய தலைமுறை நான் பார்த்த மட்டில் 
மிகவும் முன்னேறி இருக்கிறார்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும்விட 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.