Jump to content

தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நீங்கள் எழுதிய பலவற்றோடு ஒத்துப்போனாலும் நீங்கள் பல்லவரை முழுக்க, முழுக்க தமிழர் என்பதில் எனக்கு போதிய நம்பிக்கை இல்லை. பல தமிழ் சார்பு அறிஞர்கள் கூட பல்லவரை தமிழர் என்பதாக கருதுவதில்லை.

நான் அறிந்தவரையில் ஆதி பல்லவர்கள் கிரந்தம், சமஸ்கிரதம் மட்டுமே பேசினர். பின்நாளில் நாடு தெற்கு நோக்கி நகர, தமிழ் பகுதிகளில் தமிழ் மற்றும் சமஸ்கிரதத்திகும், இப்போதைய கன்னட, ஆந்திராவில் கிரந்த, சமஸ்கிரததுக்கும் முன்னுரிமை கொடுத்தனர்.

கிரந்தம் என்பது ஒரு தனி மொழி அல்ல, அது பல மொழிகளின் கலவை. பாரசீக மொழியின் வழித்தோன்றல்.

பல்லவர்கள் ஈரானில் இருந்து வந்தவர்கள் என்பதும் ஒரு வகை எடுகோள்.

அங்கொர் வட்டில் இறங்கியதும் என் முகத்தில் அறைந்தது போல இருந்ததது பல்லவ கட்டிட கலையை ஒத்த கட்டிட அமைப்பே. ஆனால் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால், இதைவிட மத்திய பிரதேச கஜுராஹோ கோவில்களுடனே உருவ ஒற்றுமை அதிகம் என்பதாகவும் பட்டது.

ஆகவே குருடன் யானை பார்த்த கதையாக நாம் அங்கோர்வாட்டை பார்க்க முடியாது.

மருது,

அங்கொர்வாட்டை கட்டிய அரசன் சூர்யவர்மன் என்பதும் அவன் கெமர் மன்னன் என்பதும். கெமர் பேரரசு (சிற்றரசல்ல) இருந்தது என்பதும் உலகம் ஏற்றுகொண்ட, சான்றுகள் அடிப்படையான வரலாறு.

இதை இல்லை என்பவர்கள் ஆதாரத்தை காட்டினால் நாமும் ஏற்போம். தமிழர்களின் உண்மையான பெருமைகளை பேச நான் என்றுமே பின்நின்றதில்லை.

 

 

இதுதான் என்னுடைய வாதத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையே 
கால நேரங்களை   தனி தனியாகவே விளக்கம் கொடுக்கிறார்கள் 
இவர்கள் தரும் கால நேரங்கள் முரண்பாடு உடைவை மட்டும் அல்ல முற்றுமுழுதாக 
சாத்தியம் இல்லாதவை.

சேர பேராசின் எழுச்சி என்பதே பின்னைநாளின் விஜயநகரம் இருந்த இடத்தில் தொடங்கியதுதான் 
பல ஆயிரம் வருடம்  முன்பு எங்கு உதயன் சேரலாதன்  நெடும் சேரலாதன் போன்ற சேர அரசர்களின் ஆடசி இருந்ததோ அங்குதான் பின்பு விஜயபேரரசு  (நாயக்கர்) தோன்றுகிறது.
நாயக்கர்கள் தமிழர் இல்லை என்பது இங்கு பொய்யாகி போகிறது ஆயிரம் வருடங்கள் கழிந்து அவர்கள் 
தமிழ் மருவி வேறு ஒலி வடிவம் எழுத்த்து வடிவத்தை பெற்றார்கள் என்பது ஒன்றுதான் சாத்தியமானது.

தமிழ் மொழி தோற்றம் .... சேர பேராசின் உச்ச காலம் போன்றவை  
கிரந்தம்  சமஸ்கிருதம் போன்றவற்றுக்கு முந்தியவை அதை தமிழ் மொழி 
கீழடி போன்ற ஆய்வில் ஏற்றுக்கொள்ளும் நாம்  ............. கிரந்தம் வந்தது என்று எப்படி சொல்வது?
கிரந்தம் தமிழ் மருவி தோன்றியது என்பதுதான் சாத்தியமானது. கிரந்தமோ சமஸ்கிருதமோ எங்கிருந்தும் வந்திருக்க சாத்தியம்  இருப்பின்  சேர பேரரசின் முன்பு இன்னொரு இந குழுமமோ  அரசோ இப்போதைய ஒரிசா மகாராஸ்திரா  சத்தீஸ்கர் ஆந்திர மேல் பகுதியை அண்டி வாழ்ந்திருக்க வேண்டும் ... அப்படி ஒன்றை யாரும்   இதுவரையில் ஒப்பவில்லை. சிந்து வழி நாகரீகத்தில் தமிழை ஏற்றுக்கொள்கிறார்கள்  கரப்பாவில் தமிழ் எச்சம்  இருக்கிறது .........  ஈரானின் தோற்றம்மே  நாம் முழுமையாக ஆராயவில்லை  சுமேரியர்    ஈழம்  போன்றவை   3000 வருடம் முன்பு ஈரானில் தோன்றியவை  .......... சுமேரிய  ஈழம் போன்றவற்றை 3000 ஆண்டளவில்  ஈரானின் பகுதிகளில் சுட்டி காட்டுகிறார்கள். 
நாம் தமிழ் மொழியை இப்போதைய தமிழ் நாட்டுக்குள்  முடக்க முனையும் போது சேர பேர் அரசை மறந்துவிடுகிறோம். சில இடங்களில்  லூசுத்தனமாக பாண்டிய பேர் அரசு சேரர்க்கு முந்தியது என்று சொல்கிறார்கள்.
தமிழ்மொழியின் பாதையில் நாம் பயணிக்கும்போது ..... பல பொய்யாகவும் சாத்தியம் இல்லாததும் ஆகா இருக்கிறது இவற்றுக்கு எம்மிடம் எழுத்தில் ஆதாரம் இருக்கிறது 
எல்லோரா குகை கோவில்கள் எல்லாம் சிவனை கடவுளாக கொண்டவை 
குறைந்த பட்ஷம் இன்று மக்கள் சென்று பார்க்க அனுமதி இருக்கும் 16 கோவில்களும் சிவன் கோவில்கள்  
சிவனை முழுமுதல் கடவுளாக ஏற்று  கொண்டவர்கள் இப்போதைய இந்திய நிலப்பரப்பில்  யார்? 

அப்போ வைஸ்ணவம் வந்தது என்றால் ... வானத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்?
 மேலும் சிவன் கீழும் சிவன் என்றால் இடையில் வைஷ்ணவம் என்பது இதை மருவிதான் தோன்றியிருக்க வேண்டும்.. அதுதான் சாத்தியமானது. 

கஜுராகோ கோவில்கள்  எல்லாம்  விஜயநகரத்துக்கு உட்பட்டதுதான்.

மதங்கள் 
மொழிகள் 
இனங்கள் 
இராச்சியங்கள் 

இவை நான்கையும் ஒரே கோட்டில் வைத்து கொண்டு செல்லும் எந்த ஆய்வும் இன்றுவரை இல்லை 
எதாவது ஒரு கோவிலை கண்டவுடன் அந்த கோவில் காட்டிய கால பகுதியில் நின்றுகொண்டு  அதன் அருகே இருக்க கூடிய  சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு வெளியாகும் ஆய்வு முடிவுகள்தான் எம்மிடம் இப்னு இருப்பவை . 

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

இதுதான் என்னுடைய வாதத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையே 
கால நேரங்களை   தனி தனியாகவே விளக்கம் கொடுக்கிறார்கள் 
இவர்கள் தரும் கால நேரங்கள் முரண்பாடு உடைவை மட்டும் அல்ல முற்றுமுழுதாக 
சாத்தியம் இல்லாதவை.

சேர பேராசின் எழுச்சி என்பதே பின்னைநாளின் விஜயநகரம் இருந்த இடத்தில் தொடங்கியதுதான் 
பல ஆயிரம் வருடம்  முன்பு எங்கு உதயன் சேரலாதன்  நெடும் சேரலாதன் போன்ற சேர அரசர்களின் ஆடசி இருந்ததோ அங்குதான் பின்பு விஜயபேரரசு  (நாயக்கர்) தோன்றுகிறது.
நாயக்கர்கள் தமிழர் இல்லை என்பது இங்கு பொய்யாகி போகிறது ஆயிரம் வருடங்கள் கழிந்து அவர்கள் 
தமிழ் மருவி வேறு ஒலி வடிவம் எழுத்த்து வடிவத்தை பெற்றார்கள் என்பது ஒன்றுதான் சாத்தியமானது.

