Jump to content

யாழில் இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம்


Recommended Posts

ஈழமண்ணில் அப்பாவி மக்களை படுகொலை செய்த இந்திய அரசு அந்த மண்ணிலையே சுதந்திர தினம் கொண்டாடுறது உலகில் நடக்கும் அநீதிகளில் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில.. உலகத்தில.. எவ்வளவு சிக்கல்கள் கிடக்கு.. வீரகேசரி இல்ல .. ரவா கேசரி..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் இதே இந்தியர்களை பூமாலை போட்டு வரவேற்றோம்.
இவர்கள் தான் இரட்சகர்கள் என கும்பிட்டோம் . ரூப்பிதிரா மஸ்தானா என பாடல்கள் கேட்டோம்.

Link to comment
Share on other sites

38 minutes ago, colomban said:

ஒரு காலத்தில் இதே இந்தியர்களை பூமாலை போட்டு வரவேற்றோம்.
இவர்கள் தான் இரட்சகர்கள் என கும்பிட்டோம் . ரூப்பிதிரா மஸ்தானா என பாடல்கள் கேட்டோம்.

இந்தியாக்காரன் புகையிரதபதை அமைத்தான், வீடு கட்டி கொடுக்கிறான், கலாச்சார மண்டபம் கட்டிக்கொடுக்கிறான் , இப்படியாக சொந்த பணத்தை செலவு செய்து அபிவிருத்தி செய்யும்போது இதுக்கு மட்டும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை। நக்குண்டார் நாவிழந்தார்।  எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் , வேறு வழி இல்லை। இல்லாவிட்ட்தால் அமெரிக்காக்காரன் இராக்கிலிருந்து போவதென்றால் நான் செலவழித்த பணத்தையெல்லாம் கொடு , இல்லாவிடடாள் போகமடடேன் என்ற நிலைமைதான்।

Link to comment
Share on other sites

இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று!

 

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/74281


image_ac2321ee44.jpgThe country’s top political figures embroiled in political rivalry, cut across party lines yesterday to attend the farewell party hosted by outgoing Indian High Commissioner Taranjit Singh Sandhu at India House in Colombo. Prime Minister Mahinda Rajapaksa and UNP Leader Ranil Wickremesinghe are seen a cordial discussion with UNP Deputy Leader Sajith Premadasa within the frame. The other picture captures PM Rajapaksa with former President Chandrika Kumaratunga.(Pix by Kushan Pathiraja)

image_895fc5131a.jpgimage_890871a9ce.jpgimage_947a9307c5.jpgimage_99ba1e2d86.jpgimage_bbf09a1794.jpgimage_113777365e.jpgimage_b71baaf31e.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

இந்தியாக்காரன் புகையிரதபதை அமைத்தான், வீடு கட்டி கொடுக்கிறான், கலாச்சார மண்டபம் கட்டிக்கொடுக்கிறான் , இப்படியாக சொந்த பணத்தை செலவு செய்து அபிவிருத்தி செய்யும்போது இதுக்கு மட்டும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை। நக்குண்டார் நாவிழந்தார்।  எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் , வேறு வழி இல்லை। இல்லாவிட்ட்தால் அமெரிக்காக்காரன் இராக்கிலிருந்து போவதென்றால் நான் செலவழித்த பணத்தையெல்லாம் கொடு , இல்லாவிடடாள் போகமடடேன் என்ற நிலைமைதான்।

இந்திய அமைதிக்காகும் படை என்ற பேரில் ஏன் வரவைத்தோம்

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

இந் நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

எல்லா கொலைஞர்களும் ஓரிடத்தில் இசைக்கச்சேரி வைக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

எல்லா கொலைஞர்களும் ஓரிடத்தில் இசைக்கச்சேரி வைக்கினம்.

கிந்தியாவின் நாடி பிடித்து சரியாக கணித்திருக்கின்றார்கள்.அதானால் ஒற்றுமையாக ஒரு இடத்திற்கு வந்திருக்கின்றார்கள். :cool:

image_895fc5131a.jpg

எங்கை காணேல்லை?

image_890871a9ce.jpg

இஞ்சையும் காணேல்லை?

image_947a9307c5.jpg

ஒரு வேளை கூப்பிடேல்லையோ? சீச்சீ அப்பிடி இருக்காது.

image_99ba1e2d86.jpgimage_bbf09a1794.jpg

இந்த கூட்டத்திலையும் காணேல்லை?

image_113777365e.jpg

கட்சி எதிரிகள் கூட ஒண்டாய் இருந்து சிரிச்சு கதைக்கினம்.↕️

image_b71baaf31e.jpg

 டேய் சாப்பாட்டு மேசையிலையும் காணேல்லையடா?tw_open_mouth:

image_ac2321ee44.jpg

சிங்கம் வேறை ஒத்தையா செழிப்பா நிக்கிது :grin:

Bildergebnis für sampanthan

அப்ப நம்ம தல எங்கடா? தலய காணம்டா? டேய் தேடுங்கடா?சூதானமா தேடுங்கடா...

