Jump to content

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் விசேட சோதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Srilanka-Police.jpg

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் விசேட சோதனை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீதி தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாற நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 15 கிலோ பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றத்திற்காக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அனுமதிபத்திரம் இன்றி கடத்தப்பட்ட தளபாடங்கள் செய்ய பயன்படும் மரக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கேரள கஞ்சா மற்றும் மரக் குற்றிகள் கடத்தப்பட்ட மூன்று பேருந்துகளையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழில்-இருந்து-கொழும்பு-2/

Link to comment
Share on other sites

எப்பிடியோ ஒரு காரணத்தை கண்டுபிடிச்சு தமிழரை இம்சை செய்ய தொடங்கிட்டான்.

Link to comment
Share on other sites

வடக்கில் நான்கு இடத்தில் இராணுவச் சோதனை; மக்கள் பாதிப்பு!

Nothern-Check-Point-Peoples-Problem-1-76

வடக்கில் ஏ-9 வீதியை மையப்படுத்தி போதைப் பொருள் கடத்தலை காரணமாகக்காட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சோதனை நடவடிக்கைகளால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

பேருந்துகளும் பயணிகளும் முழுமையாக சோதனையிடப்பட்டு வருவதுடன் கடந்த ஒரு வாரகாலமாக போர்க் காலத்துடன் ஒப்பிடும் வகையில் பேருந்துகளில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள் சோதனையிடப்படுகின்றன. இதனால் பல்வேறு இடைஞ்சல்களுக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணத்தைத் தொடர்கின்றனர்.

வன்னிப் பகுதியில் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிக்கு அடுத்தபடியாக புதூர் சந்தியில் 15 கிலோமீற்றர் இடைவெளியில் மற்றொரு சோதனை சாவடி உள்ளது. அதற்கு அடுத்ததாக 15கிலோமீற்றர் தூர இடைவெளியில் ஓமந்தையிலும் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறக்கிவிடப்பட்டு வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டு சோதனை இடம்பெறுகிறது.

குறித்த நடவடிக்கையால் ஒரு சோதனைச் சாவடியில் 15 நிமிடத்திற்கும் அதிகமான தாமதம் ஏற்படுகின்றது. கடமையில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அதிகமான பேருந்துகள் வருகை தரும்போது நீண்டநேரம் எடுப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது.

குறித்த சோதனைகளின் மூலம் சில பேருந்துகளில் இருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுவந்தாலும் பொதுமக்கள் கடுமையாக அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.Nothern-Check-Point-Peoples-Problem.jpg

Nothern-Check-Point-Peoples-Problem-1-76

Nothern-Check-Point-Peoples-Problem-2-76

https://newuthayan.com/வடக்கில்-நான்கு-இடத்தில்/

Link to comment
Share on other sites

கோட்டாபயவின் ஆட்சியில் வடக்கில் போடப்படும் வீதித்தடைகள் தமிழர் மீதான கட்டுப்பாடுகளே!

"வடக்கில் தற்போது வீதிகளில் மீண்டும் தடைகள் போடப்பட்டுள்ளன. இராணுவம் நின்றாலும், இல்லை என்றாலும் அந்தத் தடைகள் உள்ளன. அவை வேகக் கட்டுப்பாடுகள் அல்ல. தமிழர்கள் மீதான கட்டுப்பாடு. கோட்டாபயவின் அராஜக ஆட்சியில் தமிழர்களை இராணுவத்தினர் கட்டுப்படுத்துகின்றார்கள் என்பதுக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பள்ளிக்குடாவில் நேற்று நடைபெற்ற முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இப்போது நாங்கள் ஒரு இக்கட்டான நிலைமைக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் என்ற பதம் அங்கு பாவிக்கப்படவில்லை. மாவட்ட சபைக் கூட்டமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஒன்றையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய முடிவின் மூலமே நினைப்பதைச் சாதிக்க முனைகிறார் என்று தெரிகின்றது.

அவர் செய்பவை குறித்து நாங்கள் நன்றாக யோசிக்க வேண்டியுள்ளது. அரசமைப்புச் சொல்கின்றது தமிழுக்கு அந்தஸ்து உள்ளது என்று. இங்கே அவர்கள் சொல்கின்றார்கள் சுதந்திர தினமன்று சிங்களத்தில்தான் தேசிய கீதம் என்று. பின்னர் ஏன் எங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எங்களை எங்களுடைய பாட்டுக்கு விட்டு விடலாமே.

எங்களுக்கான உரிமைகளை வழங்கி எங்களை சரிசமமாக உங்களால் மதிக்க முடியாது என்றால், ஏன் உங்கள் பிரதிநிதிகளை இங்கே போடுகிறீர்கள். இது உங்கள் அராஜக ஆட்சியை வெளிப்படையாகக் காட்டுகின்றது.

அப்படித்தான் நாங்கள் யோசிக்க வேண்டும். மிகத் துணிவாக சிங்களம் மாத்திரம்தான் என்று அறிவிக்கின்ற துணிச்சல் அவர்களுக்கு இருக்கின்றது.

நீங்கள் சிங்கப்பூருக்குப் போனாலும், ஜப்பானுக்குப் போனாலும் அங்கெல்லாம் தமிழ் இருக்கின்றது. ஒரு சிறிய நாடாக இருந்தாலும், தமிழ் கலாசாரத்தைப் பேணுவதற்கு ஓர் இடம் அங்கு உண்டு. ஆனால், இவர்கள் பௌத்த தர்மம் பற்றிப் பேசிப் பேசி, அந்தப் பௌத்தம் என்ன சொல்கிறதோ, அதற்கு எதிரான செயற்பாடுகளை மற்றொரு இன மக்கள் மீது பயன்படுத்துகின்றார்கள். தங்களுடைய அசுரத்தனத்தைக் காட்டுகின்றார்கள்.