தமிழ் மொழி தோற்றம் .... சேர பேராசின் உச்ச காலம் போன்றவை  
கிரந்தம்  சமஸ்கிருதம் போன்றவற்றுக்கு முந்தியவை அதை தமிழ் மொழி 
கீழடி போன்ற ஆய்வில் ஏற்றுக்கொள்ளும் நாம்  ............. கிரந்தம் வந்தது என்று எப்படி சொல்வது?
கிரந்தம் தமிழ் மருவி தோன்றியது என்பதுதான் சாத்தியமானது. கிரந்தமோ சமஸ்கிருதமோ எங்கிருந்தும் வந்திருக்க சாத்தியம்  இருப்பின்  சேர பேரரசின் முன்பு இன்னொரு இந குழுமமோ  அரசோ இப்போதைய ஒரிசா மகாராஸ்திரா  சத்தீஸ்கர் ஆந்திர மேல் பகுதியை அண்டி வாழ்ந்திருக்க வேண்டும் ... அப்படி ஒன்றை யாரும்   இதுவரையில் ஒப்பவில்லை. சிந்து வழி நாகரீகத்தில் தமிழை ஏற்றுக்கொள்கிறார்கள்  கரப்பாவில் தமிழ் எச்சம்  இருக்கிறது .........  ஈரானின் தோற்றம்மே  நாம் முழுமையாக ஆராயவில்லை  சுமேரியர்    ஈழம்  போன்றவை   3000 வருடம் முன்பு ஈரானில் தோன்றியவை  .......... சுமேரிய  ஈழம் போன்றவற்றை 3000 ஆண்டளவில்  ஈரானின் பகுதிகளில் சுட்டி காட்டுகிறார்கள். 
நாம் தமிழ் மொழியை இப்போதைய தமிழ் நாட்டுக்குள்  முடக்க முனையும் போது சேர பேர் அரசை மறந்துவிடுகிறோம். சில இடங்களில்  லூசுத்தனமாக பாண்டிய பேர் அரசு சேரர்க்கு முந்தியது என்று சொல்கிறார்கள்.
தமிழ்மொழியின் பாதையில் நாம் பயணிக்கும்போது ..... பல பொய்யாகவும் சாத்தியம் இல்லாததும் ஆகா இருக்கிறது இவற்றுக்கு எம்மிடம் எழுத்தில் ஆதாரம் இருக்கிறது 
எல்லோரா குகை கோவில்கள் எல்லாம் சிவனை கடவுளாக கொண்டவை 
குறைந்த பட்ஷம் இன்று மக்கள் சென்று பார்க்க அனுமதி இருக்கும் 16 கோவில்களும் சிவன் கோவில்கள்  
சிவனை முழுமுதல் கடவுளாக ஏற்று  கொண்டவர்கள் இப்போதைய இந்திய நிலப்பரப்பில்  யார்? 

அப்போ வைஸ்ணவம் வந்தது என்றால் ... வானத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்?
 மேலும் சிவன் கீழும் சிவன் என்றால் இடையில் வைஷ்ணவம் என்பது இதை மருவிதான் தோன்றியிருக்க வேண்டும்.. அதுதான் சாத்தியமானது. 

கஜுராகோ கோவில்கள்  எல்லாம்  விஜயநகரத்துக்கு உட்பட்டதுதான்.

மதங்கள் 
மொழிகள் 
இனங்கள் 
இராச்சியங்கள் 

இவை நான்கையும் ஒரே கோட்டில் வைத்து கொண்டு செல்லும் எந்த ஆய்வும் இன்றுவரை இல்லை 
எதாவது ஒரு கோவிலை கண்டவுடன் அந்த கோவில் காட்டிய கால பகுதியில் நின்றுகொண்டு  அதன் அருகே இருக்க கூடிய  சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு வெளியாகும் ஆய்வு முடிவுகள்தான் எம்மிடம் இப்னு இருப்பவை . 

மருது,

நான் முன்பே சொல்லியது போல - 1.பல்லவர்கள் தமிழர்களா? என்பதில் எனக்கு ஒரு நிலையான நிலைப்பாடு இல்லை.

2. பல்லவர்களுடன் புனான், சென்லா நாடுகள் தொடர்பில் இருந்தன என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

3. ஆனால் அங்கர்வாட்டை கட்டியது ஒரு தமிழ் மன்னர் இல்லை. அங்கே அப்போ இருந்த அரசும் தமிழ் அரசில்லை. எனது இன அபிமானத்தை தூக்கி வைத்து விட்டு, இப்போ இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நான் ஊகிப்பது இதைத்தான்.

4. இல்லை அது பல்லவ வழி வந்த ஒரு தமிழ் அரசாக இருக்க வேண்டும் என்கிறீர்கள் நீங்கள். ஒரு பேச்சுக்கு பல்லவர்கள் தமிழர்கள் என்றே வைத்தாலும் - அங்கர்வார்ட் எழும்பிய காலம் ஒன்றும் சங்க காலமில்லை. நான் முன்பே கூறியது போல, ராஜேந்திரனுக்கு பின்னான, சேக்கிழார் காலத்தில், சோழ சாம்ராஜ்யத்தின் பொற்காலத்தில்தான் அங்கர்வாட் கட்டப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய கடலைதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோழனுக்கு, இப்படி ஒரு மாபெரும் தமிழரசு இருந்த செய்தி தெரிய இல்லை என்பது நம்பும் படியாக இல்லை. எனவே நம்பதகுந்த ஆதாரம் வரும்வரை இதை தமிழர் தொன்மை என்பதை நானும், இந்த உலகமும் ஏற்கப் போவதேயில்லை. நீங்கள் தொடர்ந்தும் ஆதாரங்கள் இன்றி, இல்லை இது தமிழ் அரசே என சொல்லிக் கொண்டிருக்கலாம், சில யுடீப் லைக்குகளை விட அதில ஒரு பலனுமில்லை.

——————

இப்போ இன்னொரு தலைபுக்கு சம்பந்தமற்ற விடயம். நான் மேலே போல்ட் செய்திருப்பது.

இங்கே நீங்கள் எழுதி இருப்பதுதான் திராவிட அரசியல் கொள்கையின் அடிநாதம்.

இது உங்களுக்கு தெரியாததல்ல.

பல்லவர்களை உரிமை கொண்டாட வசதிப்படும் போது நாயக்கரை தமிழராக ஏற்க முடிகிற உங்களால், சீமானுக்காக, கட்ட பொம்ம்மனை, திருமலை நாயக்கரை, வைகோவை, விஜயகாந்தை, கருணாநிதியை தமிழன் அல்லாத தெலுங்கன் என திட்டும் போது மட்டும் ஏன் தமிழனாக ஏற்க முடியவில்லை ?

பிஜு பட்நாயக், பண்டரநாயக்க எல்லாரும் நாயக்கர் என்றீகளே அப்போ இவர்கள் எல்லாம் கூடத் தமிழரா?

இதே போலத்தான், கண்டியின் கடைசி மன்னன் தமிழன் என மார்தட்டுவோம் - மிக இலகுவாக அவர் நாயக்க வம்ச மன்னன் என்பதை மறந்துவிட்டு.

எமக்கு வசதிப்பட்டால் தமிழன், இல்லாட்டி தெலுங்கன் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?

பிகு: பேசாமல், எகிப்திய (ஏகனை பற்றிய என்பதே பின்னாளில் எகிப்து ஆகியது) , மாயன் (மாயோனை வழிபட்டோரே மாயன்), அபொர்ஜினி (அரன்+பார்வதி= அபர்ஜினி) எல்லாத்துக்க்குமே அடி தமிழ்தான் எனச் சொல்லி விடுவோமா? சும்மா சின்ன சின்னதாய் பிடுங்குப் படாமல், டோட்டல் வேள்ர்ட்டையும் புல் டமேஜ் பண்ணிரலாம் 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

மருது,

நான் முன்பே சொல்லியது போல - 1.பல்லவர்கள் தமிழர்களா? என்பதில் எனக்கு ஒரு நிலையான நிலைப்பாடு இல்லை.

2. பல்லவர்களுடன் புனான், சென்லா நாடுகள் தொடர்பில் இருந்தன என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

3. ஆனால் அங்கர்வாட்டை கட்டியது ஒரு தமிழ் மன்னர் இல்லை. அங்கே அப்போ இருந்த அரசும் தமிழ் அரசில்லை. எனது இன அபிமானத்தை தூக்கி வைத்து விட்டு, இப்போ இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நான் ஊகிப்பது இதைத்தான்.

4. இல்லை அது பல்லவ வழி வந்த ஒரு தமிழ் அரசாக இருக்க வேண்டும் என்கிறீர்கள் நீங்கள்.

இது முடிந்த முடிவாக நான் ஏற்றுக்கொள்ளவும் இல்லை அப்படிதான் என்று சொல்ல வரவும் இல்லை.
பாண்டியர்களின் எச்சம் இது என்பதில் எந் சந்தேகமும் எனக்கு இல்லை என்றுதான் சொல்ல வந்தேன்.
கெமர் அரசு 1100இல் இந்த அளவில் விரிந்து இருந்தது என்பதை அவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு கெமர் அரசு அதை கட்டி இருந்தால் கூட அவர்கள் மொழி எங்கே? 
ஏன் சம்ஸ்கிருதம் அங்கே? என்பதுதான் அவர்கள் எமக்கு முன் பின் முரணாக சொல்வது என்றுதான் சொல் வருகிறேன். இதற்கு முன்பே இன்னொரு கோவில் கட்ட பட்டு இருக்கிறது .... நீங்கள் இந்த கோவிலை மட்டும் பார்த்தீர்களோ சுற்றமும் பார்த்தீர்களா? சுற்றம் உள்ள காடுகள் முழுவதும் சிவலிங்கமும் சிவ வழிபாட்டு எச்சங்களும் இன்னமும் இருக்கிறது. இவ்வாறு ஒரு பெரு கோவிலை கட்டுவிக்க கூடியதாக இருந்த கெமர் பேரரசின் கோவிலை தவிர்ந்த மிகுதி வரலாறு  எங்கே? கெமர் என்ற ஓர் சிற்ரரசே 800இல் தான் பதிவாகிறது 
இது பல்லவர்களின்  வடிவமைப்பு என்பதில் எனக்கு ஒரு துளி சந்தேகமும் இல்லை. அதே கால பகுதியில் பல்லவர்களால் இந்தியாவில் கட்டபட்ட எல்லா கோவிலும் இதே போன்றதுதான். அப்போ கெமர்கள் இந்தியா வந்து கோவில் கட்டினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு பேச்சுக்கு பல்லவர்கள் தமிழர்கள் என்றே வைத்தாலும் - அங்கர்வார்ட் எழும்பிய காலம் ஒன்றும் சங்க காலமில்லை. நான் முன்பே கூறியது போல, ராஜேந்திரனுக்கு பின்னான, சேக்கிழார் காலத்தில், சோழ சாம்ராஜ்யத்தின் பொற்காலத்தில்தான் அங்கர்வாட் கட்டப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய கடலைதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோழனுக்கு, இப்படி ஒரு மாபெரும் தமிழரசு இருந்த செய்தி தெரிய இல்லை என்பது நம்பும் படியாக இல்லை. எனவே நம்பதகுந்த ஆதாரம் வரும்வரை இதை தமிழர் தொன்மை என்பதை நானும், இந்த உலகமும் ஏற்கப் போவதேயில்லை. நீங்கள் தொடர்ந்தும் ஆதாரங்கள் இன்றி, இல்லை இது தமிழ் அரசே என சொல்லிக் கொண்டிருக்கலாம், சில யுடீப் லைக்குகளை விட அதில ஒரு பலனுமில்லை.

