Jump to content

நாசிகளின் வதை முகாம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள்


tulpen

Recommended Posts

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாசி ஜேர்மனியால் நடத்தப்பட்ட பாரிய வதை முகாமான அவிஸ்விற்ஸ் பிர்கனவ் முகாம் (Auschwitz-Birkenau  concentration camp)  சோவியத்தின் செம்படைகளால் மீட்கப்பட்டு இன்று 27.ஜனவரி 2020 ல்  75 ஆண்டுகள் பூர்ததியாகி உள்ளது. அதன் நினைவை உலகமக்கள்  இன்று நினைவு கூர்ந்தனர்

பல ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இன்றுஅங்கு விஜயம் செய்து அங்கு கொல்லப்பட்ட மக்களை. நினைவு கூர்ந்தனர். வதைமுகாமிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இன்று உயிருடன்  வாழும் 200 கு மேற்ப்பட்ட மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். 

நாசிகளால் நடத்தப்பட்ட பல வதை முகாம்களில் மிகப் பெரியது இந்த முகாம் ஆகும்.  போலந்தின்  தென்பகுதியில் உள்ளது.  செம்படைகளால் விடுவிக்கப்படும் போது 7000 கு மேற்ப்பட்ட கைதிகள் அங்கு இருந்தனர். கிட்டத்தட்ட 1.1 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் 1940 - 1945 காலப்பகுதியில் இந்த முகாமில் மாத்திரம் படுகொலை செய்யப்பட்டனர். 

வார்சோவை கைப்பற்றி இம்முகாமை நோக்கி செம்படைகள  முன்னேறிய வேளை அவசரம் அவசரமாக  தம்மிடம் இருந்த கைதிகளை நாசிகள் கொலை செய்ய ஆரம் பித்தனர். இருப்பினும் சோவியத் படைகளின் வேகமான முன்னேற்றத்திற்கு  ஈடு கொடுக்க முடியாமல் நாசிப் படைகள்  பேர்லினை நோக்கி பின்வாங்க பல ஆயிரக்கணக்கான கைதிகள் காப்பாற்றப்பட்டனர். இருப்பினும் இம்மகாம் தொர்பான பெருமளவு தடயங்களை நாசிகள  அழித்து விட்டனர். 

தற்போது நினைவு சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாரிய முகாமை வருடாந்தம் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து பாரவையிடுகின்றனர. 

சென்ற வருடம் நான்  இந்த முகாமிற்கு  சென்ற பின்னர் அங்கு கண்ட காட்சிகள் மனத்தை உறைய வைப்பவை. அதில் நான்  இருந்து மீண்டுவர பல வாரங்கள் எடுத்தது.அப்போது எடுக்கப்பட்ட படங்களை பின்னர் இணைக்கிறேன்.  
 

https://www.ndr.de/geschichte/schauplaetze/Auschwitz-KZ-Befreiung-durch-die-Rote-Armee-vor-75-Jahren,auschwitz592.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, tulpen said:

சென்ற வருடம் நான்  இந்த முகாமிற்கு  சென்ற பின்னர் அங்கு கண்ட காட்சிகள் மனத்தை உறைய வைப்பவை. அதில் நான்  இருந்து மீண்டுவர பல வாரங்கள் எடுத்தது.அப்போது எடுக்கப்பட்ட படங்களை பின்னர் இணைக்கிறேன்.  
 

உங்களைப் போல் நேரில் போய்ப் பார்கக எனக்கு இன்னும் வாய்ப்பு அமையவில்லை Tulpen

நாசிகளின்  Auschwitz வதை முகாமில் இருந்தவர்களை,  ரஷ்யா செம்படைகள் விடுவித்த 75 வது  வருட நினைவு நாளை இன்று நினைவு கூர்ந்தார்கள். அதைத் தொலைக் காட்சியில் பார்த்தேன்

 

Auschwitz வதை  முகாமில் இருந்த 200 பேர்வரையிலானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். வயதுகள் 90ஐத் தாண்டி இருந்தாலும், அந்த நினைவு நாளில், மெல்லிய நீலம், வெள்ளை கலந்த யூதர்களின் கொடியின் நிறத்திலான துண்டுகளை கழுத்தில்  கட்டிக் கொண்டு கதிரையில் அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

அவர்களின் மனதுக்குள் சோகங்கள் நிறைந்திருந்ததை அவர்களது பேச்சு வெளிப்படுத்தியது. வதை முகாமிற்கு கொண்டு போனதன் பின்னர் தாய்,தந்தை, உடன்பிறப்புகள் என்று ஒவ்வொருவராகப் பிரிந்து போனது, பின்னர் அவர்களை வாழ்நாள் முழுவதுமே காண முடியாமல் தவித்தது என்று அவர்கள் கதை கதையாகச் சொன்னார்கள்.