Link to comment
Share on other sites

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இந்தியா ஒன்றித்து நிற்கும்  -  உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்

இந்திய - இலங்கை நாடுகளைப் பொறுத்தவரை தீவிரவாதமும், அடிப்படைவாதமும் இருநாட்டு மக்களுக்கும், அன்றாட வாழ்க்கை முறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன.


83697098_2713016758815485_76067864959946

எனவே அதனை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையில் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.

இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை எனக்கும், இந்தியாவிற்கும் மிகவும் விருப்பத்திற்குரிய நாடாகும். இருநாடுகளுக்கும் இடையில் பலவருடகால நெருங்கிய பிணைப்பு காணப்படுவதுடன், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பின்னர் இந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாக என்பதன் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவு புலனாகின்றது. அதுமாத்திரமன்றி பிரதமர் மோடியின் அவ்வருகை கடந்த 5 வருடகாலத்தில் இடம்பெற்ற 3 ஆவது விஜயமாக அமைந்திருந்தது.

அத்தோடு கடந்த நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டதன் மூலம் நாம் கௌரவிக்கப்பட்டோம். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கே மேற்கொண்டார். அதேபோன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்தனர். மேலும் வெகு விரைவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவில் வரவேற்பதற்கான ஆயத்தங்களும் செய்யப்படுகின்றன.

இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவைப் பொறுத்தவரை 2019 மிகவும் முக்கியமான ஆண்டாகும். தற்போது இலங்கையின் 9 மாகாணங்களிலும் செயற்படும் 1990 என்ற இலக்க 'சுவசெரிய' அம்பியூலன்ஸ் சேவை இந்திய உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலைன்ஸ் எயார் மூலம் யாழ்ப்பாணம் - சென்னை ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது. இந்திய நிதியுதவியுடன் மாகோ தொடக்கம் மாந்தை வரையிலான புகையிரதப்பாதை புனரமைக்கப்பட்டது. இலங்கையில் 63 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய உதவித்திட்டமொன்று வழங்கப்பட்டதுடன், அதன்கீழ் கடந்த வருடம்வரை 47 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு யாழ்ப்பாண கலாசார நிலையம், றுஹுணு பல்கலைக்கழகக் கேட்போர்கூடம், டிக்கோயா வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மக்களை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதுடன், இருநாடுகளும் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இளைஞர்களை வலுவூட்டும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும். இலங்கையின் முதன்மையான நட்புறவு நாடாகவும், முக்கிய முதலீட்டாளராகவும் இந்தியா விளங்குகின்றது. இருநாடுகளினதும் பொருளாதாரம் இணைந்ததாகக் காணப்படுவதுடன், அரச நிர்வாகம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கள் ஒத்த தன்மையுடையவையாக அமைந்திருக்கின்றன.

அதேவேளை இருநாடுகளும் பொதுவான சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. தீவிரவாதமும், அடிப்படைவாதமும் எமது சமூகங்களுக்கும் அன்றாட வாழ்க்கை முறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. எனவே பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கும், புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது. அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகளைப் பொறுத்தவரை இருநாட்டு படையினருக்கு இடையிலான தொடர்புகளை வலுவாக்கல் மற்றும் பயிற்சிகளை வழங்குதல் ஆகியவை மூலம் உறுதிப்படுத்தப்படும். அத்தோடு எமது பாதுகாப்புத்துறைசார் நுட்பங்களில் இந்துசமுத்திரப் பிராந்தியம் மற்றும் கப்பற்பாதைகளின் பாதுகாப்பை உறுதிசெய்தல் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் பாதுகாப்பிலும் அபிவிருத்தியிலும் இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது. அந்தவகையில் இருநாடுகளினதும் அமைதி, பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவற்றை முன்நிறுத்தி இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது.

https://www.virakesari.lk/article/74278

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ampanai said:

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இந்தியா ஒன்றித்து நிற்கும்  -  உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்

சும்மா சிவனே எண்டு இருந்த ஈழத்தமிழினத்துக்கு துவக்கு சுடப்பழக்கினதே நீங்கள் தானே?
இப்ப பயங்கரவாதத்தை அழிப்பமாம்.
எங்கடை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ எண்டு கேட்டது ஒரு குற்றமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.