இதை ஆய்வு செய்பவர்கள் எல்லோரும் முன் பின் முரணான கதைகளைத்தான் சொல்கிறார்களே?
உண்மையை உலகம் எப்போது ஏற்றுக்கொண்டு இருக்கிறது? இப்போதும் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்றுதானே பாட புத்தகம் கூட சொல்கிறது? 

——————

இப்போ இன்னொரு தலைபுக்கு சம்பந்தமற்ற விடயம். நான் மேலே போல்ட் செய்திருப்பது.

இங்கே நீங்கள் எழுதி இருப்பதுதான் திராவிட அரசியல் கொள்கையின் அடிநாதம்.

இது உங்களுக்கு தெரியாததல்ல.

பல்லவர்களை உரிமை கொண்டாட வசதிப்படும் போது நாயக்கரை தமிழராக ஏற்க முடிகிற உங்களால், சீமானுக்காக, கட்ட பொம்ம்மனை, திருமலை நாயக்கரை, வைகோவை, விஜயகாந்தை, கருணாநிதியை தமிழன் அல்லாத தெலுங்கன் என திட்டும் போது மட்டும் ஏன் தமிழனாக ஏற்க முடியவில்லை ?

ஆதாம் ஏவாள் முதல் மனிதர் என்று ஏற்றுக்கொள்ளும் மேற்கு நாடுகள் 
ஏன் ஆப்ரிக்கர்களை முஸ்லிம்களை எங்களை இன்னமும் சகோதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை? 
கடவுளை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களும் மனிதரை கடவுள் படைத்தான் என்று ஏற்றுக்கொள்பவர்களும் ஏன் சக மனிதர்களை வெறுக்கிறார்கள் கொலை செய்கிறார்கள்? தலித்துகள் என்றும் கீழானவர் என்றும் சக மனிதரை துன்பப்படுத்துகிறார்கள்?  இன்றைய சமூக நகர்வுகளுக்கு ஏற்றதுதான் தற்கால அரசியல்.இந்தியர்கள் எல்லோரும் ஒன்று என்றால் ...... தமிழ்ர்கள் இந்தியாவை வெறுக்க தேவை இல்லை. தமிழர்களையும் அவர்கள் வரலாறையும் திட்டம் இட்டு மறைக்க  அழிக்க நினைக்கும்போதுதான் நாம் இந்தியரா? என்ற கேள்வி தமிழர்களுக்கு வருகிறது 

பிஜு பட்நாயக், பண்டரநாயக்க எல்லாரும் நாயக்கர் என்றீகளே அப்போ இவர்கள் எல்லாம் கூடத் தமிழரா?

இவர்களின் தொடக்கம் தமிழர்கள்தான் இவர்கள் யாருக்கும் தமிழரை கடந்துவிட்டு ஒரு ஆரம்ப நிலை இல்லை 
இவர்களின் மொழி வழியாகவோ   பேர் அரசுகளின் வழியாகவோ நீங்கள் நடந்துபோனால் நீங்கள்  சேர பேரரசு ஒன்றில்தான் போய் நிற்பீர்கள். விஜயநகரம் என்பதே சேர அரசின் எச்சமாக பின்னாளில் எழுந்ததுதான் 

இதே போலத்தான், கண்டியின் கடைசி மன்னன் தமிழன் என மார்தட்டுவோம் - மிக இலகுவாக அவர் நாயக்க வம்ச மன்னன் என்பதை மறந்துவிட்டு.

எமக்கு வசதிப்பட்டால் தமிழன், இல்லாட்டி தெலுங்கன் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?

எமக்கு வசதி வந்தால் என்றால்?
அங்குதான் தொடங்கினோம் ..... இன்று இங்கு வந்து நிற்கிறோம் என்பதுதானே உண்மை 
இதை விடுத்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நாயக்கர் எல்லோரும் தான் தோன்றி வந்தார்களா? 
எமது மொழியை பிரதி எடுத்து  எமது அறிவை பிரதி எடுத்து வந்தார்கள் என்பதை அவர்களே மறுக்கவில்லை 

பிகு: பேசாமல், எகிப்திய (ஏகனை பற்றிய என்பதே பின்னாளில் எகிப்து ஆகியது) , மாயன் (மாயோனை வழிபட்டோரே மாயன்), அபொர்ஜினி (அரன்+பார்வதி= அபர்ஜினி) எல்லாத்துக்க்குமே அடி தமிழ்தான் எனச் சொல்லி விடுவோமா? சும்மா சின்ன சின்னதாய் பிடுங்குப் படாமல், டோட்டல் வேள்ர்ட்டையும் புல் டமேஜ் பண்ணிரலாம் 😂

இப்போதைய ஆய்வு முடிவு எல்லாம் குறுகிய வட்ட்த்துக்குள் செய்ய பட்டதுதான் 
அல்லது ஒரு குறித்த நோக்கில் செய்யப்பட்ட்துதான். அன்கோவார்ட் கோவிலை உதாரணமாக எடுத்தால் 
இதை ஒவ்வருவரும் தமது துறைசார்ந்துதான் ஆராய்கிறார்கள் ..... அதே சம காலத்தில் அக்கம் பக்கம் என்ன நடந்தது என்று யாரும் பார்த்ததில்லை அவர்களுக்கு அது தேவையும் இல்லை. அவர்கள் இதை சூரிய வர்மன் கட்டினான் அவன் கெமர் ரசை ஆண்டான் என்பதோடு சரி பின்பு மீண்டும் கோவிலுக்குள் வந்து இந்த சுவரில் என்ன இருக்கு அந்த சுவரில் என்ன இருக்கு என்பதோடு அவர்கள் ஆய்வு முடிந்துவிடும்.

சூரியவர்மன் யாரின் தொடர்ச்சி?
இவளவு பெரிய கோவிலை கட்ட கூடிய கெமர்களின் கட்டிட அறிவு எங்கே தொடங்கியது?
அதுக்கு எங்கு சான்று இருக்கிறது?
இந்த வடிவில் கோவிலை ஏன் வடிவமைத்தார்கள்? 
போன்ற கோணத்தில் செல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை அங்கிருக்கும் கல்லை தேய்ப்பது மண்ணை  தேய்ப்பது அது எவ்ளவு காலதுக்கு முந்தியது என்பதுதான் அவர்கள் ஆய்வும் முடிவுகளும். 
அங்கோர்வார்டில் ஆய்வு செய்யும் வெள்ளைக்காரனுக்கு  தமிழ் என்று ஒரு மொழி இருக்கிறது என்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை....... அவர்கள் பொய் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் சொல்வது மட்டுமே உலகம் இல்லை  அந்த கோணத்தில் அவர்கள் செலாவதும் இல்லை  

நாம்தான் சூரியவர்மனை தேடி செல்லவேண்டும் ..... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மருது,

நான் முன்பே சொல்லியது போல - 1.பல்லவர்கள் தமிழர்களா? என்பதில் எனக்கு ஒரு நிலையான நிலைப்பாடு இல்லை.

2. பல்லவர்களுடன் புனான், சென்லா நாடுகள் தொடர்பில் இருந்தன என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

3. ஆனால் அங்கர்வாட்டை கட்டியது ஒரு தமிழ் மன்னர் இல்லை. அங்கே அப்போ இருந்த அரசும் தமிழ் அரசில்லை. எனது இன அபிமானத்தை தூக்கி வைத்து விட்டு, இப்போ இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நான் ஊகிப்பது இதைத்தான்.

4. இல்லை அது பல்லவ வழி வந்த ஒரு தமிழ் அரசாக இருக்க வேண்டும் என்கிறீர்கள் நீங்கள். ஒரு பேச்சுக்கு பல்லவர்கள் தமிழர்கள் என்றே வைத்தாலும் - அங்கர்வார்ட் எழும்பிய காலம் ஒன்றும் சங்க காலமில்லை. நான் முன்பே கூறியது போல, ராஜேந்திரனுக்கு பின்னான, சேக்கிழார் காலத்தில், சோழ சாம்ராஜ்யத்தின் பொற்காலத்தில்தான் அங்கர்வாட் கட்டப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய கடலைதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோழனுக்கு, இப்படி ஒரு மாபெரும் தமிழரசு இருந்த செய்தி தெரிய இல்லை என்பது நம்பும் படியாக இல்லை. எனவே நம்பதகுந்த ஆதாரம் வரும்வரை இதை தமிழர் தொன்மை என்பதை நானும், இந்த உலகமும் ஏற்கப் போவதேயில்லை. நீங்கள் தொடர்ந்தும் ஆதாரங்கள் இன்றி, இல்லை இது தமிழ் அரசே என சொல்லிக் கொண்டிருக்கலாம், சில யுடீப் லைக்குகளை விட அதில ஒரு பலனுமில்லை.