94 வயதான Lewin தனது கதையைச் சொல்லத் தொடங்கு முன்னரே மெலிதான குரலில் "முதலில் நான் எனது கண்ணீரை மறைத்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டே ஆரம்பித்தார்.

BAECC8-CD-5-C54-4-A5-C-8133-896-DCF945-A

“Warschau வில் பிறந்தேன். என்னுடை மூன்று சகோதரர்களுடன் சந்தோசமாக இருந்தேன். 1942இல் என்னையும் எனது ஒரு சகோதரனையும் இரும்பு ரெயில் பெட்டியில் அடைத்து Auschwitzக்கு  கொண்டு வந்தார்கள். அங்கே பல மணித்தியாலங்கள் ஓய்வின்றி கட்டாயவேலை செய்ய வேண்டியிருந்தது.

அப்படி வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒருநாள்  நான் கேட்ட ஒரு செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அந்தச் செய்தி இன்றும் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னுடைய சகோதரனை சுட்டுக் கொன்று விட்டார்கள் என்பதே அந்தச் செய்தி. ஒரு காரணமும் இல்லாமல் ஏன் அவனைச் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் போனவர்களது பெயர்ப் பட்டியலில்தான் அவனது பெயர் இன்றும் இடம் பெற்றிருக்கிறது.

நான் இருந்த வதை முகாமிற்கு கொண்டு வரப் படுபவர்களில் அனேகமானோர் எரிவாயு (gas chamber) மூலமாகக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை Sauna என்றுதான் சொல்வார்கள். அதை death sauna என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு மில்லியனுக்கு மேலானவர்கள் கொல்லப்பட்ட அந்த வதை முகாமில்1945இல் விடுவிக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். நிலக்கரி ரெயிலில் எங்களை Buchenwaldக்கு கொண்டு வந்தார்கள். என்னால் அவ்வளவு சுலபமாக இயல்பு வாழ்க்கைக்குள் வந்து விட முடியவில்லை. ஆனாலும் வாழத் தொடங்கினேன். அந்த கடினமான காலங்களின் வலிகள் இன்றும் என்னைத் தொடர்கின்றன. எனது பெற்றோரைக் கொன்று விட்டார்கள் என்று அறிந்தேன். எனது சகோதரி? அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பலநாள் தேடினேன். கிடைக்கவில்லை

அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது, ஒரு விடியல் வருமா? நாளை எங்களது சோகங்களும் இப்படியான ஒரு நிகழ்வில் பகிரப்படுமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோவியத் படைகள் இவர்களை விடுவிக்கவில்லை என்றும் அமெரிக்க + படைகள் விடுவித்ததாக புதுக்கதை ஒன்றை பரப்புகிறார்கள். எங்கள் கண்களுக்கு முன்னால் நடந்தவைகளையே மாற்ற முயற்சிக்கிறார்கள். 

தக்கன(?) பிளைக்கும் என்பது இதுதானோ ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

நான் இருந்த வதை முகாமிற்கு கொண்டு வரப் படுபவர்களில் அனேகமானோர் எரிவாயு (gas chamber) மூலமாகக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை Sauna என்றுதான் சொல்வார்கள். அதை death sauna என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

நாஷிகளின் பெயரை வைத்து   பிற/அயல் நாட்டவர்களும் அகோரக்கொலைகளை திறம்பட செய்து முடித்தார்கள் என பல ஜேர்மனியர்கள் மனதுக்குள் முணுமுணுப்பார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நாஷிகளின் பெயரை வைத்து   பிற/அயல் நாட்டவர்களும் அகோரக்கொலைகளை திறம்பட செய்து முடித்தார்கள் என பல ஜேர்மனியர்கள் மனதுக்குள் முணுமுணுப்பார்களாம்.

அதுஉண்மையும் கூட. போலந்து படுகொலையில் தனது பிரசைகள் ஈடுபட்டதை தற்போது மறுக்கிறது.

Link to comment
Share on other sites

On 1/28/2020 at 8:12 PM, Kapithan said:

சோவியத் படைகள் இவர்களை விடுவிக்கவில்லை என்றும் அமெரிக்க + படைகள் விடுவித்ததாக புதுக்கதை ஒன்றை பரப்புகிறார்கள். எங்கள் கண்களுக்கு முன்னால் நடந்தவைகளையே மாற்ற முயற்சிக்கிறார்கள். 

