Jump to content

போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் கோடீஸ்வரன் - கருணா குற்றச்சாட்டு!


Recommended Posts

 

போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் கோடீஸ்வரன் - கருணா குற்றச்சாட்டு!

போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் கோடீஸ்வரன் - கருணா குற்றச்சாட்டு!

 

பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்று போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, கோரக்கோவில், உதயபுரம் பிரதேசத்தில் நேற்று (26) சமூக சேவகர் வெ. மோகன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன், முஸ்லிம் அரசியல்வாதிகள் கருணா அம்மான் என்றால் நட்பாகத் தான் இருக்கின்றனர். சாதாரண மக்கள் நான் சண்டைக்கு வருவதாக நினைக்கின்றனர். அலிசாஹிர் மௌலானா என் உயிர் நண்பர் அரசியல் கொள்கை வேறு நட்பு வேறு. இதுதான் நாகரீக அரசியல்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் குரோத அரசியலை வளர்க்கின்றனர். கோடீஸ்வரன் அண்மையில் விட்ட அறிக்கை பாரதூரமான ஒரு அறிக்கை பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்றால் அது பாரதூரமான செயற்பாடு.

அது காட்டிக்கொடுக்கும் அரசியல். அதற்கு நான் விடுவேனா படைத் தளபதியாக இருந்த நாள் வெளியில் இருக்கும் போதும் போராளிகளை உள்ளே வைக்க நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போராளிகளை கைது செய்து உள்ளே வைக்க வேண்டும் என்றால் என்னை தானே முதலில் கைது செய்து உள்ளே வைக்க வேண்டும். நான் துணிந்து வெளியில் நிற்கின்றேன் என்றால் ஏனைய போராளிகளே உள்ளே வைக்க அனுமதிப்பேனா? அது ஒரு காலமும் போராளிகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்கு சென்று வெறுமனே பேசிக் கொண்டிருப்பவர்களை அனுப்புவதால் பொதுமக்களுக்கு என்ன பயன் அவர்கள் அங்கு சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதால் எமது மக்களுக்கு நன்மை வருமா? நாங்களும் கதைக்கலாம் அதை அடித்து பிடிக்கலாம் இது தகர்த்து பிடிக்கலாம் என்று பேசிக் கொள்ளலாம் இதில் எமது மக்களுக்கு என்ன இலாபம் என்று இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது.

நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நமக்கு யதார்த்த ரீதியாக பொருந்தக்கூடிய அரசியலை செய்யக்கூடிய தலைமைகள் தான் எமக்கு வேண்டும். அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரை பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன இவற்றை நான் தீர்த்து வருகின்றேன்.

கடந்த காலங்களில் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க கூடிய வாய்ப்புகள் பல கிடைத்தன ஆனால் அவற்றை தவறவிட்டு விட்டோம். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசு சார்பாக எமது பக்கம் தாவி வந்தது கேட்டனர். அவர்களின் தகைமை இல்லாமையினால் அந்தப் பதவிகள் கிடைக்கவில்லை அவர்களின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

எமது மக்களுக்கு அபிவிருத்திகள் வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் அது அரசியல் சாணக்கியத்தினால் மாத்திரமே முடியும் அது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு செய்ய முடியாது . நாம் யுத்தம் வேண்டாம், வன்முறை வேண்டாம் என்று வந்திருக்கின்றோம் எமக்கிருக்கும் ஒரே பலம் அரசியல் பலம். நாம் சரியாக திட்டமிட்டு சரியாகச் ஏற்படாவிட்டால் அரசியல்வாதிகளை வளர்த்துவிடுவோமே தவிர தமது பிரச்சினைகள் தீர்க்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது. அவ்வாறான அரசியல்வாதிகள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ள மாட்டார்கள்.


தமிழ் தேசிய உணர்வால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு உண்மையாக உணர்வு இருக்கிறதா? இவர்களுக்கு யுத்தம் என்றால் என்னவென்று தெரியுமா? யுத்தத்தின் வடுக்கள் தெரியுமா? யுத்தத்தினால் பிள்ளைகளை இழந்த தாய்களின் வலிகள் தெரியுமா? மாவீரர் குடும்பங்கள் படும் அல்லல்கள் புரியுமா? அவர்களுக்கு தெரியாது.

இப்போது இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே புரியாது. இவர்கள் தற்போதும் தங்களை தமிழ் தேசிய உணர்வாளர்கள் போல் சித்தரித்துக் கொண்டு திரிகின்றனர். இவர்களை நாங்கள் விரட்டியடிக்க வேண்டும்.