——————

இப்போ இன்னொரு தலைபுக்கு சம்பந்தமற்ற விடயம். நான் மேலே போல்ட் செய்திருப்பது.

இங்கே நீங்கள் எழுதி இருப்பதுதான் திராவிட அரசியல் கொள்கையின் அடிநாதம்.

இது உங்களுக்கு தெரியாததல்ல.

பல்லவர்களை உரிமை கொண்டாட வசதிப்படும் போது நாயக்கரை தமிழராக ஏற்க முடிகிற உங்களால், சீமானுக்காக, கட்ட பொம்ம்மனை, திருமலை நாயக்கரை, வைகோவை, விஜயகாந்தை, கருணாநிதியை தமிழன் அல்லாத தெலுங்கன் என திட்டும் போது மட்டும் ஏன் தமிழனாக ஏற்க முடியவில்லை ?

பிஜு பட்நாயக், பண்டரநாயக்க எல்லாரும் நாயக்கர் என்றீகளே அப்போ இவர்கள் எல்லாம் கூடத் தமிழரா?

இதே போலத்தான், கண்டியின் கடைசி மன்னன் தமிழன் என மார்தட்டுவோம் - மிக இலகுவாக அவர் நாயக்க வம்ச மன்னன் என்பதை மறந்துவிட்டு.

எமக்கு வசதிப்பட்டால் தமிழன், இல்லாட்டி தெலுங்கன் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?

பிகு: பேசாமல், எகிப்திய (ஏகனை பற்றிய என்பதே பின்னாளில் எகிப்து ஆகியது) , மாயன் (மாயோனை வழிபட்டோரே மாயன்), அபொர்ஜினி (அரன்+பார்வதி= அபர்ஜினி) எல்லாத்துக்க்குமே அடி தமிழ்தான் எனச் சொல்லி விடுவோமா? சும்மா சின்ன சின்னதாய் பிடுங்குப் படாமல், டோட்டல் வேள்ர்ட்டையும் புல் டமேஜ் பண்ணிரலாம் 😂

 

6666km Mystery

The Distance between various monuments are: Kailash to North pole – 6666 Km; Kailash to Stonehenge – 6666 Km; Egyptian pyramids to North pole – 6666 Km; Stonehenge to Devil’s tower – 6666 Km; Stonehenge to Bermuda triangle – 6666 Km; Bermuda triangle to Easter island – 6666 Km; Easter island to Tazumal – 6666 Km;

20131117-015305.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

தெய்வநாயகம் ஐயா சோழர்கள் வரலாறை மிக அழகாகச் சொல்கிறார். அதைவிட அதிகமாக தன் பெருமையும் பேசுகிறார். ஆனாலும் அவர் அங்கோவாட்டை சோழர்கள் கட்டியதாகச் சொல்கிறாரா ??? எந்த இடத்தில் சொல்கிறார் என்று குறிப்பிட்டால் பார்க்க வசதியாக இருக்கும்.

ஒன்றுமே இல்லாத/தெரியாத குடுகுடுப்பைகள் குலுக்கும் இந்தக்காலத்தில் ஐயாவைப் போன்று நாலு விடயங்கள் தெரிந்தவர்கள் தங்களைப்பற்றி சொல்வதில் எந்த தவறும் இல்லை.

ஒருவர் தன்னைப்பற்றி பகிரங்கமாக சொல்வதன் மூலம்தான் இவர் அந்த விடயத்தைப்பற்றி சொல்வதற்கு தகுதியானவரா என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஒன்றுமே இல்லாத/தெரியாத குடுகுடுப்பைகள் குலுக்கும் இந்தக்காலத்தில் ஐயாவைப் போன்று நாலு விடயங்கள் தெரிந்தவர்கள் தங்களைப்பற்றி சொல்வதில் எந்த தவறும் இல்லை.

ஒருவர் தன்னைப்பற்றி பகிரங்கமாக சொல்வதன் மூலம்தான் இவர் அந்த விடயத்தைப்பற்றி சொல்வதற்கு தகுதியானவரா என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

தாங்கமுடியல அண்ணை இவர்கள்  தொல்லை

சுற்றுலா போகவேண்டியது

மறக்காமல் ஒரு கமரா

மண்டபத்தை நாலு கோணத்தில போட்டோ எடுக்க வேண்டியது

கட்டுரை

கவிதை

வரலாறு எழுதவேண்டியது.....

இத்தனைக்கும் அந்த நாட்டு மக்களுடன் உரையாட 

நேரமும்  இல்லை

அவர்களது மொழியில்  ஒரு சொல்லும்  தெரியாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

6666km Mystery

The Distance between various monuments are: Kailash to North pole – 6666 Km; Kailash to Stonehenge – 6666 Km; Egyptian pyramids to North pole – 6666 Km; Stonehenge to Devil’s tower – 6666 Km; Stonehenge to Bermuda triangle – 6666 Km; Bermuda triangle to Easter island – 6666 Km; Easter island to Tazumal – 6666 Km;

20131117-015305.jpg

வர வர மருதர் லாரா போல் ஆனார் 😂

லாராவை இந்த பக்கம் மாசக்கணக்காய் காணேல?🧐

1 hour ago, விசுகு said:

தாங்கமுடியல அண்ணை இவர்கள்  தொல்லை

சுற்றுலா போகவேண்டியது

மறக்காமல் ஒரு கமரா

மண்டபத்தை நாலு கோணத்தில போட்டோ எடுக்க வேண்டியது

கட்டுரை

கவிதை

வரலாறு எழுதவேண்டியது.....

இத்தனைக்கும் அந்த நாட்டு மக்களுடன் உரையாட 

நேரமும்  இல்லை

அவர்களது மொழியில்  ஒரு சொல்லும்  தெரியாது

 

நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடுதான், ஆனால் பயணக்கட்டுரை எழுத வரலாற்று ஆசிரியராக இருக்க வேண்டியதில்லையே?

நீங்கள் மேலே சொன்ன ஒரு கருத்து - எதிர்கால பிள்ளைகள் இவற்றை நம்புவது பற்றி.

ஒரு உதாரணம் - எனக்கு தெரிந்த ஒர் பிள்ளை ஐரோப்பிய நாட்டில் வளர்ந்தது. தாய் தமிழ் டீச்சர். தமிழ் ஸ்கூலில் எமது வரலாறு என்று மொத்தமாக இட்டுக் கட்டிய கதைகளை ஊட்டி வளர்த்தார்கள்.

ஒரு 10 வயதில் அந்த பிள்ளையை சந்தித்த போது இந்த யூடியூப் கோமாளி கதைகளையே எம் வரலாறு என அழகாச் சொல்லும்.

அண்மையில் ஒரு உயர் பல்கலையில் பட்டம் பெற்றதாக அறிந்தேன். ஒரு விழாவில் கண்டு வாழ்தியபோது - முன்பு அந்த பிள்ளை சொன்ன விசயங்களை நினைவு படுத்திய போது— அதெல்லாம் ஏதும் தெரியாத வயதில், அம்மாஆக்கள் சொல்லி தந்ததை ஒப்புவிதேன் - நானாக ஆராய்ந்த போது எல்லாம் கட்டுகதை என்பது தெரிகிறது என்றது அந்த பிள்ளை.

சின்ன வயதில் எம் வரலாறு என புனைகதைகளை கூறியதால் இப்போ எம் உண்மையான வரலாற்றையும் அந்த பிள்ளை நம்பத் தயாரில்லை.

இன வரலாறு மட்டுமல்ல, குடும்ப பெருமை, சாதி, பிரதேசம், தமிழ் கலாச்சாரமே மேன்மையானது, இப்படி பல புனைவுகளை புலம்பெயர் பெற்றோர் பிள்ளைகளுகு சிறு வயதில் ஊட்டி வளர்ப்பதால், பல பிள்ளைகளுக்கு விபரம் அறிந்ததும்,

”சே இவங்கள் பூரா பிராடுகள்” என்பதாக மனதில் நிலைத்து விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

வர வர மருதர் லாரா போல் ஆனார் 😂

லாராவை இந்த பக்கம் மாசக்கணக்காய் காணேல?🧐

நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடுதான், ஆனால் பயணக்கட்டுரை எழுத வரலாற்று ஆசிரியராக இருக்க வேண்டியதில்லையே?

நீங்கள் மேலே சொன்ன ஒரு கருத்து - எதிர்கால பிள்ளைகள் இவற்றை நம்புவது பற்றி.

ஒரு உதாரணம் - எனக்கு தெரிந்த ஒர் பிள்ளை ஐரோப்பிய நாட்டில் வளர்ந்தது. தாய் தமிழ் டீச்சர். தமிழ் ஸ்கூலில் எமது வரலாறு என்று மொத்தமாக இட்டுக் கட்டிய கதைகளை ஊட்டி வளர்த்தார்கள்.

ஒரு 10 வயதில் அந்த பிள்ளையை சந்தித்த போது இந்த யூடியூப் கோமாளி கதைகளையே எம் வரலாறு என அழகாச் சொல்லும்.