தக்கன(?) பிளைக்கும் என்பது இதுதானோ ?

 

அவ்வாறு கதை பரப்பப்படுவது குறித்து நான் இதுவரை அறியவில்லை. இரண்டாம் உலகப்போரில் கிழக்கு போர்முனையில் சோவியத்துருப்புக்கள் மட்டுமே போரிட்டதற்கான ஆதாரங்கள் வெளிப்படையாக வரலாற்று பதிவுகளக  இருக்க இவ்வாறு கதை பரப்புவது  சாத்தியமல்ல. 

 

On 1/28/2020 at 9:17 PM, குமாரசாமி said:

நாஷிகளின் பெயரை வைத்து   பிற/அயல் நாட்டவர்களும் அகோரக்கொலைகளை திறம்பட செய்து முடித்தார்கள் என பல ஜேர்மனியர்கள் மனதுக்குள் முணுமுணுப்பார்களாம்.

ஹிட்லரின் இராணுவ நடவடிக்கையில் தான் ஏற்கனவே வெற்றி கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாட்டு இராணுவ வீரகளும் இருந்தனர். ஆனால் கட்டளை உயர் அதிகாரிகளாக ஜேர்மனியர்களே இருந்தனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

அவ்வாறு கதை பரப்பப்படுவது குறித்து நான் இதுவரை அறியவில்லை. இரண்டாம் உலகப்போரில் கிழக்கு போர்முனையில் சோவியத்துருப்புக்கள் மட்டுமே போரிட்டதற்கான ஆதாரங்கள் வெளிப்படையாக வரலாற்று பதிவுகளக  இருக்க இவ்வாறு கதை பரப்புவது  சாத்தியமல்ல. 

 

ஹிட்லரின் இராணுவ நடவடிக்கையில் தான் ஏற்கனவே வெற்றி கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாட்டு இராணுவ வீரகளும் இருந்தனர். ஆனால் கட்டளை உயர் அதிகாரிகளாக ஜேர்மனியர்களே இருந்தனர். 

இது சிறிது நேரத்திற்கு முன்னர் sputniknews.com ல் வந்தது. நேற்று டென்மாற்க்கிற்கான அமெரிக்கத் தூதரகம் தனது ட்வீற்ரர் பக்கத்தில் இம் முகாம் கூட்டணிப் படைகளால் மீட்கப்பட்டதாக கூறி அதனால் ஏற்பட்ட மிகக் கடுமையான விமரிசனங்களின் பின்னர் தவறுக்கு மன்னிப்பைக் கோரியிருந்தது. நேற்று முன்தினம் ஜேர்மனியின் முன்ணணிப் பத்திரிகையான spergel இதேமாதிரியான மோசமான பிழையுடன் கட்டுரையை வெளியிட்டு பின்னர் தனது தவறுக்கு மன்னிப்பைக் கோரியிருந்தது. இது போன்ற தகவல்களை நான் கடந்த ஒரு மாத மாக வாசித்து வருகிறேன். போலந்துதான் நாசிக்களின் படுகொலைகளுடன் தமக்குள்ள தொடர்பை  மிகவும் கடுமையாக மறுத்துவருகிறது. 

(மேற்குலகு சார்பான செய்திகள் எமக்கு தேவைக்கும்  மேலதிகமாக எம்மேல்  கொட்டப்படுகிறது. ஆனால் கிழக்கு ஐரோப்பிய, ஆசிய, ஆபிரிக்க செய்திகள் மிக அரிதாகவே(தாமதமாக) எமக்கு வந்தடைகிறது.) கீழே தரப்பட்டது மிகச் சிறிய ஒரு  உதாரணம் மட்டுமே.)

.  tps://sptnkne.ws/BkPZ

 0 102

Subscribe

PARIS (Sputnik) - Kiev’s and Warsaw’s pursuit to rewrite the history of World War II is among the most serious political problem of modern Europe, Russian Permanent Delegate to UNESCO Alexander Kuznetsov said on Wednesday in the Russian Centre for Science and Culture in Paris.

Kuznetsov voiced his concerns during an opening ceremony of an exhibition dedicated to the role played by Soviet Jews in WWII. The exhibition will be open to visitors from 30 January to 10 April.