இன முரண்பாடு வேண்டாம் என்று தான் யுத்தத்தை கைவிட்டு அரசியல் பாதையில் பயணிக்கும் நான் இன குரோதங்களை வளர்ப்பவன் நானில்லை. ஆனால் ஒரு தேசிய இனத்தின் மக்களை நசுக்கும் செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அதை தடுத்து நிறுத்துவேன். ஒரு தனிப்பட்ட நபர்கள் காணி அபகரிப்பு நில அபகரிப்பு போன்ற விடயங்களில் ஈடுபட்டால் அது ஒரு சமூகத்தின் செயற்பாடாக நாம் கருதக்கூடாது. அவருக்கான சட்ட நடவடிக்கைகள் மூலம் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். எமது தமிழ் முதலாளிமாரும் காணி அபகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு எத்தனை ஏக்கர் காணி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. அதேபோன்று தான் முஸ்லீம்கள் சிலரும் அரசியல் பலத்தை பயன்படுத்தி காணிகளை கையகப்படுத்த முயல்கின்றனர். இவற்றிக்கான திட்டங்களைப் பெற சட்டரீதியாக செல்வோம் வன்முறை ஒருகாலும் தீர்வாகாது.


முஸ்லிம்கள் சரியாக வாக்களித்து தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர் அவர்கள் ஆளும் அரசுடன் இணைந்து அபிவிருத்திகளை செய்கின்றனர். காரணம் அரசியல் பலம் தேசியம் தேசியம் என்று தேய்ந்து போய்விட்டோம் . இப்போது இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது.

அன்ரன் பாலசிங்கம் தலைமையில் தமிழ் மக்களுக்காக உலகம் முழுதும் பேச்சுவார்த்தைக்கு சென்று உயிரோடு இருக்கும் ஒரே ஒரு நபர் நான் மாத்திரம் தான். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர்களுக்கு தேசியம் கதைக்கவும் அருகதை இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எனக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார் போராளிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப் போகிறார்கள் என்று கூறுகின்றார். அவ்வாறு போராட்டம் நடத்துவதற்க்கு அவரயும் வந்து கலந்து கொள்ளுங்கள் கேட்கிறோம். அவர் போராட்ட காலத்தில் ஓடி ஒழித்தவர். நாங்கள் போராளிகளை ஒன்று சேர்த்துள்ளதால் பயந்து போய் உள்ளார். போராளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

முன்னாள் போராளிகள் எத்தனை ஆயிரம் பேர் அந்த விதமாக அங்கவீனர்கள் இருக்கின்றன வடக்கு - கிழக்கு தேசங்கள் இன்று சின்னாபின்னமாக கிடக்கின்றது. இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மூலம் ஒரு நல்ல காலம் பிறந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளில் இருந்த பழைய போராளிகள் அனைவரும் சுதந்திரமாக இருக்கலாம் என்று ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் போது தான் போராளிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு 12 ஆயிரம் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதை நான் தான் முன் நின்று செய்தேன். களத்தில் நின்று போராடிய போராளிகளின் வலிகள் எனக்கு தான் புரியும் அந்த வலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புரியாது.

 

 

அம்பாறை மாவட்டத்தில் குடிநீர் இல்லாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் இருக்கின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்னிடம் கேளுங்கள் அம்பாறை மாவட்டத்தில் தேசிய குடிநீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தமிழ் பொறியியலாளர் யாராவது இருக்கிறார்களா? என்று கேளுங்கள் அவருக்கு அது எல்லாம் தெரியாது சும்மா கூவிக்கொண்டு திரிவது தான் அவருடைய வேலை. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தமிழர் ஒருவரை பொறியியலாளராக நியமித்து கொடுப்பேன் அப்போது அந்த மக்களின் பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பார்.

மாவட்டத்தில் காணப்படும் மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பது தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி அதை விடுத்து அரைக்காற் சட்டை அணிந்து கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஸ்கேற் கொடுப்பதில்லை.

கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கொடுத்தால் நாங்கள் அனைவரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் இணைந்து நிற்போம் என்று கூறுகின்றனர். அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கு இது மாத்திரம் பிரச்சினை இல்லை. இது போன்ற ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும். இதில் முஸ்லிம்களுக்கு எந்தவித இழப்புகளும் இல்லை. கல்முனை என்று பார்க்காமல் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி என்ற ரீதியில் அவர்கள் பார்க்க வேண்டும்.

இதனை தொடர்ந்து முஸ்லிம்களினால் அபகரிக்கபடும் மயான காணியை பார்வையிட்ட கருணா அம்மான் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருடன் தொடர்புகொண்டு விரைவில் தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கினார்.
 

-அம்பாறை நிருபர் ஷிஹான்-

http://tamil.adaderana.lk/news.php?nid=125026

 

Link to comment
Share on other sites

19 minutes ago, nunavilan said:

பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்று போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார்.

அப்பிடி போடு அரிவாளை.

கருணா பிரதேசவாதம் பேசி கரைகண்டுட்டார்.
இப்ப காட்டிக்கொடுப்பு வாதம் பேசுறார்.
அவர் பாணில பிரதேசவாதம் பேசின ஆக்கள் இதையும் தொடராம இருக்கோணும்.