அண்மையில் ஒரு உயர் பல்கலையில் பட்டம் பெற்றதாக அறிந்தேன். ஒரு விழாவில் கண்டு வாழ்தியபோது - முன்பு அந்த பிள்ளை சொன்ன விசயங்களை நினைவு படுத்திய போது— அதெல்லாம் ஏதும் தெரியாத வயதில், அம்மாஆக்கள் சொல்லி தந்ததை ஒப்புவிதேன் - நானாக ஆராய்ந்த போது எல்லாம் கட்டுகதை என்பது தெரிகிறது என்றது அந்த பிள்ளை.

சின்ன வயதில் எம் வரலாறு என புனைகதைகளை கூறியதால் இப்போ எம் உண்மையான வரலாற்றையும் அந்த பிள்ளை நம்பத் தயாரில்லை.

இன வரலாறு மட்டுமல்ல, குடும்ப பெருமை, சாதி, பிரதேசம், தமிழ் கலாச்சாரமே மேன்மையானது, இப்படி பல புனைவுகளை புலம்பெயர் பெற்றோர் பிள்ளைகளுகு சிறு வயதில் ஊட்டி வளர்ப்பதால், பல பிள்ளைகளுக்கு விபரம் அறிந்ததும்,

”சே இவங்கள் பூரா பிராடுகள்” என்பதாக மனதில் நிலைத்து விடுகிறது.

 

எனது மூத்த மகனுடன் பிரமிட்டுக்கள்  பற்றி  பேச்சு  வந்தபோது

பிரமிட்டுக்களின் உருவாக்கத்தில்  தமிழர்களும் உடனிருந்ததாக ஒரு வரலாறு  இருக்கிறது

நீங்கள்  அறிந்து  கொள்ளணும்  என்றேன்

உடனேயே கூகிழில்  தேடத்தொடங்கினான்

எந்த ஆதாரமும்  இல்லையப்பா  என்றான்

அதிலிருந்து எமது வரலாறுகள்  சார்ந்து மிகுந்த அவதானமாக  பேசுவதுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அன்று தமிழரின் வரலாறுகள் அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க....
அதை இன்று ஆராய்ச்சி செய்பவர்களை நையாண்டிகள் செய்வது ஒரு புறம்.
வெள்ளைத்தோல்கள் செய்த ஆராய்ச்சிகளில் தமிழர் சம்பந்தமான தடயங்கள் எதுவுமில்லை என்பவர்கள் ஒருபுறம்.
கீழடியை தோண்டத் தோண்ட மூடுபவர்கள் ஒரு புறம்.
தமிழ்  தமிழினம் எவ்விதத்திலும் உயர்ந்து விடக்கூடாது என்பதில் பிற கலாச்சாரங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது கண்கூடாகவே தெரிகின்றது.
எம்மவர்கள் எதிரியையும் தலையில் வைத்து கொண்டாடுவதில் திறமை வாய்ந்தவர்கள்.இதை காலம் காலமாகவே பார்த்து வருகின்றோம்.
அதை கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரும் கண்டு களித்தோமே.

இலங்கையின் தமிழ் பிரதேசங்களில்  பௌத்த விகாரைகளும் முஸ்லீம் குடியேற்றங்களும் வேகமாக பரவி வருகின்றதாம். எனவே இன்றைய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் போல் அன்றைய காலகட்டத்திற்கேற்ப ஒரு மாற்றுக்கருத்து மாணிக்கமாவது பிறந்தே தீரும்.அது......அந்த  பிரதேசங்கள் தமிழர் வாழ்ந்ததிற்கான தடயங்களே இல்லையென நிறுவும்.

ஏனெனில் தமிழினத்தின் தலைவிதி அப்படி

Link to comment
Share on other sites

கெமர் அரசர்கள் இந்திய வழி வந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாது. அங்கோர் வட் கோயிலைக் கட்டிய இரண்டாம் சூரிய வர்மனின் முன்னோர்களின் பெயர்கள் சைவ/தமிழ் கலவையுடன் உள்ளதற்கான காரணம் சைவம் வைணவம் அங்கு பரப்பப் பட்டதனால் இருக்கலாம். கிமு 5ஆம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் வர்த்தகத் தொடர்புகள் இருந்துள்ளன. கிபி 5ஆம் நூற்றாண்டில் பிராமணர்கள் மூலம் இந்து (வைணவம்) பரப்பப்பட்டுள்ளது. 9 - 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்திரவர்மன், யசோவர்மன், ராஜேந்திரவர்மன் போன்றோர் கட்டிய கோயில்கள் பெரும்பான்மையானவை சிவன் கோயில்கள். சைவ சமயம் ஒருவேளை தென்னிந்திய வர்த்தகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அதன்பின் வந்த அரசர்கள் சிவபெருமானைக் கைவிட்டு இறுதியில் இரண்டாம் சூரியவர்மனின் கட்டிய அங்கோர் வட் விஷ்னு ஆலயம்.

இதுபோல்தான் பெரும்பாலான தமிழர்கள் குமரிக் கண்டம் என்ற மாயையை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எம் கண்முன்னே உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி ஆதாரங்களே தமிழரின் 3000 ஆண்டு வரலாற்று உண்மையைக் கூற வல்லன. அகழ்வாராச்சிகள் ஒருநாள் முழுமைபெற்றால் தமிழை உரிமைகோரும் கடவுள்களும் கேள்விக்குள்ளாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 அன்று தமிழரின் வரலாறுகள் அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க....
அதை இன்று ஆராய்ச்சி செய்பவர்களை நையாண்டிகள் செய்வது ஒரு புறம்.
வெள்ளைத்தோல்கள் செய்த ஆராய்ச்சிகளில் தமிழர் சம்பந்தமான தடயங்கள் எதுவுமில்லை என்பவர்கள் ஒருபுறம்.
கீழடியை தோண்டத் தோண்ட மூடுபவர்கள் ஒரு புறம்.
தமிழ்  தமிழினம் எவ்விதத்திலும் உயர்ந்து விடக்கூடாது என்பதில் பிற கலாச்சாரங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது கண்கூடாகவே தெரிகின்றது.
எம்மவர்கள் எதிரியையும் தலையில் வைத்து கொண்டாடுவதில் திறமை வாய்ந்தவர்கள்.இதை காலம் காலமாகவே பார்த்து வருகின்றோம்.
அதை கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரும் கண்டு களித்தோமே.

இலங்கையின் தமிழ் பிரதேசங்களில்  பௌத்த விகாரைகளும் முஸ்லீம் குடியேற்றங்களும் வேகமாக பரவி வருகின்றதாம். எனவே இன்றைய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் போல் அன்றைய காலகட்டத்திற்கேற்ப ஒரு மாற்றுக்கருத்து மாணிக்கமாவது பிறந்தே தீரும்.அது......அந்த  பிரதேசங்கள் தமிழர் வாழ்ந்ததிற்கான தடயங்களே இல்லையென நிறுவும்.

ஏனெனில் தமிழினத்தின் தலைவிதி அப்படி

சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்.

நீங்கள் மேலே கூறியது தமிழர்கள் மத்தியில் பொதுவாகவே உள்ள ஒருவகை கூட்டு-மனச்சிக்கல்.

1. எல்லாரும் எமக்கெதிராகவே வேலை செய்கிறார்கள்.

2. நாம்தான் உலகின் முதல் குடி

3. உலகில் எந்த இனத்தில் இருந்து அரிய கண்டுபிடிப்பு வந்தாலும் -அதை தமிழர்கள்தான் முதலில் கண்டு பிடித்தார்கள்.

4. எமது பெருமை எமக்கே தெரியவில்லை. உலகமே சேர்ந்து எம்மை மூடி மறைக்கப்பார்கிறது.

இப்படி புலம்பி கொண்டே இருப்பது.

என்னை பொறுத்தவரை சிங்கள-பெளத்தம், பிரம்மணிய-இந்தியா இந்த இரெண்டும் மட்டுமே தமிழர் தொன்மையை மறைப்பதில் கங்கணம் கட்டி வேலை செய்வன.

வேறு யாருக்கும் அந்த தேவை இல்லை.

ஏனையவர்கள் எமது வரலாற்றையும் வந்து நேர்மையாக ஆராயவே செய்கிறார்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பாவை திராவிட நாகரீகம் என்று அடித்து சொன்னால் மட்டும் வெள்ளைகாரன் சொல்வது இனிக்கும். ஆனால் அதே வெள்ளைகாரன் கண்ணை மூடிக்கொண்டு அங்கோர்வாட் தமிழர் கட்டியது இல்லை எனக்கூற வில்லையானால் கசக்கும்.

உலகின் மிக சொற்பமான இனங்களே 3000 வருட தொல்லியல் ஆதாரமுடையன. நாம் அவற்றில் ஒன்று. நீங்கள் நம்பாத வெள்ளைகாரகள் நம்மை 5000 வருடம் பின்னே கொண்டு போகலாம் என்கிறார்கள்.

யுனெஸ்கோ ஆராய்ச்சி ஒன்று அடுத்த படிக்குப்போய், மதுரையில் ஒரு கிராமத்தில் போய் டி என் ஏ சாம்பிள் எடுத்து, ஆபிரிக்காவில் இருந்து வந்த மனி-அலையின் முதலாவது அலை நாம் என்கிறது.

இந்த பெருமையை, ஆதிச்ச நல்லூரை, கீழடியை எல்லாம் மறந்து விட்டு நாம் எமது ஆதாரத்தை கம்போடியாவில் வேறு எவனதோ வீட்டில் போய் தேடினால் உலகம் கைகொட்டிச் சிரிக்காமல் வேறென்ன செய்யும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்.

நீங்கள் மேலே கூறியது தமிழர்கள் மத்தியில் பொதுவாகவே உள்ள ஒருவகை கூட்டு-மனச்சிக்கல்.