"Let’s face the truth: since the end of the second world war, there have never been such explicit, arrogant and shameless attempts to rewrite the history of the second world war", Kuznetsov said.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நாஷிப்படைகள் செய்தது சரியென வாதிடவில்லை.
யூத படுகொலைகளுக்கு மேற்குலகம் இன்றும் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கின்றது. வருடாவருடம் அதை நினைவு கூந்து இன்னொரு முறை அப்படி நடந்துவிடக்கூடாது என வருங்கால சந்ததிக்கு அறிவுறுத்துகின்றது.
சரியானதும் நியாயமானதும் கூட......
ஆனால் இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேல் எனும் யூத நாடு பலஸ்தீன மக்களுக்கு செய்த/செய்யும் அட்டூழியங்களை யாராவது அல்லது மேற்குலகம்  கண்டிக்கின்றதா? தாங்கள் நாஷிகளால் அழிக்கப்பட்டோமே அது போல் இன்னொரு இனம் அழியக்கூடாது என்றொரு மனப்பான்மை ஏன் அவர்களுக்கு வரவில்லை? விட்டுக்கொடுத்து சரிசமமாக வாழும் பழக்கம் இல்லாதவர்களா?

அல்லது கிட்லரை விட மோசமானவர்களா? ⬇️

Bild

https://twitter.com/EmanAhm56576131/status/1221939719690489857

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் நாஷிப்படைகள் செய்தது சரியென வாதிடவில்லை.
யூத படுகொலைகளுக்கு மேற்குலகம் இன்றும் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கின்றது. வருடாவருடம் அதை நினைவு கூந்து இன்னொரு முறை அப்படி நடந்துவிடக்கூடாது என வருங்கால சந்ததிக்கு அறிவுறுத்துகின்றது.
சரியானதும் நியாயமானதும் கூட......
ஆனால் இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேல் எனும் யூத நாடு பலஸ்தீன மக்களுக்கு செய்த/செய்யும் அட்டூழியங்களை யாராவது அல்லது மேற்குலகம்  கண்டிக்கின்றதா? தாங்கள் நாஷிகளால் அழிக்கப்பட்டோமே அது போல் இன்னொரு இனம் அழியக்கூடாது என்றொரு மனப்பான்மை ஏன் அவர்களுக்கு வரவில்லை? விட்டுக்கொடுத்து சரிசமமாக வாழும் பழக்கம் இல்லாதவர்களா?

அல்லது கிட்லரை விட மோசமானவர்களா? ⬇️

Bild

https://twitter.com/EmanAhm56576131/status/1221939719690489857

என்னைப் பொறுத்தவரை மேற்குலகு கண்ணீர் வடிக்கவில்லை. அப்படி வடிப்பதானால் இவர்கள் செய்த, செய்துகொண்டிருக்கும்  படுகொலைகளுக்கு வருடம் 365 நாட்கள் போதாது.

யூதர்களின் பணபலம், அவர்களின் ஒற்றுமை, அவர்களின் தூர நோக்கு மேற்குலகை கட்டாயமாக கண்ணீர் விட  வைக்கிறது.

தக்கன பிழைக்கும் என்கின்ற கோட்பாடை  இங்கேயும் பிரயோகிக்கலாமா ?

1 minute ago, Kapithan said:

என்னைப் பொறுத்தவரை மேற்குலகு கண்ணீர் வடிக்கவில்லை. அப்படி வடிப்பதானால் இவர்கள் செய்த, செய்துகொண்டிருக்கும்  படுகொலைகளுக்கு வருடம் 365 நாட்கள் போதாது.

யூதர்களின் பணபலம், அவர்களின் ஒற்றுமை, அவர்களின் தூர நோக்கு மேற்குலகை கட்டாயமாக கண்ணீர் விட  வைக்கிறது.

தக்கன பிழைக்கும் என்கின்ற கோட்பாடை  இங்கேயும் பிரயோகிக்கலாமா ?

நன்றி கு சா உங்கள் லைக்ஸ் க்கு 

மை செயலீஸ் ஆ நொட் வேக்கின் 😀

Link to comment
Share on other sites

large.IMG_2744.JPG.1583aa469577f786cd29a2d5ee233ffc.JPGAuschwitz  முகாமில் லட்சக்கணக்கான மக்கள் கொலை களத்திறகு அழைத்து செல்லப்பட்ட பாதை

large.IMG_2831.JPG.2f0a8ce4398ec187420f5c13338515f1.JPGDeath wall. லட்சக்கண‍க்கான மக்கள் இந்த சுவரில் நிறுத்தபட்டு  சுடபட்டு இறந்த‍னர். 

