Jump to content

கிழங்கு வகையைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழங்கு வகையைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?

 

84.jpg

உருளைக்கிழங்கு சிப்ஸுக்கும் ரோஸ்ட்டுக்கும் மயங்காதவர் உண்டா? சேனை சாப்ஸைத் தட்டில் வைத்தால் ஒதுக்கிவிடத்தான் முடியுமா? அத்துடன், வீட்டுக்குக் காய்கறிகள் வாங்கும்போது கண்ணில்படும் கிழங்கு வகையையும் சேர்த்தே வாங்கி வருவோம். ஆனால், ‘மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடானவை. எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும்’ என்று பலரும் ஆலோசனை சொல்வதைப் பார்க்கிறோம். இன்னொருபுறம் கேரட், பீட்ருட் போன்றவற்றில் சத்துகள் அதிகம் என்று சொல்வதையும் கேட்கிறோம்.

எது சரி... எது தவறு?

‘‘நம்முடைய அன்றாட உணவில் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றை நேரடியாகவும் சமைத்தும் சாப்பிட்டும் வருகிறோம். கிழங்கு வகைகள் என்கிற இவற்றால் பெரிய உடல்நலக் கேடு ஒன்று இல்லையென்றாலும், காய்கறிகளைப் போல தினமும் பயன்படுத்தக் கூடாது” என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

தொடர்ந்து, ‘‘கிழங்கு வகையைப் பொறுத்தவரை, அவற்றின் சமையல் முறையிலும், சாப்பிடும் முறையிலும் கொஞ்சம் கவனம் தேவை. முதலில் அவற்றின் வகையையும், தன்மையையும் புரிந்துகொண்டால் பயன்படுத்தும் முறை பற்றியும் நாம் புரிந்துகொள்ளலாம்.

 

மண்ணுக்கு அடியில் விளையும் உணவு வகையைப் பொதுவாக Root vegetables, Root starchy மற்றும் Ground nut என்று மூன்று வகையாகப் பிரிக்கிறோம்.

முள்ளங்கி, கேரட், பீட்ருட், நூக்கல் போன்றவை Root vegetables வகையாகும். இந்த ரூட் வெஜிடபுள் உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தவறு இல்லை. ஆனால். இவற்றை ஜூஸாகவோ, நேரடி உணவாகவோ சாப்பிடக் கூடாது. ஏனெனில், இவற்றில் சுக்ரோஸ் என்கிற சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் உடல் பருமனைக் கூட்டும் வாய்ப்புள்ளது.

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவை Root starchy என்கிற வகையாகும். இந்த Root starchy உணவு வகை பயன்பாட்டில் அளவும், கவனமும் தேவை. ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்களே குறைந்த அளவு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ஏனெனில். இவற்றில் வைட்டமின்கள், மினரல்களைவிட கலோரிகள் அதிகமாக இருக்கிறது. மேலும் மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து போன்றவையும் அதிகமாக இருக்கிறது. அதனால், அளவோடு பயன்படுத்த வேண்டும். நீரிழிவு நோயாளிகளும், உடல்பருமன் கொண்டவர்களும் இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.

Ground nut என்கிற வேர்க்கடலையும் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கடலை வகை சார்ந்த உணவாகும். இதிலும் ஸ்டார்ச், மாவுச்சத்து, சர்க்கரைச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே, குறைந்த அளவே இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் கடலையை வறுத்து சாப்பிடுவதை விட, நீரில் வேகவைத்து சாப்பிடுவதே சிறந்தது.

பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகளை உடல் உழைப்பு இல்லாத, உடல் உழைப்பு குறைந்தவர்கள் குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகளை வேறு எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளாமல் நீரி்ல் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.

கிழங்கு வகை உணவுகள் எடுத்துக்கொள்ளும்போது நீரில் அவித்துச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது. இதனால் பருமன், வயிற்றுப்புண், புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும்.

சமீபகாலமாக, கிழங்கு வகை உணவுப் பொருட்களை விதவிதமான சிப்ஸ்களாக நேரடியாகவும், பாக்கெட்டில் அடைத்தும் விற்கிறார்கள். அதை நாம் உண்பதோடு, குழந்தைகளும் விரும்புகின்றன என வாங்கித் தருகிறோம். இது அவர்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி கிழங்கு வகைகள் கொடுப்பதாக இருந்தால், நீரில் வேகவைத்துத் தருவதே நல்லது’’ என்பதே கிழங்கு வகையைத் தினமும் சாப்பிடுவதற்கான தீர்வாக இருக்கிறது.
 

https://minnambalam.com/public/2020/01/26/84/kitchen-keerthana-beet-varieties

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.