 நீங்கள் இண்டைக்கும் வேலைக்கு போகேல்லை????????? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 நீங்கள் இண்டைக்கும் வேலைக்கு போகேல்லை????????? :grin:

🤪 அங்கவோர்ட் அலுவல் நிமித்தம் லீவு போட்டுள்ளேன் 😂

இன்னொரு விசயம் - 

அங்கோர்வாட் தமிழர் கட்டியது என “ஆராய்சி” செய்து முடிவு காட்டிய ஒருவரை காட்டுங்கள் பார்ப்போம்?

ஆராய்சி என்றால் எவனோ எடுத்த வீடியோவுக்கு எம் மனம்போன போக்கில் கதை வசம் எழுதி யூடியூப்பில் போடுவதல்ல.

அங்கொர்வாட் தமிழர் கட்டியது என சொல்லித் திரியும் “ஆராய்சியாளர்களை” ஆராய்ந்தால் - ஒருவர் கூட தொல்லியல், வரலாற்றுத் துறைப் பக்கம் மழைக்கும் ஒதுங்கி இருக்க மாட்டார்கள் என்ற உண்மை விளங்கும்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன், வீடியோ எடுப்பவன் எல்லாம் ஆராய்சியாளன் என்றாகிவிட்டது நம் நிலைமை.

வேணும் எண்டால் ஒன்று செய்யலாம் - இதில் ஆர்வமுள்ள புலம்பெயர் தனவந்தர்கள் - ஒரு ஆராய்சி இருக்கையை ஒரு பல்கலையில் நிறுவி - அங்கோவர்டுக்கு ஆராய்சியாளரை அனுப்பி அங்கே இருந்தது தமிழ் மன்னரே என நிறுவ முயற்சிக்கலாம். 

அப்படி நிறுவினால் உலகமே ஏற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

கெமர் அரசர்கள் இந்திய வழி வந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாது. அங்கோர் வட் கோயிலைக் கட்டிய இரண்டாம் சூரிய வர்மனின் முன்னோர்களின் பெயர்கள் சைவ/தமிழ் கலவையுடன் உள்ளதற்கான காரணம் சைவம் வைணவம் அங்கு பரப்பப் பட்டதனால் இருக்கலாம். கிமு 5ஆம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் வர்த்தகத் தொடர்புகள் இருந்துள்ளன. கிபி 5ஆம் நூற்றாண்டில் பிராமணர்கள் மூலம் இந்து (வைணவம்) பரப்பப்பட்டுள்ளது. 9 - 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்திரவர்மன், யசோவர்மன், ராஜேந்திரவர்மன் போன்றோர் கட்டிய கோயில்கள் பெரும்பான்மையானவை சிவன் கோயில்கள். சைவ சமயம் ஒருவேளை தென்னிந்திய வர்த்தகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அதன்பின் வந்த அரசர்கள் சிவபெருமானைக் கைவிட்டு இறுதியில் இரண்டாம் சூரியவர்மனின் கட்டிய அங்கோர் வட் விஷ்னு ஆலயம்.

இதுபோல்தான் பெரும்பாலான தமிழர்கள் குமரிக் கண்டம் என்ற மாயையை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எம் கண்முன்னே உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி ஆதாரங்களே தமிழரின் 3000 ஆண்டு வரலாற்று உண்மையைக் கூற வல்லன. அகழ்வாராச்சிகள் ஒருநாள் முழுமைபெற்றால் தமிழை உரிமைகோரும் கடவுள்களும் கேள்விக்குள்ளாகலாம்.

இவை பொய்யாக இருக்க வேண்டியதில்லை 
ஆனால் இவை எல்லாம் எந்த ஆய்வும் இன்றி வெறுமெனே உங்களால் நம்பப்படுவபவை 
இந்த கோணத்தில் இன்னமும் யாரும் எந்த ஆய்வையும் செய்யவில்லை.
கெமர் அரசுகளின் ஆற்றல்கள் கேள்விக்குள்ளானவை ......... 
எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்பது ஒரு மாதிரியான பொய் பரப்புரை என்றால் 
நீங்கள் செய்வதும் அந்தமாதிரி ஒன்றுதான்.

தென்கொரியாவிற்கு ஒரு தமிழ் பெண் அயோத்தியா என்று சென்று இருக்கிறாள் 
அவள் கொரியாவில் முதன்மை அடைந்து பல மாற்றங்களை அங்கு செய்து கொரியர்கள் 
மரியாதைக்குரியவள் ஆகி இருக்கிறாள். பின்னாளில் அவள் அயோத்தி இந்தியாவில் இருந்து 
வந்ததாக ஆய்வு செய்து சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் கொரியர்கள் நிறைய தமிழ் சொற்களை தமது மொழியில் கலந்து வைத்து இருக்கிறார்கள் 
அது எவ்வாறு என்று ஆராய தொடங்கும்போதுதான் அயோத்தியா பாண்டிய பேர் அரசின் வழி  வந்தவள் அவள் ஒரு தமிழச்சி என்பதை கண்டறிய கூடியதாக இருந்த்தது.

அயோத்தியா தமிழா கிந்தியா என்ற ஆய்வு கொரியர்களுக்கும் வெள்ளைக்காரனுக்கும் தேவை அற்றது 
அதை அவர்கள் செய்யப்போவதில்லை சொல்லப்போவதும் இல்லை. அதுபோல விடைகள் இல்லாத பல கேள்விகள்  அங்கோர்வார்டில் இருக்கிறது.

வெள்ளைக்கார உலகுக்கு முதன்முதலில் தமிழர்கள் என்று ஒரு கூட்டம் செல்வ  செழிப்புடன் ஆடம்பரமாகவும் (பாண்டிய ராஜ்ஜியம்) மிகவும் அழகாகவும்  வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்   என்று மார்கோ போலோ கூறியபோது  அவர் கேலி செய்யப்பட்டார் ..... அவர் ஒரு கோமாளி என்று பட்டம் சூட்டப்படார். இன்றுவரை சேர்க்கஸிலும்  சினிமாவிலும்  கோமாளிகளை மார்கோ போலோக்கள் என்றுதான் அழைக்கிறோம். 
காரணம் ரோமர்களுக்கு முன்னராகவே மிகவும் நாகரீகமாக வாழ்ந்தவர்கள் பாண்டியர்கள். அந்த உண்மையை  மேற்கு உலகம் புத்தகங்களில் ஏற்றுக்கொண்டாலும்  மனங்களில் ஏற்றுக்கொள்ள போவதில்லை. 

 

 

Link to comment
Share on other sites

47 minutes ago, Maruthankerny said:

ஆனால் கொரியர்கள் நிறைய தமிழ் சொற்களை தமது மொழியில் கலந்து வைத்து இருக்கிறார்கள் 
அது எவ்வாறு என்று ஆராய தொடங்கும்போதுதான் அயோத்தியா பாண்டிய பேர் அரசின் வழி  வந்தவள் அவள் ஒரு தமிழச்சி என்பதை கண்டறிய கூடியதாக இருந்த்தது.

நானும் நேரம் மினக்கெட்டு நீங்கள் இணைத்த காணொளியைப் பார்த்தேன், ஒரு பயனும் இல்லை. உலகில் எந்த மொழியை எடுத்தாலும் இலட்சக் கணக்கான சொற்களில் ஒரே உச்சரிப்பையும் அர்த்தத்தையும் தரும் சொற்களைப் பொறுக்கி எடுக்கலாம். இது ஆராச்சியோ ஆதாரமோ கிடையாது.
இது தவிர இந்தக் காணொளி நிகழ்ச்சி ஒரு விளையாட்டுப் போன்றது. இதே நிகழ்ச்சியை நடத்துபவர் அடுத்ததாக இந்தோனேசிய மொழிக்கும் தமிழுக்கும் தொடர்புள்ள சொற்களைத் தேடி எடுத்து அடுத்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த யுடியூப் போன்றவற்றில் தமிழ் ஆக்கம்கள் வந்த போது பெருமையாக இருந்தது பின்பு அதுவே கட்டுக்கதைகளை வரலாற்றையும் குழப்பும் வண்ணம் அதிக பார்வையாளர்கள் வரவேண்டும் என்பதுக்காக  தமிழில் பொய்யும் புரட்டும் போட  இப்போதெல்லாம் டிஸ்லைக் கூட போடுவதில்லை நேரே ரிப்போர்ட் தான் நிர்வாகத்துக்கு . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, இணையவன் said:

நானும் நேரம் மினக்கெட்டு நீங்கள் இணைத்த காணொளியைப் பார்த்தேன், ஒரு பயனும் இல்லை. உலகில் எந்த மொழியை எடுத்தாலும் இலட்சக் கணக்கான சொற்களில் ஒரே உச்சரிப்பையும் அர்த்தத்தையும் தரும் சொற்களைப் பொறுக்கி எடுக்கலாம். இது ஆராச்சியோ ஆதாரமோ கிடையாது.
இது தவிர இந்தக் காணொளி நிகழ்ச்சி ஒரு விளையாட்டுப் போன்றது. இதே நிகழ்ச்சியை நடத்துபவர் அடுத்ததாக இந்தோனேசிய மொழிக்கும் தமிழுக்கும் தொடர்புள்ள சொற்களைத் தேடி எடுத்து அடுத்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

 

இதில் வியப்பேதும் இல்லை.

மனித குழுமத்தில், ஹோமோ சேப்பியன் சேப்பியன், ஹோமோ சேப்பியன் நியந்ததாலிஸ், இன்னும் இரெண்டு வகை இனங்கள் வாழ்ந்து, இப்போ நாம் (ஹோமோ சேப்பியன் சேப்பியன்) மட்டுமே எஞ்சியுள்ளோம்.