இப்போது நாங்கள் வீதிகளால் செல்லும்போது மீண்டும் எத்தனையோ வீதித் தடைகள் உள்ளன. எதற்காக அந்த வீதித் தடைகள் என்று எனக்குத் தெரியவில்லை.

அந்த வீதித் தடைகளில் இராணுவம் நிற்பதும் உண்டு, சும்மா தடைகளைப் போட்டு வைத்திருப்பதும் உண்டு. இது வேகக் கட்டுப்பாடல்ல, தமிழர்களுக்கான கட்டுப்பாடு. அவர்கள் தமிழர்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள்.

நீ இப்படித்தான் இருக்கலாம், இப்படித்தான் செல்லலாம் என்று எங்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள். இன்னும் சில நாள்களில் அப்படிப்பட்ட அரசின் பிரதிநிதிகள் என்று சிலர் எம் மத்தியில் வருவார்கள்.

மக்கள் மத்தியில் படிவங்களுடன் வருவார்கள். அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம், ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத் தருகின்றோம், உணவு தருகின்றோம் என்பார்கள். அந்தப் படிவங்களை நிரப்பியே உங்களுடைய வாழ்க்கை முடிந்து விடும். கட்டாயம் வருவார்கள், ஆனால், மக்கள் துணிய வேண்டும். அவர்களை எதிர்க்க வேண்டும், ஏற்கனவே தருவோம் என்று கூறியதைத் தாருங்கள் என்று அவர்கள் முன் கேட்க வேண்டும்.

எங்களிடமே முதன்மை, எங்களுடைய அரசியல் உரிமை எங்களுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதுதான்.

அரசியல் உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும். அதே நேரத்தில், அபிவிருத்தியையும் சமாந்தரமாக நாங்கள் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் எங்களுடைய வேலைப்பாடுகள் நடக்கின்றன. அபிவிருத்தி இல்லாமல் இருந்தால், நாங்கள் எங்களுடைய கல்வியையோ, விளையாட்டையோ, ஒரு நிலைக்குக் கொண்டுவர முடியாது.

இன்றும் கூட நாங்கள் ஒன்பதாவது இடத்தில்தான் இருக்கின்றோம். வேறு நாடுகளைப் பார்த்தால் போர் நடைபெற்றால், போர் நடைபெற்ற பிரதேசங்களில் உள்ள மக்களைப் பற்றிச் சிந்தித்தார்கள், அவர்களுடைய கல்வி, பொருளாதாரத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால், எங்களுடைய நிலை அவ்வாறு அல்ல. எல்லா விதத்திலும், வடக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்திலேயே இருக்கின்றது.

அது கல்வியோ, சுகாதாரமோ, விளையாட்டோ எதுவாக இருந்தாலும் ஒன்பதாவது மாகாணமாகவே எமது மாகாணம் இருக்கின்றது.

தமிழர்களுக்கென ஓர் ஆயுத பலம் இருந்தது. அந்தப் பலத்தை கள்ளங்கபடமாக மௌனிக்கச் செய்து, முறித்தெறிந்துவிட்டு, மீண்டும் தங்களுடைய அராஜக ஆட்சியை தமிழர்கள் மீது செலுத்த முனைகின்றார்கள். இதுதான் உண்மை. இதை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்" - என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/136387

Link to comment
Share on other sites

On 1/27/2020 at 10:57 AM, தமிழ் சிறி said:

போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தெற்கில நடக்கிற பல சமூக விரோத, போதைப்பொருள் கடத்தல், பாதாளலோக கோஷ்டி செயற்பாடுகளை நிறுத்த ஒரு சோதனையும் இல்லாதது சொறிலங்கா அரசின் தமிழின விரோத போக்கை காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, போல் said:

நீங்கள் சிங்கப்பூருக்குப் போனாலும், ஜப்பானுக்குப் போனாலும் அங்கெல்லாம் தமிழ் இருக்கின்றது. ஒரு சிறிய நாடாக இருந்தாலும், தமிழ் கலாசாரத்தைப் பேணுவதற்கு ஓர் இடம் அங்கு உண்டு.

அப்படியானால் சரவணபவன் என்ன செய்திருக்க வேண்டும் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரியை அழைத்த போது, அவரிடம் சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் தமிழ் இருக்கின்றது, தமிழ் கலாசாரத்தைப் பேணுவதற்கு அங்கே இடம் இருக்கிறது ஆனால் இலங்கையில் தான் தமிழ் இல்லை என்பதை தெரியபடுத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

12 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்படியானால் சரவணபவன் என்ன செய்திருக்க வேண்டும் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரியை அழைத்த போது, அவரிடம் சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் தமிழ் இருக்கின்றது, தமிழ் கலாசாரத்தைப் பேணுவதற்கு அங்கே இடம் இருக்கிறது ஆனால் இலங்கையில் தான் தமிழ் இல்லை என்பதை தெரியபடுத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

சரவணபவனுக்கு உந்த விஷயங்கள் தெரியுமோ தெரியல்ல! ஆள் அந்தமாதிரி ஆள்.

Link to comment
Share on other sites

நேற்று பாராளுமன்றத்தில் டக்கு ஐயா பேசும்போது அப்படி ஒன்றும் இல்லை என்றும் , தானும் அந்தவழியாகவே கண்ணை திறந்து கொண்டு போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்। இங்குள்ள படங்களை பார்க்கும்போது இது வெளிப்படையாகவே தெரிகின்றது। டக்கு ஐயாவுக்கு கண்ணில ஏதும் பிரச்சினையோ தெரியவில்லை। அடுத்த தேர்தல் வரப்போகுது। மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.