Link to comment
Share on other sites

கருணா அம்மானுக்கு வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்கள் எல்லாம் அத்துப்படி என நினைக்கிறேன்। அத்துடன் கிளிநொச்சி எங்கு இருக்குதென்று உங்களுக்கு தெரியும்தானே। இருந்தாலும் உங்களது நோக்கம் வன்னியயும் , கிழக்கையும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதே।

இதை நீங்கள் வடக்கு கிழக்கு பிரதேச அபிவிருத்திக்காக அணமையில் ஒரு புத்திசீவிகள் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம்। அவர்களுடன் சேர்ந்து நீங்கள் இந்த முயட்சியில் இறங்கினால் நல்லது। எல்லா பிரதேசமும் சமசீராக அபிவிருத்தியடையும்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை  காட்டிக்கொடுப்பது  தொடர்பான  இந்த  செய்தி 15 வருடங்களுக்கு  முன்பானதா??

ஒருமுறை என்னை  நானே  கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/27/2020 at 10:06 PM, nunavilan said:

அதற்கு நான் விடுவேனா படைத் தளபதியாக இருந்த நாள் வெளியில் இருக்கும் போதும் போராளிகளை உள்ளே வைக்க நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போராளிகளை கைது செய்து உள்ளே வைக்க வேண்டும் என்றால் என்னை தானே முதலில் கைது செய்து உள்ளே வைக்க வேண்டும். நான் துணிந்து வெளியில் நிற்கின்றேன் என்றால் ஏனைய போராளிகளே உள்ளே வைக்க அனுமதிப்பேனா? அது ஒரு காலமும் போராளிகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என தெரிவித்தார்.

போராட்டத்தையே காட்டிக்குடுத்தது போராளிகளைபற்றிப் பேசுது பாருங்கோ, இன்னமும் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் போராளிகள் இல்லையா? காட்டிக்குடுத்து காலை நக்கிறபடியால் வெளியே இருந்து கொண்டு வீரவசனம் பேசுறது அதிகமானது.

 

On 1/27/2020 at 10:06 PM, nunavilan said:

அன்ரன் பாலசிங்கம் தலைமையில் தமிழ் மக்களுக்காக உலகம் முழுதும் பேச்சுவார்த்தைக்கு சென்று உயிரோடு இருக்கும் ஒரே ஒரு நபர் நான் மாத்திரம் தான்

 உலகம் முழுக்க பேச்சுவார்த்தை நடத்தி, சிங்களவனுடன் சங்கமமாகியும் எதுவும் நகரவில்லை. மக்களும் உவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யாருக்கு உபதேசம் செய்கிறார்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎28‎/‎2020 at 1:46 PM, விசுகு said:

போராளிகளை  காட்டிக்கொடுப்பது  தொடர்பான  இந்த  செய்தி 15 வருடங்களுக்கு  முன்பானதா??

ஒருமுறை என்னை  நானே  கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

இப்ப கோடீஸ்வரன் போராளிகளை காட்டிக் கொடுப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அண்ணா....எங்களுக்கு இப்ப அந்த போராளிகளின் தேவை இல்லையே 😞

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

போராட்டத்தையே காட்டிக்குடுத்தது போராளிகளைபற்றிப் பேசுது பாருங்கோ, இன்னமும் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் போராளிகள் இல்லையா? காட்டிக்குடுத்து காலை நக்கிறபடியால் வெளியே இருந்து கொண்டு வீரவசனம் பேசுறது அதிகமானது.

 

 உலகம் முழுக்க பேச்சுவார்த்தை நடத்தி, சிங்களவனுடன் சங்கமமாகியும் எதுவும் நகரவில்லை. மக்களும் உவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யாருக்கு உபதேசம் செய்கிறார்?  

இவர் பேச்சு வார்த்தை குழுவில் இருந்தவராம் இதையும் நம்ப ஒரு கூட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இப்ப கோடீஸ்வரன் போராளிகளை காட்டிக் கொடுப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அண்ணா....எங்களுக்கு இப்ப அந்த போராளிகளின் தேவை இல்லையே 😞

 

போராளிகள் என்றால் யார்?
கொஞ்சம் தெளிவா எழுதினீர்கள்  என்றால் 
நாமும் அறிந்து கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

பிரதேசவாதம் பேசி ஊறிப்போன ஆக்கள் இப்ப தங்களுக்கும் தங்களை போன்ற பிரதேசவாத ஆக்களுக்கும் மட்டும்தான் எல்லா இடமும் அத்துப்படி என்டு ஒரு புதுப் புரளியை கிளப்ப தொடங்கியிருக்கீனம். 

Link to comment
Share on other sites

2 hours ago, Rajesh said:

பிரதேசவாதம் பேசி ஊறிப்போன ஆக்கள் இப்ப தங்களுக்கும் தங்களை போன்ற பிரதேசவாத ஆக்களுக்கும் மட்டும்தான் எல்லா இடமும் அத்துப்படி என்டு ஒரு புதுப் புரளியை கிளப்ப தொடங்கியிருக்கீனம். 

கருணாவுக்கு வாழ்த்துக்கள்।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.