நமக்கு இது மாபெரும் யுகமாக தெரிந்தாலும், பூவுலகில் வாழ்ந்த மனித குழுமங்களோடு, பூவுலகின் வயதோடு ஒப்பிடுகையில் நமது மனித இனத்தின் தோற்றமும், அது சிந்திக்கும் மிருகமாக, கலாசார மிருகமாக மாறிய கால இடைவெளியும் கண்ணிமைக்கும் நொடிப்பொழுகள்.

இந்த மிக குறுகியகால இடவெளியில் உருவாகி, சுமார் 70 ஆயிரம் -50 ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆபிரிக்காவின் ரிப்ட் பள்ளத்தாக்கில் இருந்து புறப்பட்ட மூதாதைகளின் வாரிசுகளே இன்று உலகில் எந்த மூலையில் வாழும் மனிதனும்.

ஆகவே எம் எல்லோரினதும் மொழிகளின் ஆரம்பம் ஒன்றே.

இப்படி இருக்கும் போது ஒரு சத்தம் இன்ன சொல்லை குறிக்கிறது என்றால் - அது எம் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு போனதாக மட்டுமே அர்த்தமில்லை.

அந்த மொழியில் இருந்து எம் மொழிக்கு வந்து இருக்கலாம் இல்லாவிடின், எல்லோருக்கும் பொதுவான ஒரு மொழியில் இருந்து நம்மிரு மொழிகளுக் அந்த சொல்லை பெற்றும் இருக்கலாம்.

ஆனால் உலகின் அத்தனையையும் “நாம் தமிழர், மூத்த குடி” என்ற கண்ணாடியை போட்டபடி பார்த்தால் - நமக்கு நாம் காண விரும்புவது மட்டுமே புலப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

நானும் நேரம் மினக்கெட்டு நீங்கள் இணைத்த காணொளியைப் பார்த்தேன், ஒரு பயனும் இல்லை. உலகில் எந்த மொழியை எடுத்தாலும் இலட்சக் கணக்கான சொற்களில் ஒரே உச்சரிப்பையும் அர்த்தத்தையும் தரும் சொற்களைப் பொறுக்கி எடுக்கலாம். இது ஆராச்சியோ ஆதாரமோ கிடையாது.
இது தவிர இந்தக் காணொளி நிகழ்ச்சி ஒரு விளையாட்டுப் போன்றது. இதே நிகழ்ச்சியை நடத்துபவர் அடுத்ததாக இந்தோனேசிய மொழிக்கும் தமிழுக்கும் தொடர்புள்ள சொற்களைத் தேடி எடுத்து அடுத்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

 

இதை நீங்கள் எந்த ஆராய்ச்சியின் முடிவாக சொல்கிறீர்கள்?
எதாவது மொழிகள் பற்றி ஆய்வு செய்து இருக்கிறீர்களா? 
மொழிகளில் மூத்த மொழி தமிழ் (மற்றது சம்ஸ்கிருதம் என்ற பரப்புரை) என்பது மொழிகள் பற்றிய 
எல்லா அறிஞர்களும் ஏற்றுக்கொண்ட ஒன்று தமிழில்தான் எழுத்தில் ஆக கூடிய வருட சுவடிகள் உண்டு.
இது இன்றும் வாழ்ந்துகொண்டு இருப்பது என்பது மொழிக்காக தமிழர்கள் உழைத்த உழைப்பும் 
அவர்கள் கலாச்சாரத்தை ஒன்றிய வாழ்க்கை முறைமைகளும். 

இந்தோனேசிய கம்போடியா வியத்நாம் பகுதிகளில் தமிழ் ஆதிக்கம் நிறையவே இருக்க சாத்தியம் 
உண்டு காரணம் அவர்களுடைய மொழி தோற்றமே பல தமிழ் பேர்   அரசுகளின் ஆடசியின் போது உருவாக்கியதுதான். இந்தோனேசியா மொழியில் தமிழ் இருப்பதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை 
தென் கொரியாவில் இருப்பதில் எவ்வாறான தொடர்பு இருந்தது என்பது பற்றி ஒரு ஆய்வுக்கு உந்து தள்ளியது 
தவிர அயோத்தியா என்பவள் ஒரு தமிழ் என்பதை நிறுவ கூடியதாக இருந்தது.
மேல் இருக்கும் காணொளிக்கும் எனது கருத்துக்கும் தொடர்பு இல்லை ..... ஆனாலும் ஓரளவில் மொழி சொற்களை புரிந்துகொள்ள அதை இணைத்தேன்.

லட்ஷக்கணக்கான சொற்கள் எல்லா மொழிகளிலும் இல்லை. 

languagetree.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

 

 

செம்ம,

சும்மா எந்த நேரமும் சுமேரியா, கீழடி, மெசப்பெத்தோமியா, ஹரப்பா, நைல் எண்டு கொண்டு நிக்காம, அடுத்த லெவலுக்கு போய் சிந்திச்சிருக்கு சிங்கம்.

இப்ப நம்ம ஆக்கள் வருசையா வருவீனம் 😂

தமிழ் ஏலியன் மொழி இல்லை என்பதற்கு ஆதாரம் இருக்கா?

இது ஆராயப்பட வேண்டியது

சந்திரனில் ஒளவையார் ஏலியனுக்கு தமிழ் டியூசன் எடுக்கும் ஆதாரத்தை நீங்கள் காணவில்லையா?

ஒரு தமிழ் “ஆராய்சியாளர்” கஸ்டபட்டு கண்டு பிடித்ததை இப்படியா நக்கல் அடிப்பது?

ஆச்சோ, போச்சோ என்றபடி 😂

ஆனால் ஒன்று இப்படியான வீடியோக்கள் போடுபவர்கள் மடையர்கள் இல்லை - அவர்களுக்கு லைக்ஸ் வேண்டும், சப்ஸ்கிரிப்சன்ஸ் வேணும் -அப்போதான் காசு பார்க்கலாம்.

இப்படி தமிழனின் பெருமையை பொய்யாக சொல்லி வீடியோ போட்டால் நம் மஹா ஜனங்கள் எல்லாம் லைக்ஸை அள்ளி வழங்குவார்கள்.

போன் ஸ்மார்ட் ஆனால் எம்மவர் பலருக்கு மூளை இன்னமும் “டம்” - யூடியூப் பார்க்கக் தெரியும், வாட்ஸப், பேஸ்புக் பார்க்க தெரியும் ஆனால் சுயமா சிந்திக்க தெரியாது. இந்த அறியாமையை வைத்து மிக நூதனமாக பணம் பண்ணுகிறார்கள் இந்த “ஆராய்சியாளர்கள்”.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதில் வியப்பேதும் இல்லை.

மனித குழுமத்தில், ஹோமோ சேப்பியன் சேப்பியன், ஹோமோ சேப்பியன் நியந்ததாலிஸ், இன்னும் இரெண்டு வகை இனங்கள் வாழ்ந்து, இப்போ நாம் (ஹோமோ சேப்பியன் சேப்பியன்) மட்டுமே எஞ்சியுள்ளோம்.

நமக்கு இது மாபெரும் யுகமாக தெரிந்தாலும், பூவுலகில் வாழ்ந்த மனித குழுமங்களோடு, பூவுலகின் வயதோடு ஒப்பிடுகையில் நமது மனித இனத்தின் தோற்றமும், அது சிந்திக்கும் மிருகமாக, கலாசார மிருகமாக மாறிய கால இடைவெளியும் கண்ணிமைக்கும் நொடிப்பொழுகள்.

இந்த மிக குறுகியகால இடவெளியில் உருவாகி, சுமார் 70 ஆயிரம் -50 ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆபிரிக்காவின் ரிப்ட் பள்ளத்தாக்கில் இருந்து புறப்பட்ட மூதாதைகளின் வாரிசுகளே இன்று உலகில் எந்த மூலையில் வாழும் மனிதனும்.

ஆகவே எம் எல்லோரினதும் மொழிகளின் ஆரம்பம் ஒன்றே.

இப்படி இருக்கும் போது ஒரு சத்தம் இன்ன சொல்லை குறிக்கிறது என்றால் - அது எம் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு போனதாக மட்டுமே அர்த்தமில்லை.

அந்த மொழியில் இருந்து எம் மொழிக்கு வந்து இருக்கலாம் இல்லாவிடின், எல்லோருக்கும் பொதுவான ஒரு மொழியில் இருந்து நம்மிரு மொழிகளுக் அந்த சொல்லை பெற்றும் இருக்கலாம்.

ஆனால் உலகின் அத்தனையையும் “நாம் தமிழர், மூத்த குடி” என்ற கண்ணாடியை போட்டபடி பார்த்தால் - நமக்கு நாம் காண விரும்புவது மட்டுமே புலப்படும்.

இவை வெறும் யூகமே தவிர இதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை 
தமிழ் தடம் சார்ந்து நடக்கவேண்டியது தமிழர்களே தவிர மற்றவர்கள் யாரும் 
தமிழை தூக்கிப்பிடிக்க போவதில்லை அப்படி ஒரு அவசியம் அவர்களுக்கும் இல்லை 

மூத்த மொழி தமிழ் ஆக இருக்கும்போது 
இன்றுகூட நீங்கள் கூகிளில் தட்டினால் கூட தமிழ் என்றுதான் வருகிறது 
சில பரப்புரைகள் காரணமாக சன்க்ரிட் என்று ஆதாரம் இன்றியே சொல்கிறார்கள் 
சன்க்ரிட் மொழி நிச்சயமாக தற்போதைய ஆந்திரா பகுதியிலேயே தோன்றியிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 

உலகம் நம்பபவில்லை என்பதால் 
உண்மை பொய்யாகி போவதில்லை 

உலகம் நம்புகிறது என்பதால் 
பொய் உண்மையாகி போவதில்லை.