Link to comment
Share on other sites

large.IMG_2762.JPG.0d8514594cd80374103d89a7f52b9839.JPGநச்சு வாயு கூடங்களுக்கு (Gas champer)  பயன்படுத்த‍ பட்ட  Zyklon B  என்ற நச்சு மருந்தின் வெற்று டப்பாக்ககள்.

large.IMG_2776.JPG.219499ae68e6883011e37c163b5ec28e.JPGlarge.IMG_2775.JPG.e821ace6a905c442978a25cc632d19ff.JPGகொல்லபட்ட மக்களின் பயணப்பெட்டிகள். ஐரோப்ப‍ முழுவதும் இருந்து வேலைக்கென ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மக்களே இம்முகாம்களில் படுகொலை செய்யப்பட்டனர். 

Link to comment
Share on other sites

large.IMG_2787.JPG.dce7efc11ae41ac9c6e8b4695ebb2c96.JPGlarge.IMG_2785.JPG.b565cd2a89bfaf72310bd6a0dba57914.JPGகொல்ல‍ப்ப‍ட்ட ம‍க்களின் லட்சக்கணக்கான பாதணிகள்

Link to comment
Share on other sites

large.IMG_2857.JPG.f88d4fc15ccc42e578ee2c380d1e20b9.JPGlarge.IMG_2861.JPG.4a6d7e8b9b91965221276663cda15406.JPGஅன்றாடம் கொல்லபட்டும் மக்களுக்காக விசேடமாக அமைக்கபட்ட Crematorium. இம்முகாம் கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலை போல் நடத்த‍ப்பட்டது தினசரி கொல்லபட்டும் மக்களை தெரிவு செய்வதில் இருந்து சடலங்களை எரிப்பது வரை systematic  ஆக எந்த பதட்டமும் இன்றி நடைபெறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

large.IMG_2787.JPG.dce7efc11ae41ac9c6e8b4695ebb2c96.JPGlarge.IMG_2785.JPG.b565cd2a89bfaf72310bd6a0dba57914.JPGகொல்ல‍ப்ப‍ட்ட ம‍க்களின் லட்சக்கணக்கான பாதணிகள்

கொல்லப்படுபவர்களின் பாதணிகளை ஏன் சேகரித்தார்கள்?

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

கொல்லப்படுபவர்களின் பாதணிகளை ஏன் சேகரித்தார்கள்?

முகாம் கைப்பற்றப்பட்ட வேளையில் அங்கு இருந்த பொருட்கள், ஆவணங்கள்  அனைத்தும் நினைவு சின்னங்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்பொருட்களில் ஒரு சிறிய பகுதிதான் இந்த பாதணிகள். பொலந்து கம்யூனிச ஆட்சியில் இருந்த போது இந்த அருங்காட்சியகத்தை மேற்குலக மக்கள் பார்வையிடுவது சிரமமாக இருந்தது. தற்போது இலகுவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் அங்கே சென்று வருகின்றனர். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/31/2020 at 12:30 AM, குமாரசாமி said:

கொல்லப்படுபவர்களின் பாதணிகளை ஏன் சேகரித்தார்கள்?

On 1/31/2020 at 10:41 AM, tulpen said:

முகாம் கைப்பற்றப்பட்ட வேளையில் அங்கு இருந்த பொருட்கள், ஆவணங்கள்  அனைத்தும் நினைவு சின்னங்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்பொருட்களில் ஒரு சிறிய பகுதிதான் இந்த பாதணிகள். பொலந்து கம்யூனிச ஆட்சியில் இருந்த போது இந்த அருங்காட்சியகத்தை மேற்குலக மக்கள் பார்வையிடுவது சிரமமாக இருந்தது. தற்போது இலகுவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் அங்கே சென்று வருகின்றனர். 

இப்படி வெகு சிரத்தையாக பாதுகாத்து பராமரிக்கின்றார்கள்.வருங்கால சந்ததியினருக்கு இது ஒரு பாடமாக அமையும்.
இருந்தாலும்.....
ஆங்கிலேயர்கள் ஆசிய நாடுகளுக்கு படையெடுத்து அழிவுகளை செய்ததை யாரும் நினைவு கூர மாட்டார்களா?
வட அமெரிக்க கண்டத்திற்கு  படையெடுத்து செவ்விந்தியர்களை பூண்டோடு அழித்ததை வரலாறாக கருத மாட்டார்களா?
அவுஸ்ரேலியா எனும் தனிக்கண்டத்தில் வாழ்ந்த மூத்த குடியினரை ஒதுக்கி தங்கள் நாடாக அறிவித்த ஆங்கிலேயர்களுக்கு என்ன தண்டனை?
ஆபிரிக்காவில் ஆங்கிலேயர் செய்த கொடூரங்களின் வடுக்கள் இன்னு ஆற்வில்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.