இவை எல்லாம் தமிழில் இருந்துதான் வந்தது என்று நாம் இப்போ ஏற்றுக்கொள்ள 
தேவையில்லை அப்படி ஒரு பெருமிதம் இப்போதைக்கு தேவை இல்லை 
ஆனால் இதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியது எங்களுடைய தேவை 
அதன் பின்புதான் ஒரு தெளிவான முடிவை கொள்ளலாம். 

இப்ப்போதைய ஆய்வுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதவை 
மொழிகள் பற்றிய ஆய்வுகள்  ... பேர் அரசுகளின் கால நேரத்துடன் ஒத்துப்போவதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

செம்ம,

சும்மா எந்த நேரமும் சுமேரியா, கீழடி, மெசப்பெத்தோமியா, ஹரப்பா, நைல் எண்டு கொண்டு நிக்காம, அடுத்த லெவலுக்கு போய் சிந்திச்சிருக்கு சிங்கம்.

இப்ப நம்ம ஆக்கள் வருசையா வருவீனம் 😂

தமிழ் ஏலியன் மொழி இல்லை என்பதற்கு ஆதாரம் இருக்கா?

இது ஆராயப்பட வேண்டியது

சந்திரனில் ஒளவையார் ஏலியனுக்கு தமிழ் டியூசன் எடுக்கும் ஆதாரத்தை நீங்கள் காணவில்லையா?

ஒரு தமிழ் “ஆராய்சியாளர்” கஸ்டபட்டு கண்டு பிடித்ததை இப்படியா நக்கல் அடிப்பது?

ஆச்சோ, போச்சோ என்றபடி 😂

ஆனால் ஒன்று இப்படியான வீடியோக்கள் போடுபவர்கள் மடையர்கள் இல்லை - அவர்களுக்கு லைக்ஸ் வேண்டும், சப்ஸ்கிரிப்சன்ஸ் வேணும் -அப்போதான் காசு பார்க்கலாம்.

இப்படி தமிழனின் பெருமையை பொய்யாக சொல்லி வீடியோ போட்டால் நம் மஹா ஜனங்கள் எல்லாம் லைக்ஸை அள்ளி வழங்குவார்கள்.

போன் ஸ்மார்ட் ஆனால் எம்மவர் பலருக்கு மூளை இன்னமும் “டம்” - யூடியூப் பார்க்கக் தெரியும், வாட்ஸப், பேஸ்புக் பார்க்க தெரியும் ஆனால் சுயமா சிந்திக்க தெரியாது. இந்த அறியாமையை வைத்து மிக நூதனமாக பணம் பண்ணுகிறார்கள் இந்த “ஆராய்சியாளர்கள்”.

 

நீங்கள் சொல்லவருவது உண்மையும் 
எழுந்த மாத்திரமானதும் ஆகும் 

அவர்கள் லைக் சப்ஸ்கிரிப்ஷனுக்காக செய்கிறார்கள் என்பது உண்மைதான் 
அவர்கள் இதுபற்றி எந்த ஆய்வையும் செய்யவில்லை என்பதும் உண்மைதான் 
அதை முட்டாள் தமிழ்ர்கள் நம்புகிறார்கள் என்பதும் உண்மைதான்.

ஆனால் அதனால் மட்டுமே அது பொய் என்று ஆகிவிடாது 
(இந்த விடியோவையே நான் பார்க்கவில்லை இப்படி லூசுத்தனமான ஏலியன் பற்றியது அல்ல)
மூதையோரிடம் இருந்த அறிவு பொக்கிஷம் என்பது என்று எம்மிடம் இல்லை 
நானோ நீங்களோ எமது மூளையை பாவிப்பதே இல்லை எல்லாம் ஏற்கனவே இருக்கிறது 
அவற்றை நாம் தொடர்ந்துகொண்டு காபிரட்டுகளின் அடிமைகளாக வாழ்க்கையை தொடர்ந்துகொண்டு இருப்பவர்கள். 

சைவ மதம் பற்றி எனக்கு ஆர்வம் வந்த போது இவ்வளவோ அறிவியல் சைவ மதத்தில் 
இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன் (எவ்ளவோ தொலைந்து போய் விட்டது)

நீங்கள் யோகா பற்றி தெரிந்துகொள்ள முயற்ச்சித்தால் 
உடலை அக்குவேறு ஆணிவேறாக அன்றே பிரித்து இன்றைய விஞ்ஞானம் காணாத 
எல்லாம் அன்றே கண்டு இருக்கிறார்கள் என்பது அதிசயம்தான். 

இவற்றை நாம் ஆய்வு செய்து கொண்டு போனால்தான் உண்மையை அறியலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

இவை வெறும் யூகமே தவிர இதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை 
தமிழ் தடம் சார்ந்து நடக்கவேண்டியது தமிழர்களே தவிர மற்றவர்கள் யாரும் 
தமிழை தூக்கிப்பிடிக்க போவதில்லை அப்படி ஒரு அவசியம் அவர்களுக்கும் இல்லை 

மூத்த மொழி தமிழ் ஆக இருக்கும்போது 
இன்றுகூட நீங்கள் கூகிளில் தட்டினால் கூட தமிழ் என்றுதான் வருகிறது
 
சில பரப்புரைகள் காரணமாக சன்க்ரிட் என்று ஆதாரம் இன்றியே சொல்கிறார்கள் 
சன்க்ரிட் மொழி நிச்சயமாக தற்போதைய ஆந்திரா பகுதியிலேயே தோன்றியிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 

உலகம் நம்பபவில்லை என்பதால் 
உண்மை பொய்யாகி போவதில்லை 

உலகம் நம்புகிறது என்பதால் 
பொய் உண்மையாகி போவதில்லை
.

இவை எல்லாம் தமிழில் இருந்துதான் வந்தது என்று நாம் இப்போ ஏற்றுக்கொள்ள 
தேவையில்லை அப்படி ஒரு பெருமிதம் இப்போதைக்கு தேவை இல்லை 
ஆனால் இதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியது எங்களுடைய தேவை 
அதன் பின்புதான் ஒரு தெளிவான முடிவை கொள்ளலாம். 

இப்ப்போதைய ஆய்வுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதவை 
மொழிகள் பற்றிய ஆய்வுகள்  ... பேர் அரசுகளின் கால நேரத்துடன் ஒத்துப்போவதில்லை 

1. நீங்கள் எதில் தட்டினாலும் “தற்போது பாவனையில் உள்ள/பேச்சு வழக்கில் உள்ள” மொழிகளில் ஆதியானது தமிழ் என்பதே சொல்லப்படும். தமிழின் அதி கூடிய எழுத்து வடிவம் கிமு 200 வரைதான் இதுவரை கண்டெடுக்க பட்டதாக அறிகிறேன். ஆனால் சுமேரியன் உட்பட பல மொழிகளின் எழுத்து வடிவம் இதற்கு முன்பே கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதனால் மட்டும் தமிழ் கிமு 200 இல் இருந்தே இருந்தது என கூற முடியாது. பேச்சு வழக்கில் தமிழ் ஆதி மொழிகளில் ஒன்றாக இருக்க முடியும். கிமு 5000 ஆண்டு வரை கூட இருக்கலாம்.

ஆனால் நாம் டைம் மெசினில் போய் பார்த்தாலே ஒழிய இன்ன மொழிதான் முதல் மொழி என நிறுவுவது ஒரு போதும் முடியாத காரியம். 

இது தனியே மொழி சம்பந்த பட்ட விடயம் மட்டுமல்ல. இந்திய தீபகற்பத்தில் ஆதி மனித எச்சங்கள் ஏதுமில்லை. ஆதி மனித எச்சங்கள் ஆபிரிக்காவிலேயே உள்ளன. 

தமிழ் சம்பந்தமான தரவுகள் எதுவும் இந்திய தீபகற்பத்தை தாண்டி இல்லை. 

ஆகவே மனித இனம் ஆபிரிக்காவில் தோன்றியது என்ற எடுகோள் உண்மை எனில்,  தமிழ் ஆதி மொழி என்ற எடுகோள் உண்மையாக இருக்க சாத்தியங்கள் குறைவு.

எனது ஊகம் (ஊகம் மட்டுமே) யாதெனில் - ஆபிரிக்காவிலேயே நாம் பல விதமான அடிப்பசி ஓசைகளை எழுப்பி ஒன்ற்றோ அல்லது பலவோ - prototype மொழிகளை பேசி இருப்போம் - பின்னர் உலக பரம்பலின் போது, தங்கிய இடத்தை பொறுத்து இந்த proto மொழிகள் சுமேரியனாக, அரைமைக்காக, தமிழாக உருவாகி இருக்கும். இந்த மொழிகளில் இருந்து ஏனைய புதிய மொழிகள் பிறந்திருக்கும். எனவே இவற்றுக்குடையான ஒற்றுமைகள் ஆங்காங்கே இருக்கிறது.

2. பொய்களை உலகம் நம்புகிறது என்பதால், உலகம் நம்பாதவை அனைத்தும் உண்மைகள் என்றும் ஆகாதே?

3. முன்பே சொன்னதுதான், ஆராயுங்கள். ஏற்றுகொள்ளப் பட்ட ஆய்வு முறைகளை பயன்படுத்தி ஆராய்ந்து, உண்மை என நிரூபியுங்கள். ஆனால் அதுவரை கோமாளித்தனம் வேண்டாமே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.